Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:26:33 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17468
#KOTW17468
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 23, 2016
வெள்ள நிவாரணப் பணிக்கு உதவியோருக்கு KCGC நன்றியறிவிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1964 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழையால், சென்னை கடலூரில் பெருவெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, ஏராளமான தொண்டு நிறுவனங்கள் களமிறங்கி, நிவாரண மற்றும் மீள் கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டன. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நலனுக்காக, உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனியார்வலர்களின் ஒத்துழைப்புடன் - காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) மழைவெள்ள நிவாரணக் குழு - தனிப்பட்ட முறையிலும், பிற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் களமிறங்கிப் பணியாற்றின.

இவ்வகைக்காக ஒத்துழைப்பளித்தோருக்கு நன்றி தெரிவித்து, KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-

KCGC யின் சென்னை வெள்ள நிவாரணப் பணிக்கு நிதி உதவி வழங்கிய நல் உள்ளங்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்!!!.

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் அதனை தொடர்ந்து வந்த வெள்ள பாதிப்பில் தனது உடை, உறைவிடம், வியாபாரம் என அனைத்தையும் இழந்த இஸ்லாமிய மற்றும் இஸ்லாம் அல்லாத சகோதரர்களுக்கும் உதவும் வகையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் KCGC- Kayalpatnam Chennai Guidance Centre அமைப்பின் மூலம் இதற்காக ஒரு நிவாரண குழு அமைக்கப்பட்டு கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பல்வேறு வகையான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் எல்லா புகழும் ஏக வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே!!!.

இவ்வகை பணிக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் காயல்பட்டணம் மக்கள் , குவைத்தில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் Hong Kong வாழ் இந்திய இஸ்லாமிய அமைப்பினர்கள் இணைந்து சென்னை வெள்ள நிவாரண பணிக்காக ரூ.38,49,634(ரூபாய் முப்பத்து எட்டு லட்சத்தி நாற்பத்தி ஒன்பதாயிரத்து ஆறுனூற்று முப்பத்து நான்கு) ரொக்கமாகவும், பொருட்களாகவும் எம்மிடம் வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

பெறப்பட்ட தொகை:

சதக்கா வகையில் ரூ. 33,57,134(ரூபாய் முப்பத்தி மூன்று லட்சத்து ஐம்பத்து ஏழாயிரத்தி நூற்று முப்பத்தி நான்கு),

ஜக்காத் வகையில் ரூ.4,92,500(ரூபாய் நான்கு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து ஐநூறு)

ஆக மொத்தம் ரூ.38,49,634(ரூபாய் முப்பத்து எட்டு லட்சத்தி நாற்பத்தி ஒன்பதாயிரத்து அறனூற்று முப்பத்து நான்கு)

செலவுகள்:

உணவு, உடை மற்றும் நிவாரண பொருட்களாக ரூ.12,57,934 மற்றும் வாழ்வாதரங்களை சீரமைத்துக்கொள்ள உதவும் வகையில் 1773 நபர்களுக்கு ரொக்கமாக ரூ.25,91,700 ஆக மொத்தம் ரூ.38,49,634 மதிப்பில் நிதி உதவி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!!

இவ்வகைக்காக பெறப்பட்ட வரவு மற்றும் செலவுகள் அனைத்தும் சகோ.ஆடிட்டர் ரிபாய் தலைமையிலான KCGC வெள்ள நிவாரண குழு முழுமையாக சரிபார்க்கப்பட்டது.

இதற்காக ஆரம்பிக்கப்பட்ட KCGC Flood Relief Fund மற்றும் KCGC Flood Rehabilitation என்ற இரண்டு WhatsApp Group களும் இந்த மாதம் அதாவது மார்ச் 31-2016 வரை மட்டுமே உபயோகத்தில் இருக்கும். அதன் பிறகு இந்த இரண்டு குரூப்புகளும் முற்றிலுமாக கலைக்கப்படும்.

இது சம்பந்தப்பட்ட கணக்குகள் நன்கொடை வழங்கிய நபர்களுக்கு கணக்கு விபரங்கள் தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் தங்களுடைய ஈ மெயில் முகவரியை எமக்கு அனுப்பித்தந்தால் இன்ஷா அல்லாஹ் மேற்படி கணக்கு விபரங்களை உங்களுக்கு அனுப்பி வைப்போம் என்பதனை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். வஸ்ஸலாம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
சொளுக்கு M.A.C.முஹம்மத் நூஹ்
(செயற்குழு உறுப்பினர், KCGC)


KCGC மழைவெள்ள நிவாரணக் குழு தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வெளிப்படையான நிர்வாகம்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [26 March 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43408

வெளிப்படையான நிர்வாகம் மக்களின் பணத்துக்கு மக்களுக்கு கணக்கு சொல்லவேண்டுமே என்ற உணர்வு - எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வுக்கு பதில் சொல்லவேண்டுமே என்ற அச்ச உணர்வு இவை மனிதனுக்கு முக்கியம் குறிப்பாக முஸ்லிம்களுக்கு மிக அவசியமான ஒன்று. இந்த வகையில் KCGC யின் அணுகுமுறை பாராட்டுக்குரியது.

இதேபோல் IQRA நிறுவனமும் தங்கள் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்து மக்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. பொதுவாகவே முஸ்லிம்கள் வக்ப் சொத்துக்கள் முஸ்லிம்களாலேயே சூறையாடப் பட்டு வரும் வேதனையான செய்திகளை பார்க்கிறோம்.

பள்ளிவாசல் நிர்வாகங்கள் பள்ளி வாசல் செலவினங்களுக்கு பணம் பற்றாக் குறையாக இருக்கிறது, தாரளமாக தந்து உதவுங்கள் என்று மஹல்லா வாசிகளிடம் கேட்கிறார்கள். அநேகமான பள்ளிவாசல்களில் மாதா மாதம் ஏற்படும் வரவு செலவு கணக்குகள் துண்டு விழும் தொகைகள் ஜூம்மா வசூல்கள் என்று இவை எதுவுமே மஹல்லாவாசிகளுக்கு தெரியும் படி நோட்டிஸ் போர்டில் போடும் வழக்கம் இல்லை.

யாராவது கேட்டால் அவர்களை மேலும் கீழும் பார்ப்பதும் அவர்களை உதாசீனப் படுத்துவதும் வக்ப் போர்டு இந்த கணக்குகளுக்கு வரி விதிக்கிறார்கள் எனவே இதை வெளிப்படையாக வெளியிட இயலாது என்று சொல்லி நம் வாயை அடைத்து விடுகிறார்கள். சிலர் இவன் கொடுப்பதே சில ஆயிரங்கள் இவன் வந்து கணக்கு கேட்பதா என்று அவர்களை அசட்டை செய்வது இவை எல்லாம் நம் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கும் அன்றாட நிகழ்வுகள்.

ஆனால் நபிமார்களில் அரசாட்சியும் செல்வமும் அளிக்கப் பட்ட சுலைமான் நபி அவர்கள் சுவர்கத்துக்கு கடைசியாக வந்து சேர்வார்கள். நபி தோழர்களில் வாரி வாரி வழங்கிய வள்ளல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் அவர்கள் சொர்க்கத்துக்கு கடைசியாக வந்து சேர்வார்கள்.

இவர்கள் எல்லாம் ஏன் அப்படி என்று கேட்டால் அவர்கள் அல்லாஹ்விடம் கணக்கு கொடுக்க வேண்டி இருந்தது என்று உலமாக்கள் சொல்லிக் காட்டுவார்கள். அந்த உத்தமர்களே அப்படி என்றால் நமது கதை என்ன என்று எல்லோரும் எண்ணி பார்க்க கடமைப் பட்டிருக்கிறோம்.

KCGC அமைப்பினருக்கும் அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி ஏழைகள் வீடுகளில் விளக்கேற்றி வைத்தவர்களுக்கும் அல்லாஹ் மென்மேலும் ரஹ்மத்தும் பரக்கத்தும் செய்வானாக. இந்த சேவை தொடர்வதற்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் து ஆ க்களும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved