Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:02:18 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17887
#KOTW17887
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 6, 2016
ஃபாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டாம்! பெற்றோருக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கடிதம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2620 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தீவுத்தெருவில் இயங்கி வந்த ஃபாத்திமா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி, அரசு அனுமதி பெறாமல் இயங்கி வருவதாகக் கூறி, 26.05.2016. அன்று அரசால் முத்திரை (சீல்) வைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டாம் என - பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும், தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் வாசகம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியம், காயல்பட்டினம் தீவுத்தெருவில் பாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி என்ற பெயரில் அரசு அனுமதி பெறாமல், மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்டதால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று, 26.05.2016. அன்று பள்ளியைப் பூட்டி அரசால் சீல் வைக்கப்படுகிறது. எனவே, இப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இப்பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால், அரசு அனுமதி பெறாததால் இப்பள்ளியால் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ் செல்லாது. எனவே, வேறு பள்ளிகளில் அடுத்த வகுப்பு சேர்ந்து படிக்க இயலாத நிலை மாணவர்களுக்கு ஏற்படும். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

எனவே, மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களுக்கு இவ்வறிவிப்பு தெரிவிக்கப்படுகிறது. இது சார்ந்த மேலும் விபரங்களுக்கு, 94866 86258, 97509 83060 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளவும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் அடியில், ஒவ்வொரு மாணவர் மற்றும் அவரது பெற்றோர் பெயரும், முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இவ்வாறிருக்க, இன்று காலையில் ஃபாத்திமா நர்ஸரி பள்ளியின் முத்திரை (சீல்) உடைக்கப்பட்டு, பள்ளியில் வகுப்பு நடைபெற்ற தகவலையறிந்து, கிராம நிர்வாக அலுவலர் ஃப்ரான்சிஸ் பாரதி நேரில் வந்து விசாரித்துச் சென்றார். பின்னர், காயல்பட்டணம்.காம் இடம் பேசிய அவர், அரசால் முத்திரையை அகற்ற உத்தரவு பெறப்படாத நிலையில், முத்திரை அகற்றப்பட்டு வகுப்பும் நடைபெறுவதாகவும், இதுகுறித்து, உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப் போவதாகவும் கூறினார்.

ஃபாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...உரிமை வேறு அத்து மீறல் வேறு
posted by mackie noohuthambi (kayalpatnam ) [06 June 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44011

பாத்திமா மழலையர் பள்ளி கூடம் அதனை நடத்தும் நிர்வாகிகள் எவள்ளவு நல்லெண்ணம் படைத்தவர்களாக இருந்தாலும் அங்கு கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் எவ்வளவு ஆவலுடன் இந்த பள்ளியில் தங்கள் மக்களை கல்வி பயில அனுப்பி இருந்தாலும் அரசு இந்த பள்ளியை அங்கீகரிக்காமல் இருக்கும் நிலையில் அதை அத்து மீறி பூட்டை உடைத்து உள்ளே செல்வதென்பது கண்ணியக் குறைவானது.

நமது பக்கம் உள்ள நியாயங்களை எடுத்து சொல்ல நீதி மன்றம் இருக்கிறது. நமது உரிமைக்கு குரல் கொடுத்து நமது வாதங்களை எடுத்து சொல்லி அரசு அங்கீகாரத்தை பெற முயற்சி செய்யுங்கள். மாறாக அரசுடன் மோதும் போக்கை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வீணாக மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும்.இந்த பள்ளியின் நிர்வாகிகள் நமதூரில் உள்ள முக்கியஸ்தர்களை கலந்து ஆலோசித்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று மஷூரா செய்து ஆவன செய்து கொள்ளுங்கள். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் கடிதத்துக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளுங்கள்.

நெருப்பின் மீது பஞ்சு பறந்து விழுந்தாலும் பஞ்சின் மீது நெருப்பு பறந்து வந்து விழுந்தாலும் பாதிப்பு பஞ்சுக்குதான் என்று ஒரு பழ மொழி சொல்வார்கள்.

பள்ளி நிர்வாகிகள் வேகப்படாமல் ஆத்திரப் படாமல் விவேகத்துடனும் அமைதியுடனும் இந்த விஷயத்தை அணுக வேண்டும் என்று சம்பந்த பட்டவர்களை வேண்டி கொள்கிறோம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மிதமான அணுகுமுறை வேண்டும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [06 June 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44016

ஃ பாத்திமா நர்சரி பள்ளியைப் பொருத்த வரை மிகவும் திறமையாக கல்வி பயின்று கொடுக்கிறார்கள் என்ற நற்பெயரை நீண்ட காலமாகவே நிலை நிறுத்தி வருகிறார்கள்! அதற்கு பல சான்றுகள் இருந்தாலும் என் அன்பு பேத்தி அங்கு பயிலும் பொழுது அதை நேரிடியாகவே அனுபவித்த குடும்பங்களில் நாங்களும் ஒன்று என்பதை பெருமையுடன் இங்கு சுட்டிக்காட்ட கடமை பட்டுள்ளேன்!

இந்த பள்ளி அங்கீகார சான்றிதல் பிரச்னை இன்று நேற்றல்ல கடந்த சில ஆண்டுகளிலிருந்தே தீவிரம் அடைந்தது என்பது பலருக்கும் தெரிந்த ஒரு உண்மையாகும்!

ஆகவே அதற்குறிய ஆக்கப்பூர்வமான நடவடக்கையில் தீவிரம் காட்டாமல் அதிகாரிகளிடமோ அரசாங்கத்திடமோ நம் வெறுப்பை செலுத்தி அவர்களுக்கு ஒத்துழைக்காமல் வன்முறையைத் தூண்டும் செயலில் சட்டத்தை கையிலெடுத்து கலகம் செய்ய முயற்சிப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல!.

காயல்மா நகர் மக்களெல்லாம் கண்ணியம் மிகுந்தவர்கள் என்று நம் முன்னாள் மாவட்ட ஆட்சியர் அடுத்த ஊரிலும் சொல்லக்கூடிய அளவிற்கு பெருதன்மை மிகுந்த மிதவாதிகள் நாம்!

ஆகவே, அன்புள்ளங்களே, எது முறையான அணுகுமுறையோ அந்த அணுகுமுறையை விதிமுறை விலகாமல் விவேகத்துடன், ஊரில் பலபயின்றோர்கள்,பெரியோர்கள், நீதிவான்கள் உதவியுன் நல்லதொரு முடிவினை பெற்றிட முயற்சியுங்கள்!

அதுதான் தார்மீக அணுகுமுறை,அதுதான் அனைத்து நம்மூர் மக்களுக்கும் ஊருக்கும் நற்பெயர் பெற்று கொடுக்கும்! அல்லாஹ் அனைத்தும் அறிதவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [07 June 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44018

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஊரில் கண்ணியமான முறையில் பல வருடங்களாக நல்ல சிறப்பாக இயங்கி கொண்டு இருக்கும் '' பாத்திமா நர்சரி பள்ளியின் நிர்வாகம் ...அரசு அதிகாரத்தை தங்கள் கையில் எடுக்காமல் ....முறையாகவே செயல்பட்டு .....மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளிடம் இணைந்து ..அவர்கள் கேட்கும் ஆபனங்களை ஒப்படைத்து முறையாகவே பள்ளியை திறப்பது தான் ...சிறந்தது .....+ மாணவ கண்மணிகளின் எதிர்காலமும் பாதிக்காது ......

தேவைகற்ற முறையில் பள்ளியை ....தவறாக திறப்பது ...நமது ஊரின் தன்மையை கெடுக்கும். மேலும் அங்கு கல்வி கற்கும் நமது வருங்கால மாணவ / மாணவி களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் ....

'' பாத்திமா நர்சரி '' பள்ளியில் பைலும் மாணவ கண்மணிகளின் பெற்றோர்களும் ..தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து ... அவசர படாமல் .விழிப்புணர்வுடன் இருப்பதே சிறப்பானது ....

மாவட்ட தொடக்கக் கல்வி நிர்வாகம் கேட்கும் '' ஆபனங்களை'' முறையாக ஒப்படைத்து பள்ளியை திறக்கலாம் .....அல்லது கோர்ட்டு மூலம் செயலாற்றலாம் ..... இப்படி பல வழிகள் இருக்க ...'' பாத்திமா நர்சரி பள்ளி நிர்வாகம் ...பள்ளியை தவறான முறையில் திறப்பது ...பள்ளியின் கண்ணியத்தை கெடுக்கும் ....

தற்போது பல இடங்களில் கல்வியை பணம் பறிக்கும் தொழிலாக மாற்றிவருவதால் தான் .... இது போன்ற ...தவறான சட்ட பிரச்சனைகள் வந்து ...வருங்கால மாணவ / மாணவிகளின் '' எதிர் காலம் '' கேள்வி குறியாகிறது ?? தமிழக அரசு இதை கண்ணுற்று பார்த்தால் நல்லது .....

நாம் திரும்பவும் சொல்வது ....நமது '' பாத்திமா நர்சரி பள்ளி நிர்வாகம் ...யோசித்து செயல் படுவது தான் நல்லது ....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. School
posted by Jahir Hussain VENA (Bahrain) [07 June 2016]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 44020

If break seal by other than competent authority means , break the rules and regulation ..it is not a good move


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Fuzail (HK) [08 June 2016]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 44025

செய்தியை எழுதுகிறவரும் மேலே கருத்து சொல்லி இருக்கிறவர்களும் தயவு செய்து உண்மையை அறிந்துக் கொண்டு எழுதுங்கள்... உண்மை தெரியாத நிலையில் உண்மைக்கு புறம்பாக "பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார்கள்" என்பது போன்ற பொய்யான செய்திகளை ரமலான் மாதத்தில் பகிர்வதை தவித்துக் கொள்ளுங்கள்.நேர்முகமாக பார்த்து அல்லது கேட்டு தெரிந்துக் கொண்டபின் கருத்து பகிருங்கள்...

//அத்து மீறி பூட்டை உடைத்து உள்ளே செல்வதென்பது கண்ணியக் குறைவானது// , //ஒத்துழைக்காமல் வன்முறையைத் தூண்டும் செயலில் சட்டத்தை கையிலெடுத்து கலகம் செய்ய முயற்சிப்பது// , //பள்ளியை தவறான முறையில் திறப்பது// , //If break seal by other than competent authority means , break the rules and regulation ..it is not a good move// ..

பாத்திமா நர்சரி பள்ளி 07ஆம் தேதி செவ்வாய்கிழமை தோற்றம் - சீல் பூட்டப்பட்ட நிலையில் - தினத்தந்தி நாளிதழ்...

https://drive.google.com/open?id=0B-y3DiKZem-taERpcTQwZDI5b2c

https://drive.google.com/open?id=0B-y3DiKZem-tb0I4a3A3bTBMaVk


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved