Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:53:30 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16026
#KOTW16026
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 31, 2015
2ஆவது பைப்லைன் குழாய் பதிக்கையில், ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூல்! பொதுமக்கள் கிளர்ச்சியையடுத்து திருப்பிக் கொடுத்தனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3712 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

2ஆவது பைப்லைன் குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்குக் குடிநீர் வினியோகிப்பதற்காக காயல்பட்டினத்தில் அனைத்து தெருக்களிலும் சாலையோரங்களில் தோண்டப்பட்டு, வினியோகக் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. தற்போது 09ஆவது வார்டில் உள்ள அப்பாபள்ளித் தெருவில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.





நேற்று நண்பகல் 11.00 மணியளவில், குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சிலர், அத்தெருவிலுள்ள சில வீடுகளில், “உங்களது படியை உடைக்காமல் - அதனடியில் துளையிட்டு குழாய் பதித்துத் தருகிறோம்... அதற்காக இவ்வளவு தாருங்கள்!” என சிலரிடம் ரூபாய் 300, சிலரிடம் ரூபாய் 400 என தொகை வசூலித்துள்ளனர்.



இதைக் கண்ணுற்ற அப்பகுதியின் சமூக ஆர்வலர்கள் சிலர், இதுகுறித்து வலிமையாக எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, வாங்கிய தொகைகளை உடனடியாக அவர்கள் திருப்பியளித்துள்ளனர்.



அங்கு பொறுப்பிலிருந்த பணி கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, “அவ்வாறு வசூலிக்க உத்தரவு எதுவுமில்லை... எனவே வசூலிக்கக் கூடாது... முறைகேடாகப் பணம் வசூலித்த ஊழியரை அனுப்பிவிட்டு, வேறு ஊழியர்களை நியமிக்க ஆவன செய்கிறேன்...” என்று கூறினார்.



தகவல்:
A.தர்வேஷ் முஹம்மத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [31 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40789

முறைகேடான பணம் வசூல் இதோடு நின்று விட போவதில்லை..!

இனி புதிய குழாயில் இணைப்பு கொடுக்கும் போது பாருங்கள் எப்படி எல்லாம் முறைகேடான வகையில் வசூல் செய்ய வலம் வருவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்...! முறைகேடான முறையில் குடிநீர் இணைப்பு கொடுத்து வசூல் செய்ய வசூல் ராஜாக்கள் எல்லா வார்டிலும் காத்திருக்கிறார்கள்..! பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே முறைகேடான வசூல் ராஜாக்களை விரட்ட முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [31 May 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40792

அஸ்ஸலாமு அலைக்கும்

என்ன அந்நியாயம் ,, லஞ்சம் '' எப்படி எல்லாம் ... பொது மக்கள் மத்தியில் ஊடுருக்குது என்று பார்க்கும் பொது நமக்கே சங்கடமாக இருக்கிறது ......பொதுவாக சொல்வார்கள் லஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கும் வரைக்கும் .....கேட்பவர்களும் சரி ,,, வாங்குபவர்களும் சரி ,, இருக்கத்தான் செய்வார்கள் ......

இந்த செய்தியை அறிந்து ஒரு சில நண்பர்கள் மிக துரிதமாக செயல் பட்டதால் .....நிறுத்த பட்டது .....இல்லையில் இதுவே பெரிய விசுபருபமாக'' செயல்பட்டு நம் ஊர் மக்களின் பணம் விணடிக்க பட்டு இருக்கும் .....இது பல தெருவுக்கும் பரவி '' நம் மக்கள் தாறுமாறாக பணத்தை அள்ளி கொடுத்து .....தங்களின் தெருவோர படிகளை பாதுகாத்து இருக்க முயற்ச்சி செய்து இருப்பார்கள் ......இது தான் நடந்து இருக்கும் .....

நமது ஊரில் தெருவோர வீடுகள் என்றாலே இந்த பிரச்சனைகள் காலம் தொட்டு அதிகம் வருவது உண்டு ......

லஞ்சம் எப்படி எல்லாம் ,,,எந்த ரூபத்தில் வருகிறது என்பதை நாம் அறியும் போது நமக்கே சிரிப்புதான் வருகிறது ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Vilack sma (jeddah) [31 May 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40794

பணம் வாங்கியது தவறுதான் என்றாலும் , அவரவர் வீட்டு எல்லைக்கு உட்பட்டு படிகள் கட்டப்பட்டுள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அதுவும் கேட்கப்பட்டது!
posted by S.K.Salih (Kayalpatnam) [31 May 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40795

இங்கு ஒரு சகோதரர் கூறியுள்ள படி, தெருவோரத்தில் நீண்டிருக்கும் படிக்கட்டுகள் குறித்து நானும் அது தொடர்பானவர்களிடம் கேட்டேன்...

“பொது இடத்தை அபகரித்து எங்களுக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை... இந்தத் தெருவில் புதிய சாலை போடும் முன் பலமுறை நாங்கள் எடுத்துக் கூறியும், எச்சரித்தும் - எதையும் கருத்தில் கொள்ளாமல், இங்குள்ள மேடு - பள்ளங்களை சரியாகக் கணக்கிடாமல் சாலை அமைக்கப்பட்டதால், மழைக்காலங்களில் மிக அதிகளவில் தண்ணீர் தேங்கும் இடமாக இது மாறிவிட்டது. இதனால் எங்கள் வீடுகளுக்குள் செல்ல வழியில்லை!

அரசு விரும்பினால் எந்த நேரத்தில் இந்தப் படிக்கட்டுகளை இடித்தகற்ற நாங்கள் ஆயத்தமாகவே உள்ளோம்!” என்றார் அவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. விசுவரூபம வேதனைக்குறியதே!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [01 June 2015]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 40799

சாலைகள் தாறுமாறாக போடப்பட்டதால் எங்கள் படிக்கட்டுகளை சற்று நீட்டி கட்டியுள்ளோம்(c&p )

இப்பொழுது பணம் கொடுத்ததை எந்த அளவிற்கு எதிர்க்கும் அந்த நேர்மையானவர்களும்,அந்த ஜமாத்தும் அப்போது சீரற்ற முறையில் போடப்படும் சாலையை அப்படியே நிறுத்தும் போராட்டத்தில் இறங்கினால் சற்று தாமதம் ஆனாலும் சீரான சாலை கிடைத்திட வாய்ப்புண்டாகி இருக்குமல்லவா? இது நம்மூரில் வேறுபல இடத்திலும் நடந்த்திருக்கிறது உதாரணம்.குத்துக்கள் தெரு.

ஆக இது வீட்டுபடிகளை தங்கள் வசதிக்கு ஏற்றார்போல் கட்டியுள்ளவர்கள் கண்டுபிடித்த காரணமாகத்தான் நினைக்கிறேன!

குழாய் பதிக்கும் ஏழை கூலியாளர்கள் உங்கள் படிகளை உடைக்காமல் பாதுகாப்பாக பைப்பை பதிக்கிறோம் என்று வீட்டு உரிமையானவர்களிடம் கூறி அதற்காக சிறிய பண உதவியை கேட்டு பெற்றிருக்கலாம்!

இந்த பணம் பெறுதல் எப்படி நடந்திருப்தென்பதுதான் முக்கியம், கட்டாயமாக கேட்டார்களா?அல்லது நாங்கள் உங்கள் படிகளை சேதாரம் பண்ணாமல் பாதுகாப்பாக வேலை செய்கிறோம் அதற்கு உதவுங்கள் என்றார்களா?என்பது இதில் கவனிக்க வேண்டியது.

எப்படி இருந்தாலும் பணம் பெற்றவர்களும் அதை கொடுத்தவரும் குற்றவாளிகளே.அதில் எந்த பாகுபாடும் பார்க்ககூடாது.பணம் பெற்றவர்கள் மட்டும்தான் படுபயங்கர குற்றவாளியென்று பழி சுமத்தவும் கூடாது!

கோடான கோடியை முறைகேடாக பெற்றதால் சில ஆண்டுகள் சிறைதண்டனையும்,பல கோடிரூபாய் அபராதமும் பெற்று நீதிமன்ற நீதிபதியால் குற்றவாளி என்று தீர்ப்பு பெற்ற ஒரு குற்றவாளியையே இன்று கும்பிடும் தெய்வமாக போற்றப்படும் இந்த காலகட்டத்தில்.

பாவம் ஒரு ஏழை கூலியாளன் (படத்தை பார்த்தாலே பரிதாபம் கொப்பளிக்கிறது) தன் வறுமையின் வடிகாலுக்காக ஒரு சிறிய பணவுதவியை வாங்கி இருப்பதை வானுயர பரப்பி ஏதோ ஒரு கொடூர குற்றவாளியை கூண்டில் ஏற்றியது போல் வெளிச்சம் போட்டு காட்டுவதும், அதற்காக பெரிய தலைப்பிட்டு செய்திகள் தொடுப்பதும் வேதனைக்குறியதே! என்னைபொருத்தவரை..

இவர்கள் கொடுத்தார்கள் அவர்கள் வாங்கினார்கள்.அது தவறு என்று சொன்னதும் அப்பணம் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டது அதோடு பிரச்சினையை முடித்திருக்கலாம் அதற்காக அவர்கள் வேலையை பறிப்பதென்பதை இளகிய இதயத்தார்கள் எற்றுகொளாவார்களா எபதும் ஒரு வினாவே? அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved