Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:04:15 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16918
#KOTW16918
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 1, 2015
சிறாருக்கான விளையாட்டுப் போட்டிகளுடன் நடைபெற்றது துபை காயலர் சங்கமம்! முனைவர் செ.மு.முஹம்மதலீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2689 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகள், மழலையர் - சிறாருக்கான பல்வகை விளையாட்டுப் போட்டிகளுடன் நடைபெற்றுள்ளது. முனைவர் செ.மு.முஹம்மதலீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து, துபை காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் பொதுச் செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய அருட்பெயரால்…

துபை காயல் நல மன்றம் நடத்திய 37வது காயலர் சங்கமம்

கடந்த 13.11.15 வெள்ளிக்கிழமை துபை அல் ஸஃபா பூங்காவில் வைத்து துபை காயலர்களின் 37வது ஒன்று கூடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.



அனைவருக்கும் முன்பாக வரவேற்புக் குழுவினர் பூங்கா வந்து வருபவர்களை வரவேற்று அவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்காக காத்திருந்தனர். காலை 10.30 மணியளவில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் துவங்கினர். வருபவர்களின் காலைப் பசியைத் தீர்ப்பதற்காக சூடான சுண்டலும், சுவையான தேனீரும் பரிமாறப்பட்டன.



ஆண்கள் தரப்பில் ஆண்களும், பெண்கள் தரப்பில் பெண்களும் ஒன்றுகூடி தங்கள் நண்பர்கள், உறவினர்கள், தோழிகள் என்று அளவளாவ ஆரம்பித்தனர். ஜும்ஆ தொழுகைக்கான நேரம் நெருங்கியவுடன் அனைவரும் அருகிலுள்ள மஸ்ஜிதுக்கு விரைந்தனர்.

ஜும்ஆ தொழுகை முடிந்ததும் கூட்ட நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சிக்கு துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் தலைமை தாங்கினார். துபை தொழிலதிபர் நாஸர் அப்துல்லாஹ் அல்குரைர், முஸ்லிம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், எஸ்-ஐஏஎஸ் அகாடமியின் இயக்குனருமான பேராசிரியர் சேமுமு. முஹம்மது அலீ, எஸ்என்ஜி நிறவனத்தின இயக்குனர் எம்ஏகே. முஹம்மது அலீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அல்ஹாஃபிழ் ஏ.எல். அப்துர் ரவூஃப் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

இன்னிசை

இந்த ஒன்றுகூடலுக்கு வருகை தந்திருந்த இஸ்லாமியப் பாடகர் அபுல் பறக்காத் தன் இனிமையான குரலில் ஓர் இஸ்லாமியப் பாடல் பாடினார்.

தலைமையுரை

பின்னர் மன்றத் தலைவரும், நிகழ்ச்சியின் தலைவருமான ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது:



இது வருடத்தின் இரண்டாவது கூட்டம். இதில் நம்மை ஒன்றுகூட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். உறுப்பினர்கள், நண்பர்கள், வெகு நாட்களாக சந்திக்காத நண்பர்கள் இங்கே வந்து சந்தித்துக்கொள்வதில் மகிழ்ச்சி. இந்தக் கூட்டத்திற்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் எஸ்எம்எஸ், மின்னஞ்சல், இணையதளம் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. நமது மன்றம் சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக வெகு சிறப்பாக இயங்கி வருகின்றது.

நமதூர் ஒரு முஸ்லிம் கிராமம். நாம் சுற்றுவட்டார மக்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருகிறோம். கல்வியில் பின்தங்கியிருக்கும் நமதூர் பிள்ளைகளை முன்னேற்ற கல்வி உதவிகள் புரிந்து வருகின்றோம். இதற்கு துபையிலுள்ள ஈடிஏ அதிக ஒத்துழைப்பு தந்தது. குறிப்பாக அல்குரைர் குழுமத்திற்கு நன்றி நவில கடமைப்பட்டிருக்கிறோம். அதன் ஓர் இயக்குனர் இங்கே வந்து நமது நிகழ்ச்சியை சிறப்பித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்தோடு பேராசிரியர் சேமுமு. முஹம்மது அலீ அவர்களும் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார்கள். இவர்கள் சமூக சேவைகளில் ஈடுபட்டு சமூகத்திற்காக பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். துணி உமர் காக்கா அவர்களுக்கு பிரத்தியேகமாக நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் ஊரிலிருந்து இதற்காக வந்து கலந்து கொள்கிறார்கள்.

அதேபோன்று நமதூருக்கு சுற்றுப்புறத் தீங்கு அளித்து வரும் DCWக்கெதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் எஸ்டிபிஐ கட்சிக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சமீபத்தில் அவர்கள் சென்னை மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்து DCWக்கெதிராக போராடினார்கள்.

இங்கே பரிசுகளுக்கு ஸ்பான்சர் செய்த ஜமீல் ஜூவல்லர்ஸ், அரிஸ்டோ ஸ்டார், அல் பன்னா ஆட்டோ, முத்து தங்க மாளிகை ஆகிய நிறுவனங்களுக்கும், டோஷிபா எலிவேட்டர்ஸ் நிறுவனத்தின் அதிபர் வி.எஸ்.எம். அபூபக்கர், எம்.யு. ஷேக், எல்எம்எஸ். ரியாஸ், அல் ருஸஃபா பால் முஹம்மது ஆகியோருக்கும் நன்றி.

சில வருடங்களுக்கு முன்பு ஈசா அப்துல்லாஹ் அல்குரைர் அவர்கள இதே ஒன்றுகூடலில் கலந்து கொண்டது நமக்கு நினைவிருக்கும். அதேபோன்று இப்பொழுது நாஸர் அப்துல்லாஹ் அல்குரைர் கலந்துகொண்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இவர்கள் நமதூரின் முன்னேற்றத்திற்காக எவ்வளவோ உதவிகள் செய்து வருகின்றார்கள்.

நாம் பேராசிரியர் சேமுமு முஹம்மது அலீ அவர்கள் நடத்தும் ஐஏஎஸ் அகாடமிக்கு ஆதரவளிக்கிறோம். நமதூரிலிருந்து மாணவர்கள் இதில் சேர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.


இவ்வாறு அவர் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

சிறப்புரைகள்

பின்னர் சிறப்பு விருந்தினர் நாஸர் அப்துல்லாஹ் அல் குரைர் அவர்கள் சிறிது நேரம் ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினார்.



25 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் இந்த மன்றத்தின் ஒன்றுகூடலைப் பார்ப்பதற்கு நான் இங்கே வந்துள்ளேன் என்றும், அதிகமான ஊர் மக்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பின்னர் பேராசிரியர் சேமுமு. முஹம்மது அலீ அவர்கள் சிறப்புரையாற்றினார். தனக்கும் காயலுக்கும், காயலர்களுக்கும் உள்ள நீண்ட கால தொடர்புகளை அவர் நினைவுகூர்ந்தார். பலமுறை தான் காயல் பதிக்கு வந்துள்ளதாகவும், அது பழம் பெருமை வாய்ந்த செழிப்பான ஊர் என்றும் குறிப்பிட்டார். பின்னர் தான் நடத்தி வரும் ஐஏஎஸ் அகாடமி குறித்த விவரங்களைப் பகிர்ந்தார்.



எனக்கும் காயலுக்கும் நீண்ட கால தொடர்பு உண்டு. உங்கள் அன்பு முகங்களைப் பார்ப்பதற்கு அருமையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன். துபை காயல் நல மன்றம் மருத்துவ உதவிகள், கல்விச் சேவைகள் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி என்று அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

புதிய உறுப்பினர்கள் அறிமுகம்

பின்னர் புதிய உறுப்பினர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரிலிருந்து புதிதாக அமீரகத்தில் வேலைக்காக வந்தவர்கள், விசிட் விசாவில் வந்து வேலை தேடிக்கொண்டிருந்தவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

நிதிநிலை அறிக்கை

மன்றப் பொருளாளர் ஜேஎஸ்ஏ யூனுஸ் அவர்கள் கடந்த ஒரு வருட நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். மன்றம் இக்ரஃ மூலமாக காயல் பதியில் செய்த கல்விச் சேவைகள், மருத்துவ உதவிகள், பைத்துல் மால்கள் மூலமாக செய்து வரும் கல்வி உதவிகள் மற்றும் ஏழை எளியோருக்கான உதவிகள் போன்றவற்றை அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

கல்வி அறிக்கை

அதன் பின்னர் மன்றத்தின் கல்விக் குழு அறிக்கையை அதன் பொறுப்பாளர் சகோ. ஸக்காஃப் முனவ்வர் சமர்ப்பித்தார்.

மருத்துவ அறிக்கை

அடுத்ததாக மன்றத்தின் மருத்துவக் குழு அறிக்கையை மூத்த செயற்குழு உறுப்பினர் டி.ஏ.எஸ். மீரா ஸாஹிப் அவர்கள் சமர்ப்பித்தார். கடந்த ஒரு வருடத்தில் மன்றம் செய்த மருத்துவ உதவிகளை அவர் பட்டியலிட்டார்.

சிறப்பு விருந்தினர்கள் கௌரவிப்பு

நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.





கலந்துரையாடல்



பின்னர் நமதூர் பிரச்னைகள் குறித்து கருத்துப் பரிமாற்ற கலந்துரையாடல் நடந்தது. உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைப் பரிமாறினர்.

நன்றியுரை

நிகழ்ச்சியின் இறுதியாக செயற்குழு உறுப்பினர் எம்.ஏ. முஹம்மது ஈசா அவர்கள் நன்றியுரை நவின்றார். கூட்ட நிகழ்விடத்திற்கான ஏற்பாடுகளை எந்தக் குறையும் இல்லாமல் செய்து தந்தவர்கள், விருந்து உணவு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்தவர்கள், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்காக வாராவாரம் கூடிய செயற்குழு உறுப்பினர்கள், இங்கே சுழன்று சுழன்று பணியாற்றிய தன்னார்வத் தொண்டர்கள், இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனுமதி தந்த ஸஃபா பூங்கா நிர்வாகத்தினர், வாகனங்களை மேற்பார்வை செய்த முத்து முஹம்மத், கூட்டத்தில் கலந்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள், துபை மன்ற அழைப்பை ஏற்று மகிழ்ச்சியுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அபூதாபி சகோதரர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் நிழற்படங்கள் எடுத்த ஃபயாஸ் ஹமீது மற்றும் ஸுப்ஹான், ஒலிபெருக்கி ஏற்பாடுகளைச் செய்த காதர், கூட்டம் நடத்துவதற்கு பாய்கள், இன்னபிற பொருட்கள் தந்து உதவிய ஈடிஏ ‘டி’ பிளாக் நிர்வாகத்தினர், உறுப்பினர் சந்தா வசூல் செய்து தரும் முத்து ஃபரீத், முனவ்வர் மற்றும் முஜீப், உறுப்பினர்களின் பெயர்களைப் பதிவு செய்து, அவர்களது தொடர்புகளைப் புதுப்பித்த வரவேற்புக் குழுவைச் சார்ந்த சகோதரர்கள், அன்பளிப்புகளுக்கு அனுசரணை வழங்கியவர்கள் ஆகியோருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

செயற்குழுவில் சேர ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளும்படி தலைவர் வேண்டுகோள் விடுக்க, அதனையேற்று இரண்டு சகோதரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தார்கள்.

மதிய விருந்து

அனைவருக்கும் சுவையான கலீஜ் பிரியாணி பரிமாறப்பட்டது.







வினாடிவினா போட்டி

எம்.யூ. ஷேக் அவர்கள் உறுப்பினர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து பல்வேறு சுவையான வினாடிவினா போட்டிகளை நடத்தினார்.

விளையாட்டுப் போட்டிகள்

பின்னர் குழந்தைகளுக்கான பல்சுவை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் குதூகலமாக அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.





அத்தோடு அனைத்துக் குழந்தைகளையும் மகிழ்விக்கும் விதமாக அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

குலுக்கல் பரிசுகள்

கூட்டத்திற்கு வருகை தருபவர்கள் முற்கூட்டியே வருவதை ஊக்குவிப்பதற்காக காலை 10.30 மணிக்கு முன்பு வருபவர்களுக்கும் (மூன்று குலுக்கல் வாய்ப்புகள்), ஜும்ஆவுக்கு முன்பு வருபவர்களுக்கும் (இரண்டு வாய்ப்புகள்), ஜும்ஆவுக்குப் பிறகு வருபவர்களுக்கும் (ஒரு வாய்ப்பு) என்று மூன்று பரிசுக் குலுக்கல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்ட இறுதியில் இதற்கான பரிசுக் குலுக்கல்கள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயங்கள், லூலூ வவுச்சர்கள் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.







மேலும், காலை 11 மணிக்கு முன் வருகை தந்த தாய்மார்களுக்கென ஒரு குலுக்கல் நடத்தப்பட்டு அவர்களுக்கும் ஒரு தங்க நாணயம் வழங்கப்பட்டது.

அதேபோன்று மன்றத்திற்காக உழைத்து வரும் செயற்குழு உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரின் பெயர்கள் குலுக்கப்பட்டு அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கிடையில் மாலை நேர தேனீரும், சமோசாவும் பரிமாறப்பட்டன.

மொத்த நிகழ்ச்சியையும் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன் திறமையாக நெறிப்படுத்தினார். நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து அந்தி சாயும் நேரத்தில் அனைவரும் பிரியா விடை பெற்று பிரிந்தனர்.

காயலர் சங்கமத்தின்போது பதிவுசெய்யப்பட்ட அனைத்துப் படங்களையும்
https://picasaweb.google.com/106080912367452201392/November13201503#slideshow/6216683397214241426
https://picasaweb.google.com/106080912367452201392/cvMRcK#slideshow/6216889265674480850

ஆகிய இணைப்புகளில் சொடுக்கி தொகுப்பாகக் காணலாம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
M.S.அப்துல் ஹமீத்


படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
ஃபயாஸ் ஹமீத்


துபை காயல் நல மன்றத்தின் முந்தைய “காயலர் சங்கமம்” நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved