Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:32:00 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16456
#KOTW16456
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015
DCW ரசாயன ஆலையை மூட வலியுறுத்தி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை! தடையை மீறி போராட்டம் நடத்திய SDPI கட்சியினர் கைது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4636 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அரசு சட்ட விதிகளை மீறி, காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக்கழிவு தொழிற்சாலையை மூட வலியுறுத்தி, சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தில், தடையை மீறி போராட்டம் நடத்திய SDPI கட்சியினர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து SDPI சார்பில் பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் செயல்பட்டு வரும் தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (D.C.W) ஆலையின் விரிவாக்க திட்டப் பணிகளுக்கு தடைவிதிக்கக் கோரியும், ஆலையின் கழிவுகளால் சுற்றுப்புற சூழலுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள கேடுகள் தொடர்பான முழுமையான ஆய்வினை மேற்கொண்டு, ஆலையினை நிரந்தரமாக மூடவேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை எஸ்.டி.பி.ஐ கட்சினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.





இந்த முற்றுகை போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், உஸ்மான் கான், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், காஞ்சி பிலால் தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ தலைவர் அஷ்ரப் ஃபைஜி, தென்சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், திருவள்ளூர் மாவட்ட தலைவர் சேக் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் அணு சக்திக்கெதிரான மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த முகிலன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த முற்றுகை போராட்டத்தில் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள், செயல்வீரர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.



முற்றுகை போராட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி பேசினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-









தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (DCW) என்ற அமில ஆலை. இந்த ஆலையானது பாதரசத்தை அடிப்படையாகக் கொண்டு காஸ்டிக் சோடா பி.வி.சி. மற்றும் சி.பி.வி.சி போன்ற பல்வேறு பொருட்களை முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி சர்வதேச விதிமுறைகளை மீறி உற்பத்தி செய்துவருகிறது. இந்த ஆலைக்குள் தேக்கி வைக்கப்படும் டிரை குளோரோ எதிலின், அயன் ஆக்ஸைடு, காட்மியம் போன்ற செந்நிற ஆபத்தான ரசாயன கழிவுகளை ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆலைக்கு அருகே உள்ள காயல்பட்டினம் கடலில் இரகசியமாக கலக்கின்றனர்.

இந்த கழிவுகளால் மிக மோசமாக, கடலும், நிலமும் மற்றும் மீன் வளங்களும் பாதிக்கப்படுகின்றது. சில ரசாயன கழிவுகள் ஆவியாகி காற்றையும் மாசுபடுத்துகின்றன. இதனால் ஆலையை சுற்றியுள்ள காயல்பட்டணம், ஆறுமுகநேரி, புன்னக்காயல், சேர்ந்தமங்களம், ஆத்தூர் உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிக மோசமான புற்று நோய்கள், சுவாசக் கோளாறுகள், மன நோய்கள் மற்றும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள் காரணமாக ஏராளமானோர் மரணத்தை தழுவியுள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நோய்களோடு வாழ்நாட்களை எண்ணி வருகின்றனர். இதன் காரணமாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பூமியாக மாறிவருகிறது.

இதுமட்டுமின்றி காயல்பட்டினத்துக்கு அருகிலுள்ள இந்துக்களின் புனித தலமான திருச்செந்தூர் கடல் பகுதியில் அவ்வப்போது கடல் நீர் செந்நிறமாக மாறுவதும், கடலில் புனித நீராடும் பக்தர்களுக்கு தோல் அரிப்பு போன்றவை ஏற்படுவதும், கடலில் கலக்கப்படும் இந்த ரசாயன ஆலைக் கழிவுகள்தான் காரணம்.

மேற்கண்ட இந்த அவநிலைக்கு காரணமான டி.சி.டபுள்யூ ஆலை, இந்த கழிவுகளை சர்வதேச நவீன முறைகளில் சுத்திகரிக்க வேண்டிய ஆலை நிர்வாகம் அதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலை கொள்ளாது தொடர்ந்து விதிமுறைகளை மீறி நில வளத்தையும், கடல் வளத்தையும், காற்றையும் மாசுபடுத்தி வருகின்றது. இதனை தடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் எத்தனையோ மனுக்களை அதிகாரிகளுக்கு அனுப்பியும் அம்மனுக்கள் எல்லாம் குப்பைக்கூடைக்கு மட்டுமே சென்றது. மக்களை கொடிய நோய்களிலிருந்து காப்பாற்ற எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்தது. கோரிக்கைகளுக்கு அரசுகள் செவிமடுக்காத நிலையில் கடந்த டிசம்பர் 30 அன்று, ஆலையை முற்றுகையிடும் போராட்ட த்தை நடத்தியது. ஆலையால் ஏற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், நோய்களால் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், டி.சி.டபுள்யூ ஆலையை பற்றிய வெள்ளை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட அந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கைதாயினர்.

அதன்பிறகும் அந்த ரசாயன ஆலையை மூட வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ கட்சியும், தன்னார்வலர்களும் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள், மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், பல்வேறு புகார் மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும், ஆலைக்கெதிராக தமிழக அரசோ மாசுக்கட்டுப்பாடு வாரியமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆலை நிர்வாகமும் மக்களின் போராட்டத்தினை, கோரிக்கையினை அலட்சியம் செய்வதோடு விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகிறது.

ஆகவே, தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் ஆலையின் விரிவாக்க திட்டத்திற்கு தடை விதிப்பதோடு, ஆலையின் கழிவுகளால் சுற்றுப்புற சூழலுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள கேடுகள் தொடர்பான முழுமையான ஆய்வினை மேற்கொண்டு, ஆலையினை நிரந்தரமாக மூடவேண்டும் என்பதை வலியுறுத்தியே இன்றைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றது.

டி.சி.டபுள்யூ ஆலை தன்னுடைய தண்ணீர் தேவைக்காக கடலிலும், தாமிரபரணி தண்ணீரையும் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது. இதில் தாமிரபரணி தண்ணீரை நாளொன்றுக்கு 3 லட்சம் கேலன் தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட அனுமதி காலாவதியாகி பல வருடங்கள் ஆகின்றது. ஆனால் இன்றுவரை அந்த ஆலை மேற்கண்ட காலாவதி அனுமதியை வைத்தே தண்ணீர் எடுத்து வருகிறது. எனவே மேற்கண்ட நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

டி.சி.டபுள்யூ ஆலையானது காயல்பட்டினம் மக்களுக்கு மட்டுமல்ல சுமார் 20க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழும் மக்களின் நலனுக்கு எதிரானது. ஆனால், சில மர்ம கைக்கூலிகள் ஆலையின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி வரக்கூடிய அமைப்புகளை மதரீதியில் பிளவுபடுத்தி தவறாக வழிநடத்தும் வேலைகளை ஆலை நிர்வாகத் துணையுடன் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசயத்தில் மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராடிவரும் எஸ்.டி.பி.ஐ, பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்து ஆலை மூடப்படும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்ளும்!


இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.












இவ்வாறு அந்த செய்தியறிக்கை தெரிவிக்கிறது.

இப்போராட்டத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் உட்பட 400 பேர் வரை கலந்துகொண்டதாகவும், 285 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படங்கள்:
A.J.மன்ஸூர்
நோனா உவைஸ்
‘Bean N Bread’ அஹ்மத்


SDPI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mohamed salih (chennai) [22 August 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41731

மாஷா அல்லாஹ் இந்த போரட்டத்தின் மூலம் நம்மக்கு வெற்றியை தருவானாக ஆமீன் ..

கடைசி வரை முயன்று போராட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை .. மனது மிகவும் சங்கடமாக இருந்தது ..

எனது நண்பர்கள் கலந்து கொண்டார்கள் அவர்கள் மன வேதனை மூலம் கிடைத்த தகவல் .எனது வேதனையும் கூட..

சுமார் 3000 அதிகமாக நமதூர் மக்கள் சென்னையில் இருந்தும் வெறும் 30 முதல் 40 வரை நமதூர் மக்கள் கலந்து கொண்டார்கள் என்று சொன்னபோது மிகவும் கஷ்டமாக இருந்தது ... இந்த போராட்டம் யாருக்காக நடை பெறுகிறது நமது மக்களுகாக .. கட்சி வேறுபாடு இன்றி நம் அனைவரும் கலந்து கொண்டு இருக்க வேண்டும்..

இந்த கட்சியின் சார்பில் நமதுஊர் எல்லா மக்களிடம் நேரடியாக சென்று அழைப்பு விடுத்தது உள்ளார்கள் .. அப்படி இருந்தும் இப்படி...

நமது மக்கள் whatsup மூலம் செய்தியை பரபுவர்தர்க்கு ரெம்ப அக்கறை காட்டுவார்கள் ஆனால் உங்களின் வருங்கால சந்ததியர்க்கு நல்ல படியாக நமது ஊரை விட்டு செல்ல கை கோர்ந்து போராட வரமாட்டார்கள் ..

ஏதோ நமதுஊரில் ஒரு அமைப்பு இருக்கிறது என்று சொன்னார்கள் இதற்க்குஎன்று அந்த அமைப்பில் இருந்து கூட கலந்து கொள்ளவில்லை ..

வல்ல இறைவா முதன் முதலில் நான் எங்கள் ஊருக்க கேட்கும் முதல் பிராத்தனை எங்கள் மக்கள் மத்தியில் நல்ல ஒற்றுமையை கொடு என்று நாம் ஓவ்வரு நேர தொழுகையிலும் dua கேட்கவேண்டும் இன்ஷா அல்லாஹ்..

கனத்த இதயத்துடன் ,

குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
சென்னை ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by KJ KALIFA SEYED MOHAMED (Chennai) [22 August 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 41732

மண்ணடி மாஃமூர் பள்ளியருகில் இருந்து ஒரு வேன் புறப்பட்டது. சுமார் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டு கிண்டி ரேஸ் கோர்ஸ் எதிரிலுள்ள சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்டு பெயர் பதிவிற்கு(Police Record) பிறகு 7 மணியளவில் விடுவித்தனர்.முக்கியமான விஷயத்தில் இயக்க வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அதிகமான காயலர்கள் பங்கேற்று இருக்கலாம். மண்டபத்திலும் தெஹ்லான் பாகவி அவர்கள் சிறிது நேரம் உரையாற்றினார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by நெட்காம் புகாரி (chennai) [22 August 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 41733

நமதூர் சமுதாய மக்களுக்காக ஆலை எதிர்த்து போராட்டம் பண்ணும் இந்த நல் உள்ளங்களுக்கு எங்கள் உடைய நன்றினை தெரிவித்து கொள்ளகின்றேன். இதிலிருந்து சமுதாய நலனுக்காக போராடும் ஒரு உன்னதமான கட்சி என்று நிருபித்து விட்டிர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம்) [23 August 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41741

உங்களுடைய வீரியமிகு முற்றுகை போராட்டத்திற்க்கும், மக்களின் நலனில் உண்மையான அக்கறைக்கும், மக்களின் மனதை வென்று எடுக்கும் செயலுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அனைத்து புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.

உங்களின் மக்கள் பணி சிறக்கவும், மக்களை பாதிக்கும் ஆலையின் பிடியில் இருந்து மக்களை நிரந்தரமாக காக்கவும் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.

போட்டோக்களில் நமக்கு தெரிந்த முகங்கள் இருக்குமா என்று பலமுறை தேடி பார்த்தும் கிடைக்கவில்லையே..!!...?? ஹூம்ம்.....ம்ம்ம்

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [23 August 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41743

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் ....பாகு பாடுன்றி அனைத்து நம் சமுதாய மக்கள்களும் கலந்து போராட்டம் நல்ல முறையில் நடந்து ...நம் தமிழக அரசு கவனத்தை ஈர்த '' நமது SDPI '' அமைப்பினர்களை நம் ஊர் அனைத்து மக்களும் மனதார பாராட்டியே ஆகணும் .....மேலும் நாம் இந்த SDPI ''' அமைப்பினர்களை நினைத்தும் பார்க்கணும் ..... அல்லாஹ் இந்த அமைப்பினர்களை சிறப்பாக்கி வைப்பானாகவும் ஆமீன்......

இந்த .. SDPI ....அமைப்பினர்களின் அடுத்த தொடர் போராட்டத்தில் ...நமது ஊரை சேர்ந்த பொது நல அமைப்பினர்களும் & நம் ஊர் அனைத்து ஜமாத்துக்களும் / பொது மக்களும் ஓன்று சேர்ந்து போராடினால்தான் ...நமக்கு இந்த DCW ....தொழிற்சாலையில் இருந்து முழுமையான ஒரு வெற்றி கிடைக்கும் ....நம் ஊர் அனைத்து மக்களும் மன நிம்மதி அடைவார்கள் .....

நம்மில் இந்த விசையத்திலும் ஒற்றுமை இல்லை என்றால் ....நமக்கு இன்னும் கஷ்டமே ..... SDPI இவர்களின் அடுத்த கட்ட போராட்டத்தில் நம் ஊர் மக்கள் அதிகமான பேர்கள் கலந்து இன்னும் நம் எதிர்ப்பை அதிகரித்து நம் தமிழக அரசின் கவனத்தையும் / வெளி உலக மக்கள் கவனத்தையும் ,, மீடியாக்களின் முழுமையான ஒரு கவனத்தையும் நம் பக்கம் '' ஈர்க்க வேணும் .....அப்போதான் இந்த நாசமா போன DCW தொழிற்சாலைக்கு ஒரு முடிவு கட்ட முடியும் .....

இந்த போராட்டத்தின் மூலம் நமக்கு முழுமையான ஒரு வெற்றியை வல்ல இறைவன் தந்தருள்வானாகவும் ஆமீன்....

அருமை சகோதரர்கள் குறிப்பிட்டதை போல ...நம் ஊர் மக்கள் சென்னையில் அதிகமான பேர்கள் இருந்தும் ( 30 / 40 பேர்கள் தான் கலந்து இருப்பதை நாம் என்ன சொல்ல )...சுத்தமாகவே கலந்து கொள்ள வில்லை என்றேதான் சொல்லணும் ....இது வருத்த பட கூடிய ஒரு ஒரு விசையம் ....

நம் ஊர் மக்களுக்கு இவர்கள் நேரில் சென்று அழைப்பு கொடுத்தும் கூடவா நம் ஊர் சென்னை வாழ் மக்களின் மெத்தன போக்கு .....

தேவைகற்ற போராட்டத்தில் நம் மக்கள் கலந்து கொள்வார்கள் ...ஆனால் இது போன்ற ரொம்பவும் அவசியமான போராட்டதில் கலந்து கொள்வதில் ஏன் தான் தயக்கம் காட்டுகிறார்களோ ......

அல்லாஹ் நம்மில் ஒற்றுமையை & வெற்றியையும் தந்தருள்வானாகவும் ஆமீன்...... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சுயநலமற்ற முற்றுகை போராட்டம் - வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [24 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41746

மக்களுக்கு பயன் தரக்கூடிய நல்ல ஒரு காரியத்தை செய்யும் முகமாக பொது நலன் கருதி அநீதியை கண்டிக்கும் விதமாக செயல்படும் S D P I கட்சியை பாராட்டுகிறேன் - தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள்..

தொடர்ந்து ஒலிக்கட்டும் மக்கள் நலனுக்கான உங்கள் குரல்கள்..!

உண்மையான செயல்பாடுகளுக்கு இறைவன் நமக்கு கண்டிப்பாக வெற்றியை தருவான்... ஆமின்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. என்றுதான் நமதூருக்கு விடிவு காலம் பிறக்குமோ?
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (Royal Kayal - 628204l) [24 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41747

படைத்தோனுக்கு பிரியம்தரும் ஒரு பெருந்தன்மையான புண்ணிய போராட்டாம்! இதில்பங்கு கொண்டSDPI அமைப்பின் அனைத்து அன்புள்ளங்களுக்கும் அனைத்து காயலர்களின் சார்பாக இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்!

பலவருடங்கள் பாலைவன பூமியில் இருந்து விட்டு விடுமுறையில் வந்த நான் வீட்டு திருமணம் போன்ற பல முக்கிய வேலைப்பளுவில் மும்முரமாக இருந்ததால் நம்மூர், நாட்டு நடப்புகளிலிருந்து சற்று நகர்ந்து இருந்ததை நினைத்து மிகவும் வருந்துகிறேன்! இன்றுதான் சற்று ஓய்வு கிடைத்த நேரத்தில் கனணியை திறந்தநான் இந்த முக்கிய செய்தியை பார்க்க முடிந்தது!

பெருந்தன்மையான புண்ணிய போராட்டம் என்று நான் எழுதியதற்கு காரணம் இந்த கொடிய ஆலையின் கொடூர தாக்கத்தினால் கொத்துக் கொத்தாக மடிந்துகொண்டிருக்கும் காயலர்களின் விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்பை ஏற்றுக்கொள்ளமுடியா இளகிய இதயங்கள் ஊரால் வேறுபட்டிருந்தாலும் உள்ளத்தால் ஒன்றுபட்டு முற்றுகைபோரட்டத்தில் கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள்துணை அனுதினமும் கிடைத்து குவிய வல்லோனை இதயமுருக வேண்டுகிறேன்!

சென்னைவாழ் காயல் சகோதரர்களின் ஒருசில இளகிய இதயத்தார்கள் தவிர பெரும்பாலோர்கள் கலந்து கொள்ளாததை நினைத்து உண்மையில் வேதனையும், வெட்கமும் அடைகிறேன்! யாருக்கோ வந்தவிதி போலவும் போக்கத்த அமைப்பு போர்க்குரல் தூக்குறது என்ற எண்ணத்திலும் இதயமற்றவர்களாக ஏனோதானோவென்று இருந்தவர்களை எண்ணி உண்மையிலேயே உள்ள வேதனை அடைகிறேன்!

ஒரு உல்லாச பொழுது போக்கு பயணத்திற்கு எத்தனை பிரயாசை எடுத்து தீவிரமாக செயல்படுபவர்களே,இந்த நம் ஊர் உயிர் காக்கும் உத்தம போராட்டம் உங்கள் கவனத்திற்கு வரவில்லையா? எந்த ஈடுபாட்டிலும் இறைவனுக்கு பயந்து நேர்மையுடைய நடுநிலையை கையாளுங்கள்!

ஊரில் இந்த ஆலை எதிர்ப்பு அமைப்பிலுள்ளவர்கள் இந்த முற்றுகை போரட்டத்திதைப் பற்றிய விழிப்புணர்வு விளம்பரத்தை போதிய அளவு செய்யவில்லையோ என்ற ஐயப்பாடும் என்மனதில் எழுந்திருக்கிறது! உங்களில் போதிய வாய்ப்புள்ளவர்கள் பெரும்பாலோர் சென்னையில் பங்குபெற்றிருக்கவேண்டும்!

உண்மையான ஒற்றுமையையும், ஊர்மக்களின் வாழ்வுரியையும், அவர்களின் உயிர் பாதுகாப்பையும் உணர்வால் ஒவ்வொரு காயல் சகோதரர்களும் என்று உள்ளப்பூர்வமாக உணர்கிறார்களோ அன்றுதான் நமதூருக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!

Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by mohamed salih (chennai) [27 August 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 41767

நீதிமன்றத்தின் முன் வழக்கை வைத்திருக்கும் நிலையில், மறுபுறம் பொதுமக்களைக் கொண்டு பிரச்சினைகளில் ஈடுபடுவது அல்லது நடைபெறும் பிரச்சினைகளில் பங்கேற்பது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். இதனாலேயே KEPA நேரடியாக எதிலும் தலையிடுவதில்லை. KEPAவே நடத்தும் போராட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தவிர.

இந்த செய்தி இப்போதுதான் என்னக்கு தெரிய வந்தது. எனவே சம்பதம் உள்ள அமைப்பின் நிர்வாகிகள் என்னை மன்னிக்கவும் ..

என்றும் அன்புடன்
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. மனம் பொறுத்தருள்க!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Royal Kayal-628204) [27 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41769

அதானே பார்த்தேன் "KEPA " வாவது "கம்முண்ணு" இருப்பதாவது! நீதிமன்ற தொடர்புடன் தங்கள் இயக்கம் இருப்பதால் இதுபோன்ற முற்றுகை போராட்டத்தில் நேரிடியாக கலந்துகொள்ள முடியா துருதிஷ்ட நிலை ஏற்படுவது எதார்த்தமே! என்ன செய்வது நீதிக்கு மதிப்பளித்து மௌனமாக இருப்பதுதான் அந்த நீதிக்கி மரியாதை!

சகோதரர் முஹம்மது சாலிஹ் சொன்னதுபோல் நானும் 'KEPA ' அமைப்பை பற்றி சிலேடையாக கூறிய கருத்தை திரும்ப பெற்று அதற்காக மனம் வருந்துகிறேன்! இந்த ஆதம் சுல்தான் எந்த அளவிற்கு 'KEPA "அமைப்பின் மீது வைத்திருக்கும் மரியாதையையும் மதிப்பையும்'KEPA "வின் ஒவ்வொரு உண்மைதொண்டரும் ஆணித்தரமாக அறிந்தததே! அல்லாஹ் அனைத்தும் அறிந்ததவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved