Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:25:52 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16963
#KOTW16963
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 7, 2015
தயவுசெய்து பயன்படுத்தப்பட்ட ஆடைகள் வேண்டாம்! பொதுமக்களுக்கு காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பு வேண்டுகோள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2298 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடலூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண நிதி மற்றும் பொருட்களைத் திரட்டுவதற்காக நகர்வலம் வருகையில், பயன்படுத்தப்பட்ட ஆடைகளைத் தராமல் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களை “காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பு” கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து, அவ்வமைப்பின் துணைத்தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ வெளியிட்டுள்ள அறிக்கை:-

“காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழு”வின் சார்பில், 08.12.2015. செவ்வாய்க்கிழமை (நாளை) முதல், 4 வாடகை சரக்குந்து (லாரி) வாகனங்களில், நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நகர்வலமாகச் சென்று, பொதுமக்களிடம் நிவாரண நிதியைச் சேகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



நகர்வலத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையில், மவ்லவீ ஏ.கே.அபூமன்ஸூர் மஹ்ழரீ முன்னிலையில், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவிலுள்ள எஸ்.இப்னு ஸஊத் இல்லத்தில் நடைபெற்றது.







இக்கூட்டத்தில், நாளை (டிசம்பர் 08) நகர்வலமாகச் சென்று நிவாரணப் பொருட்களைத் திரட்டுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்து, செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

இன்ஷாஅல்லாஹ், நாளை காலை 10.00 மணிக்கு நிவாரணப் பொருட்களைத் திரட்டுவதற்காக - “காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் குழு” அங்கத்தினர் ஒரு பிரிவுக்கு 2 வாகனம் என மொத்தம் 4 வாகனங்களில் இரண்டு பிரிவுகளாக, அனைத்து தெருக்களுக்கும் வருகை தருவர்.

நிவாரணப் பணிகளைத் திட்டமிட்டு செய்வதற்கு நிதி பங்களிப்பே முதன்மையானது என்பதால், அதை நாடியே குழுவினர் உங்களிடம் வருவர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும், அவரவர் தகுதிக்கேற்ப பங்களிப்புகள் இருப்பது நலம். காயல்பட்டினத்திலிருந்து வழங்கப்படவுள்ள நிவாரணப் பொருட்களில், நகரின் ஒவ்வொரு குடும்பத்தின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

கடலூரில் நிவாரணப் பணிகளைச் செய்து வரும் குழுவினரை இன்று நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, பாக்கெட்டுகளில் உள்ள உணவுப் பொருட்கள், பாத்திரங்கள் ஆகியன மிக முக்கியமாகவும், பெருமளவிலும் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். பயன்படுத்தப்பட்ட ஆடைகளை தயவுசெய்து தர வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“நிவாரணப் பணிகளை வழங்குவது, அவர்கள் இல்லாதவர்கள் என்பதற்காக அல்ல! இழந்தவர்கள் என்பதற்காகவே!!” என்ற வாசகம் அனைவரின் மனதையும் பெரிதும் பாதித்துள்ளது.

எனவே, நல்ல நிலையில் வாழ்ந்து வந்த அவர்கள் ஏதோ இன்று இறைவன் நாட்டப்படி இந்நிலைக்கு ஆளாக நேர்ந்துள்ளது. அவர்களின் கவுரவம், கண்ணியத்திற்கு சிறிதும் பங்கம் ஏற்படாவண்ணம் நமது நிவாரணப் பணிகள் அமைய வேண்டியது அவசியம்.

எனவே, பயன்படுத்தப்பட்ட ஆடைகளை தயவுசெய்து யாரும் தர வேண்டாம் என்றும், பணம், பாத்திரம், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பண்டங்கள் ஆகியனவே தேவைப்படுவதால், அவற்றை மட்டுமே தந்துதவுமாறும் தங்கள் யாவரையும் உரிமையுடன் வேண்டுகிறோம். முறையாக இஸ்திரி செய்து மடித்துத் தரப்படும் - புத்தாடைக்கு ஒப்பான ஆடைகள் பரிசீலனைக்குப் பின் பெற்றுக்கொள்ளப்படும்.

எனவே, இச்செய்தியைப் படிக்கும் உலகளாவிய காயலர்கள், தத்தம் இல்லத்தாருக்குத் தகவல் தெரிவித்து, நிவாரண உதவிகளைச் சேகரிக்க வரும் இக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பளிக்கச் செய்யுமாறும், உங்களுக்கு அறிமுகமான அனைவருக்கும் இத்தகவலை எடுத்துக் கூறி, அவர்களையும் இப்புனிதப் பணியில் பங்கெடுக்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்கள் துயர் நீக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளின் பயனாக, நமக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் கருணையுள்ள அல்லாஹ் காப்பாற்றியருள்வானாக! இம்முயற்சியில் இணைந்து பணியாற்றும் / பங்களிக்கும் யாவருக்கும் ஈருலகிலும் நிறைவான நற்கூலிகளை வழங்கியருள்வானாக, ஆமீன்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்


காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...பொதுமக்கள் தரும் நல்ல ஆடைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [08 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42375

இந்த மாபெரும் பொறுப்பு மிக்க பணியை செய்ய முன்வந்திருக்கும் காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்புக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

பொது மக்கள் தரும் ஆடைகள் பயன்படுத்தப் பட்ட ஆடைகளாக இருந்தாலும் இன்னும் அவை பயன்படுத்த லாயக்காக இருந்தால் தயவு செய்து அவற்றையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஏழை மக்களும் இந்த பணிக்கு உதவுவதற்கு ஆசைப்படுவார்கள். எல்லோருமே புதிய துணியாக கடையில் வாங்கி கொடுக்க அவர்கள் பொருளாதார வசதி இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை பெற்றுக் கொண்டால் அவர்கள் முகம் சுளிக்காமல் நாம் கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களே, நம்மாலும் இந்த மக்களுக்கு உதவ முடிந்ததே என்று சந்தோசப் படுவார்கள்.

பெண்களுக்கு இது விஷயமாக விழிப்புணர்வு ஏற்படுத்த புதுக் கடை தெருவிலுள்ள எங்கள் வீட்டில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யும்படி இந்த குழுவினரை வேண்டிக் கொள்கிறேன். அதற்காக எனது வீடு ஒன்றை ஒதுக்கி தருகிறேன் என்பதையும் இந்த நல்ல உள்ளம் கொண்ட வெள்ள நிவாரண கூட்டமைப்புக்கு பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இது விளம்பரம் அல்ல நாங்கள் சென்னை சென்று வெள்ளத்தின் கொடூரத்தை கோரத்தை மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை நேரில் கண்டறிந்து வந்திருப்பதால் ஏற்பட்ட உள்ளத்தின் தாக்கம்.

தி தமிழ் ஹிந்து நாளிதழில் டிசம்பர் 6ம் திகதி 11ம் பக்கத்தில் திரு சமஸ் அவர்கள் இப்படி எழுதுகிறார்..

''பெரு நகர வாசிகள் இதயமற்ற இயந்திரங்கள் எனும் பிம்பம் உண்டு. சென்னைவாசிகள் அதை நொறுக்கித் தள்ளி இருக்கிறார்கள். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்நாள் வரை பொது சமூகம் யாரை அதிக வெறுப்பு உணர்வோடும் கசப்பு உணர்வோடும் பார்த்துக் கடந்ததோ ஒரு வீட்டை வாடகைக்கு விட யோசித்ததோ அந்த இஸ்லாமிய மக்கள்தான் ஓடி ஓடி உதவுவதில் முன்னிலையில் நிற்கிறார்கள்''.

இன்றைய POLYMER NEWS அதை விலாவாரியாக மக்களுக்கு செய்தியாகவும் நிதர்சன நிகழ்ச்சியாகவும் நேரலையில் காட்டியது மனதுக்கு நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்தது.

காயல்பட்டினம் மக்களின் மனித நேயம் உலகெலாம் பேசப்படுகிறது. அல்ஹம்து லில்லாஹ். எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த பயணத்தில் பங்கு கொள்ளும் எல்லோருக்கும் நல்ல உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் பொருளாதார வசதியையும் தந்தருள்வானாக. அமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இந்த தகவலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்
posted by K.S.Seyed Mohamed Buhary (Abu Dhabi ) [08 December 2015]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42376

In chennai here is a solution if you dont have access to fresh water.. Take your pressure cooker and fill with water and wait for 10-13 whistles.. Any water will become sterile..this is called autoclave, any bacteria and virus would die. message from a scientist friend

The next big threat to Chennai will be the mosquitoes. A spoon of cooking oil in stagnated water will help kill the larvae before they develop. Got this tip from a good friend. Every one surrounded by water is requested to do so.. A little from everyone will help. Government action may be too late! please share as much as you can

Keep a piece of karpoor (not the synthetic tablets, but big pieces) near your bedside, this will prevent this mosquitoes come anywhere nearby. Can be kept in any place and this will prevent mosquitoes

most scary infection at this time is Leptospirosis (rat fever) ....washing hands n feet very important ...take Doxycycline 200 mg once a week will act as prophylaxis ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved