Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:20:09 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16705
#KOTW16705
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 13, 2015
DCW ஆலை சார்பில், காயல்பட்டினம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பேரேடுகள் அன்பளிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3768 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் சார்பில், நகரிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பேரேடுகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆலையின் மக்கள் தொடர்புத் துறை துணை மேலாளர் சு.சித்திரைவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:-

காயல்பட்டணத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இலவச பேரேடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

பெண்களின் பொருளாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு டி.சி.டபிள்யு. நிறுவனம் ஏழை, எளிய, பெண்களுக்கு இலவச தையல் பயிற்சியை நடத்தியது. பயிற்சி பெற்ற பெண்கள் ஓற்றுமையுடன் வாழவும், சேமிப்பு பழக்கத்தை உருவாக்கவும், தொழில் அடிப்படையில் அரசு மற்றும் வங்கிகளில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று தொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இக்குழுக்கள் நடத்தும் கூட்டத்தை முறையாக பதிவு செய்யவும் வரவு-செலவு கணக்குகளை முறையாக எழுதி பராமரிப்பதற்காக ஒவ்வொரு குழுவிற்கும் தீர்மான புத்தகம், ரொக்கப் புத்தகம், சேமிப்பு பேரேடு, கடன் பேரேடு, பொது பேரேடு ஆகிய பேரேடுகளையும் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா காயல்பட்டணம் நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு விசாலாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள பஜனை மண்டபத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.

மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் எஸ்.ஜே.கென்னடி அனைவரையம் வரவேற்றார். விழாவிற்கு சாகுபுரம் டி.சி.டபிள்யு. நிறுவன செயல் உதவி தலைவர் (நிர்வாகம்), டாக்டர். எம்.சி. மேகநாதன் தலைமை தாங்கி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பேரேடுகளையும் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.





டி.சி.டபிள்யு. நிறுவன மக்கள் தொடர்பு துறையின் துணை மேலாளர் சு.சித்திரைவேல் நன்றி கூறினார். விழாவில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை டி.சி.டபிள்யு. நிறுவன மக்கள் தொடர்பு துறையினர் செய்திருந்தனர்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCW ஆலையின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இரட்டை நிலைபாடு
posted by soccer buhary (bangkok) [14 October 2015]
IP: 110.*.*.* Thailand | Comment Reference Number: 42006

ஒரு புறம் DCW ஆலையை கண்டித்து ஆலையை இழுத்து மூட காயல் சமூக ஆர்வலர்கள் போராட்டம்!

மறுபுறம் ஆலையின் பெருமையை பறைசாற்றி ஆலையிடமிருந்து உதவி பெறும் மறு கூட்டம்!

ஏன் இந்த இரட்டை நிலைபாடு காயல் மக்களுக்கு?

எப்பொழுது உருவாகும் நம்மிடையே ஒருமித்த கருத்து??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by SUBHAN N.M.PEER MOHAMED (ABU DHABI ) [14 October 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42008

வெட்ககேடு ,அறிவிருந்தும் அறிவிலிகளாய்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வெட்க்க கேடு
posted by முஹம்மது ஆதம் சுல்த்தான் (yanbu) [14 October 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 42009

வருங்காலத்தில் இப்படியொரு அறிவிப்பு பிரசுரம் வந்தாலும் வியப்பில்லை!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

காயல் மக்களுக்கோர் நற்செய்தி !

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

காயல்மா நகரில் யார் வீட்டிலெல்லாம் பொருளாதார சிக்கலினால் கல்யாணமாகாத குமர்கள் தேங்கி, தவித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் நமதூரில் பேருதவி புரியும் நிர்வனமான DCW நிர்வாகத்தின் புண்ணியர்கள் தங்கள் தாராள மனதுடன் உதவி செய்ய காத்திருக்கிறார்கள். ஆகவே யார் வீடுகளிலெல்லாம் குமர்கள் கரை ஏறாமல் இருக்கிறார்களோ அவர்களின் பெயர் பட்டியலை நிர்வாகத்திடம் சமர்பித்தால் உடனே உதவி செய்ய ஓடோடி வருவார்கள்.இந்த அறிய வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளுங்கள் காயல் மக்களே! என்கின்ற ஒரு அறிவிப்பு வந்தாலும் வரலாம் ,அப்படி வந்தால் அலறி அடித்து ஓடோடி சென்று தங்கள் வீட்டு குமர்களின் பெயரை பதிவு செய்யவும் தயங்காத தன்மானமில்லாத ஜென்மங்களும் இருப்பார்கள்.இமியளவும் வெட்கமின்றி! . எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

ஓரிரு சம்பவங்களோடு நின்றுவிடும் இனி அந்த ஆலையின் எந்த உதவியையும் ஏறிட்டும் பார்க்க மாட்டார்கள் என்று எண்ணும் என்போன்ற மடையர்களே உங்கள் மண்டையை எதையாவது கொண்டு அடித்து கொள்ளுங்கள்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

வெட்கத்துடன்,
முஹம்மது ஆதம் சுல்த்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (riyadh) [14 October 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42010

அஸ்ஸலாமு அலைக்கும்

நாம் என்னத்ததான் சொல்ல ....வெட்க கேடான ஒரு செயல் தான் நம்மில் உள்ளது .....அருமை சகோதரர் அவர்கள் குறிப்பிட்டது போல ...வரகூடிய காலத்தில் நமது பெண்கள் கல்யாண செலவுக்கு கூட ...DCW காரர்கள் பணம் கொடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை .......

ஆனால் அப்படி பணம் வாங்குபவர்கள் கண்டிப்பாக நமது ஊரை சேர்த்தவர்களாக இருக்கவே மாட்டார்கள் ...வெளியூரில் இருந்து நம் ஊரில் குடி வந்தவராக தான் இருப்பார்கள் .....

மகளிர் சுய உதவிக் குழுக்கள் நமது ஊரை பூர்வீகம் கொண்டவராக தெரிய வில்லை .....இருப்பின் நம் ஊர் பெயரை தான் மற்றவர்கள் சொல்வார்கள் .....

DCW ...நம் மக்களிடம் ஒற்றுமையை குலைக்கிறார்கள் .....தேவைகற்ற விளம்பரத்தையும் அவர்கள் தேடுகிறார்கள் .....

ஒரு பக்கம் நம் உயிருக்காக ஊரின் பொது நல அமைப்புக்கள் மிக கடுமையாக போராடுகிறார்கள் ....

மறுபக்கம் நம் ஊர் ஒரு சில மக்கள் இந்த கேடு கெட்ட >>>> DCW இடம் கையேந்துகிறார்கள் ......என்னத்த தான் சொல்ல .....

இப்படி DCW பணம் வாங்குபவர்கள் மனசாட்சி உள்ளவராக இருக்க மாட்டார்கள் ......மிக தரம் கெட்டவரகதான் இருப்பார்கள் .....

DCW இடம் இப்படி தேவைகற்ற ஒரு சில சுய உதவிக் குழுக்கள் பணத்துக்காக கையேந்துவதை நிறுத்தினால் தான் நாம் இவர்களோடு போராடுவதில் வெற்றியை தொட முடியும் ....... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சூழ்ச்சிகள் சூனியமாகிவிடும்
posted by N.S.E.மஹ்மூது ( காயல்பட்டணம்) [14 October 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42011

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அறியாமல் செய்கின்ற தவறுக்கு என்றும் மன்னிப்பு உண்டு – அல்லாஹ்! மன்னிக்கக் கூடியவன், கிருபையாளன் கண்டிப்பாக மன்னிப்பான்.

அறிந்தும் , தெரிந்தும் சில சலுகைகளுக்காக செய்யும் தப்புக்கு மன்னிப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியே! – ஆனால் நிச்சயமாக அவர்களுக்கு இவ்வுலகிலும், மறு உலகிலும் அதாபுகள் உண்டு – அதாபுகள் செய்வதில் அவனை மிகைத்தவர்கள் எவருமில்லை.

--------------------------

நேர்மை என்றும் தோல்வியடையாது – எவ்வளவுதான் சூழ்ச்சிகள் செய்தாலும் சூழ்ச்சிகள் சூனியமாகிவிடும் –

சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ்! என்பதை மறந்துவிடக்கூடாது.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...நண்பரின் ஆதங்கம் நியாயமானதே..
posted by mackie noohuthambi (colombo) [15 October 2015]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 42012

நண்பர் சுல்தான் அவர்களின் ஆதங்கம் நியாயமானது.

நபிகள் நாயகம் அவர்கள் நமக்கொரு து ஆ வைக் கற்றுதந்திருக்கிரார்கள். ALLAAHUMMA INNAA NAUOOTHU BIKA MINAL KUFRI VAL FAQR....இறைவா எங்களை இறை நிராகரிப்பை விட்டும் கொடிய வறுமையை விட்டும் பாதுகாத்து அருள்புரிவாயாக.

அப்படியானால் வறுமைக்கும் இறை மறுப்புக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றுதான் அர்த்தம். எப்போது வறுமை இப்படியான தேவைகள் அதிகரிக்கும்போது சமுதாயம் அந்த தேவைகளை கண்டுகொள்ளாமல் இருக்குமோ அப்போது அவர்கள் அந்த இறை மறுப்பாளர்களின் உதவியை நாடுவார்கள். அவர்களும் தாராளமாக உதவி செய்வார்கள். விளைவு இறை மறுப்பாளர்களின் வலையில் இவர்கள் சிக்கி தங்களுடைய ஈமானையே இழந்து விடுவார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இந்த விஷமிகளின் வலையில் சிக்காமல் இருக்க பெண்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப் படவேண்டும்.

குறைந்த பட்சம் இந்த DCW சவக் குழியில் தாங்களாகவே போய் விழுந்து உயிரை மாய்த்து கொள்பவர்களை நாமே காப்பாற்ற வேண்டும். அதற்கு உலமாக்கள் வியூகம் வகுக்க வேண்டும். இஸ்லாமிய பிரசாரங்கள் நடக்கும் இடங்கள் ஜும்மா பிரசங்கங்கள் ஹதீஸ் மஜ்லிஸ்கள் புகாரி ஷரீப் போன்ற நபிகள் நாயகம் அவர்கள் வாழ்க்கை வரலாறு நடைமுறைகள் பற்றிய விளக்கங்கள் சொல்லப் படும் இடங்கள் திருமண விழாக்கள் நடக்கும் மேடைகள் எல்லா இடங்களிலும் இந்த செய்தி சொல்லப் படவேண்டும். உள்ளங்களை காயப் படுத்தாமல் உணர்வுகளை சேதப் படுத்தாமல் அவர்கள் உள்ளங்களில் ஊடுருவி செல்லும்படி அந்த பிரசாரங்கள் அமைய வேண்டும். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அல்லாஹ் நமதூரை காப்பாற்றுவானாக ஆமீன்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [15 October 2015]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 42013

நான் என்றும் மதிக்கும் சகோதரர் மக்கி காக்கா அவர்களே, அண்ணல் நபி (ஸல் )அவர்கள் கூறிய ஹதீஸ், சில வேளைகளில் கொடிய வறுமை ஈமானைகூட பலஹீனப்படித்திவிடும் என்று கூறியதாக கேட்டிருக்கிறேன் இந்த ஹதீஸ் எந்த அளவிற்கு ஆதாரபூர்வமனது என்பதை உங்களைபோன்ற உலமாக்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்!

நான் குறிப்பிட வருவது, இவர்கள் இறைமறுப்பாளர்கள் மட்டுமல்ல.கொலைகாரர்கள்,கொடிய கொலைகாரர்கள் இறைமறுப்பாளர்கள் கூட சிலவேளைகளில் தன் மனது சரி என்று படும் வேளையில்,அவர்கள்மனதிற்குள் ஹிதாயத்தானது படைத்தோனின் பலமான புகுத்தலுக்கு ஆளானால் மனம் மாறுவதற்கு வழிவகையுண்டு,

ஆனால் இவர்களோ கொலைகாரர்கள் எவ்ளவுக்கவ்வளவு கொலைகள் அதிகமாக செய்கிறார்களோ அவ்ளவுக்கவ்வளவு ஆதாயமுண்டு. இவர்களின் கொலைப்பயணம் முடியப்போவதும் இல்லை!

முன்னர் ஒர் அமைப்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தும் பொழுது,என்னுடைய கருத்துப்பதிவாக கூறியது,உங்களது போராட்டம் பற்றி மூலை முடுக்குகளிலெல்லாம் அதாவது வீதியில் கூறிவிற்கும் வாடா,வடை வியாபார சகோதரி முதல் தங்க,வையிர வியாபாரிகள் வரை அனைவர் களுக்கும் அந்த கொலைகார ஆலையின் கொடுமைகளை உள்ளார்ந்த மனதுடன் உணரும் அளவிற்கு எடுத்து சொல்லி ஆதரவு கேளுங்கள் என்றேன்!

அதே பாணியில் தான் மக்கி காக்கா உங்கள் கருத்தை இன்று இங்கே பதிவு செய்திருக்கிறீர்கள்.எப்படித்தான் நாம் பாடுபட்டு நம் எதிர்ப்பினை தீவிரமாக தெரிவித்தாலும், ஏராளமான எட்டப்பர்கள் இருக்கிறார்களே,இவர்களை என்ன சொல்வது?அதிலும் ஒருசிலர் அந்த ஆலைக்கு ஆதரவு மனப்பான்மை முற்றிலும் இல்லாவிட்டாலும்,அந்த ஆலையை எதிர்ப்பவர்கள் சிலர்,சில அமைப்பு எங்களுக்கு எதிரி அதனால் அந்த ஆலையை ஆதரிக்கத்தான் செய்வோம் என்று கூறி செயலில் இறங்கும் ஈனர்களை,கயவர்களை யார் தண்டிப்பது?

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருகின்ற ஏக இறைவன் இமியளவு பொழுதில் நினைத்தால் போதும் நாசமாய் போய் விடுவார்கள். இந்த விஷக்கிருமி ஆலையினால் வீழ்ந்து விட்டவர்கள் குடும்ப கண்ணீரின் கடுமை ஏதோ எளிதானது என்ற இறுமாப்பு எண்ணத்துடன் உலவுகிறார்கள் அல்லாஹ் நமதூரையும் நமதூர்மக்களையும் காப்பாற்றி காவல்புரிவானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. தவறில்லை - மாற்றம் வேண்டும்
posted by ansari (abu dhabi) [15 October 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42016

இந்த விஷயத்தில் தேவை உள்ளவர்கள் அவர்களின் தேவையை நிறைவேற்றும் நபர்களிடம் உதவி பெறுவது எந்த வகையிலும் தவறாக எடுக்க முடியாது ,இந்த ஆலையை இப்போது கூட நம்மால் ஓன்று இணைந்து தடுக்கவோ அல்லது விரிவகதிற்கு எதிர்ப்பு கொள்ளவோ முடிய வில்லை இல்லாதவர்கள் வாங்கியதை மானம் கெட்டவர்கள் என்று கூறும் நாம் எதற்கு அவர்களை இல்லாதவர்களாக வைத்து இருக்க வேண்டும் !?! எண்ரூ சிந்திக்க யாரும் இல்லை .அதோடு நம் நகர்ச்சியின் அதிக படியான உறுப்பினர்கள் அந்த ஆலைக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு என்று அறிந்தும் எதற்கு நம்மால் அவர்களை நோக்கி இது போல் சொல்ல முடிய வில்லை ?! குமருக்கு உதவி செய்தாலும் அதை அவர்கள் பெற்றாலும் தவறு இல்லை என்பது வெள்ளிடை மலை .... எத்துனை பணம் படைத்தவர்கள் குமருக்கு உதவி செய்கிறார்கள் ?எத்துனை அமைப்புகள் உதவி செய்கிறார்கள் ?! சொல்லுங்கள் . பணம் படைத்தவர்கள் நினைத்தாள் ஒரு வருட ஜகாத் தொகையை எல்லோரும் மொத்தமாக சேர்த்து நமதூரில் இருக்கும் கஷ்ட பட்ட குமர்கள் எல்லோருக்கும் ஒரு லிஸ்ட் எடுத்து ரமலான் மாதம் கழித்த அடுத்த மாதம் மொத்தமாக எல்லா குமார்களையும் வைத்து ஜலாலியா போன்ற பொது இடத்தில வைத்து ஒரே சமயத்தில் மொத்தமாக திருமணம் நடத்தி வைக்கலாம்.

எரிவதை பிடிங்கினால் கொதிப்பது அடங்கும் என்பார்கள் அதுபோல் கொதிக்காமல் இருபது அதுக்கு எறிதல் எங்கு கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் . இங்கு வீர வசனம் பே சம் எல்லோரும் பசி என்ற ஒன்றை அறிந்து இருந்தால் .... பசியினால் குடல்கள் ஒட்டி அதில் இருந்து வரும் காற்று கண்ணை மறைத்து அது தலையை சுற்ற வைத்தால் அவர்களுக்கு அப்போது எந்த ஆலையையும் பார்க்க மாட்டார்கள். தன்னை சுற்றி இருக்கும் எல்லா பெண்களும் தன் மகள் வயதை ஒன்றிய எல்லா பெண்களும் திருமணம் முடித்து குழைந்தைகள் உடன் இருக்கும் பொது குமருக்கு மணமகன் கிடைக்காமலும் கிடைத்தாலும் வசதி வாய்ப்பு இல்லாமல் கஷ்ட பாடுபவருக்கு தெரியும் அவர்கள் எதை பற்றியும் கவலை பட மாட்டார்கள் .இங்கு உதவ யாரும் இல்லை அப்படியே உதவினாலும் நல மன்றகங்கள் அதை படம் பிடித்து பெயர் வாங்க தயாராக உள்ளோம் . ரகசிய தருமம் அல்லாஹ்வின் கோபத்தை அணைக்கும் என்பதை அறிய யாரும் இங்கு இல்லை .

" பணம் படைத்தவர்கள் நினைத்தாள் ஒரு வருட ஜகாத் தொகையை எல்லோரும் மொத்தமாக சேர்த்து நமதூரில் இருக்கும் கஷ்ட பட்ட குமர்கள் எல்லோருக்கும் ஒரு லிஸ்ட் எடுத்து ரமலான் மாதம் கழித்த அடுத்த மாதம் மொத்தமாக எல்லா குமார்களையும் வைத்து ஜலாலியா போன்ற பொது இடத்தில வைத்து ஒரே சமயத்தில் மொத்தமாக திருமணம் நடத்தி வைக்கலாம் "

இந்த் திட்டம் அழகானது உலமாக்கள் உமராக்களும் ஓன்று இணைந்து செயல் படுங்கள் ... ஷரியதிலும் இதற்கு அனுமதி உண்டு உங்கள் ஜகாத் சதகதுன் ஜாரியவாக இருக்கும் .மார்க்க அடிப்படையில் இதை தவறு என்று யாரும் சொன்னால் அதற்கான குரான் ஹதிஸ் அடிப்படையில் விளக்ம் சொல்லவும் தயார் .வார்த்தைகளில் சற்று கடினம் இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்

அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அக். 14 நள்ளிரவில் இதமழை!  (16/10/2015) [Views - 2433; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved