Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:15:14 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17065
#KOTW17065
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 28, 2015
பல்சுவைப் போட்டிகள், மருத்துவ பரிசோதனை முகாமுடன் நடைபெற்றது கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3054 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், பல்சுவைப் போட்டிகள் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாமுடன் நடைபெற்று முடிந்துள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-

பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கமம்:

இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 25ஆவது பொதுக்குழு கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் கத்தர் உம்செய்து பூங்காவில் வைத்து கடந்த 04ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 08.30 மணி முதல் 20.30 மணி வரை நனி சிறப்புடன் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...!!!

புறப்பாடு:

மன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் தத்தம் வாகனங்களில் நிகழ்விடத்திற்கு வந்தனர். வாகன வசதி இல்லாதோருக்கு தனியாக வாகன வசதி ஹாபிழ் முஹம்மது லெப்பை மூலமாக செய்யப்பட்டு இருந்தது.

மருத்துவ பரிசோதனை முகாம்:

நிகழ்ச்சியின் துவக்கமாக, வருகை புரிந்த அனைவரும் தமது பெயரை வருகை பதிவேட்டில் பதிவு செய்து நிலுவையில் உள்ள சந்தா தொகையினையும் செலுத்தினர். பின்னர், மன்ற துணை தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் மருத்துவ பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார்.



இரத்த அழுத்தம், நீரழிவு, உயரம்/weight & BMI முறைப்படி பரிசோதனை நடந்தது. காலை உணவாக வந்திருந்த அனைவருக்கும் சூடான இட்லி மற்றும் பொங்கல் பரிமாறப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் அனைவரையும் ஒன்றுசேர பார்த்த சந்தோஷத்தில் வந்திருந்ததோர் ஒருவருக்கொருவர் முகமன்கள் கூறி செய்திகள் கருத்துகள் பரிமாறிக்கொண்டிருந்தனர். மகளீர் தனியாக அவரது இயல்பான அரட்டையில் ஆழ்ந்தனர். கூடுதலாக, இயற்கையும் இதமான வானிலையுடன் அனைவரையும் வரவேற்றது.

மார்க்க வினா விடை மற்றும் விளையாட்டுப் போட்டிகள்:

இஸ்லாம் மார்க்கம் சார்ந்த கேள்விகள் மற்றும் பலூன் உடைக்கும் போட்டிகள் சிறார்களுக்காக நடைபெற்று வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். குழந்தைகள் இப்போட்டிகளில் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் பங்கேற்றனர். பின்னர் ஜும்ஆ தொழுகைக்கான நேரம் நெருங்கியதும், அருகிலிருந்த பள்ளிவாசலுக்குச் சென்று அனைவரும் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.

மதிய உணவு:



ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் பசி மயக்கத்திலிருந்த அனைவருக்கும் சுவையான நெய் சோறு, கோழிக்கறி, வெங்காய பச்சடி பரிமாறப்பட்டது. வந்திருந்தோர் அனைவரும் மனதார சாப்பிட்டு உளமார சாப்பாடு ஏற்பாடு குழுவினரை பாராட்டினார்கள்.



உணவு ஏற்பாடுகளை மன்றத்தின் மூத்த உறுப்பினர்களான முஹம்மது முஹிதீன் என்ற மம்மி மற்றும் ஹுசைன் ஹல்லாஜ் அவர்களும் இணைந்து மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். மதிய உணவுக்கு பின் வந்திருந்தோர் அனைவரும் சற்று இளைப்பாறினர்.

பொதுக்குழுக் கூட்டம்:

நிகழ்வின் துவக்கமாக, மன்ற செயலாளர் M .N . சுலைமான் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று மன்றத்தின் துணை தலைவர் யூனுஸ் அவர்களை தலைமை ஏற்று தருமாறு வேண்டினார். மேலும் மன்ற தலைவர் பாஜுல் கரீம் அவர்கள் பனி நிமித்தம் காரணமாக வெளிநாடு சென்றுள்ளதால் இக்கூட்டத்திற்கு வரமுடியாத செய்தியை செயலாளர் தெரிவித்தார். தொடர்ந்து, மன்றத்தின் மூத்த உறுப்பினர்களான KVAT கபீர், சொளுக்கு மூசா அவர்களை முன்னிலை வகித்து தருமாறு வேண்டினார் . மன்ற உறுப்பினர் மீரான் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.





சிறப்பு விருந்தினர்கள்:

அமீரகத்தின் காயல் நல மன்ற உறுப்பினரும், ETA நிறுவனத்தின் தலைமை இமாமும், சிறந்த மார்க்க அறினருமான ஹாபிழ் சுலைமான் ஆலிம் மஹ்லரி அவர்களும், அபுதாபி காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினரும், சிறந்த மார்க்க அறினருமான ஹாபிழ் ஹுசைன் மக்கி ஆலிம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

கூட்ட நிகழ்வுகள்:

ஹாஃபிழ் ஷாகுல் ஹமீது அவர்கள் இறை மறையை ஓதினார். ‘கவிக்குயில்’ ஃபாயிஸ் அவர்களின் இனிய இன்னிசை பாடலுடன் கூட்டம் ஆரம்பமானது.





தலைமையுரை:

சிறப்பு விருந்தினர்கள் உட்பட - நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த அனைவரையும் துவக்கமாக வரவேற்றுப் பேசிய துணை தலைவர் யூனுஸ் அவர்கள் மன்றத்தின் வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அழகிய முறையில் விவரித்து கூறினார். மென்மேலும் நம் சேவைகள் தொடர இன்னும் அதிக ஆர்வத்துடன் செயல்பட வேண்டும் என வினவினார்.

செயல்திட்டங்கள்:

நடப்பாண்டு - இக்ராஃவின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக கத்தர் காயல் நல மன்றம் சார்பில் அதிகமாக 31 உறுப்பினர்கள் அனுசரணை அளித்து உள்ளதாகவும்,வருங்காலத்தில் இன்னும் அதிகளவில் பங்களிப்பு செய்திட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மன்றத்தால் காயல்பட்டினத்தில் விரைவில் நிறைவேற்றப்படவுள்ள ‘மாடித்தோட்டம்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, இக்ராஃவின் ஒருங்கிணைப்புடன் மன்றத்தால் நடத்தப்படவுள்ள TNPSC, UPSC போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு, ஆண்டுக்கு இரு முறை கல்வி - வேலைவாயப்பு வழிகாட்டு நிகழ்ச்சி உள்ளிட்ட செயல்திட்டங்கள் குறித்து அவர் விளக்கிப் பேசினார்.

மன்றத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் கருத்து சொல்ல விரும்புவர்கள் தங்களது கருத்துகளை தாராளமாக தெரிவிக்கலாம் என்று கேட்டு கொண்டதற்கிணங்க, உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

மன்ற தலைவர் அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாவிட்டாலும் தொடர்ந்து தொலைபேசியில் கூட்ட நிகழ்வுகள் குறித்து கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டமும், ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் சிறப்புற அமைந்திட அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அனைவருக்கும் மன்ற நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து தனதுரையை நிறைவு செய்தார் அவர்.

புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:





அவர்களது உரைக்கு பின் புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

திருமண அழைப்பு:

இம்மாதம் திருமணம் செய்யவுள்ள மன்ற உறுப்பினர் ஹில்மி அவர்கள் தன் திருமண மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர். மன்றத்தின் சார்பில் மணமகனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள் உரை:





மார்க்க அறிஞர் ஹாபிழ் சுலைமான் ஆலிம் மற்றும் மார்க்க அறிஞர் ஹாபிழ் ஹுசைன் மக்கி ஆலிம் அவர்கள் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார்கள். அவர்களது உரைச்சுருக்கம்:-

வளைகுடா நாடுகளில் குறைந்த உறுப்பினகள் எண்ணிக்கையுடன் நிறைவான சேவைகளை ஆற்றி வருவது கத்தார் நலமன்றம் என்றால் அது மிகையாகாது. தாங்கள் கத்தார் வந்ததை அறிந்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்பளித்தமைக்கு நன்றியெனவும் மேலும், ஒற்றுமை மற்றும் தான தருமங்களின் பலன் நம்மை எவ்வாறு இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய செய்கிறது என்று அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த விசயங்களை மேற்கோள் கட்டி மிகவும் சிறப்பான முறைகள் விவரித்து கூறினார்கள்.

பொருளாளர் உரை:

மன்றப் பொருளாளர் அஸ்லம், மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையைத் தாக்கல் செய்து, கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்றார்.

மன்ற உறுப்பினர்கள் தமது நிலுவைச் சந்தா தொகையை விரைந்து செலுத்திடுமாறும், இயன்றளவு நிலுவையின்றி பார்த்துக்கொள்ளுமாறும், தற்காலத் தேவைகளை அனுசரித்து - ந கர்நலப் பணிகளை நிறைவாகச் செய்திடுவதற்காக - தமது சந்தா தொகைகளை கனிசமாக உயர்த்தி வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.



செயலர் உரை:

மன்றச் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் மன்றத்தின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார். கல்வி, மருத்துவம், சமூக நலம் மற்றும் அவசரகாலம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கத்தர் காயல் நல மன்றம் சார்பில் இதுவரை நடந்த நகர்நலப் பணிகள் குறித்து எடுத்துரைத்து மேலும் பல பணிகள் செய்யப்படவுள்ளதாகவும் கூறிய அவர், இந்த செயல்பாடுகளால் பயன்பெற்ற என்னெற்ற மக்கள் நம் யாவருக்காகவும் இறைவனிடம் துஆ செய்கிறார்கள். அந்த துஆக்கள் பெற நம் யாவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

நன்றியுரை:

மன்ற உறுப்பினர் கத்தீபு மாமுனா லெப்பை அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்த விடுமுறை நாளில் தம் சொந்த அலுவல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நகர் நலனில் அக்கறைகொண்டு இந்நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும், அவர்கள்தம் குடும்பத்தினருக்கும் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.

மேலும், அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் நடந்திய ஒருங்கிணைப்பாளர்கள் ZMD அப்துல் காதர், கத்தீப் ஜியாது, சொளுக்கு முஹமது இப்ராகிம், பொக்கு ஹல்லாஜ் மற்றும் முஹம்மத் முஹ்யித்தீன் உள்ளிட்ட அங்கத்தினர் அனைவருக்கும் மன்ற நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்தார்.

நிறைவாக, ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் அவர்களது துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.

அஸர் தொழுகை இடைவெளிக்கு பிறகு அனைவருக்கும் தேநீர் மற்றும் சமூசா பரிமாறப்பட்டது. . கூட்ட நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.



மகளிர் நிகழ்ச்சிகள்:

திருமறை குர்ஆன், இஸ்லாம், அறிவியல், தமிழ்நாடு, காயல்பட்டினம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கி மகளிருக்கான வினா-விடைப் போட்டியை மன்ற உறுப்பினர் ஹாபிழ் முஹம்மது முஹைதீன் அவர்களின் மனைவி ஹாபிழா M .N . அஹமது ஆயிஷா ஆலிமா அவர்கள் சிறப்புற நடத்தினார். மன்ற தலைவர் அவர்களின் மனைவி பீவி பாத்திமா, உறுப்பினர்கள் KVAT ஹபீப் அவர்களின் மனைவி ஆயிஷா, முஹம்மது லெப்பை அவர்களின் மனைவி இர்பானா ஆகியோர் அடங்கிய குழு முதற்பரிசை வென்றது.



ஆண்களுக்கான வினாடி-வினா போட்டி:

மக்ரிப் தொழுகைக்கு பிறகு, ஆண்களுக்கான வினாடி-வினா போட்டி நடைபெற்றது. குர்ஆன், இஸ்லாம், அறிவியல், தமிழ்நாடு, காயல்பட்டினம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கி கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. துவக்கமாக ஓரணிக்கு 6 பேர் வீதம், அனைவரும் 8 அணியினராகப் பங்கேற்றனர்.

இறுதிப்போட்டியில், மீரான் அவர்களது அணி முதற்பரிசையும், M.R.சாகுல் ஹமீது அவர்களின் அணி இரண்டாவது பரிசையும் பெற்றது. இந்நிகழ்வை வினாடி வினா பிரபலம் கத்தீப் மாமுனா லெப்பை, துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் மற்றும் மதிப்பீட்டாளர் பைசல் ரஹ்மான் ஆகியோர் இப்போட்டியை அனைவரும் ரசிக்கும் வகையில் உற்சாகமாக வழிநடத்தினர்.

பரிசளிப்பு:







குழந்தைகளுக்கும், போட்டிகளில் வென்றோருக்கும் பரிசளிப்பு விழா, 20.00 மணியளவில் நடைபெற்றது. துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் பரிசளிப்பு விழாவை நெறிப்படுத்தினார்.

இனிய நினைவலைகளுடன் மன்ற உறுப்பினர்கள் பிரியாவிடைபெற்றுச் சென்றனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய (24ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மகிழ்ச்சி
posted by hasan faiz (Madurai) [29 December 2015]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 42638

ASSALAAMU ALIKKUM ..

காயலர்களின் முகங்கள் அவ்வப்போது , பொது நிகழ்சிகளின் புகைப்பட தொகுப்பின் போது, அதை காணும் வாய்ப்பை பெறும்போது , மகிழ்ச்சியாக உள்ளது .

மேலும் சிறு யோசனை:

செய்திகளை சொடிக்கினால் , புதிய தாவலில் (NEW TAB) திறக்க செய்யுமாறு வலை வடிவமைப்பு செத்தால் , பயனர்களுக்கு எளிதாக இருக்கும், இவ்வசதி 'கூகுள் செய்தி' பக்கத்தில் இதை நான் சிரமமுடன் பயன்படுத்துவதை கொண்டு, இந்த யோசனையை 'வலை வடிவமைப்பு தொழில்நுட்ப குழுவிற்கு ' முன் வைக்கின்றேன்.

மேலும் 'COMMENT ' இற்கு 'REPLY' வசதியும் , 'REPLY' செய்தால் அதற்க்கு 'e-mail notification' வசதியும் இந்த வலை தலத்தில் ஏற்படுத்துமாறும் எனது கருத்தினை பதிவு செய்கிறேன்.

நன்றி , ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கெட்டதும் தூயதும்....
posted by kavimagan kader (BAHRAIN) [30 December 2015]
IP: 78.*.*.* Bahrain | Comment Reference Number: 42685

வளரும் தென்னையின்
விழுந்த தழும்புகளாய்
அழியாத நாட்களின்
அழகான நினைவுகள்.......

கிளைகள் விரிந்துப் பரந்தாலும்
வேர்கள் இன்னமும்
இந்த மண்ணில்தான்....

தென்றலும் சூறையும்
ஓய்வும் உழைப்பும்
கெட்டதும் தூயதும்
கலந்த கலவையாய்
உன்னைச் சுமக்கிறது
எந்தன் மனது....

வளர்த்த திரு நாடே...
உனது நினைவுகள்
இன்றல்ல என்றென்றும்
நெஞ்சுக்குள் பூங்காடே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved