Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:39:21 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16429
#KOTW16429
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2015
நகர்மன்றத் தலைவரின் கவனத்தை ஈர்க்க ஆக. 18 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! இ.யூ.முஸ்லிம் லீக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3340 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் கவனத்தை ஈர்க்க, வரும் 18.08.2015 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திடுவதென, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர ஊழியர் கூட்டம், 11.08.2015 செவ்வாய்க்கிழமையன்று 20.00 மணியளவில், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் தலைமையில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - கட்சியின் நகர அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.

கே.எம்.என்.முஹம்மத் உமர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர நிர்வாகிகளான என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் ஆகியோர் கருத்துரையாற்றினர்.



நிறைவில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - வழக்கை திரும்பப் பெற கோரிக்கை:

காயல்பட்டினம் நகரில் கடந்த 8 மாதங்களுக்கு முன் பெருமழையின் விளைவால் பல இடங்களில் சாலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவசர நடவடிக்கையாக அச்சாலைகள் சீர் செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை நகர்மன்ற உறுப்பினர்கள் ஏற்றனர். இதற்காக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், நகர்மன்றத் தலைவரை - நகராட்சி சட்டம் 1920 Schdule III பிரிவு 3 (1)இன் படி வேண்டுகோள் கூட்டத்தைக் கூட்டும்படி கேட்டுக்கொண்டனர்.

நகர்மன்றத் தலைவர் துவக்கமாக அவ்வேண்டுகோளை ஏற்பது போல் காட்டிக் கொண்டு, 24.07.2015 அன்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யும்படி ஆணையரிடம் அறிவுறுத்தியதாகவும் அறிய வருகிறோம்.

ஆனால் 23ஆம் தேதி வரை கூட்டப் பொருள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படாததால், நகராட்சி சட்டம் 1920 Schedule III பிரிவு 3 (2)இன் படி அக்கூட்டத்தை நகராட்சி துணைத்தலைவர் தலைமையில் 27.07.2015 அன்று கூட்டப்பட்டது.

அக்கூட்டத்தில் 43 சாலைகளைப் புதிதாகப் போட தீர்மானிக்கப்பட்ட நிலையில், எவரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில், நகர்மன்றத் தலைவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 03.08.2015 அன்று “இடைக்காலத் தடையாணை” பெற்று, முற்குறிப்பிட்ட கூட்ட தீர்மானங்கள் செயல்வடிவம் பெற முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். இச்செயல் மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது.

எனவே, உயர்நீதிமன்றத்தில் நகர்மன்றத் தலைவர் தொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெற்றும், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிடத்தில் சுமுகமான சூழ்நிலையில் கடமையாற்றுமாறும் இக்கூட்டம் நகர்மன்றத் தலைவரைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2 - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:

நகர்மன்றத் தலைவர் தொடுத்துள்ள வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், நகராட்சியில் சுமுகமான சூழ்நிலை உருவாக வழிவகை காண வேண்டியும், நகர்மன்றத் தலைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருகிற 18.08.2015 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இவ்வார்ப்பாட்டத்தில், நகரிலுள்ள அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், ஜமாஅத் பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுப்பதெனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.இசட்.ஸித்தீக் நன்றி கூற, அரபி ஷாஹுல் ஹமீத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
மன்னர் A.R.பாதுல் அஸ்ஹப்
(மாவட்ட துணைத்தலைவர் - இ.யூ.முஸ்லிம் லீக்)

படங்கள்:
S.J.மஹ்மூதுல் ஹஸன்
(மாவட்ட செயலாளர் - இ.யூ.முஸ்லிம் லீக்)


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளையின் முந்தைய ஆலோசனைக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [16 August 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41654

அஸ்ஸலாமு அலைக்கும்

ஒரு தலை சிறந்த தேசிய கட்சிக்கு …இந்த போராட்டம் தேவைகற்றதே ……ஊரில் தற்போது நல்ல பேர் பெற்று ….நம் ஊரில் வளர்ந்து வரும் …சிறந்த தேசிய கட்சிக்கு இவை சரியானது அல்ல ……

நம் ஊரின் அனைத்து மக்களுக்கும் உயிருக்கு உலை ” வைக்க கூடிய ..DCW தொழிற்சாலை விசையத்தில் ( DCW தொழிற்சாலை விரிவாக்க திட்டம் ) நம் மரியாதைக்குரிய தலைவி அவர்கள் ” கடுமையாகவே எதிர்த்து …நம் நகர் மன்ற கூட்டத்தில் போராடிய போது அதிகமான நம் மரியாதைக்குரிய உறுப்பினர்கள் எதிர்த்தார்களே / ஒரு சிலர் மவுனம் சாதித்தார்கள் …..( நம் உறுப்பினர்களுக்கு எங்கு இருந்தோ அதற்க்கு என்ன செய்வதென்று உத்தரவு வராததால் தான் மவுனமோ ….என்னவோ ) அந்த நேரத்தில் நம் ” தேசிய கட்சி ” காயல்பட்டினம் நகர ” கிளை ஏன் போராட்டத்தில் இறங்க வில்லை ?? ஒரு அறிக்கையோ ….பிட் நோட்டிசோ ….ஏன் விட வில்லை ….இது சரி தானா ??

DCW தொழிற்சாலை விசயத்தில் முழு அக்கறை காட்ட வேண்டாமா ?? ஊர் மக்களின் உயிர் ‘ பிரச்சனையாகவே தான் இருந்து வருகிறது அல்லவா ?? இதற்க்கு ஆதரவு கொடுக்காத உறுப்பினர்களை கண்டிக்க வேண்டாமா ??

நம் மரியாதைக்குரிய தலைவி அவர்கள் நேர்மையாக அனைத்தும் நடக்கணும் / அது ஊர் மக்களுக்கு நேரிடையாக போய் சேரனும் …. என்று ஆசைபடுவதில் என்ன தான் தப்போ …..

நம் ஊர் ரோடு போடும் விசயத்தில் யாவர்களுக்கும் முழு விருப்பமே ….இருப்பின் …இந்த மிகவும் அவசரமான கூட்டத்தின் முடிவும் …செயல் பாடும் கொஞ்சமும் சரியே இல்லை …..

ஒரு தேசிய கட்சிக்கு …நியாயமான போராட்டம் தான் '' உகந்தது ''…….உண்மைக்கும் / நேர்மைக்கும் தான் குரல் கொடுக்கணும் …..

நகர் மன்ற தலைவி அவர்கள் நேர்மையாக ஊருக்கு உழைக்க தயவு செய்து தாங்களும் ஒற்று சேர்ந்து குரல் ஒழிக்க வழி செய்யுங்கள் ……

நாம் ஒருவருக்கு,, ஒருவர் ,, குறை கூறி கொண்டே நகர் மன்றத்தின் காலமும் கடந்து கொண்டே போகிறது ....நமக்குள் ஒற்றுமை தான் அமையாமல் போய்கிறது .....இவர்கள் ஒற்றுமை இல்லாமல் போவதால் சுத்தமாகவே பாதிக்க படுவது ...ஊர் பொது மக்களே .....

இவர்கள் யாவர்களும் அல்ல ......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தாய் சபையா...? தவறு செய்பவர்களை காபாற்றும் சபையா..?
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [16 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41655

காயல்பட்டினம் நகராட்சியில் முறைகேடாக நகர்மன்ற துணை தலைவரால் 27-07-2015 அன்று நடத்தப்பட்ட நகர்மன்ற கூட்டத்திற்கு எதிராக நகர்மன்ற தலைவியால் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் 29 - 07 - 2015 அன்று தொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தும் காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளே...! ஊழியர்களே..!

நீங்கள் அறிவித்து இருக்கும் இந்த ஆர்பாட்டம் மூலம் நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ அது ஒருபோதும் நிறைவேற போவதில்லை - நகர் மக்கள் மத்தியில் 43 சாலைகளுக்கு நகர்மன்ற தலைவாரால் தடை என பொய் / புரட்டு / அவதூறு மற்றும் முனாபிக் தனமான செய்திகளை மிக தந்திரமாக நகரில் பரப்ப செய்து நகரில் தனது கட்சிக்கு மிக கீழ்தரமான விளம்பரம் தேட நினைப்பது சங்கை மிக காயிதே மில்லத் அவர்களின் புகழுக்கு அழகல்ல..!

காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளே...! ஊழியர்களே..! நகர் மக்களுக்கு நகர்மன்றத்தில் நடந்த (சத்தியத்தை) உண்மையை பரப்புங்கள் - நானும் உங்களின் ஒருவனாக கைகோர்த்து களப்பணி ஆற்ற வருகிறேன்.

நகர்மன்றதிலும் சரி நகரிலுள்ள செல்வந்தர்கள் மத்தியிலும் சரி ஒரு சிலர் செய்யும் முறைகேடுகளுக்காக (தவறுகளுக்காக / மோசடிகளுக்காக) அவர்களை காப்பாற்றும் முயற்சியில் அவர்களை அதிலிருந்து விடுவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவி புரியும் வகையில் காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் செயல்படுவது பழமை வாய்ந்த இக்கட்சிக்கு பெருமை அல்ல..! அது வளர்ச்சியுமல்ல..! அது இக்கட்சிக்கு பின்னடைவே தவிர வேறில்லை..!

சமீபத்தில் நகர்மன்ற தலைவியின் கவனத்தை மீறி நகர்மன்றத்தில் முறைகேடாக இரசாயன ஆலைக்கு கட்டிட விரிவாக்க அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்தோ.. அல்லது அந்த முறைகேட்டுக்கு காரணமாக இருந்தவர்களை கண்டித்தோ எந்த ஆர்ப்பாட்டமும் நடத்த முன்வராத நீங்கள் 6 பேர் மீது விசாரணை நடத்த நீதி மன்றம் மூலமாக நகர்மன்ற தலைவர் மேற்கொண்ட மனுவிற்கு (வழக்கிற்கு) மட்டும் ஏன்..? இந்த சிறப்பு விசுவாசம்..?

ஆகா ஆகா.. என்ன ஒரு எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் ஆதரவு பெற சபாஸ் சூப்பர் வாசகம் - "சாலை பணிகள் தொடங்கவுள்ள நேரத்தில்"

பொய்யர்களே..! இந்த வாசகம் நம்மை படைத்த இறைவனுக்கு பொறுக்கமா..? அட பாவிகளா...!

தாங்கள் விநியோகிக்கும் நோட்டீஸ் / வால் போஸ்டர் எல்லாவற்றுக்கும் நாளை மறுமையில் கேள்வி - கணக்கு - விசாரணை உண்டு - அதை நிர்வாகிகள் - ஊழியர்கள் மறந்து விட்டீர்களோ..! அதை காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் - ஊழியர்கள் முதலில் நினைவில் கொள்ளவேண்டும்..!

தாய் சபையா...? நகரில் தவறு செய்பவர்களை காபாற்றும் சபையா..?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. யாரை காப்பாற்ற இந்த ஆர்ப்பாட்டம்...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [17 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41660

காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிளுக்கு - பொறுப்பாளர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு 14 கேள்விகள்..!

அன்பர்களே..! நான் சுட்டிக்காட்டும் கீழுள்ள அணைத்து குற்றசாட்டும் உங்களின் கவனத்திற்கு வரவில்லை என தயவு செய்து மறுக்காதீர்கள்..!

1) அப்போதைய நகர்மன்ற மன்ற துணை தலைவர் நகராட்சி காசோலை மூலம் முறைகேடாக பணத்தை கையாடல் செய்தது.

2) சமீபத்தில் - நகராட்சியில் வாங்கபடாத கணினிக்கு காசோலை விநியோகம்..

3) சமீபத்தில் - நகராட்சியில் வாகன பயன்பாட்டுக்கு வாங்கும் எரிபொருளில் முறைகேடு...

4) சமீபத்தில் - நகராட்சி வசூல் மையத்தில் வசூலாகும் வரி பணத்தை வங்கியில் செலுத்தாமல் நகராட்சி ஊழியர்கள் கொள்ளை..

5) சமீபத்தில் - போட்ட சாலைகள் (நெய்னார் தெரு - அப்பாபள்ளி தெரு) ஆறு (6) மாதம் கூட ஆகவில்லை ஒரு சிறு மழையில் (சேதராம்) ஜல்லிகள் கரைந்தோடும் அவலம்.

6) சமீபத்தில் - காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில் பயோ காஸ் திட்டப்பணிகள் - சுற்றுச்சூழல் துறைகளின் முறையான அனுமதி பெறாமல் துவங்கப்பட்டது.

7) சமீபத்தில் - சர்வே எண் 278 இடத்தில் முறைகேடாக துவக்கப்பட்ட பயோ காஸ் திட்டப்பணிகளுக்கு (முறைகேடுக்கு ஆதரவாக - தவறு செய்த அலுவலர்களுக்கு ஆதரவாக) ஐக்கிய பேரவை செயல்பட்டது.

8) சமீபத்தில் - சர்வே எண் 278 இடத்தில் CRZ பகுதியில் (தடை செய்யப்பட்ட பகுதி) மக்கள் வரி பணத்தில் 1.5 ஏக்கரில் சாலை அமைக்க நகராட்சி ஆணையர் முயற்சி செய்தது.

9) நகரில் பல நோய்களுக்கும் உயிர் பலிகளுக்கும் காரணமாக சந்தேகிக்கும் D C W இரசாயன தொழிற்சாலைக்கு முறைகேடாக சமீபத்தில் நகராட்சி அலுவலர்களால் வழங்க பட்ட ஆலை விரிவாக்க கட்டிட அனுமதியை ரத்து செய்ய கோரி நகர்மன்ற தலைவர் திருமதி ஆபிதா சேக் அவர்கள் கொண்டுவந்த தீர்மானத்தை பெருவாரியான உறுப்பினர்கள் அதை ஆதரிக்காமல் இருந்தது.

10) அப்போதைய மாவட்ட ஆட்சியரின் விசாரணையில் வெளிவந்த - சாலை அமைப்பதில் முறைகேடுகள்.

11) நகரின் படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டும் அவர்கள் காயல்பட்டினம் நகராட்சியில் புறக்கணிக்கப்பட்டு பணத்தை பெற்றுக்கொண்டு முறைகேடாக நகராட்சியில் பணி நியமனங்கள்..

12) மக்கள் வரி பணம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் மொகுதூம் ஜும்மா பள்ளியின் மையவாடியில் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அனாதையாக கேட்பாரற்று முடங்கி கிடக்கும் நகர்மக்களின் ஜீவாதாரமான குடி நீர் தேக்க தொட்டி - நகராட்சி மூலம் கட்டப்பட்டு மக்களுக்கு பயன்தராத அவமான சின்னம்.

13) சமீபத்தில் - நகரின் கடற்கரையில் மர்ம படகுகள் மூலம் நகருக்கும் நகரின் மக்களுக்கும் அச்சுறுத்தல்.

14) சமீபத்தில் - நகரின் புதிய பேருந்து நிலையதில் மது விற்பனை - சமுதாய சீரழிவுகள் மற்றும் பல போதை பொருட்கள் விற்பனை.

இது போன்ற பல்வேறு முறைகேடுகள் - சீரழிவுகள் நடந்த வந்த போது - இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க சமுதாய கட்சி என மார்தட்டி கொள்ளும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் - ஊழியர்கள் இந்த நகர் நலனுக்காக இந்த நகர் மக்களின் நலனுக்காக அரசுக்கும் - அது சார்த்த துறைக்கும் தெரிவிக்கும் வகையில் என்ன நடவடிக்கை அல்லது என்ன ஆர்ப்பாட்டம் செய்து இருக்கிறீர்கள்..? உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..! பார்க்கலாம்..!

காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அன்பர்களே..! அல்லாஹுக்கு பயந்து உங்கள் மனசாட்சியை ஒரு நிமிடம் நினைவு படுத்தி கொண்டு உண்மையை கூறுங்கள்..! நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து சொல்லுங்கள் என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது..!

இப்படியொரு ஆர்ப்பாட்டம் நடத்த சொல்லி எங்கிருந்து உத்தரவு வந்தது..? அதை நகர் மக்கள் மிக தெளிவாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்..!

சத்தியம் வென்றே தீரும் - அசத்தியம் தோல்வியே பெறும் - இதுவே கடந்த கால 2011 ன் உதாரணம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by netcom buhari (chennai) [17 August 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 41664

தேவை இல்லாத ஆர்பாட்டம் என்று நினைக்கிறேன் ஏன் இந்த முயற்சி டிசி டபிள்யூ விசயத்தில் எடுக்க கூடாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஆர்பாட்டம் தேவையற்றது
posted by N.A. Thymiah (chennai) [18 August 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41677

ஊழல் பேர்வழிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் இந்த ஆர்பாட்டம் தேவையற்றது பெரும்பான்மையான நகர் மன்ற உறுப்பினர்கள் ஊழல்வாதிகள். ஊழல்வாதிகளுக்கு எதிராக போராடும் தலைவிக்கு ஆதரவாக இருங்கள். ஊரின் முன்னேற்றத்திற்கு பாடுபடுங்கள். கழிசடைகளை அகற்றிவிட்டு ஊரிலுள்ள நேர்மயானவர்களும், ஒழுக்கவாதிகளும் களத்தில் இறங்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved