Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:50:13 AM
திங்கள் | 28 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1915, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:0815:2818:0419:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்02:53
மறைவு17:56மறைவு15:20
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1818:4319:07
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16440
#KOTW16440
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 18, 2015
இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத்தைக் கலைக்க கோரிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5622 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 29)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத்தைக் கலைத்திடுமாறு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

காயல்பட்டினம் நகரில் பழுதடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க நகர்மன்ற துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தடையாணை பெற்றுள்ள நகர்மன்றத் தலைவரைக் கண்டித்தும், அவ்வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், இன்று (18.08.2015 செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், கட்சியின் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.





மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கே.எம்.என்.உமர் அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன் வரவேற்புரையாற்றினார்.

காயல்பட்டினம் நகர்மன்ற 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளர் முஸ்தஃபா கமால், ஆர்.எஸ்.கோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பன்னீர் செல்வம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் பொதுச் செயலாளர் பிரபு சுல்தான் ஆகியோர் கருத்துரையாற்றினர். பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் அதன் கட்கி மண்டல பொறுப்பாளர் மகேஷ் கண்ணன் அனுப்பிய ஆதரவுக் கடிதம் ஆர்ப்பாட்டத்தின்போது வாசிக்கப்பட்டது. முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நன்றி கூறினார்.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் நிறைவுரையாற்றியதோடு, பின்வருமாறு தீர்மானங்களை முன்மொழிய, அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் வழிமொழிந்தனர்:-



தீர்மானம் 1 – தடையாணை பெற்ற வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தல்:

கடந்த 8 மாதங்களுக்கு முன் காயல்பட்டினத்தில் பெய்த பெருமழையின் காரணமாக ஏராளமான சாலைகள் மிகவும் பழுதடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதசாரிகள் நடக்க இயலாமல் தடுக்கி விழும் காட்சிகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

எனவே, நகராட்சி சட்டம் 1920 Schdule III பிரிவு 3 (1)இன் படி கூட்டம் நடத்த நகர்மன்ற கவுன்சிலர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, 27.07.2015 அன்று கூட்டம் நடத்துவதாக ஒப்புக்கொண்டும், 23.07.2015 வரை கவுன்சிலர்களுக்கு கூட்ட அழைப்பு வராததால், நகராட்சி சட்டம் 1920 Schedule III பிரிவு 3 (2)இன் படி, நகர்மன்ற துணைத்தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்று, நகரில் 43 சாலைகள் போடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் மகிழ்ந்திருந்த நிலையில், நகராட்சி தலைவி, 27.07.2015 அன்று மனு தாக்கல் செய்து, w.p. 13783 of 2015 மூலம் தடை உத்தரவு பெற்றுவிட்டார். இதனால் சாலை அமைக்கும் பணிகள் அடியோடு தடைபட்டு, மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எனவே காயல்பட்டினம் நகர மக்களின் நலனைக் கருதி, இந்த வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற்று, சாலைப் பணிகள் தொடங்க காயல்பட்டினம் நகராட்சி்த் தலைவி வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2 – பயோகேஸ் திட்டத்திற்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தல்:

காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், குப்பைகள் கொட்டுவதற்கும், பயோகேஸ் திட்டம் அமைவதற்கும் உரிய பணிகள் துவங்கிய நிலையில், நகர்மன்றத் தலைவரின் தலையீட்டின் பேரில் இருவர் அப்பணிகளுக்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து, இடைக்கால தடை பெற்றுள்ளனர். மேலும் நகர்மன்றத்தலைவர், வழக்கு தொடர்ந்தவர்களுக்குச் சாதகமாக பசுமைத் தீர்ப்பாயத்தில் தவறான தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். இச்செயல் கண்டனத்திற்கும், வருத்தத்திற்கும் உரியது.

எனவே, தமிழக அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பான விஷயத்தில் அதிக அக்கறை செலுத்தி, உருவாகியுள்ள இடையூறுகளை நீக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு, இடைநிறுத்தம் செய்யப்பட்ட பணிகள் மீண்டும் தொடர்ந்து முழுமை பெற ஆவன செய்யுமாறு இவ்வார்ப்பாட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3 – நகர்மன்றத்தைக் கலைக்க கோரிக்கை:

மக்கள் நலத்திட்டங்களைச் செய்திட பெரும் தடையாக இருக்கும் ஐ.ஆபிதா ஷேக் தலைமையிலான இந்த நகர்மன்றத்தைக் கலைத்துவிட்டு, தனி அதிகாரி மூலம் எஞ்சிய காலத்தில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசை இவ்வார்ப்பாட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4 – நடவடிக்கை இல்லையெனில் நகராட்சி முன் முற்றுகைப் போராட்டம்:

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட கோரிக்கைகள் ஏற்கப்படவில்லையெனில், விரைவில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை - சர்வ கட்சிகள், பொதுநல அமைப்புகளின் ஆதரவோடு நடத்துவது என இவ்வார்ப்பாட்டம் முடிவு செய்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரைக் கண்டித்து பின்வருமாறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.





காயல்பட்டினம் நகர்மன்ற 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் எம்.எம்.கமால், அதன் நிர்வாகி காயல் முத்துவாப்பா, சமத்துவ மக்கள் கட்சியின் நகர செயலாளர் அப்துல் அஜீஸ், நகரப் பிரமுகர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், அதன் மாவட்ட - நகர நிர்வாகிகள், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.









கஃப்பாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. நிறைவில், முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.




இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Hafiz Mohudoom Mohamed (Dammam) [19 August 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41685

போங்க சார், நாங்களே வெயில் அதிகமா இருக்குனு சொல்லி பந்தல் போட்டு இருகாங்கேன்னு உட்காந்துட்டு போனோம். நீங்க வேறு ஆர்பாட்டம்னு பார்த்த வந்தவங்க சொன்னனங்க மேடைல மைக் புடிச்சு பேசறவங்க யாரும் ஊருக்கு நல்லது பண்ணுற மூஞ்சு இல்லப்பா, அவங்களுக்கும் காசு கடைக்கமா போதேனு வயறு எரிச்சல்ல ஒரு கூட்டம்னு போட்டு கட்சிக்கு எதாவது கிடைக்குமானு பாக்குறாங்கன்னு சொல்லுறாங்க....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மேலும் ஒரு (சுயநலத்தை தான்) இழுக்கை தான் சம்பாதித்துக்கொண்டது
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [19 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41687

ஊரிலுள்ள அணைத்து ஜமாஅதுக்களின் நிர்வாகிகள் ஒன்றுகூடி - நகர்மன்ற தலைவர் அவர்களே..! நம் நகரில் பணிகள் நடைபெற ஊழல் - லஞ்சம் - முறைகேடுகளை நகராட்சியில் நீங்கள் எதையும் கண்டுகொள்ள வேண்டாம் - பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்து கொள்ளுங்கள் - நகரில் பணிகள் எப்படியும் நடந்து கொண்டு போகட்டும் - நீங்கள் அதில் கவனம் செலுத்த வேண்டாம் என நகரில் அந்த அந்த ஜமாத் தலைவர்கள் / பெரியவர்கள் / ஆலிம் பெருமக்கள் / முகல்லா வாசிகள் இவர்கள் ஓன்று கூடி அந்த அந்த ஜமாஅதுக்களின் லட்டர் பேடில் ஜமாத் சீல் பதிந்து அதில் கையெழுத்து போட்டு மதிப்புக்குரிய தலைவர் அவர்களுக்கு காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய கட்சி சார்பில் பெற்று அனுப்புமா...?

யாருக்கும் எந்த தொல்லையும் இருக்காது...! நாளை மறுமை நாளில் கேள்வி - பதில் - கணக்கு விசியத்தில் இறை அச்சம் கொண்ட நகர்மன்ற தலைவருக்கு தன்னை இப்பதவியில் அமர வாய்த்த இறைவனிடத்தில் பதில் சொல்ல மிக எளிமையாக இருக்கும் அல்லவா..! - அதுக்கு இந்த காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய கட்சி நகரின் அணைத்து ஜமாஅதுக்களிடமிருந்து கடிதம் பெற்று கொடுக்க முன் வர வேண்டும்.

நகரில் நாளை ஒரு வீட்டில் திருட்டு நடந்தால் கூட அத்திருட்டால் பாதிக்கப்பட்டவன் காவல் துறையில் புகார் கொடுத்தால் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் போடலாம்..? ஆதாயம் இருந்தால் இவர்கள் எதையும் செய்வார்கள் போலும்..! நகர் மக்கள் இவர்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்..!

என்னை பொருத்தவரை இந்த ஊர் விஷயத்தில் இந்த சமுதாய கட்சி மேலும் ஒரு (சுயநலத்தை தான்) இழுக்கை தான் சம்பாதித்துக்கொண்டது - அது தான் மிச்சம்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Fuad (Singapore ) [19 August 2015]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 41688

மரியாதைக்குரிய காயல்பட்டணம் நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பர்ராட்ட வேண்டிய ஒன்று. அதே நேரத்தில் நகர்மன்ற உறுப்பினர்களையும் அழைத்து விசாரித்திருக்கலாம்.

(1) நகரமன்ற தலைவர் ஊரிலிருக்கும்போது துணைத்தலைவர் தலைமையில் நகரமன்ற கூட்டம் சரியா?

(2) அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து அவர்களிடம் விளக்கம் கேட்டீர்களா?

(3) ஊர் நன்மைக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய நீங்கள் எல்லா ஜமாத்கள் மற்றும் பொதுநல அமைப்புகளையும் கலந்து பேசினீர்களா?

(4) லஞ்சம், ஊழல் இல்லாத நமது நகராட்சி செயல்பட முயற்சி செய்தீர்களா?

(5) நகர்மன்றதிற்காக வாங்கப்படாத கணினிக்கு காசோலை வழங்கப்பட்டதாக செய்தி வந்தது உங்கள் கவனத்திற்கு வந்ததா? அதைப்பற்றி ஏதும் நகரமன்ற தலைவரிடமோ அல்லது உறுப்பினர்களிடமோ விசாரித்தீர்களா?

(6) சாலைகளை புதிதாக போடுவதற்கு தாமதம் ஏன் என்று விசாரித்தீர்களா?

(7) துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸி கஸ்டம்ஸ் சாலை விடுபட்டது உங்களுக்கு தெரியுமா? பின்னர் அது தட்டச்சில் விடுபட்டுவிட்டது என்ற செய்தி தெரியுமா?

இன்னும் நிரம்ப செய்திகள்!

இவைகள் அனைத்தையும் சேர்த்து நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) [19 August 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41689

தேவையற்ற ஆர்ப்பாட்டம்.

அதிக மக்களால் வெறுப்புடனும், ஒரு முனுமுனுப்புடனும் ஓராக்கண்ணால் பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வு, காரணம் தாய் சபையால் நடைபெற்றது என்பதால்.

நகரமன்ற தலைவி கொடுத்த விளக்க நோட்டீஸ்க்கு ஒரு சிறு விளக்கம் அல்லது மறுப்பு தெரிவிப்பீர்கள் என்று எதிர் பார்த்து இருந்தோம்.. ஊஹூம்.

மக்களின் மனதை வென்ற த.மு.மு.க, SDPI போன்ற கட்சிகள் வளர்ந்ததற்கு காரணமே, தாய்சபை, தாய்சபை என்று கூறிக்கொண்டு மக்களுக்கு தேவை இல்லாத போராட்டம் என்று இறங்குவதால் தான்,

அடிச்சுட்டான் அடிச்சுட்டான் என்று கூப்பாடு போடுகின்றீர்களே, ஏன் உன்னை அடிச்சான் என்று விசாரித்தீர்களா..?

மக்களின் மனதை வென்று, சமுதாயத்தை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் இருங்குங்க. வல்ல அல்லாஹ்வின் துணையும் , நல்லவர்களின் துணையும் உங்களுக்கு கிடைக்கும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. காக்கா காசெல்லாம் கரைஞ்சிடுமே....?
posted by Hameed Rifai (jeddah) [19 August 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41690

“என்னப்பா, நம்ம நிர்வாகி வீட்டு கல்யாணம் வருதே? அதையொட்டி வழலை போல தாய்ச்சபை சார்பில் ஒரு பொதுக்கூட்டம் போட்டுறலாமே?”

“சும்மா இரிப்பா! பொதுக்கூட்டம் போட்டுட்டா அப்பறம் காக்காட்ட வாங்குற காசெல்லாம் அதுலயே கரைஞ்சிடுமே.....? அப்புறம் கைச்செலவுக்கு எங்க போவ?”

“அதுவும் சரிதான்! அப்டீன்னா ஏதாச்சும் செலவு கொறச்சலா செய்வோம்... ஆங்....! ஒரு ஆர்ப்பாட்டம் வச்சா என்னா?”

“ஐடியா சரிதான்! என்ன ஆர்ப்பாட்டம்? யார கண்டிச்சி வக்கிறது?”

“இருக்கவே இருக்காங்க தலைவி! எவ்ளோ அடிச்சாலும் வாங்கிக்குவாங்க! காக்காக்கும் மனச குளிர வச்சாப்ல இருக்கும்! கைச்செலவுக்கும் கனிசமா கெடைக்கும்ல?”

“அது சரீ... என்ன காரணத்த சொல்ல?”

“காரணத்தையா தேடனும்? ஊர்ல கடும் வெயில்! தலைவிதான் அதுக்கு காரணம்ன்னு சொல்லி பண்ணுவோம்... ஒருவேள மழை பெஞ்சிட்டா, அதுக்கும் அவள்தான் சதி செஞ்சாம்போம்... நம்புறதுக்கு நம்மகிட்ட வெவரங்கெட்ட மக்கள் இருக்கிற வரைக்கும் நமக்கென்ன கவலை?”

இப்படி ஒரு உரையாடல் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் நடந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

மண்டைய குடையுற சில கேள்விகளை வழமை போல கேட்டுத் தொலைக்கிறேன்...

(1) நகராட்சி, பேரூராட்சி போன்ற ஒரு உள்ளாட்சியில ஊர் நலனுக்காக தீர்மானம் நிறைவேற்ற மட்டும்தான் தலைவருக்கு அதிகாரம் உண்டு! அதைத் தாண்டி, அக்காரியம் நடைபெறவில்லையெனில், அது அந்த உள்ளாட்சியின் மூத்த அதிகாரியான ஆணையாளர் / செயல் அலுவலர் இடம் கேட்க வேண்டியது என்ற அல்ப விஷயம் கூட ஒரு அகில இந்திய கட்சிக்குத் தெரியாதா?

(2) இந்திய அரசியல் சாசனத்தை மதிப்பது தாய்ச்சபையின் முக்கிய கொள்கைகளில் ஒன்று என்று மேடைக்கு மேடை மார்தட்டுவீர்களே...? இங்கு தலைவி அரசியல் சட்ட விதிகளுக்கு மாற்றமாக நடைபெற்ற ஒரு கூட்டத்தைத்தானே அவர் ஆட்சேபித்து வழக்கு தொடுத்து, தடையாணை பெற்றுள்ளார்? அதில் என்ன தவறைக் கண்டுவிட்டீர்கள் தாய்ச்சபைத் தங்கங்களே?

(3) ஜமாஅத் பிரதிநிதிகள் எல்லாம் கலந்துகொள்வார்கள் என்று உங்க ஆர்ப்பாட்ட செய்தி, நோட்டீஸ்களில் அறிவித்திருந்தீர்களே? அவங்களுக்கு அழைப்பிதழ் அட்ரஸ் மாறி போயிடுச்சா அல்லது உங்கள் தரத்தை அவங்களும் விளங்கிக் கொண்டார்களா?

(4) கடந்த முறை ரயில்வே துறையை எதிர்த்து நீங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கூட தமுமுக, எஸ்டிபிஐ, ததஜ போன்ற அமைப்புகள் எல்லாம் கலந்துகொண்டனவே? இப்ப அவங்களுமா உங்களை நம்பவில்லை?

அவங்க போயிட்டுப் போறாங்க! “வஞ்சிக்கப்பட்ட வாலிபர்” கூடவா உங்களை நம்பவில்லை? போன ஆர்ப்பாட்டத்தில் மக்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு முன்னணியில் செயல்பட்ட அவரையும் காணோமே? தெரியாமத்தான் கேட்கிறேன்.

(5) சரி போகட்டும்! நீங்க எந்த அரசியல் சாசனத்தை மதிப்பதாகக் கூறுகிறீர்களோ அதைச் செயலில் காண்பித்துக் கொண்டிருக்கும் தலைவிக்கு எதிராக, அரசியல் சட்டங்களை சிறிதும் மதிக்காமல் சட்டத்திற்குப் புறம்பாகக் கூட்டம் நடத்திய நான்கு கவுன்சிலர்களும் கூட உங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்களே? அவர்களில் ஒருவரை மேடையில் வைத்து அழகு பார்த்துள்ளதோடு, இருவருக்கு மைக் பிடித்து பேசவும் செய்துள்ளீர்களே.....? எப்போது இவர்களெல்லாம் மனிதப் புனிதர்கள் ஆனார்கள்?

(6) சரி, வந்தது வந்துட்டாங்க! “ஏம்ப்பா! உங்க நகராட்சியில ஆயிரத்தி சொச்சம் தீர்மானம் போட்டிருக்கீங்களே? அதில் பெரும்பாலானவை செயல்வடிவம் பெறவில்லை என்று குதிக்கிறீர்களே? அப்படி செயல்வடிவம் பெறாததைக் கண்டித்து, ஏன் இந்த வேலையைச் செய்யவில்லை என தலைவி அவர்கள் பலமுறை ஆணையருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியிருக்காங்களே...? நீங்க எத்தனை முறை இதுகுறித்து ஆணையரிடமும், உயர் அதிகாரிகளிடமும் தட்டிக் கேட்டிருக்கீங்க?” என்று கேட்பதற்குக் கூட யோசனை வராத அளவுக்கா குச்சி மிட்டாய் சூப்பிட்டு இருந்தீங்க?

மொத்தத்தில் சொல்கிறேன்! நம்ம ஊர்ல இரண்டே வகையான கட்சிகளும், அமைப்புகளும்தான் படைகளாக உள்ளன. (1) காக்காவின் காலடியே தஞ்சமெனக் கிடக்கும் கூலிப்படை. (2) என்ன சோதனை வந்தாலும், எத்தனை பேர் இழித்தும் பழித்தும் பேசினாலும், கொண்ட கொள்கையில் சிறிதும் மாற மாட்டேன் என நெஞ்சை நிமிர்த்தி வீறுநடை போடும் கூட்டம்.

இதில் இரண்டாவது வகையில் நாங்கள் இல்லவே இல்லை என்பதை சத்தியமிட்டுச் சொல்வது போலவே உள்ளது அகில இந்திய கட்சியான உங்கள் தாய்ச்சபையின் உள்ளூர் தங்கங்களின் செயல்பாடுகள்!

ஊர்ல உள்ள சமுதாய அமைப்புகள்ல அடிக்கடி “தாய்ச்சபை” செய்தியில் இடம்பெறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் என் போன்றவர்கள், “அடடே... பரவாயில்லையே?” என்று நினைத்து வரும் நேரத்தில், மிகச் சரியாக எங்களுக்கு உஷார் காட்டி, “சேச்சே... எங்கள அப்டியெல்லாம் தப்பா நெனச்சிடாதீங்க”ன்னு சொல்லிட்டீங்களே! சபாஷ்!!!

நகராட்சிய கலைக்கனுமாம் நகராட்சிய! பேசாம உங்க கட்சிய கலைச்சிட்டுப் போங்கன்னு சொல்ல எவ்வளவு நேரம் ஆகும் எங்களுக்கு? ஆனால், இது நீங்கள் துவக்கிய கட்சி அல்ல! நம் சமுதாயத்தையும், அதன் அடையாளத்தையும் பாதுகாக்க காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற இறைநேசரால் துவக்கப்பட்ட கட்சி என்பதால், அதுபோன்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. வெளியிலிருக்கும் நானே இந்தளவுக்கு தாய்ச்சபையை மதிக்கும்போது, உள்ளே இருந்துகொண்டு இப்படி பண்றீங்களே? நியாயம்தானா??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Cnash (Makkah) [20 August 2015]
IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41692

நேற்று முளைத்த கட்சி எல்லாம் எப்படியோ வளர்ந்து கொண்டு இருக்க ..நுற்றாண்டு பாரம்பரியம் மிக்க லீக் ஏன் எப்போதும் வீக்கா இருக்குது என்று யோசிக்கும் போது இது போன்ற வெத்து ஆர்பாட்டங்களை யாரையோ திருப்தி படுத்த அடிக்கடி செய்வதை நினைத்து விடை தெரிந்து கொள்வோம் .. இது தான் காரணம் இவர்கள் போன்றவர்கள் தான் காரணகர்த்தா என்று !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [20 August 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41693

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த தேவைகற்ற ஒரு தீர்மானத்தை பற்றி ஒன்றுமே சொல்வதற்கு இல்லை ......எப்படி தான் ஒரு தேசிய கட்சி '' கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் ஒரு தீர்மானம் போடுகிறார்கள் ..கொஞ்சம் யோசிக்க வேணாமா .. இருப்பதோ கொஞ்ச காலம் தான் நம் நகராச்சியின் காலம் .... இப்போது கலைத்து விட்டு ...நம் ஊர் செயல் பாடு யாவும் . நகராச்சி அதிகாரிகளால் நிர்வாகத்தை நடத்தவா ??? அப்பப்பா ...என்னத்த சொல்ல .....நம்மால் நினைத்து பார்க்கவே முடிய வில்லை .....நினைத்தால் மயக்கமே நமக்கு வந்து விடும் ....போல் உள்ளது .....

ஒரு நேர்மையான நகர் மன்ற தலைவி அவர்கள் குறுக்கே இருந்துமே நம் நகராச்சி இப்படி போகிறது .( இந்த நிலைமைக்கு உள்ளது ) ....நம் தலைவி அவர்களும் இல்லை என்றால் ..சொல்லவே தேவை இல்லை ...இன்னும் தாருமாறகவே நகராச்சி போகும் .....

நீங்கள் போட்ட தீர்மானங்கள் யாவுமே சரியல்லவே ....நம் மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்கள் நம் ஊரின் நலனுக்காகவே தான் நீங்கள் முட்டுக்கட்டை என்று சொல்கின்ற காரியங்கள் அனைத்தையுமே செய்தார்கள் ...... நம் ஊரின் நலனில் நம் தலைவி அவர்களுக்கு உள்ள அக்கறை ஏன் நம்மில் மற்றவர்களுக்கு இல்லாமல் போனது ......

இன்ஷா அல்லாஹ்....வருகின்ற நகர் மன்ற தேர்தலில் கண்டிப்பாகவே நம் மரியாதைக்குரிய தலைவி அவர்கள் முன் போல '' சுயோச்சையகவே '' நின்று நாம் யாவர்களும் நினைக்காத அளவுக்கு நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இருக்காது .....

முன் தேர்தலில் நம் தலைவி அவர்களுக்கு சுற்று புரத்தில் தான் அமோகமான ஆதரவு கிடைத்தது .....தற்போதைய சூழ் நிலைமை நம் ஊரின் உள் பகுதிலும் நம் தலைவி அவர்களுக்கு மிகவும் அமோகமான ஆதரவு அதிகரித்து இருப்பது குறிப்பிடதக்கது .....

ஒரு பாரமிக்க தேசிய கட்சி இப்படி எல்லாம் தேவைக்கு இல்லாமல் கூட்டம் ,, தீர்மானம் ,, மேலும் நகராச்சி முன் போராட்டம் ....என்றெல்லாம் அர்த்தமே இல்லாமல் இறங்குவது ...தங்களின் இந்த செயல் ஊர் பொது மக்களை சென்று அடையாது .... கொஞ்சமும் சரியே இல்லை ..... யாரை & எந்த ஒரு பொதுநல அமைப்பை நீங்கள் திருப்தி படுத்த இந்த மோசமான ஒரு செயல் ......

சட்டத்தின் படிக்கு தான் நம் தலைவி அவர்கள் செயல் பட்டு வருகிறார்களே தவிர ....மற்றபடிக்கு தவறாகவோ ...மக்களின் நலனில் பாதிக்கும் விதமாகவோ ஒரு நாளும் தலைவி அவர்கள் செயல்பட்டதாக யாருமே கருத வில்லை ......ஊர் பொது மக்கள் வரி பணம் தவறான விதத்தில் ....தவறான வழியில் ...ஊழலுக்கு கைகோர்த்து செலவு செய்வதை தான் அவர்கள் விரும்ப வில்லை ....இதில் என்னதான் தப்பு ...சொல்லுங்களேன் ....

நம் தேசிய கட்சி நடத்திய இந்த கூட்டத்தில் ...நம் மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்களின் நோட்டிஸ் '' கேள்விக்கு சரியான பதில் சொன்னதாகவே தெரியவே இல்லை .......ஒரு பழமை வாய்ந்த உண்மையான தேசிய கட்சிக்கு இந்த செயல் சரி அல்ல .......

உண்மையும் ,, நேர்மையும் ,, பொறுமையும் ,, நிச்சயம் நம் தலைவி அவர்களுக்கு என்றென்றும் '' துணை போகும் ....இதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை ....

உண்மையும் ,, நேர்மையும் ,, ஊழலுக்கு நம் தலைவி அவர்கள் இருக்கும் வரைக்கும் பாதுகாட்க படும் ...இதுவும் உண்மையே ...... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok) [20 August 2015]
IP: 115.*.*.* Thailand | Comment Reference Number: 41694

என்ன கொடுமை இது ,

1. காயல்பட்டினதில் உள்ள மக்கள் தொகை எவ்வளவு

2.உங்கள் கட்சி உறுபினர்கள் எதுணை பெயறு சொல்ல எலுமா

3. மீடிங்க வந்தார்களை விட மேடைளா இருக்கிறவங்க அதிகமா இருப்பாங்க போல இருக்கு ,

நகர்மன்றத்தைக் கலைக்க சொல்ல உங்களுக்கு ஒண்ணும் அருகதை கிடையாது காயல் மக்களாகிய நாங்கள் முடிவு பண்ண வேண்டியது , இன்று இருக்கும் இருக்கும் தலைவி நீங்கள் தேர்ந்து எடுதவர்கள் இல்லை , மக்களாகிய நாங்கள் தேர்து எடுதவர்கள் , கலைக்க வேண்டுமா , இல்லை வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு பண்ண வேண்டும் ,

முதலில் உங்கள் கட்சியல இருக்கிற கருப்பு ஆடுகளை கண்டு பிடித்து அகற்றுங்கள் ,

இன்று மேடை போட்டு கூஉம் அரசியல் வாதிகளே அல்லாகுக்கு பயந்து சொல்லுங்கள் இன்று இருக்கு தலைவி எதூம் தவறு செய்தார்களா , இல்லை நீங்கள் பாலயதை மனதில் வைத்து பலீவாங்குகிறீர்களா ,

ஆண்ட்ரூ நகர்மன்ற காசோலை காணாமல் போனது அப்போலுது யெல்லாம் நீங்கள் வாயை துறக்க வில்லை , இன்று கப்பம் கட்ட என்ன காரணம் ,

மீட்டிங் போட்டு உங்கள் கட்சியே மேய்லிடதை சந்தோஷ படுதவ , இல்லை உங்கள் கட்சில நிராய உறுபினர்கள் இருக்கீறார்கள் என்று நிரூபிக்கவா ,

காயல்பட்டினம் முஸ்லீம்கள் நிறைந்த ஊரு அங்கு இருக்கும் மக்கள் தொகைல 20% உங்கள் கட்சி உறுபினர் இல்லை , காரணம் நீங்கள் ஒருதலை பட்சமாக இருப்பதினால் தான் ,

நான் இங்கு போட்ட கமண்ட்சை உங்கள் கட்சி மேலிடதுக்கு இமெயில் அனுப்பி உள்ளேன் ,

இப்படிக்கு
செய்யது முஹம்மது (சேனா)

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...அனியாயத்திற்கு துணை போனதால் , காயல் பட்டினத்தில் தனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் இழந்து விட்டது இந்திய யூனியன் மு லீக் ..
posted by Omer Abdul Qadir (Chennai) [20 August 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41696

அனியாயத்திற்கு துணை போனதால் , காயல் பட்டினத்தில் தனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் இழந்து விட்டது இந்திய யூனியன் மு லீக் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. என்று தீரும் இந்த நகரமன்ற பிரச்சனை ???
posted by Salai.Mohamed Mohideen (Philadelphia) [20 August 2015]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 41702

ஆர்ப்பாட்டம் அவர்களின் உரிமை. நகர்மன்றத்தில் நடக்கும் அத்தனை கூத்துக்களையும் நன்கு அறிந்திரிந்தும் அதற்கு காரணமான ஒரு தரப்பினரை எப்பவுமே அரவணைத்து மற்றருவரை நகர்மன்ற தேர்தல் முதல் இன்று வரை குறை சொல்லி நடத்தபடும் அரசியல் (கண்டன) ஆர்ப்பாட்டங்கள் யாரை திருப்தி படுத்த? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி அப்படிதானே !

பொதுமக்களின் கடமை நல்லதொரு தலைவரை தேர்ந்தெடுத்ததோடு முடிந்துவிட்டது. அதன் பின்னர் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தான் மக்கள் பிரச்சனையை முன்னெடுத்து செல்கின்றன. அவைகள் நியாயத்தின் பக்கம் இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. ஆனால் அது ஒரு பக்க சார்பு தன்மையுடையதாக மாறும்போது, பொதுமக்கள் களத்தில் இறங்கினால் தான் நியாயம் கிடைக்கும் என்பதைத்தான் கடந்த காலங்கள் உணர்த்துகின்றன.

நகர்மன்ற தலைவி செய்வது அனைத்தும் சரியென்றொ அல்லது உறுப்பினர்கள் செய்வதனைத்தும் தவறென்றோ சொல்ல வரவில்லை. ஏனென்றால் மனிதனென்ற முறையில் குறை நிறைகள் இயல்பு. நமக்குள் ஒளிந்திருக்கும் அரசியல்/ கொள்கை/ஒரே வட்டாரம்/ சுய விருப்பு வெறுப்பு/ஆணாதிக்கம்/ கடந்த கால கசப்புனர்வுகள் தான், பிரச்சனையை இன்னும் சிக்காலக்கி வருடங்கள் நான்காகியும் தீர்வின்றி தட்டழிகின்றோம்.

இப்படியே மாறி மாறி குறை சொல்லிக்கொண்டும், அறிக்கை விட்டு கொண்டும், ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒத்து ஊதிக்கொண்டும் ஏத்தி விட்டு கொண்டும், கண்டன ஆர்பாட்டம், வீடு முற்றுகை போன்றவைகளில் தான் காலம் ஓடும்... மக்கள் நலப்பணிகள் எதுவுமே நடைபெறாது. இவைகளை உணர்ந்து நடுநிலையுடன் செயல்படுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved