Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:50:22 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17899
#KOTW17899
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 8, 2016
ரமழான் 1437: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 178 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி! பெருநாளன்று நாட்டுக்கோழி வழங்கவும் ஏற்பாடு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2962 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றம் சார்பில், நிகழும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினத்திலுள்ள 178 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி செய்யப்பட்டுள்ளதுடன், நோன்புப் பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சியை கட்டணமின்றி வாங்கிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவ்வமைப்பின் பிரதிநிதி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-

சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றம் சார்பில்,கடந்த நான்கு வருடங்களாக புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும், கடந்த இரண்டாண்டுகளாக ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டு (2016) ரமழான் நோன்பை முன்னிட்டு ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில் 178 ஏழைக் குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. அத்துடன் பெருநாளை முன்னிட்டு இவர்கள் அனைவருக்கும் நாட்டுக்கோழி ஒன்று வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.











ஒரு குடும்பத்திற்கு ரூ.2,978 மதிப்பில், 178 குடும்பங்களுக்கு - ரூ.5,30,084 செலவில் நோன்பு கால அத்தியாவசிய உணவுப் பொருட்களும், கூடுதல் திட்டமாக ரூ.65,000/- செலவில், இந்த அனைத்து குடும்பத்தினரும் பெருநாளன்று இரவு ஒரு உறித்த நாட்டுக் கோழி பெற்றுக் கொள்ளும் வகையில் அதற்கான டோக்கனும் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய தினங்களில் பயனாளிகளின் இல்லம் சென்று வழங்கி முடிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!

இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை ரியாத் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதிகள் ஏ.தர்வேஷ் முஹம்மது மற்றும் சோனா எம்.எம்.டி.ஷாஹுல் ஹமீது ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த ரமலான் உணவுப் பொருட்கள் வழங்கிட பொருளுதவி செய்த ரியாத் காயல் நல மன்றத்தின் அங்கத்தினர்கள், அபிமானிகள் மற்றும் இதற்கான முயற்சிகளில்; பணிகளில் ஈடுபட்ட அனைவர்களுக்கும் ரியாத் காயல் நல மன்ற நிர்வாகம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து மகிழ்கிறது. ஜஸாக்குமுல்லாஹு கைரா!


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியாத் கா.ந.மன்றம் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1437) அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கப்பட்டமை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

ரியாத் கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...சலாம்
posted by HASAN FAIZ (MADURAI) [08 June 2016]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 44022

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லஹி வபரகதுஹு.

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது , தங்களின் சேவைகளை தொடர இறைவன் அருள்புரிவானாக .

இதில் பெருநாள் இரவு நாட்டுகோழி token , கூடுதல் சிறப்பு! பாரக்கல்லாஹ் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Mauroof (Dubai) [08 June 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44024

ரியாத் காயல் நல மன்றத்தின் இந்த ஏற்றமிகு நற்செயலை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

மேலும் இவ்வருடம் இப்பொருளுதவியைப் பெரும் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து அடுத்த ஆண்டு ஏனைய ஏழை எளியோருக்கு உதவிகள் வழங்கிடவும் அருள் புரிவானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...வசந்த மலர்களைத் தூவி, வாஞ்சை மீதூர வாழ்த்துகின்றேன்
posted by “ஜெம்” தீபி (Kayalpatnam) [09 June 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 44026

பிறரிடம் வாய்திறந்து கேட்க வெட்கப்பட்டுக்கொண்டு… வேதனை முகங்களுடன் வெம்பிப் போய்… வல்ல இறைவா! “எங்கள் இருள் போக்கிட மாட்டாயா?” என வேண்டிக் கொண்டேயிருக்கும் இதயங்களைக் கண்டறிந்து…

அவர்களின் இருள்தோய்ந்த முகங்களை இன்முகமாக்கி… இந்த ரமலான் உணவுப் பொருட்கள் வழங்கியுதவிடும் மேன்மையான திட்டத்தை நிறைவேற்றியுள்ள “ரியாத் காயல் நல மன்ற”த்தின் அங்கத்தினர்கள், அபிமானிகள் மற்றும் இதற்கான முயற்சிகளில், பணிகளில் தன்னலம் கருதாது.. கண் துஞ்சாது… ஈடுபட்ட அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜஸாக்குமுல்லாஹு கைரா!

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வின் பெருங்கருணையும், எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஷபாஅத் என்னும் திருப் பொருத்தமும் உங்கள் அனைவருக்கும் நிறைவாய்க் கிடைத்திட மனமுவந்து பிரார்த்திக்கிறேன்.

எவ்வளவு எவ்வளவு நலத் திட்டங்கள் ….
எத்தனை எத்தனை உதவிகள்…

தேவையுடையோரைக் கண்டறிந்து…
அவர்தம் தேவையறிந்து…
அதற்கெனத் திட்டமிட்டு…
அதைத் திறம்பட வடிவமைத்து…
சிறப்பான செயல் வடிவம் கொடுத்து…
குறித்த காலத்தில் அவற்றை நிறைவேற்றி…
பயனாளிகளின் உள்ளம் குளிர்விப்பதில்…
நெஞ்சம் நிறைந்து மகிழும்…
கடல் கடந்து வாழும்…. என்
அன்புச் சொந்தங்களே! பந்தங்களே! நண்பர்களே!
உங்கள் அனைவர் மீதும்…
இறையருள் வளமோங்கும்
வான்மழையாய் பொழியுமாக!

உங்கள் அனைவரையும் வசந்த மலர்களைத் தூவி,
வாஞ்சை மீதூர வாழ்த்துகின்றேன்.
உவகை மேலோங்கப் போற்றுகின்றேன்.

உங்கள் அனைவருக்கும் மகோன்னதம் பொருந்திய ரமழானின் பொருட்டால்…
நீடித்த ஆயுளும், நிறைந்த செல்வமும், நிம்மதியான வாழ்க்கையும் அமையப் பிரார்த்திக்கிறேன்.

என்றும் உங்கள் உதவிகளில் நெஞ்சம் நெகிழும்…
“ஜெம்” தீபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இல்லாமை என்கின்ற நிலையை இல்லாமலாக்க வேண்டும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [09 June 2016]
IP: 129.*.*.* United Kingdom | Comment Reference Number: 44028

புனித ரமலான் மாதத்தில் எளியவர்களுக்கு இயன்றவரை உதவி அவர்களின் இல்லாமை என்கின்ற நிலையை இல்லாமலாக்க முயலும் புண்ணிய காரியத்தை போட்டிப்போட்டு செய்து கொண்டிருக்கின்ற அனைத்துலக காயல் நல மன்றங்களில் ரியாத் காயல் நல மன்றம் முன்னணியாக வரவேண்டும் என்கின்ற அவர்களின் பேராருவத்தைப்பாராட்டுகிறேன்! அவர்கள் ஒவ்வொருவரின் மனங்களிலும் மண்டிக்கிடக்கின்ற மனிதாபிமானத்தை உணர்கிறேன்,மனித நேயத்தை நேசிக்கிறேன்!

வரியவர்களின் வலியுணர்ந்து வனப்புடைய புனித மாதத்தில் நீங்கள் செய்யும் இந்த போற்றுதல்குறிய உதவியால் படைத்தோன் உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் ஒளிமயமாக்கி எல்லா நலன்களையும்,வளங்களையும் வழங்கியருள்புரிவானாக ஆமீன்!

அனைத்து காயல் நல மன்றங்கள் இந்த புனித ரமலான் மாதத்தில் மட்டுமல்ல, வருடம் முழுவதும் ஒவ்வொரு அமைப்பும் அதன் உதவியை அடுத்த மன்றங்களைவிட நாம் முன்னணியாக செய்ய வேண்டும் என்ற வேகத்தில் வரியவர்களுக்கும் ,வறுமையருக்கும் உதவும் வேட்கையும்,வீரியமும் வளிந்து ஓடுகிறது..அவைகளை வார்த்தைகளால் சொல்லமுடியாது அதன் சுழல் உதவியின் வேகமானது "சுனாமி"யையும் செயலிழக்க செய்யும் அளவிற்கு அதீத ஆர்வம்!

அன்புள்ளங்களே இந்த ஆர்வமும்,ஆவலும் கடல் கடந்து வாழும் காயல் சகோதரர்களுக்கு மட்டும் சொந்தமல்ல,சொந்த நாட்டில் தொழில் துறையில் வளமுடன் பொருளீட்டும் பெருந்தன்மை யாளர்களுக்கும்,கருணை மிகு கொடையாளிகளுக்கும் இதில் அதிக பங்குண்டு.நீங்கள் அதிகதிகமாக உங்கள் பங்களிப்பை செழுத்திடவும் வேண்டும்!

காயலின் எளியவர்களும்,வரியவர்களும் உங்கள் உடன் பிறவா சகோதரர்கள்தான்.எங்களை (கடல் கடந்த காயல் மன்றங்களை) வாழ்த்துவதோடு உங்கள் பங்கு நின்றுவிட வேண்டாம். உங்களால் இயன்ற பங்களிப்பையும் கொடுக்க முன் வருவீர்களேயானால்,கண்ணியமிகு காயலில் கண்ணீர் மல்க கசங்கிய வாழ்வுடையோர் வேறு எவருமுண்டோ என்று தேடும் நிலை உண்டாகிவிடும். உண்டாக வேண்டும் வல்லோன் உதவியால்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...ரியாத்
posted by prabu shaikna (Bangalore ) [10 June 2016]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 44029

எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும். மாஷா அல்லாஹ் நினைக்கவே மனம் உருகுகிறது. எவ்வளவு பெரிய நன்மையை இந்த புனித ரமலான் மாதத்தில் கொள்ளை கொள்கிறீர்கள். தொடருட்டும் உங்கள் சேவை.அதிலும் பெருநாள் அன்று நாட்டுக்கோழி உள்ளத்தை மேலும் உருக்கி உங்கள் அனைவர்கள் ஹக்கிலும் துஆ கேட்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் முதலாவதாக சரீர சுகமும் சகல பல செல்வங்களும் நிறையுடன் பெற்று நீடுழி காலம் நிறைவுடன் வாழ கிருபை செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

NB : நம் காயல் members அனைவருக்கும் எனது சலாதினை தெரியபடுத்தவும்

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...riyadh
posted by hylee (kayalpatnam) [11 June 2016]
IP: 160.*.*.* Japan | Comment Reference Number: 44031

Alhamdulullah good work


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Omar Abdul Kader KSH (Riyadh) [11 June 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44033

அஸ்ஸலாமு அழைக்கும் ......

அனைவர்களுக்கும் புனித ரமலான் நல் வாழ்த்துக்கள் . வல்ல நாயன் அல்லாஹ்வின் கருணையும் ரஹ்மத்தும் இந்த புனித ரமலான் மாதத்தின் பொருட்டல் நம் அனைவர்களுக்கும் கிடைகட்டுமாக . ஆமீன் .

நமது ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில் எல்லா வருடமும் சிறப்பான முறையில் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பல ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் மிகவும் பாராட்ட வேண்டிய ஓன்று .

வல்ல நாயன் உங்களது எல்லா செயல் பாடுகளில் தொடர்ந்து நல்ல வெற்றியை தருவானாக . ஆமீன் .

இந்த செயல் திட்டங்களில் உருதுனையாக உள்ள அணைத்து செயல் வீரர்களுக்கும் வல்ல நாயனின் அருளும் , கருணையும் அவனது திரு பொருத்தமும் கிடைக்க நாமும் து ஆ செய்வோம் ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. நாட்டுக்கோழி... சூப்பர்!!!
posted by S.K.Salih (Kayalpatnam) [12 June 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44035

பொதுவாக உலக காயல் நல மன்றங்களின் தன்னலமற்ற - தன்னார்வத்துடன் கூடிய சேவைகளைக் கண்டு பெருமிதப்பட்டுக்கொள்வேன். உண்மையில் நமதூர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

ரியாத் காயல் நல மன்றத்தின் இந்த நகர்நலத் திட்டத்தின் சிறப்பம்சமாக, நோன்புப் பெருநாளன்று “நாட்டுக்கோழி” பெற்றிட வழிவகை செய்திருப்பது என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

முட்டையிலிருந்து, கோழியாகி, அது காலியாகும் வரை முழுக்க முழுக்க ரசாயணத்தையே தன்னுள் கொண்டுள்ள ப்ராய்லர் கோழியைத்தான் நமதூரில் கோழி இறைச்சி உண்ணும் மக்களுள் 80 சதவிகிதம் பேர் உட்கொள்கின்றனர்.

இதன் காரணமாக, பெண் குழந்தைகள் பிஞ்சுப் பருவத்திலேயே பூப்படைதல் உள்ளிட்ட பல புதுமைகளைக் கண்டு வருகிறோம்.

ஏழை மக்களுக்கு நாட்டுக்கோழி என்பதெல்லாம் எட்டாக்கனியாகிவிட்டது. கிடா இறைச்சியாவது - ஏதாவது ஒரு திருமண விருந்தில் கிடைத்துவிடும். ஆனால் நாட்டுக்கோழி???

விற்கும் விலைக்கு அவர்கள் கறி சாப்பிட வேண்டுமானால் ப்ராய்லர் கோழியைத் தவிர வேறு வழியில்லை.

அப்படிப்பட்ட மக்களின் நாவும் ருசிக்கும் வகையில், நோன்புப் பெருநாளன்று - செலவை சிக்கனப்படுத்த ப்ராய்லரைக் கொடுக்காமல் நாட்டுக்கோழிக்கு ஏற்பாடு செய்திருப்பதற்காக உங்கள் யாவரையும் வாழ்த்திப் பாராட்டி, துஆ செய்கிறேன்.

அல்லாஹ் உங்கள் யாவரின் நற்பணிகளையும் தனதருளால் ஏற்றுக்கொள்வானாக... இதன் பலன்களை ஈருலகிலும் உங்களுக்கு நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.

அன்புடன், எஸ்.கே.ஸாலிஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved