Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:44:28 AM
புதன் | 1 மே 2024 | துல்ஹஜ் 1735, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:19
மறைவு18:27மறைவு12:14
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1405:40
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16414
#KOTW16414
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 15, 2015
நகராட்சி சுதந்திர தின நிகழ்ச்சியை புறக்கணித்த பெருவாரியான அலுவலர்கள், உறுப்பினர்கள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3346 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் 69வது சுதந்திர தின விழா இன்று காலை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தேசிய கொடியேற்றினார். நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர் உட்பட பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.



நகராட்சி சார்பாக நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி இதுவென்றாலும் - 18 உறுப்பினர்களில், நான்கு நகர்மன்ற உறுப்பினர்களே, இன்றைய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

1வது வார்டு உறுப்பினர் எஸ்.ஐ.அஷ்ரஃப், 6வது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், 13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் 15வது வார்டு உறுப்பினர் கே.ஜமால் தவிர வேறு எந்த உறுப்பினரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை.

காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெறும் சுதந்திர மற்றும் குடியரசு தின விழாக்களில் உறுப்பினர்கள் கலந்துக்கொள்வது கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வந்தாலும், நகராட்சி அலுவலர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் - இன்றைய நிகழ்ச்சியில் ஆணையர் (COMMISSIONER) காந்திராஜன், நகராட்சி பொறியாளர் (MUNICIPAL ENGINEER) சிவகுமார், மேற்பார்வையாளர் (OVERSEER) சுதாகர், மேலாளர் (MANAGER) அறிவுச்செல்வன், நகர திட்ட ஆய்வாளர் (TOWN PLANNING INSPECTOR) பற்குணன், உதவியாளர் (ASSISTANT) ரவிச்சந்திரன், இளநிலை உதவியாளர் (JUNIOR ASSISTANT) முருகேசன் ஆகியோர் உட்பட மூத்த அலுவலர்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிகளை சுகாதார ஆய்வாளர் (SANITARY INSPECTOR) எஸ். பொன்வேல்ராஜ் ஒருங்கிணைத்திருந்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Fuad (Singapore) [15 August 2015]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 41646

தாய் நாட்டின் சுதந்திர தினத்தைக்கூட புறக்கணித்த செய்தியைப் பார்த்து வேதனை. நகரமன்ற தலைவியுடன் உறுப்பினர்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனால் சுதந்திர தினத்தை புறக்கணித்ததை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

உறுப்பினர்களுக்கும், தலைவிக்குமிடையில் பிரச்சனை இருக்கலாம். ஆனால், நகராட்சி அலுவலர்கள் புறக்கணித்தது வெட்கக்கேடானது.

சுதந்திர தினத்தை புறக்கணித்த நகராட்சி அலுவலர்கள் அனைவரும் அந்த உறுப்பினர்களுடன் ஒன்று சேர்ந்து நகரமன்ற தலைவியை எதிர்ப்பவர்கள் என்பதை நிருபித்துள்ளார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [15 August 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41647

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது இந்திய நாட்டின் சுதந்திர தினத்தைக்கூட புறக்கணித்த நமது உறுப்பினர்கள் ஒரு சிலர்கள் & நகராச்சி அதிகாரிகள் இவர்களை நினைத்தால் நமக்கு மன வேதனையாகவே உள்ளது .....

இந்த செய்தியைப் படித்ததும் மனம் கடுமையான வேதனையானது....நம் நகர் மன்ற தலைவி அவர்களுடன் ...நம் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு கருத்து வேறுபாடு பல வகையுளும் இருக்கலாம்..... ஆனால் இந்திய நாட்டின் சுதந்திர தினத்தையுமா இவர்கள் ( உறுப்பினர்களும் ,, அதிகாரிகளும் ) புறக்கணிக்க வேணும் ...இதை நிச்சயம் யாராலும் ஜீரணிக்கவே முடியாது.......

இதன் மூலம் நமக்கு ஓன்று மட்டும் தெள்ள ,,தெளிவாகவே ,, தெரியவருவது ....நம் நகராச்சி அதிகாரிகளும் ...நம் உறுப்பினர்கள் ஒரு சிலருடன் கைகோர்த்து செயல் படுவது போல தான் தெரிய வருகிறது ....மேலும் நம் தலைவி அவர்களின் நேர்மையும் ,, கறைபடாத '' கையும் .... உண்மை என்றும் தற்போது நமக்கு புரிய வருகிறது ....

வஸ்ஸலாம் K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...வித்தியாசமான விசில் சத்தங்கள்
posted by mackie noohuthambi (kayalpatnam) [15 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41648

சுதந்திர தினம் நாட்டில் ஒரு முக்கியமான நாள் என்பதை நினைப்பவர்கள் அதை மதிப்பவர்களுக்குதான் அதன் அருமை தெரியும் புரியும். சும்மா கடனுக்காக கொடிஎற்றுவதும் பேசுவதும் மிட்டாய் கொடுப்பதும் ஒரு கோஷ்டி ஆதரிப்பதும் இன்னொரு கோஷ்டி புறக்கணிப்பதும் அர்த்தமற்றது.

குக்கர் விசில் சத்தம் கேட்டு பேருந்துகள் நிற்காது. கண்டக்டர் விசில் சத்தம் கேட்டு சாதம் கறிகள் வேகாது.

நகராட்சி தலைவர் தீர்மானம் போட்டு தெரு விளக்குகள் எரியாது. துணை தலைவர் தீர்மானம் போட்டு தெருக்கள் தார் சாலைகள் ஆகாது.

அடுத்த தேர்தல் வரை சுதந்திர தினங்களும் குடியரசு தினங்களும் இப்படித்தான் இருக்கும். இவற்றை எல்லோரும் ஜீரணித்துக் கொள்ளத்தான் வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [16 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41650

ஜெய் ஹிந்த் !
ஜெய் ஹிந்த் !!
ஜெய் ஹிந்த் !!!

ஒவ்வொரு இந்தியர்களின் வாழ்வை மாற்றிய வசந்த நாள்.

இந்தியர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க - பல சுவாசங்கள் இழந்து பெற்ற , இந்தியர்களின் புனித நாள் - எங்கள் சுதந்திர நாள்.

கோஷ்டி எனும் அழுக்கு மனம் கொண்ட இழி மனம் கொண்ட உறுப்பினர்கள், அலுவலர்கள் இருக்கும் வரை, காயல் நகரமன்ற ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க முடியாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Asthaghfirullaah.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [16 August 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 41653

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்துஹு.

இறையருள் நிறைக .

வேற்றுமை களைந்த நம் நாட்டின் அனைத்துப்பிரஜைகளுக்கும் எனது மனம்கனிந்த விடுதலைநாள் நல்வாழ்த்துக்கள்.

மாறுபட்ட கருத்து,கொள்கையுள்ள ஆட்சியின் தலைமயில் அனைத்து விழாக்களும் நடக்கும் தலைமைபீடமான டெல்லிக்கோட்டையில் காணமுடியாத வேறுபாட்டை நகராட்சி ஊழியர்கள் காட்டியுள்ளனர்.

பெரும்புரட்சியாளர்கள்தான் கஷ்டப்பட்டு பெற்ற விடுதலையை நீங்கள் புறக்கணித்திருக்கிறீர்கள்.

"நமதூர் நகராட்சி வரலாற்றில் கரும்புள்ளி"

நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள்.

எதுவாக இருந்தாலும் உள்ளிருந்துகொண்டே எதிர்ப்பைத்தெரிவியுங்கள். வெளினடப்புசெய்வதால் நீங்கள் எதிர்க்கும் கொள்கைகளை நீங்களேஆதரிப்பதாகவே பொருளாகும்.

ஜெய் ஹிந்த்.

இறைபன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இவர்களை இப்படி விட கூடாது
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok) [16 August 2015]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 41656

நகராட்சி சுதந்திர தின நிகழ்ச்சியை புறக்கணித்த உறுபினர்கள் மற்றும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்ய தமிளகா அரசை மக்களாகிய நாம் அறிவுறுத்த வேண்டும்

இன்றைய நிகழ்ச்சியில் ஆணையர் (COMMISSIONER) காந்திராஜன், நகராட்சி பொறியாளர் (MUNICIPAL ENGINEER) சிவகுமார், மேற்பார்வையாளர் (OVERSEER) சுதாகர், மேலாளர் (MANAGER) அறிவுச்செல்வன், நகர திட்ட ஆய்வாளர் (TOWN PLANNING INSPECTOR) பற்குணன், உதவியாளர் (ASSISTANT) ரவிச்சந்திரன், இளநிலை உதவியாளர் (JUNIOR ASSISTANT) முருகேசன் ஆகியோர் உட்பட மூத்த அலுவலர்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

உறுபினர்களை மக்கள் தேர்ந்து எடுதார்கள் அதிகாரிகளை அரசாங்கம் தெருந்து yedutthathu.எடுத்தது , நடே சுதந்திரம் கொண்டாடும் போலுது அதிகாரிகள் கலந்து கொல்லாதது வன்மையாக கண்டிக்க கூடியது ,

தயவு செய்து ஊரில் இருப்பவர்கள் தமிளகா முதல்வர் கவனதுக்கு இதை கொண்டு செள்ளுங்கள் , தமிளகா முதல்வர் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுபார்கள் ,

அதிகாரிகளுக்கும் , தலைவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம் இது நம் நாட்டின் சுதந்திர திருநாள் அதை புறக்கணித்தது வன்மையாக கண்டிக்க தக்கது , சுதந்திர திருநாளை புறக்கணித்த அதிகாரிகளையும் உறுபிணர்களைஉம் தமிளகா அரசிடம் உடனேயே அவர்களது பதவியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் ,

இப்படிக்கு
செய்யது முஹம்மது (சேனா)
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved