Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:11:35 AM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16931
#KOTW16931
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 3, 2015
நவம்பர் மாத நகர்மன்றக் கூட்டம்: அமளியின் காரணமாக, 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் இடைநிறுத்தம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3236 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நவம்பர் மாத நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவரை உறுப்பினர் ஒருவர் அவதூறாகப் பேசியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியில், கூட்டம் பாதி நடைபெற்ற நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-

நகர்மன்றக் கூட்டம்:



காயல்பட்டினம் நகர்மன்றத்தின் நவம்பர் மாதத்திற்கான சாதாரண கூட்டம், 30.11.2015 திங்கட்கிழமையன்று 11.30 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகராட்சி அலுவலக வெளியரங்கில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலின் கீழ் நடைபெற்றது.

பங்கேற்றோர்:



இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் மற்றும் 18 வார்டு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டப் பொருள்:

இக்கூட்டத்தில், பின்வருமாறு - 106 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருந்தது:-

































































DCW ஆலை குறித்த மேசைப்பொருள்:

கூட்டப் பொருட்களை வாசிக்கத் துவங்குகையில், எழுந்து பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கிவரும் டி.சி.டபுள்யு. ஆலையின் கட்டிடங்களை அளவீடு செய்து, அவற்றுக்கான வரிகளை ஆலை நிர்வாகம் முறையாகச் செலுத்துகிறதா என்பது குறித்து 20 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க - நகராட்சி ஆணையர், பொறியாளர் பிரிவு, வருவாய் ஆய்வாளரைக் கேட்டுக்கொள்வதாகவும்,

காயல்பட்டினம் நகராட்சியின் முந்தைய ஆணையரால் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள தொழிற்சாலையின் பிரிவு ஒன்றுக்கான அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என - நகர்மன்றத் தலைவரின் கையெழுத்து பெற்று - மேசைப் பொருளை முன்வைத்தார்.



இது குறித்து பேசிய நகர்மன்றத் தலைவர், முன்னாள் ஆணையர் ஒப்புதல் வழங்கிய SIOPP பிரிவுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்நிறுவனம் திட்டமிட்டுள்ள PVC விரிவாக்கம் மற்றும் புதிதாக CPVC அமைதல் திட்டங்களுக்கும் அனுமதி வழங்க கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு, அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இசைவு தெரிவித்ததையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாமியின் கருத்து:

அடுத்து பேசிய 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, நீதிமன்ற வழக்கு காரணமாக நிலுவையிலுள்ள 43 சாலைகளுக்கு முடிவு கிடைக்காத வரை, புதிதாக சாலைகள் அமைக்க - நடப்பு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கூட்டப் பொருள்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினார்.

தீர்மானங்கள்:

பின்னர், கூட்டப் பொருட்கள் வாசிக்கப்பட்டது. துவக்கமாக, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தின் பொருட்கள் வாசிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டப் பொருட்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சுருக்கமும் வருமாறு:-



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



விபரங்கள் நகர்மன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், நகர்மன்றத் தலைவர் இத்தீர்மானத்திற்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்தார். இருப்பினும் - பெருவாரியான உறுப்பினர்கள் நகர்மன்றத் தலைவரின் குறிப்பினை நிராகரித்து, தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க ஆதரவு தெரிவித்தனர்.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, மார்ச் மாத கூட்டப் பொருட்களுள் முதல் 8 பொருட்கள் வாசிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டப் பொருட்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சுருக்கமும் வருமாறு:-



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



75 பணியாளர்களை நியமிக்கலாம் என்று ஆணையர் ம.காந்திராஜ் கூறினார்.

துப்பரவு பணியாளர்கள் சம்பளம் என்பது ஒரு முறை செய்யப்படும் செலவு இல்லை என்றும், ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் சம்பளம் என்று எடுத்துக் கொண்டால், 100 பேருக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும் என்றும், இது தொடர்ச்சியான செலவு என்றும் கூறிய நகர்மன்றத் தலைவர், இச்செலவு ஒரு முறையோடு நிற்க போவதில்லை என்பதால் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு 50 பேருக்கு மட்டும் இப்போது அனுமதி கொடுக்கலாம் என்று கூறினார். இதைப் பெருவாரியான உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



ரத்து செய்து மறு ஒப்பந்தப்புள்ளி கோர தீர்மானிக்கப்பட்டது.



5 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.



1 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.



இந்த பொருள் குறித்து விவாதம் நடந்தபோது, காயல்பட்டினம் நகராட்சியில் தெருவிளக்குகள் இல்லாத மின் கம்பங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய உத்தரவிடப்பட்டும், இதுவரை செய்யப்படவில்லை என்றும், இதுகுறித்து நகராட்சி பொறியாளர் இக்கூட்டத்திலேயே விளக்கமளிக்க வேண்டும் என்றும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, கூட்ட அரங்கிற்கு வந்த நகராட்சி பொறியாளர் சிவக்குமார், கணக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும், இரண்டு வாரங்களில் பணி முடிக்கப்படும் என்றும் கூறினார்.

குறுக்கிட்ட நகர்மன்றத் தலைவர், புதிய நகர்மன்றம் பொறுப்பேற்ற துவக்கத்திலேயே பணிக்கப்பட்டும், இன்றளவும் கணக்கெடுக்காமல், பொறியாளர் அலட்சியமாகப் பேசிக்கொண்டிருப்பதாகவும், தன்னுடன் இணைந்து உறுப்பினர்களும் கேட்காத வரையில், அதிகாரிகள் அலட்சியமாகவே செயல்படுவர் என்றும், அவர்களின் அலட்சியத்தால்தான், தலைவர் - உறுப்பினர்களிடையே பெரும்பாலும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகவும் கூறினார்.

தலைவரைத் தரக்குறைவாகப் பேசிய 12ஆவது வார்டு உறுப்பினர்:

காயல்பட்டினம் நகர்மன்ற கூட்டங்களில், நகர்மன்றத் தலைவர் பேசும்போதெல்லாம், இடையிடையே - அதைக் கிண்டல் செய்வதை பல உறுப்பினர்கள் வழமையாகக் கொண்டுள்ளனர்.

நடப்பு கூட்டத்தில், தெரு விளக்கு கம்பங்கள் குறித்து அதிகாரிகளை நகர்மன்றத் தலைவர் கண்டித்துப் பேசுகையில், இடைமறித்து பேசிய 12ஆவது வார்டு உறுப்பினர் ரங்கநாதன் என்ற சுகு, நகர்மன்றத் தலைவரை தரக்குறைவாகப் விமர்சித்தார். அதைத் தொடர்ந்து – 12ஆவது வார்டு உறுப்பினரை நகர்மன்றத் தலைவர் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்க, கூட்டத்தில் அமளி ஏற்பட்டது.

14ஆவது வார்டு உறுப்பினர் வாக்குவாதம்:

12வது வார்டு உறுப்பினருக்கு ஆதரவாக பெருவாரியான உறுப்பினர்கள் பேசினர். குறிப்பாக - 14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா நகர்மன்றத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், தன்னை தகாத சொற்களில் நகர்மன்றத் தலைவர் திட்டியதாக - 14ஆவது வார்டு உறுப்பினர் - குற்றம் சாட்டினார். உறுப்பினர் கூறுவது உண்மை என பெருவாரியான உறுப்பினர்கள், அவருக்கு ஆதரவாக, நகர்மன்றத் தலைவரிடம் பேசினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நகர்மன்றத் தலைவர், தான் அவ்வாறு பேசவில்லை என்றும், தான் சத்தியம் செய்ய தயார் என்றும், அவ்வாறு தான் பேசியதை நிரூபித்தால் - தான் மன்னிப்பு கேட்க தயார் என்றும் கூறினார்.

இருந்தும் அமளி தொடரவே, நகர்மன்றத் தலைவர் கூட்டத்தை 2 மணி நேரத்திற்கு ஒத்திவைத்தார். ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர், முத்து சுப்பிரமணியம் நகர்மன்ற வளாகத்திற்கு வந்தார். பின்பும் கூட்டம் தொடரவில்லை.

கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி:

இந்த சர்ச்சைகள் துவங்குவதற்கு முன்பாகவே - 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, 03ஆவது வார்டு உறுப்பினர் பீ.எம்.எஸ்.சாரா உம்மாள், 04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டீ.முத்து ஹாஜரா, 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டீ.பீவி ஃபாத்திமா, 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா ஆகிய பெண் உறுப்பினர்கள் கூட்ட அரங்கை விட்டும் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

அந்நேரத்தில், 14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலாவை நகர்மன்றத் தலைவர் தகாத சொற்களால் திட்டியதாகவும், அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி, 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கண்டன தீர்மானத்தை ஆயத்தம் செய்து, உறுப்பினர்களிடம் கைச்சான்று பெற்றுக்கொண்டிருந்தார். சில உறுப்பினர்களைத் தவிர பெரும்பான்மை உறுப்பினர்கள் அதில் கைச்சான்றிட்டனர்.

இந்நிலையில், விவகாரம் முற்றி காவல்துறையினரும் வந்த நிலையில், 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, 03ஆவது வார்டு உறுப்பினர் பீ.எம்.எஸ்.சாரா உம்மாள் ஆகியோர் கூட்ட அரங்கிற்குள் வந்து இருக்கையில் அமர்ந்தனர்.

அவர்களிடமும் கைச்சான்று பெற உறுப்பினர் சாமி முனைந்தபோது, “இங்கு நடைபெற்ற விவகாரத்தின்போது நீங்கள் இருவரும் இங்கு இருந்தீர்களா? இங்கு நடந்தது என்ன என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று அவ்விருவரிடமும் உறுப்பினர் கே.ஜமால் கேட்க, அவர்கள் “எதுவும் தெரியாது” என்று கூறினர். “அப்படியானால், இந்தக் கண்டன தீர்மானத்தில் நீங்கள் இருவரும் கைச்சான்றிடுவது எப்படி சரியாகும்?” என்று கேட்க, அவர்கள் மவுனம் காத்தனர்.

இதைக் கண்டித்த பெரும்பான்மை உறுப்பினர்கள், உறுப்பினர் கே.ஜமாலின் இச்செயலைக் கண்டித்தும், எச்சரித்தும் பேசினர்.

14வது வார்டு உறுப்பினரின் குற்றச்சாட்டு பொய்யென நிரூபணம்:

பிறகு நகர்மன்றத் தலைவரின் அறையில், நகர்மன்ற கூட்டத்தின் ஒலிப்பதிவை - 05ஆவது வார்டு உறுப்பினர் ம.ஜஹாங்கீர், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் உட்பட சிலர் கேட்டனர். அதில் 14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா குற்றஞ்சாட்டியவாறு - நகர்மன்றத் தலைவர் பேசவில்லை என்பது நிரூபணமானது. இத்தகவலை தான் ஏனைய உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பதாக, 05ஆவது வார்டு உறுப்பினர் ம.ஜஹாங்கிர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுமார் 25 பொதுமக்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.



அசைபடப் பதிவு:

கூட்டத்தின் முழு அசைபடப்பதிவைக் காண, கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!



காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முந்தைய (12.10.2015 அன்று) மாதாந்திர கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Fuad (Singapore) [03 December 2015]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 42356

அஸ்ஸலாமு அலைக்கும். நவம்பர் மாத கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் என்ன சொன்னாலும் குற்றம் என்ற போக்கை பெரும்பாலான உறுப்பினர்கள் தவறாமல் கடைபிடிகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

நகராட்சி பொறியாளரின் அலட்சியப் போக்கிற்கு இந்த உறுப்பினர்களின் ஆதரவு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. நகரமன்ற தலைவர் பொறியாளரின் அலட்சியத்திற்கு கண்டனம் தெரிவிக்குபோது ஒரு உறுப்பினர் கூட நியாயத்தின் பக்கம் இல்லையே.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதை மரியாதைக்குரிய உறுப்பினர்கள் மறந்துவிடவேண்டாம். பொறியாளர் அலட்சியப்படுத்தியது தலைவரை அல்ல, மாறாக நமதூரின் மக்களாகிய நம்மைத்தான்.

நகமன்றத் தலைவருக்கும் ஒரு பெண் உறுப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தவறான வார்த்தையை தலைவர் பயன்படுத்தியாகச் சொல்லி, தலைவர்மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவர சில உறுப்பினகள் மற்ற உறுப்பினர்களிடம் தீர்மானத்தில் கையெழுத்து வாங்கும் சமயம் அவையில் இல்லாத, என்ன நடந்தது என்று ஒன்றுமே தெரியாத இரு பெண் உறுப்பினர்கள் கையெழுத்திட தயாராகும்போது இன்னொரு உறுப்பினர் தடுத்ததையும் அறியமுடிகிறது.

(தலைவர் அப்படி தவறான வார்த்தைகள் ஏதும் பயன்படுத்தவில்லை என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது). கையெழுத்திட முயன்ற ஒரு பெண் உறுப்பினர் சமீபத்தில் DCW நிர்வாகத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட பெண்கள் தைக்காவிற்கு அந்த பெண் உறுப்பினர் பெயரும் செய்தியில் வந்தது நினைவிருக்கலாம்.

நாம் ஒற்றுமையாக இருந்தால் நமதூருக்கு நல்ல பல காரியங்களை செய்யலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [13 December 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42405

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் ஊர் நகர் மன்ற கூட்டம். நடந்த சமையம் நான் ஊரில் இருந்து நேரில் கண்டேன் .....நம் மரியாதைக்குரிய உறுப்பினர்கள் ஒரு சிலரில் வார்த்தை சொற்களை நம் காதால் கேட்கவே முடியாத அளவுக்கு இருந்தது .....

ஒரு நகர் மன்ற தலைவி ....ஒரு பெண் என்று கூட பாராமல் உறுப்பினர்கள் ஒரு சிலர் மிகவும் தர குறைவாகவே பேசினார்கள் .... மற்றும் தங்களுக்கு தேவையான ஆட்களை தொலை பேசி மூலம் நகராச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் வரவைத்தார்கள் .....பிரச்சனைகள் வேறுவிதமாக போவதையும் மற்றவர்கள் உணர்ந்தார்கள் .......பிறகு ஒரு சில மணி நேரங்கள் நகர் மன்ற கூட்டம் தள்ளி வைக்க பட்டது .....

நகர் மன்றத்தில் தலைவியும் சரி ..உறுப்பினர்களும் சரி சொல்லில் கண்ணியம் பாது காட்க பட்டால் நல்லதே ....

வேறுவிதமாக செல்ல கூடிய இந்த நகர் மன்ற கூட்டம் ...பின்பு அமைதியாக சென்றதை நினைத்து மகிழ்ச்சியானது ..... அல்ஹம்துலில்லாஹ் ......

தலைவி அவர்கள் மீது ஒரு தேவைகற்று குற்றம் பதிவு செய்து பிரச்சனையான சமையம் சில பெண் உறுப்பினர்கள் கூட்டம் அரங்கில் இல்லை ...பின்பு தான் வந்தார்கள் ... என்ன வென்றே தெரியாத அவர்களிடமும் ...கையெழுத்து வாங்கியது தான் அப்போது தமாஷாக இருந்தது .....

நம் மரியாதைக்குரிய உறுப்பினர்களிடம் ஒற்றுமையை எதிர் நோக்கி தான் ஊர் மக்கள் காத்து இருக்கிறார்கள் ......

ஊர் பொது மக்கள் மத்தியில் பொதுவான ஒரு கருத்து ...நகர் மன்ற தலைவி அவர்கள் எது சொன்னாலும் அப்போதைய சூழ் நிலைமையில் நம் மரியாதைக்குரிய ஒரு சில உறுப்பினர்கள் தப்பாகவே எடுத்து ,, தவறாகவே பேசி செயல் பட்டார்கள் ....என்பது தான் உண்மையே .......

ஒரு சில நம் நகர் மன்ற மரியாதைக்குரிய உறுப்பினர்களுக்கு தேவைகற்று பேச முனையாக இருக்க கூடிய ..... பின் நின்று செயல் பட கூடிய .தலைவர் யார் என்று தான் 4 1 / 2 வருசமாக யாருக்குமே ஊரில் சரியாக தெரிய வில்லை .....

இன்ஷா அல்லாஹ் ...... வரகூடிய நம் ஊர் நகர் மன்றத்தை நல்லவையாக அமைக்க ....நம் ஊர் மக்கள் யாவர்களும் நன்கு ஆராய்ந்து ....படித்த,, நல்ல பண்புள்ளவராகவும் ,,மக்களோடு இணைந்து துடிப்போடு செயலாற்ற கூடியவராகவும் ...

நாம் தேர்வு செய்ய வேணும் ......இப்பவே நம் ஊர் மக்கள் ஒற்றுமையுடன் இருந்து செய்யலாற்றினால் தான் உண்டு ...... இல்லையேல் நமக்கு இது போன்ற நிலைமையே ....சிந்தித்து தீர ஆராய்ந்து செயல் படுவோமாக .....

மரியாதைக்குரிய .நம் உறுப்பினர்களிடம் ஒற்றுமை இல்லாததால் ....தான் இந்த நிலைமையே ?? இதை பயன் படுத்தி நம் நகராச்சி அதிகாரிகளும் நன்றாகவே இல்லை சிறப்பாகவே உள்ளே புகுந்து விளையாடுகிறார்கள் இது தான் உண்மை நிலவரம் ......

அல்லாஹ் போதுமானவன் ......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved