Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:20:08 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16945
#KOTW16945
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 5, 2015
நகர்மன்றக் கூட்டத்தை நடத்த விடாமல் தடுக்க ஆணையர் காந்திராஜன் முயற்சி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2504 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் நவம்பர் மாத சாதாரண கூட்டம், நவம்பர் 30 அன்று நடைபெற்றது. 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அமளி காரணமாக நிறுத்தப்பட்ட இக்கூட்டத்தைத் தொடர்ந்து, எஞ்சிய பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானமியற்றுவதற்காக, டிசம்பர் 04 அன்று கூட்டத்தை நடத்த - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் பெருவாரியான உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

டிசம்பர் 04 வெள்ளிக்கிழமையன்று (நேற்று) கூட்டம் தொடரும் என்ற தகவலை - நகர்மன்றத் தலைவரும், சில உறுப்பினர்களும் ஆணையரிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, நேற்று காயல்பட்டினம் புதுப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், மேலாளர் அறிவுச் செல்வன் ஆகியோரிடமும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இவ்வளவும் இருக்க, நகர்மன்றத் தலைவரும், உறுப்பினர்களும் நேற்று மாலை 03 மணிக்கு நகர்மன்றத்திற்குச் சென்றபோது, கூட்டத்திற்கு எந்த ஏற்பாட்டையும் ஆணையர் செய்யவில்லை. இதுகுறித்து, நகர்மன்றத் தலைவர் இதர அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “எந்த ஏற்பாடும் செய்ய வேண்டாம்” என்றும், “மினிட்ஸ் புத்தகத்தைக் கொடுக்க வேண்டாம்” என்றும் ஆணையர் தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஆணையரிடம் கேள்வியெழுப்ப நகர்மன்றத் தலைவர் அவரின் அறைக்குச் செல்ல முற்பட்டபோது, கூட்டத்திற்காக இருக்கைகளில் நகர்மன்ற உறுப்பினர்களும், பார்வையாளர்களாக பொதுமக்களும் அமர்ந்திருக்க, அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே ஆணையர் நகராட்சி வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பிச் சென்றுவிட்டார்.

பிறகு நகர்மன்றத் தலைவர், நகராட்சி அதிகாரி ஒருவர் வசம் இருந்த மினிட்ஸ் புத்தகத்தை, அவதிக்கிடையில் பெற்று, கூட்டத்தை நடத்தினார். பந்தல் எதுவும் அமைக்கப்படாததால், நகராட்சி அலுவலக வளாகத்தில் திறந்த வெளியில், மரத்தடியில் - காகங்களின் “எச்ச மழை”க்கிடையே கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

நகர்மன்றத் தலைவரிடம் மினிட்ஸ் புத்தகத்தை வழங்கிய அதிகாரி மீதி நடவடிக்கை எடுக்கப்போவதாக ஆணையர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆணையரின் இந்நடவடிக்கைகள் குறித்து, பல உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஒரு சிலர், ஆணையர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாத நகர்மன்றக் கூட்டத்தை நடத்திடுவதற்காக, அஜெண்டா விநியோகம் செய்ய, ஆணையரை - மாதத் துவக்கத்திலேயே நகர்மன்றத் தலைவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இருந்தும் அவர் அஜெண்டாவை விநியோகம் செய்யாமல் இருந்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு உறுப்பினருக்கும், உயரதிகாரிகளுக்கும் - நகர்மன்றத் தலைவர், பதிவு தபால் மூலம் நவம்பர் மாதக் கூட்டப் பொருளை அனுப்பியதன் அடிப்படையில், இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

கூட்டத்தின் அசைபடப் பதிவுகளை உள்ளடக்கிய விரிவான செய்தி விரைவில் இத்தளத்தில் வெளியிடப்படும்.

காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Fuad (Singapore) [05 December 2015]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 42364

அஸ்ஸலாமு அலைக்கும். நகராட்சி ஆணையர் மீது குற்றம் சொல்ல முடியாது. காரணம், அவருக்கு நமதூர், நகர்மன்றம், நகரமன்ற தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் எல்லாம் நன்றாகத் தெரியும். அதனால், அவர் நம்மை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார். இப்பொழுதாவது மரியாதைக்குரிய அனைத்து உறுப்பினர்களும் தலைவரும் உங்களின் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டால் நிச்சியம் நமதூர் இன்ஷாஅல்லாஹ் சிறந்து விளங்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [13 December 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42402

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் ஊர் நகராச்சி .ஆணையர் காந்திராஜன் அவர்களின் இந்த செயல் பாட்டை யாவர்களும் எதிர் பார்த்ததே தான் ....

இந்த மட்டகரமான செயல்பாட்டுக்கு காரணமே ....நம்மில் ஒற்றுமை இல்லை .....நம்மில் ஒற்றுமை இருப்பின் இவரை போன்றவர்களை ( ஆணையர் காந்திராஜன் அவர்களை ( நல்ல வழிக்கு கொண்டு வரலாம் ......

நாம் ஒற்றுமையாக இருப்பின் நம் ஊருக்கும் சரி ,, ஊர் மக்களுக்கும் சரி அனைத்து நல்ல காரியங்களும் வெற்றிகரமாக நடக்கலாம் ..+..யாவர்களும் பயன் அடைவார்கள் .....

இந்த மோசமான காரியம் செய்த ஆணையர் காந்திராஜன் அவர்கள் மீது நம் நகர் மன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேணும் ......இதை செய்ய நம் நகர் மன்றம் தவறினால் வரும் காலத்தில் இவரும் சரி மற்ற அதிகாரிகளும் சரி தொடர்ந்து இது போன்ற '' தப்பையே '' தான் செய்து வருவார்கள் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (6/12/2015) [Views - 2098; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved