Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:18:57 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17806
#KOTW17806
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 22, 2016
ஜெயலலிதா தலைமையில் 28 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: 13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு; 3 பேர் பெண்கள்!!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2638 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இடம்பெறவுள்ள புதிய அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை சனிக்கிழமை வெளியிட்டது. முன்னதாக, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்கான கடிதத்தையும், புதிய அமைச்சர்களின் பட்டியலையும் ஜெயலலிதா அளித்தார். இந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து அதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டது.

இதன்படி, முதல்வர் ஜெயலலிதா, 28 அமைச்சர்களும் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர்.

13 பேர் புதுமுகங்கள்:

கடம்பூர் சி.ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், வி.சரோஜா, கே.சி.கருப்பண்ணன், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.துரைக்கண்ணு, பி.பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, எம்.மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 13 புதுமுகங்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.

12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு:

14-ஆவது சட்டப் பேரவையில் அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, செல்லூர் கே.ராஜு, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.சண்முகநாதன், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி ஆகிய 12 பேர் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள்: கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய 3 பேர் அமைச்சர்களாகவுள்ளனர்.

3 பேர் பெண்கள்:

வி.சரோஜா (ராசிபுரம்), எஸ்.வளர்மதி (ஸ்ரீரங்கம்), வி.எம்.ராஜலட்சுமி (சங்கரன்கோவில்) ஆகிய 3 பெண்கள் அமைச்சர்களாகவுள்ளனர். 14-ஆவது சட்டப் பேரவையில் அதிமுக அமைச்சரவையில் இரண்டு பெண் அமைச்சர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கும்-தெற்கும்: அதிமுகவின் வெற்றிக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளும், தென் மாவட்டத்தில் சில தொகுதிகளும் பெரிதும் கை கொடுத்தன.

இதனால், மேற்கு, தென் மாவட்டங்களில் இருந்து தலா 5 பேர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், பிற மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 15-ஆவது சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, சட்டப் பேரவையின் அதிமுக குழுத் தலைவராக ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாளை 12 மணிக்கு பதவியேற்பு:

முதல்வர் ஜெயலலிதா, 28 அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் திங்கள்கிழமை (மே 23) நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

7 அமைச்சர்களுக்கு அதே துறைகள் ஒதுக்கீடு

கடந்த பேரவையில் அமைச்சர்களாக இருந்த 7 பேருக்கு அவர்கள் வகித்த அதே துறைகளே புதிய 15-ஆவது சட்டப்பேரவையிலும் ஒதுக்கப்பட்டுள்ளன. நிதித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரம்-குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உணவு-இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு அதே துறைகள் இப்போதும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு, அந்தத் துறையுடன் கூடுதலாக பொதுப்பணித் துறையும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சரான செல்லூர் கே.ராஜுவுக்கு, தொழிலாளர் நலத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கருணைமிகு கருணாநிதியே!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [22 May 2016]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 43901

கருணைமிகு கருணாநிதியே, எங்கள் சிறுபான்மை இனத்தின் மீது கருணை புரிந்து கரிசமுடன் அரசபையில் அங்கம் வகிக்கவேண்டும் என்று ஆவல் பிளிற ஆதரவு கரம் நீட்டினாய்!

அன்று உன் அரச சபையில் ஒன்றுக்கு இரு முஸ்லிம் மந்திரிகளை உருவாக்கி முஸ்லிகளின் உறவு என் உதிரத்தோடு ஒன்றிணைந்தது என்று இவ்வுலகிற்கு பறை சாற்றினாய்!

வரலாற்றில் இதுவரை எந்த முதலமைச்சரும் இரு முஸ்லிம் அமைச்சர்களை அவையில் அமைத்திடவில்லை, நீயே அந்த அந்தஸ்த்தை தந்த தமிழின தலைமை பெருந்தகையே!

எந்த தலைவனும்,தலைவியும் தராத ஒரு கவுரமிகு மரியாதையையும் உரிமையையும் முஸ்லிம்களாகிய எங்களுக்களித்து அகம் மகிழ அதிகமான உறுப்பினர்களுக்குறிய வாய்ப்பை உளமார வழங்கினாய்.ஆனால் காலத்தால் மக்கள் அளித்த தீர்ப்பால் அந்த வாய்ப்புகள் கை நழுவிவிட்டது!

இருப்பினும் இன்றுவரை நாங்கள் நன்றியுடையவர்கள் என்றென்றும் உன் உதவியை மறக்காத மரத்தமிழர்களாகிய முஸ்லிம்கள் மட்டுமல்ல நீங்கள் என்றென்றும் மதிக்கும் மகிமைமிகு முஸ்லிம்களும் கூட!

கருணைமிகு முதியவனே உனக்கு தோல்வி என்பது இமியளவு எறும்புக்கடியின் வலிக்கொப்பானது என்பதை எத்தனை, எத்தனை முந்திய வரலாறு உதாரணமாக்கித்தந்திருக்கிறது!

இருப்பினும் நீ தற்போது வெற்றின் விளிமபுவரை சென்று விரலிடை தூரத்தில் அது விலகிப்போன துர்பாக்கிய நிலையானாய்..இதுவும் ஒரு துரோகியின் சதிசெயலின் வஞ்சக வலை பின்னலின் பிரதிபலிப்பே! இதற்கு காலம் நிச்சியம் பதில் சொல்லும்!

வெற்றியடைந்தவர்கள் தோல்வியின் மயிரிளை ஆபத்திலிருந்து தப்பித்து இருக்கிறார்கள் என்றால்,அதுதான் நிதர்சனமான உண்மை!

எதிர்கட்சியின் இணையற்ற தலைமை சிங்கமாய் சட்டமன்றத்திற்கு செல்லவேண்டும் நீங்கள், உங்களை நம்பி அனுப்பிவைத்த அத்தனை மக்களுக்காகவும், குறிப்பாக சிறுபான்மை சமுதாய காவலனாக இருக்கும் நீங்கள்தான் எங்களுக்கு பெரிய பாதுகாப்பாகவும், பேருதவியாகவும் பிரகாசிக்க வேண்டும்!

ஆழப்போகிற அரசு ஆக்கப்பூர்வமான திட்டங்களை நிறைவேற்றி நன்மைகள் கிடைத்திடும்படி ஆளுமை புரிய வேண்டும், புரிவார்கள் என்ற நம்பிக்கையுடன் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவிப்போமாக!

நல்லது நடக்கட்டும். நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நாங்களும் எங்களுக்கு எப்பொழுதும் பாதுகாவலனாக விளங்கும் உங்களை நம்பியவர்களாக, பின்பற்றியவர்களாக எதிர்காலத்தில் நம்முடைய பயணத்தை தொடர்ந்திடுவோமாக ! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வருத்தம் அளிக்கிறது ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [22 May 2016]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 43902

இந்த புதிய அரசின் அமைசரவை பட்டியலில் நமது முஸ்லிம் சமூதாயா அமைச்சர் ஒருவர் இடம் பெறாதது உண்மையில் மனதிற்கு வருத்தம் அளிக்கிறது ....

என்ன செய்ய நமக்கு கொடுத்து வைத்தது இது தான் என்று நாம் நினைப்பதை விட நாம் என்ன சொல்லி விட முடியும் .... எல்லாம் அறிந்தவன் அல்லாஹு ஒருவனே ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [23 May 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43903

அஸ்ஸலாமு அலைக்கும்

அருமை சகோதர் அவர்களே .....கொஞ்சம் பொருத்து இருங்கள் நிச்சயம் நமது இஸ்லாமிய சமுதாயத்துக்கும் ...மந்திரி பதவி என்கிற பொறுப்பை .... நம் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கொடுப்பார்கள் ...

பொறுமை என்பது கடலினும் மேலானது ......

அவசரம் என்பது நமது நிதானத்தை இழக்க கூடியது .....

பொருத்து இருங்கள் ...நம் சமுதாயத்தை மதிப்பதில் ...பண்புள்ளவர் தான்..... நம் தமிழக முதல்வர் அம்மா அவர்கள்...... வஸ்ஸலாம்.

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. முடிவை தம்பி முஹம்மது லெப்பை அவர்களிடம்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [23 May 2016]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 43904

அன்புத்தம்பி முஹம்மது லெப்பையின் பெருந்தன்மையின் எதிர்பார்ப்பை மெச்சுகிறேன்!

தம்பி முஹம்மது லெப்பையிடமிருந்து ஏதும் எதிர்பார்த்தால் பொறுமையுடன் காத்திருக்க தகுதியுண்டு ஆனால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்காக அல்லவா பொறுத்திருக்கச் சொல்கிறார்!

பொறுத்திருப்பது என்பது வேறு,எதிர்பார்ப்பது என்பது வேறு. எதிர்பார்ப்போம் என்று சொன்னால் அதை 100 சதவீதம் ஏற்றுகொள்ள தயாராக உள்ளோம்! ஆனால் பொறுத்திருங்கள் என்று சொன்னால் அது வந்துகொண்டிருப்பதில் கால தாமதம் என்ற பொருளில்தான் தங்கள் கருத்துப்பதிவு உள்ளது, இதை தாங்கள் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று எங்களுக்கு விளங்க வில்லை!

நம் சமுதாயத்தை மதிப்பவர் ஜெயலலிதா அவர்கள் என்கிறீர்கள் அது உங்கள் நம்பிக்கையாக இருக்கட்டும்.அதுவே உண்மையாகட்டும்!

ஆனால் அடுத்தவர்களை,அடுத்த இயக்கதினர்களை எப்படி ஜெயலலிதா அவர்கள் மதிக்கிறார் என்பதை இன்று நடந்த நிகழ்வே ஒரு சாட்சியாக விளங்குகிறது!

பிராதான எதிர்கட்சியின் பிரதிநிதியாக பெருந்தன்மையுடன் ஸ்டான்லின் அவர்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கு கொண்ட அவருக்கு நாலாந்தர மனிதராக மக்களோடு மக்களாக இருப்பதற்குறிய இருக்கை ஏற்படுத்தப்பட்ட பண்பே ஜெயலலிதா அவர்களின் மதிப்பின் மாண்பு வெளிபடுகிறது. நடுநிலை மனமிகு மக்களுக்கு முகசுளிப்பையுண் டாக்கி விட்டதோடல்லாமல் ஊர் அறிந்த ஒரு வேதனை வடு செய்தியாகவும் பரவிவிட்டது!

இதையே சற்று மாத்தி யோசிப்போம் ஜெயா அரசைத்தவிர வேறு அரசு பதவி ஏற்கும் விழாவில் தன் கட்சியின் மூத்த உறுப்பினரோ அல்லது கடைநிலை உறுப்பினரோ கலந்தது கொண்டார் என்று வைத்துக்கொள்வோம்.அவ்விஷயம் ஜெயா அவர்களுக்கு தெரியவந்தால்,அந்த உறுப்பினரின் நிலையை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

முடிவை தம்பி முஹம்மது லெப்பை அவர்களிடமே விட்டு விடுகிறேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [24 May 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43908

அஸ்ஸலாமு அலைக்கும்

எங்கள் அன்பு .ஆதம் சுல்தான் காகா அவர்களின் பதிவில் தன்மை உள்ளது .....தமிழக மக்கள் ஒட்டு மொத்த நபர்களின் ஆதரவு இன்னும் அம்மா அவர்களுக்கு. நிறைந்து இருப்பதை தாங்கள் ... இல்லை தமிழகத்தின் மாற்று கருத்து உள்ளவர்களும் அறிந்ததே.....

அம்மா அவர்களின் பதவி ஏற்பு விழாவில் ..தா .பாண்டியன் ஐயா அவர்களின் கருத்தை '' டிவி '' பதிவில் பாருங்கள் .....தங்களுக்கு சரி என்று மனதில் படும் ....

அருமை காகா.முஹம்மது ஆதம் சுல்தான் அவர்கள் . தாங்கள் மனதில் நம் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இப்படி தான் என்று பதிய வைத்து உள்ளீர்கள் .....அதான் தாங்கள் என்னும் எண்ணமும் சரி ,, நினைப்பதும் சரி ஒருமை பாடாகவே மனதில் என்ன தோன்றுகிறது .....

பொதுவாக எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி .... மந்திரி சபை விரிவாக்கம் என்று ஓன்று இருக்கிறது ...அதில் நம் சமுதாயத்துக்கு நல்லது நிச்சையம் நடக்கும் ......நம்பிக்கை என்கிற சக்கரத்தில் தான் இவ் உலகமே ஓடுகிறது .....அதில் நாமும் பயணிப்போம் ...

மரியாதைக்குரிய . ஸ்டான்லின் அவர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டது தான் .ஸ்டான்லின் அவர்கள் தமிழக மக்க மக்கள் மீது வைத்து உள்ள நெருக்கத்துக்குஅடையாளம்.....அவரும் மற்ற MLA களை போல ஒருவர் தான் தற்போது வரை .....எதிர் கட்சி தலைவர் என்கிற பதவியை அவர்கள் கட்சி அந்த நேரத்தில் முறை படி ஸ்டான்லின் அவர்களுக்கு அறிவித்து இருந்தால் ...தமிழக அரசு முறையாக அவர்களுக்கு ...முன் வரிசையில் இடம் ஒதுக்கி இருப்பார்கள் ...

இதில் தமிழக முதல்வர் அம்மா அவர்களை குறை சொல்வதற்கு ஒன்றுமே கிடையாது ....

தமிழக முதல்வர் அம்மா அவர்கள் முதல் நாள் தமிழக மக்களுக்காக போட்ட அனைத்து '' கையெழுத்தை '' பற்றி தான் ..அனைத்து ஊடகங்களும் புகழ்த்து தள்ளின ...என்பது குறிப்பிடத்தக்கது .......

நம் இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக தமிழக முதல்வர் அம்மா அவர்கள் .பல நல்ல சலுகைகளை தருவார்கள் என்கிற முழுமையான ஒரு நம்பிக்கையுடன் நாம் இருப்போம் .....இன்ஷா அல்லாஹ் நடக்கும் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [24 May 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43910

அஸ்ஸலாமு அலைக்கும்

சாரி...என்னுடைய முன் பதிவு கால தாமதமானது ......காரணம் என்னுடைய ஆபீசில் '' இன்டெர் நெட் '' கொஞ்சம் வேலை செய்ய வில்லை .....ஆதலால் என்னுடைய பதில் பதிவு ....என் அன்பு .ஆதம் சுல்தான் காகா அவர்களுக்கு கால தாமதமாக தான் போய் சேர்த்தது .....

தமிழக முதல்வர் .அம்மா அவர்கள் பதவி ஏற்ற ஒரு சில மணி நேரத்தில் .....நேற்றே நம் சமுதாயத்தை சேர்ந்த .நிலோபர் கஃபில் அவர்களுக்கு . தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு கொடுத்து இருக்கிறார்கள் .....அருமை காகா ஆதம் சுல்தான் அவர்களும் இதை அறிந்தே இருப்பார்கள் என்று நினைக்கிறேன் ....மேலும் ...

மரியாதைக்குரிய அம்மா அவர்கள் ... ஸ்டாலின் அவர்களுக்கு சீட்டு ஒதுக்க பட்டதற்கு வருத்தமும் ...அதற்கான விளக்கமும் ..மிகவும் பண்புடன் அளித்து இருப்பது பாராட்டுக்குரியதே ..இதையும் அருமை காகா அவர்கள் அறிந்தே இருப்பார்கள் ....

நாம் ஒருவரை பற்றி மனதளவில் எப்படி எண்ணுகிறோமோ ..அது தான் நம் மூலைக்கு சென்று ...நம்மை வேறு கண்ணோட்டத்தில் அழைத்து செல்லும் ...அருமை காகா அவர்கள் தமிழக முதல்வர் .அம்மா அவர்கள் மீதும் ...வைத்த எண்ணமும் அப்படி தான் போல ......

C.P. .......ஸ்டாலின் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அதிகாரிகள் முன்னரே எனக்குத் தெரிவித்திருப்பார்கள் என்றால் நடைமுறை விதிகளைத் தளர்த்தி அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கியிருப்பேன் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்..........ஸ்டாலின் அவருக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதில் ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு நான் இத்தருணத்தில் ஒரு விளக்கத்தை தர விரும்புகிறேன். இருக்கை ஒதுக்கீடு மூலம் திமுகவையோ, ஸ்டாலினையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை.

பெரும் தன்மை என்பது இது தான் ......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved