Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:51:31 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17713
#KOTW17713
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 9, 2016
அ.தி.மு.க. வேட்பாளர் சரத்குமார், காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி! சட்டசபையில் தொகுதி மேம்பாட்டிற்கு அதிக கேள்விகளை கேட்ட உறுப்பினர் தான் என பெருமிதம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3415 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் மே 16 அன்று நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் உள்ளடக்கிய திருச்செந்தூர் தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

காயல்பட்டணம்.காம் இணையதளம், 13 வேட்பாளர்களையும் தொடர்பு கொண்டு, அவர்களிடம் பொதுவான 6 கேள்விகளை முன் வைத்து, அவற்றுக்கான பதிலினை அவர்களிடம் கோரியது.



அ.தி.மு.க. வேட்பாளர் சரத்குமாரிடம் - காயல்பட்டணம்.காம் இணையதளம், கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் வழங்கிய பதில்களும் - கீழே, முழுமையாக வழங்கப்படுகின்றன:

(1) பொது வாழ்வில், இதுவரை தாங்கள் ஆற்றியுள்ள பணிகளின் விபரங்கள்:
சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பலருக்கு உதவிகள் செய்திருந்தாலும், நான் என்றுமே அவற்றை பட்டியலிடுவதில்லை. ஆனால் - தென்காசியில் கடந்த 5 ஆண்டுகளில் நான் செய்த பணிகள் சிலவற்றை உங்கள் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளேன்,









(2) திருசெந்தூர் தொகுதியின் முக்கிய பிரச்சனைகளாக எவற்றை கருதுகிறீர்கள்? அவற்றுக்கான தீர்வுகளை எவ்வாறு வழங்குவீர்கள்?
<><><> அடிப்படை வசதிகள்; தடையில்லா குடிநீர் வழங்குதல்; மேம்படுத்தப்பட்ட சாலைகள்; குளங்கள் தூர்வாருதல்; சுகாதார நிலையங்கள்; தேவையான இடங்களுக்கு பஸ் வசதிகள்

<><><> தொகுதி மேம்பாட்டிற்கு - விவசாயிகள், மீனவர்கள் பிரச்சனைகள் தீர்வு, அரசு கல்வி நிறுவனங்கள், புது தொழில்கள் ஊக்குவிப்பு, வேலை வாய்ப்புகள், அனல் மின் நிலையம் சிக்கல் தீர்க்க நடவடிக்கை


(3) நீங்கள் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானால், தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்யவும். சட்டமன்றத்தில் குரல் கொடுக்கவும் என்னென்ன சிறப்பு முயற்சிகள் எடுப்பீர்கள்?
கடந்த 5 வருடங்களில் அதிகபட்சமாக 8,639 கேள்விகள் தொகுதி மேம்பாட்டிற்காகவும், தமிழகத்தின் முன்னேற்றதிற்காகவும் சட்டமன்றத்தில் கேட்ட ஒரே சட்டமன்ற உறுப்பினர் நான் என்ற செய்தியை பத்திரிக்கைகளில் நீங்கள் படித்து இருக்கலாம்.

சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள், இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் மாநிலத்தை முன்னுதாரணமாக உருவாக்கும் என்ற சிந்தனை, என்னை ஒரு பொறுப்புள்ள சட்டமன்ற உறுப்பினராக செயலாற்ற வைத்திருக்கிறது. நான் என் கடமையை எந்த ஒரு நிலையிலும் தவறமாட்டேன் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

தொகுதியின் கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு திறமையான குழு கொண்டு பரிசீலித்து, அவற்றில் தகுதி பெற்ற முக்கியம் வாய்ந்தவற்றிற்கு உடனடி நடவடிக்கை எடுப்பேன். இந்த குழு என்னுடைய நேரிடையான பார்வையில் இயங்கும்


(4) தொகுதிக்கான உறுப்பினர் நிதி (ஆண்டொன்றுக்கு) 2 கோடி ரூபாயை மக்கள் பயன்பெறும் வகையில் எவ்வாறு தேர்வு செய்வீர்கள்?
தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை முதலில் தேர்ந்தெடுப்பேன். அவற்றுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செயல்படுவேன்


(5) தொகுதி நிதியின் மூலம் செய்யவேண்டிய பணிகளுக்கு விடப்படும் டெண்டரை e-tender மூலம் கையாள்வீர்களா?
என் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் இயன்ற அளவிற்கு வெளிபடைதன்மையுடன் இருப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்வேன்


(6) காயல்பட்டினம் பகுதியில் இயங்கும் DCW தொழிற்சாலை குறித்த தங்கள் நிலைப்பாடு என்ன? சுற்று சூழலுக்கும் மக்கள் உடல்நலனுக்கும் கேடு விளைவித்துள்ள அந்த தொழிற்சாலைக்கு எதிராக குரல் கொடுப்பீர்களா? போராடுவீர்களா?
இது போன்ற கோரிக்கைகளை நிபுணர் குழு வைத்து அலசி ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி பொது மக்கள் பாதிக்காத வகையில் முடிவு எடுத்து செயல்படுவேன். மக்களை பாதிக்கும் எந்த ஒரு செயலுக்கும் நான் மக்கள் பக்கம் நின்று போராடுவேன் என்று உறுதிபட கூறுகிறேன்,


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [09 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43699

நமது தொகுதிக்கும் நல்லவை நடந்தேற, சரத் குமார் அவர்களை வெற்றி பெற செய்ய

மறவாதீர்

உங்கள் வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...விடுபட்ட 6 கேள்விகள் - மக்கள் கேட்கிறார்கள்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [09 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43700

தென்காசி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இவ்வளவு சேவைகள் செய்த நீங்கள் உங்களுக்கு வாய்ப்புக்களை நல்கிய முதல்வர் அம்மா அவர்களின் கட்சியை விட்டு நீங்கள் விலக காரணம் என்ன - மீண்டும் அவரிடம் அடைக்கலம் ஆன ரகசியம் என்ன?

உங்கள் சொந்த சின்னத்தை விட்டு இரட்டை இலை சின்னத்தில் போட்டி இட சம்மதித்த மர்மம் என்ன. இரண்டு இடங்களில் போட்டி இட்டு வென்ற உங்கள் கட்சி ஒரு இடம் போதும் என்று திருப்திப் பட்டுக் கொண்ட உங்கள் நிலைப்பாடு என்ன நீங்கள் சிறப்பாக செயல்பட்ட தென்காசியில் மீண்டும் போட்டி இடாமல் திருச்செந்தூரை தேர்ந்தெடுத்த உங்கள் முடிவு சரியானதா?

திருச்செந்தூர் தொகுதியில் நாடார் சாதி ஓட்டு உங்களுக்கு கிடைக்கும் என்று சாதி உணர்வில் உங்களை அம்மா நிறுத்தியிருப்பதாக மக்கள் நினைக்கிறார்களே, இந்த யூகம் சரியானதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Mohideen (Jeddah) [09 May 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43703

////கடந்த 5 வருடங்களில் அதிகபட்சமாக 8639 கேள்விகள் தொகுதி மேம்பாட்டிற்காகவும் தமிழகத்தின் முன்னேற்றதிற்காகவும் சட்டமன்றத்தில் கேட்ட ஒரே சட்டமன்ற உறுப்பினர் நான் என்ற செய்தியை பத்திரிக்கைகளில் நீங்கள் படித்து இருக்கலாம்.////

பாராட்டுக்கள் அம்மாவின் அடிமைகள் சாதிக்க முடியாததை கூட நீங்கள் சாதித்து இருக்கிறீர்கள்.

ஆமா இது எந்த பத்திரிக்கைகளில் எப்பொழுது வந்தது. அதற்க்கு உண்டான கட்டிங்கை பதிய முடியுமா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...உங்கள் கைகுக்குள் வெற்றி முத்தை தக்க வைப்பீர்களா
posted by A.R.Refaye (Abudhabi) [09 May 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43705

தொகுதி தொண்டனின் சில கேள்விகள் தொலை தூரத்திலிருந்து::

பாராட்ட பட வேண்டிய பல நல்ல திட்டங்களை,கடந்த 5 வருடங்களில் அதிகபட்சமாக 8639 கேள்விகள் கேட்ட தங்களின் உயர் தர அரசியலின் உற்சவம் செந்தூர் கடலில் காணாமல் போனால் உங்களின் உள்ளம் உடைந்து போகதா !!

தென்னகத்து காசி தென்காசியில் மக்களின் அன்பைபெற்று போதிய திட்டம்களை சிறப்பாக செய்த நீங்கள் அந்த தொகுதியை அம்மாவின் அபிமானியாக தாரைவார்த்து கொடுத்து இப்போது செந்தூரரரின் ஆசியால் வெல்வோம் என்று சொல்லும் நீங்கள் மீண்டும் ஒருமுறை மற்ற தலைவர்களின் வேண்டுதலின் படி இத்தகுதி வாய்ந்த தொகுதியை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்,

தாம் தமது சமத்துவ கட்சின் சார்பாகவோ அல்லது சுயேட்சை வேட்பாளராக தென்காசியில் கட்சிப்பணி ஆற்றிக்கவேண்டும் இந்த முடிவு உங்கள் வாழ்வுக்கு வாழ்த்துரையா அல்லது முடிவுறையா அறியும் காலம் தொலைவில் இல்லை.

எம் தொகுதின் நீண்ட கால வேட்பாளர் அனிதா அவர்கள் அணி மாறி, மாறி நின்றாலும் திருச்செந்தூர் மக்களின் நன் மதிப்பை பெற்றவர் அதோடு அரசு உதவிகளை விட தம் கரத்தால் தர்மம் வழங்கி இப்பகுதி மக்களின் அன்பில் திளைப்பவர் ஏழ்மை மக்களின் வாழ்வாதாரங்களை பிறர் அறியா வண்ணம் அள்ளிக்கொடுக்கும் சிறந்த வேட்பாளர் என்று நற்பெயற்குரிய இவரும் தேர்தல் கடலில்முத்து எடுக்க துடிக்கும் இவரின் கரங்கள் கும்பிட்ட வண்ணம் இப்பகுதி மக்களை நோக்கி உள்ளது வெற்றி முத்து இவர் எடுப்பாரா இல்லை அ.தி.மு.க. வேட்பாளர் சரத்குமார் உங்கள் கைகுக்குள் வெற்றி முத்தை தக்க வைப்பீர்களா, காத்திருக்கும் மக்களில் ஒருவன்

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by L.A.K.BUHARY (HONG KONG) [09 May 2016]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 43708

எந்த கட்சியைச் சேர்ந்த வேட்பாளராக இருந்தாலும் நம் தொகுதியை சுற்றிலும் முள் உடை மரங்களை அழித்துவிட்டு பசுமை மரங்களை நட்டித்தர, சுகாதார வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கும், மழைக்கலங்களில் நீர் தேக்கமின்றி வடிகால் அமையப்பெறவும்,சுகாதார இஸ்திரதன்மைக்கும் பொறுப்பேற்கும் திட்டங்கள் உண்டா, அதை அமுல்படுத்துவார்களா என்ற வாக்குறுதிகள் பெறுவது சாலச்சிறந்தது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கேள்விகள் காணாது
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [09 May 2016]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 43709

கேள்விகள் காணாது.நாமெல்லாம் எதிர்பார்க்கும் கேள்விகளை ஏன் கேட்கவில்லை.இந்த இணயதளம்.அல்லது கேட்க தெரியவில்லையா?அல்லது கேட்டால் அரசியலை தாண்டி இனகசப்பை தூண்டிவிடுவது போல் ஆகிவிடுமோ என்ற ஒரு தற்காப்பு நிலையா?

எதாக இருந்தாலும் நம் தொகுதி பிரதிநிதி எல்லாவற்றிற்கும் வெளிப்படை தன்மையாக உள்ளவர் என்பதை எப்படி தெரிந்து கொள்ள நாங்கள்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [09 May 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43710

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் தொகுதி வேட்பாளர்களிடம் கேட்கப்பட்ட கருத்து தன்மையையும் அவர்களின் பதிலும்....நம் காயல் .காம் .....இணைய தளத்தின் இந்த புதிய கருத்து பதிவை பாராட்டுகிறோம் .....

ADMK வேட்பாளர் சரத்குமார் அவர்களின் பதிலில் பக்குவத்துடன் கலந்த ,,பொறுப்பான வேட்பாளர் என்பதை காட்டுகிறது ......தென்காசி தொகுதிக்கு நல்ல முறையில் தான் பல நல்ல காரியங்களை செய்து உள்ளார் .....

ADMK வேட்பாளர் சரத்குமார் அவர்கள் நம் தொகுதியில் வெற்றி பெற்றால் அவர்களின் முயற்ச்சியில் .+..அம்மா அவர்களின் நேரடி பார்வையில் நமது தொகுதிக்கு பல நல்ல செயல் திட்டங்கள் வரும் ..இதில் சந்தேகம் இல்லை ...மேலும் நம் ஊர் மக்கள் கலைஞ்சர் பட்டணம் என்பதை ...அம்மா பட்டணம் என்று சொல்லும் விதமாக தங்களின் வாக்கு பதிவின் மூலம் ADMK வேட்பாளர் சரத்குமார் அவர்களை வெற்றி பெற வைத்தால் ....இன்னும் நம் ஊர் பலன் அடையும் .....தற்போது நம் ஊரில் ADMK செல்வாக்கு ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருவது அனைவர்களும் அறிந்ததே ....

DCW தொழிற்சாலை விசையமாக ...ADMK வேட்பாளர் சரத்குமார் அவர்களின் பதிலில் முழுமையான தன்மை உள்ளது .....

DCW தொழிற்சாலை சம்பந்தப்பட்டதை நம் ஊர் மக்கள் யாவர்களும் தற்போது ஒற்றுமையாகவே இருந்து கையாண்டால் தான் நமக்கு முழுமையான பலம் கிடைக்கும் ...DCW விசையத்தில் ..நம்மில் தற்போது ஒற்றுமை இல்லையேல் காலமும் நாம் உயிர் இழப்பால் கஷ்டப்பட்ட வேணும் ....

நம் இணைய தளத்தின் '' கேள்விக்கு .அடுத்து அண்ணாச்சி அவர்கள் முன்பு தொகுதிக்கு என்ன நல்ல காரியங்கள் செய்தார்கள் ,, திரும்ப வந்ததால் என்ன நல்ல திட்டங்களை செயலாற்ற உள்ளார்கள் ...என்கின்ற பதிலை பார்ப்போம் ....முக்கியமாக நம் ஊர் மக்கள் பல DCW தொழிற்ச்சாலையால் பாதிக்க படுகின்றவற்றுக்கு என்ன பதில் தருகிறார்கள் என்று பொருத்து இருந்து பார்ப்போம் ......முன்பு அண்ணாச்சி அவர்கள் DCW விசையத்தில் ஒன்றும் செய்யாதது ஊர் அறிந்த விசையமே ....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...நாட்டுக்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தானய்யா
posted by mackie noohuthambi (kayalpatnam ) [11 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43722

தமிழக தேர்தலில் மொத்தம் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடு கின்றனர். இதில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு ரூ.337 கோடிக்கு சொத்துகள் உள்ளன. அவருக்கு அடுத்து சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு ரூ.170 கோடிக்கு சொத்துகள் உள்ளன.

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா 3-வது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.113 கோடி.

கட்சிவாரியாக அதிமுக 156, திமுக 133, பாமக 72, பாஜக 64, தேமுதிக 57, காங்கிரஸ் 32, வேட்பாளர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்துகளை வைத் துள்ள கோடீஸ்வரர்கள் ஆவர். ஒட்டுமொத்தமாக மதிப்பிடும் போது பெரிய கட்சிகளின் வேட்பாளர் களது சராசரி சொத்து மதிப்பு ரூ.4.35 கோடியாக உள்ளது.

திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் கருப்பன், திருக்கோவி லூர் பாஜக வேட்பாளர் தண்டபாணி ஆகியோர் தங்களுக்கு எவ்வித சொத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மொத்த வேட்பாளர்களில் 114 வேட்பாளர்கள் பான் எண் விவரங்களை தெரிவிக்கவில்லை. 284 பேர் வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை.

283 பேர் மீது கிரிமினல் வழக்கு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 283 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 157 பேர் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 5 பேர் மீது கொலை வழக்கும் 30 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.

கட்சிவாரியாக திமுக 68, பாமக 66, அதிமுக 47, தேமுதிக 41, காங்கிரஸ் 10, பாஜக 26, மார்க்சிஸ்ட் 8 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

சுமார் 28 தொகுதிகளில் மூன் றுக்கும் மேற்பட்ட குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர.

உங்களால் நான் உங்களுக்காகவே நான்......

நாட்டுக்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தானய்யா..NS கிருஷ்ணன் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது,

அண்ணா நாமம் வாழ்க புரட்சி தலைவர் நாமம் வாழ்க இந்திய ஜனநாயகம் வாழ்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved