Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:22:01 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16686
#KOTW16686
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 9, 2015
உ.பி.யில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கருதப்பட்டவரை அடித்துக் கொன்றவர்களைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2902 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி நகரில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கருதப்பட்டு, முதியவரை அடித்துப் படுகொலை செய்தவர்கள், தூத்துக்குடி கடலில் மீன் பிடிக்கச் சென்ற 7 பேரைக் கைது செய்த இலங்கை கடற்படையினர், உத்தரபிரதேசத்தில் கோவிலுக்குள் வழிபடச் சென்ற தாழ்த்தப்பட்ட முதியவரை தீ வைத்து எரித்துக் கொலை செய்தவர்களைக் கண்டித்தும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான கச்சத்தீவை மீட்டெடுக்க மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், 08.10.2015 வியாழக்கிழமையன்று 19.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு. தமிழப்பன் தலைமையுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் சிபா. பாரி வள்ளல், மீனவர் மேம்பாட்டுப் பேராயத்தின் மாவட்ட அமைப்பாளர் அருளானந்தம், அதன் துணை அமைப்பாளர் அருள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கட்சியின் காயல்பட்டினம் நகர செயலாளர் அம்பேத் வரவேற்புரையாற்றினார். கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கருத்துரையாற்றினர். ஒன்றிய துணைச் செயலாளர் மு.தமிழ்ப்பரிதி நன்றி கூறினார்.

மகளிர் விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளர் சா.சு.இந்திரா, உழவர் இயக்க மாவட்ட அமைப்பாளர் இல.பேச்சிமுத்து, வணிகரணி மாவட்ட அமைப்பாளர் திருவள்ளுவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூலான் பாண்டியன், ஊடக மைய அமைப்பாளர் க.வேம்படிமுத்து, கானாம்பர் விடுதலை இயக்க மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் அறிவை நந்தா, காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் பவுல் என்ற பகவலன், இளஞ்சிறுத்தை நகர துணை அமைப்பாளர்களான முத்துராமன், வன செல்வன், சாரதி, ஆறுமுகநேரி நகர செயலாளர் வெள்ளத்துரை, தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கிருஷ்ணவேல், தொண்டரணி அமைப்பாளர் ராஜா, வணிகரணி துணை அமைப்பாளர் இளமாறன், உடன்குடி ஒன்றிய துணைச் செயலாளர் ஜான் வளவன், உடன்குடி ஒன்றிய இளஞ்சிறுத்தை துணை அமைப்பாளர் பன்னீர்வளவன், ஆழ்வை நகர செயலாளர் மாணிக்கம், மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்குட்டி, தொழிலாளர் விடுதலை முன்னணி துணை அமைப்பாளர் குட்டி என்ற வெற்றிவேந்தன், இளஞ்சிறுத்தைகள் துணை அமைப்பாளர் அந்தோணி ராவணன் உள்ளிட்ட கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 3:10 / 11-10-2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நன்றி சீறும் சிறுத்தைகளே!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [09 October 2015]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 41957

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் மனிதாப உணர்வு போராட்டத்திற்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!.

இப்படிப்பட்ட ஒரு கண்டனக்கூட்டம் காயல்மா மக்களின் சார்பாக, ஒருமித்த உணர்வோடு உடனேயே நடத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால் வி சி.கட்சியினர்கள் முந்திக்கொண்டார்கள்!

இருப்பினும்,போராட்ட வடிவில் மட்டுமல்ல மற்றைய எல்லா நிலைகளிலும் இதுபோன்ற அநியாய அக்கரமங்கள் நம்மின மக்களுக்கு மட்டுமல்ல சிறுபான்மை சமுதாய சகோதரர் எவர் ஒருவருக்கு எங்கு நடைபெற்றாலும் அதற்காக குரல்கொடுத்து நம் எதிர்ப்பினை பதிவு செய்வது கண்ணியமிகு காயல் நெஞ்சங்களின் கடமையாகும்!

மத்தியில் இந்த கொடூர ஆட்சியின் கட்சியினுடைய தேர்தல் முடிவின் வெற்றிவேகம் வெறித்தனமாக எகிறிக் கொண்டிருக்கும் வேலையில், அதைக்கேட்டுக்கொண்டிருந்த என்போன்றவர்களின் இதயங்கள் வெடித்து விடுவதுபோல் வேதனையால் துடித்ததை அந்த அல்லாஹ் ஒருவனே அறிவான்!

மிருக பலத்துடன் வரும் இந்த காவிகூட்டத்தினால் நம் சமுதாயம் என்ன பாடுபடப்போகிறதோ என்ற ஒரு கதிகலக்கமும், அச்சமும் என் மனதில் அலைமோதியதே தவிர, மனம் அமைதி நிலையை எட்டவில்லை என்னையறியாமல் என்னிரு விழிகளும் நீரை வார்த்தன!

என்னைப்போன்றவர்கள் பீதியுடன் பயந்து கொண்டிருந்த உணர்வு ஒவ்வொரு காலகட்டத்திலும், உண்மையாக நடந்து கொண்டிருக்கின்ற குலைநடுங்கும் நிகழ்வுகளாகவும்,எந்த நேரமும் எம்மையும் தாக்கும் தருண எதிர்பார்ப்பாகவும் இருந்துகொண்டிருக்கின்ற ஒரு அபாயமிகு மண்ணில்தான் சிறுபான்மை சமுதாயமாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோம், இல்லை,இல்லை வெருண்டு கொண்டிருக்கிறோம்!

இப்படியெல்லாம் ஒவ்வொரு விபரீத விளைவுகள் ஏற்படும் என்ற ஒர் இனம்புரியா அச்சமும்,உணர்வும் அன்றைக்கே என்னுள்ளத்தில் உதித்ததால் அந்த துயர நிலையை தாங்க தைரியமில்லாமல் என்கண்களில் வழியும் நீரை அடக்க முடியாமல் தனிமைஇடம் நகன்று அழுதே விட்டேன்!

என்னுடைய இந்த நிலையை அன்றைக்கே தேர்தல் முடிவு வந்த உடனேயே பதிவு செய்திருந்தேன்,என்னுடைய அந்த பதிவை சில சகோதரர்கள் விபரம் அறியாது அரைகுறை அறிவு ஜீவிதத்தனமாக,நான் சார்ந்த என் மனது ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி தோல்வி கண்டதால்தான் ஆதம் சுல்தான் அழுகிறான் என்று மே"தாவி"த்தனமாக கிண்டலுடனும் கேலியுடனும் கருத்தறிவித்துருந்தார்கள்!

நான் சாந்திருக்கும் கட்சி இம்முறைமட்டும் தோல்வியை தழுவி இருந்தால் அல்லவா எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும்.. தோல்விலேயே பிறந்து, தோல்விலேயே வளர்ந்து தோல்வியின் எல்லைக்கே சென்று திரும்பிய கட்சி. இக்கட்சியின் உண்மை தொண்டன் இந்த தோல்வி மட்டுமல்ல எந்த தோல்வியின் முடிவாலும் என்றைக்கும் துவண்டு விடுபவனல்ல!

வெற்றிதான் ஒரு கட்சியை வாழ வைக்கும்,வெற்றிதான் ஒரு கட்சியின் தன்மானம்,ஒற்றை தலைமையில் சுழன்று வெற்றி இல்லையேல் வீழ்ந்து விட வேண்டியத்துதான் என்று வாழும் கட்சிகளின் அகராதிக்கு நேர் எதிர்மறை கொள்கை நிலைப்பாட்டிலுள்ள ஒரு அமைப்பு ரீதியான கட்சியின் ஆதரவாளனும் அங்கதினரும்தான் இந்த ஆதம் சுல்தான்.

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [10 October 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41961

அஸ்ஸலாமு அலைக்கும்

உண்மையான '' கண்டன ஆர்ப்பாட்டம் ....இது தான் .....நமது ஊரில் பலதரபற்ற அரசியல் கட்சிகள் உள்ளன ......இருப்பின் என்ன பிரோசனம் .....விடுதலை சிறுத்தைகள் '' இவர்கள்தான் நியாயத்துக்காக நடத்துகின்ற ஆர்பாட்டம் ..மிக சரியான நேரத்தில் ...மிக சரியாக செய்து உள்ளார்கள் .......

எதிர்ப்பை அமைதியாக காட்டிய இந்த அமைப்புக்கு .....

.>>>விடுதலை சிறுத்தை ...கட்சிக்கு பாராட்டுக்கள் ,<<,

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Javed Nazeem (Chennai) [10 October 2015]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 41962

"மாட்டிறைச்சி உண்டவரை" என்பது தவறு. "மாட்டிறைச்சி உண்டதாக கருதப்பட்டவரை" என்பது தான் சரி. பரிசோதனை முடிவுகளில் அவர் உண்டது ஆட்டிறைச்சி தான் என அறியப்பட்டது.

http://goo.gl/mycqRO

[Administrator: செய்தி திருத்தப்பட்டது. நன்றி.]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by nizam (india) [11 October 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41963

நேற்று திரு நிதீஷ் குமார் அவர்கள் மாட்டிறைச்சி அரசியலின் பின்னணியை ஒருஆங்கில தொலைகாட்சியில் விளக்கினார்கள்

அதாவது இந்த சம்பவத்தூக்கும் பீகார் தேர்தலுக்கும் நேரடி தொடர்பு உள்ளது மோடி அவர்கள் கடந்த தேர்தலின்போது நான் ஆட்சிக்குவந்தால் ஒவொரு இந்தியக்குடிமகன் கணக்கிலும் பதினைந்து லட்சரூபாய கொடுக்கப்படும் ஐ டி மாணவர்களுக்கு வேலைகொடுக்கப்படும் விலை வாசி குறைக்கப்படும் போன்ற வாக்குறிதிகளை நிறைவேற்றாததால் பீகார் மக்கள் பாஜாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் அதை திசை திருப்பும் வகையில் பீகாருக்கு ஒரு லட்சகோடி நிதி இலவச பைக் என்ற ஆசைவார்த்தைகளை மக்கள் நம்பாததால் இந்த மத வெறுப்பு ஆயுதத்தை எடுத்திருகிறார்கள் ஆனால் இந்தியக்குடிமக்கள் ஒருபோதும் இதற்க்கு துனைபோகமாடார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mauroof (Dubai) [11 October 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41967

சகோ. Javed Nazeem அவர்கள் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொண்டு இத்தளத்தின் நெறியாளர் செய்தியின் தலைப்பில் வேண்டிய மாற்றத்தை செய்யலாமே.

நமதூரின் பெரும்பான்மை மக்கள் தூக்கிப் பிடிக்கும் இரு பெரும் திராவிட(?) கட்சிகள் ஏன் ஒரு சிறு கண்டனத்தைக் கூட இவ்விவகாரத்தில் தெரிவிக்கவில்லை?.

அவ்விரு கட்சிகளின் தலைவர்களும் குல்லாவும் முக்காடும் போட்டு கஞ்சி குடிப்பதோன்றே போதும் இஸ்லாமிய சமூகத்தின் நண்பர்களாக அவர்கள் விளங்குகின்றார்கள் என்று நம்பி அவர்களுக்கு வாக்களித்திட.

[Administrator: செய்தி திருத்தப்பட்டது. நன்றி.]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved