Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:59:57 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16350
#KOTW16350
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 3, 2015
நகரில் ATM இயந்திரங்கள் இயங்கவில்லை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3882 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில், ஐசிஐசிஐ வங்கியின் ATM இயந்திரங்கள், அதன் வங்கியருகிலும், அப்பாபள்ளித் தெருவிலும் உள்ளன. அவற்றுள், வங்கியின் அருகிலுள்ள இயந்திரம் நேற்று முதல் இயங்கவில்லை. அப்பாபள்ளித் தெருவிலுள்ள இயந்திரம் இன்று இயங்கவில்லை.

இவை தவிர, பிரதான வீதியில் அஞ்சல் அலுவலகம் எதிரிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ATM, பெரிய தெருவில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ATM, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வளாகத்திலுள்ள அதன் ATM ஆகியனவும் இன்று காலை 11.00 மணி நிலவரப்படி இயங்கவில்லை.

கூலக்கடை பஜாரிலுள்ள சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ATM இயந்திரம் மட்டும் இயங்குகிறது. இயங்காத இயந்திரங்கள் குறித்து அந்தந்த வங்கிகளில் வினவுகையில், “இன்று மாலைக்குள் சரியாகிவிடும்! மதியத்திற்குள் சரியாகிவிடும்!!” என்ற தகவல்களே கிடைக்கப்பெற்றன. இயந்திரங்கள் இயங்காததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

தகவல்:
A.K.இம்ரான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஆத்திர அவசரத்திற்கு பணம் எடுக்க அல்லோலப் பட வேண்டியிருக்கு...!
posted by M.N.L.Mohamed Rafeeq (Kayalpatnam) [03 August 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41513

நேற்று நான் எனது அவசரத் தேவைக்காகப் பணம் எடுக்க கஜ்னி முகம்மது போல் ICICIக்கும் அப்பாப்பள்ளித் தெருவுக்கும் பதினாறு முறை படையெடுத்தேன். அங்குள்ள ஒரு எந்திரத்தில் ரூ 4000 க்கு மேல் பணம் இருப்பு இல்லை. பலரும் எதிர் பார்ப்புடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

வாடிக்கையாளர்களில் ஒருவர் மிகுந்த எரிச்சலுடன் தா***** ம***ங்க இவனுங்க வச்சிருக்கிற மெஷின்லெ மண்ணெண்ணையெ ஊத்தி கொளுத்தணும் என்றார். அருகிலிருந்த மற்றொருவர் அதான் பெட்ரோல் இருக்கே...? என்றதும் இல்லெ...இல்லெ மண்ணெண்னை ஊத்தினால் தான் நின்னு நிதானமா எரியும் என வயிற்றேரிச்சலுடன் இன்னும் சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்துச் சென்றார்.

அடிக்கடி இது போன்ற கோளாறுகள் ஏற்படுவதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் எரச்சலடைவது வாடிக்கையான ஒன்று என அறிந்து நொந்து கொண்டேன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [03 August 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41516

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஊரில் '' ATM இயந்திரங்கள் இயங்காத சமையம் நாம் அதன் பக்கத்தில் இருந்தால் ....நம் மக்கள் பலரது அருமையான வசனங்களை காதில் கேட்பது ரொம்பவும் இனிமையாகவே இருக்கும் ......

ஆனால் '' ATM இயந்திரங்கள் இயங்காத சமையம் பொது மக்கள் படும் அவஸ்தைகளை சொல்லவோ & எழுதவோ யாராலும் முடியாது .......இது போன்ற கஷ்டத்தில் நானும் நிறைய நேரங்களில் அவஸ்தை பட்டு உள்ளேன் .....ரொம்பவும் அவசர தேவைக்கு நாம் ATM நாடி போவோம் ....ஆனால் ஏமாற்றமே கிடைக்கும் .....

ஒரு சில நேரங்களில் ATM மில் பணம் இல்லாமல் காலியாகவே இருக்கும் .....பணத்தை ATM மில் வைப்பதற்கும் நம் வங்கி அதிகாரிகளிடம் நேரம் இருக்காது ........நாம் எதை சொல்ல ?? எதை எழுத .....

வங்கி அதிகாரிகளிடம் நாம் முறையான படி .... முறையிட்டால் சரியான பதிலே கிடைக்காது ......அதான் நமக்கு மன வருத்தமே ....இச சம்பவங்கள் நமது ஊரில் அடிக்கடி நடப்பவையே .......இதற்க்கு முடிவு தான் என்ன ???

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...நன்றாக தூங்குகிறவனை எழுப்பி சோறில்லை தூங்கு என்று சொல்லும் கதை...
posted by mackie noohuthambi (kayalpatnam) [03 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41520

நன்றாக நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி, நீ தூங்கு இப்போது சாப்பிடுவதற்கு உனக்கு உணவு இல்லை என்றால் எப்படி இருக்கும். கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். அந்த கதைதான் இந்த ANY TIME NO - MONEY (ATM ).

இந்த முன்னேற்றம் நம் ஊரில் ஏற்படும் முன் நாம் ஒரு செக் எழுதி கொடுத்து பணம் வாங்கி கொண்டு இருந்தோம். வரிசையில் நிற்பது கஷ்டமாக இருக்கிறது என்று வெளி நாடுகளில் இருந்து நாம் ஊருக்கு வந்தவுடன் அவஸ்தைப் பட்டு அங்கு மாதிரி இங்கும் ATM இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தோம்.வந்தது அந்த முன்னேற்றம்.

காலப் போக்கில் ATM பராமரிப்பு நடக்கிறது என்ற அறிவிப்பு ஒரு புறம், பணம் எடுக்காமலேயே பணம் நமது கணக்கில் பற்று எழுதப்பட்டு ஒரு சீட்டு வரும். வங்கியில் கேட்டால் இன்னும் 24 மணி நேரத்தில் அது வரவு வைக்கப்படும் என்ற பதில் வரும் அதுவரை இதயம் வழக்கத்துக்கு மாறாக அடிக்க ஆரம்பிக்கும் ஒரு வேலையும் ஓடாது.வேறு வங்கிகளிலும் பணம் எடுக்கலாம் என்ற வசதிகள் இருந்தது அதுவும் இப்போது மட்டுப் படுத்தப் பட்டுள்ளது. ATM கார்ட் இருப்பதால் பாஸ் புக் இல்லையே என்ற கவலை இல்லாமல் இருந்தது. ATM வசதி பெறுவதற்கு வருஷ வாடகை என்று சார்ஜும் வசூலிக்கிறார்கள்.இப்போது பல சிக்கல்கள் செலவுகள் கவலையும் வந்து விட்டது.இப்படி எல்லா வகையிலும் ATM தொல்லைகள் கூடி மன நிம்மதியை கெடுத்து விட்டது. பழைய முறைப்படி செக் எழுதி பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை.

பொய்யான சில பேர்க்கு புது நாகரிகம்.
புரியாத சில பேர்க்கு இது நாகரிகம்
முறையோடு வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வாம்மா... மின்னல்! (?!)  (4/8/2015) [Views - 2789; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved