காயல்பட்டினத்தில், இன்று (19.12.2015. சனிக்கிழமை) நள்ளிரவில் இதமழை பெய்தது. இம்மழை காரணமாக, நகரில் பெரும்பாலும் அனைத்து சாலைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
சிவன்கோயில் தெருவில்...
![](/newsimg/1912201564600.jpg)
![](/newsimg/1912201564615.jpg)
சதுக்கைத் தெரு - ஜலாலிய்யா அருகில்...
![](/newsimg/1912201564630.jpg)
![](/newsimg/1912201564643.jpg)
![](/newsimg/1912201564653.jpg)
ஸீ-கஸ்டம்ஸ் சாலையில்... (குருவித்துறைப் பள்ளியருகில்...)
![](/newsimg/1912201565236.jpg)
சொளுக்கார் தெருவில்...
![](/newsimg/1912201565248.jpg)
இன்று காலையில் நகரில் வெயில் ஒளிர்ந்தது. 14.30 மணி நிலவரப்படி வெயில் குறைந்து, அடுத்த மழைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
தொடர்மழை காரணமாக, நகரிலுள்ள பள்ளிகளுக்கு நேற்றும், இன்றும் (வெள்ளி, சனி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள மழை பொழிவுப் பட்டியலின்படி, மாவட்டத்திலேயே காயல்பட்டினத்தில் மூன்றாவது அதிகபட்சமாக 43.00 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
![](/newsimg/1912201564582.jpg)
படங்களில் உதவி:
நோனா உவைஸ்னா லெப்பை
அப்துல் ஹமீத் அமீன் (தைக்கா தெரு)
மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
#kayalRain வழியிலான படம்
[Administrator: கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 3:25 pm / 19.12.2015] |