Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:54:15 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17168
#KOTW17168
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 18, 2016
மீலாதுன் நபி 1437: ரஹ்மத்துன் லில் ஆலமீன் சார்பில் மீலாத் விழா! போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2359 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் இயங்கி வரும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் நடத்தப்பட்ட மீலாத் விழாவில், போட்டிகள் பல நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. விரிவான விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில், முஹ்யித்தீன் பள்ளியருகில் கடந்த 31 ஆண்டுகளாக மேலாக இயங்கி வருகிறது ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம். இதன் சார்பில் ஆண்டுதோறும் மீலாத் விழாக்கள் நடத்தப்பட்டு, சன்மார்க்கப் போட்டிகள் நடத்தி - பரிசுகளும் வழங்கப்படுவது வழமை.

நடப்பாண்டு மீலாத் விழா மற்றும் அமைப்பின் 32ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள், ஹிஜ்ரீ 1437 - ரபீஉல் அவ்வல் 28, 29 ஆகிய நாட்களில், (2016 ஜனவரி மாதம் 09, 10 சனி, ஞாயிறு நாட்களில்) நடைபெற்றன.

09.01.2016. சனிக்கிழமையன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 சிறுவர்களை பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் சென்று, சுன்னத் செய்யும் வைபவம் நடத்தப்பட்டது.





காலை அமர்வு:

09.30 மணிக்கு, நபிகள் நாயகம் புகழ்பாடும் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. ஹாஃபிழ் ஜெ.எஸ்.அல்தாஃப் அஹ்மத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.

மாலை அமர்வு:

16.30 மணிக்கு, நெல்லை (பொட்டல்புதூர்) ரிஃபாய் ஜமா பக்கீர், பாஞ்ச்பீர் எம்.செய்யித் முஹம்மத் முஹ்யித்தீன் குழுவினரின் - நபிகளார் புகழ்பாடும் தஃப்ஸ் நிகழ்ச்சி, எம்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் முன்னிலையில் நடைபெற்றது.



இரவு அமர்வு:

18.30 மணியளவில், பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, எஸ்.எச்.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலையில் துவங்கிய அமர்வை, முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் பீ.ஒய்.எஸ்.ஹாரிஸ் ஹல்லாஜ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் வரவேற்புரையாற்றினார்.

இவ்வமர்விற்குத் தலைமை தாங்கிய - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ தலைமையுரையாற்றினார்.

தொடர்ந்து, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கவ்திய்யா கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் மு.அப்துஸ் ஸமத் தலைமையில் நபிகளார் புகழ் கூறும் தமிழ் சொல்லரங்கமும், “எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த வழியில், இனிய இல்லறம் அமைய பெரிதும் விட்டுக் கொடுக்க வேண்டியது ஆண்களா, பெண்களா?” எனும் தலைப்பில் பட்டிமண்டபமும் நடைபெற்றன.

உடுமலைப் பேட்டை ஃபிர்தவ்ஸிய்யா பள்ளியின் இமாம் மவ்லவீ எஸ்.முஹம்மத் யூஸுஃப் ஸிராஜீ, மதுரை வக்ஃப் வாரியக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கே.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் “ஆண்களே!” எனும் அணியிலும், கோயமுத்தூர் மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளியின் இமாம் எம்.அப்துல் மாலிக் ஸிராஜீ, இளையாங்குடி டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் கல்லூரியின் பேராசிரியர் கே.அப்துர்ரஹீம் ஆகியோர் “பெண்களே!” எனும் அணியிலும் பங்கேற்று உரையாற்றினர்.

சட்னி எஸ்.ஏ.கே.செய்யித் மீரான் நன்றி கூற, ஃபாத்திஹா – துஆவுடன் முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.



இரண்டாம் நாள் காலை அமர்வு:

அருள்மறை குர்ஆனை அகத்திலேந்திய ஹாஃபிழ்களுக்கான - திருக்குர்ஆன் மனனப் போட்டி, ஜெஸ்மின் ஏ.கே.கலீலுர்ரஹ்மான் முன்னிலையில் நடைபெற்றது. ஹாஃபிழ் எம்.எச்.முத்துவாப்பா கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.





மாலை அமர்வு:

16.30 மணிக்கு, “சிறுவர்களை நேசித்த செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்” எனும் தலைப்பில், 15 வயதுக்குட்பட்டோருக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியின் நிறைவில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் முதல் மூன்றிடங்களைப் பெற்றனர்.



இரவு அமர்வு:

சோல்ஜர் அப்துல்லாஹ் ஸாஹிப், கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலையில் துவங்கிய இரவு அமர்வை, மஸ்ஜித் மீக்காஈல் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இவ்வமர்விற்குத் தலைமை தாங்கிய - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, தலைமையுரையாற்றினார்.



அண்ணலார் புகழ்பாடும் நஅத் மஜ்லிஸ் மற்றும் தஃப்ஸ் நிகழ்ச்சியை, ஆசிரியர் இசட்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர் தலைமையில் குழுவினர் நடத்தினர்.





விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - திருவிதாங்கோடு ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எம்.தாஜுத்தீன் அஹ்ஸனீ, “நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரன்பில் பேரின்பம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



இக்ராஃ மூலம் ரூ. 30 ஆயிரம் கல்வி உதவித்தொகை:

இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு கல்வி உதவித்தொகைக்காக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக விழாவில் அறிவிக்கப்பட்டது.

பரிசளிப்பு:

தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹிஃப்ழுப் போட்டியில் சிறப்பிடங்களைப் பெற்ற முதல் மூவருக்கு முறையே ரூபாய் 2000, 1500, 1000 பணப்பரிசுகளும், பேச்சுப்போட்டியில் சிறப்பிடங்களைப் பெற்ற முதல் மூவருக்கு முறையே ருபாய் 1500, 1250, 1000 பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன. ஹிஃப்ழுப் போட்டியில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் 300 ரூபாயும், பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் 250 ரூபாயும் ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டன. பரிசுகளை, மேடையில் அங்கம் வகித்தோர் மாணவர்களுக்கு வழங்கினர்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தகவல் & படங்கள்:
சட்னி S.A.K.செய்யித் மீரான்


ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தால் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடத்தப்பட்ட மீலாத் விழா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[கூடுதல் தகவல்களுடன் செய்தி திருத்தப்பட்டு, கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 16:03 / 18.01.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved