Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:53:54 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15985
#KOTW15985
Increase Font Size Decrease Font Size
சனி, மே 23, 2015
ஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: மின்னொளியில் நடைபெற்ற அரையிறுதியில், KSC போராடித் தோற்றது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4821 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.



மே 22 வெள்ளிக்கிழமை மாலையில் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. துவக்கமாக, வான வேடிக்கை முழங்க, பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்க, மைதானத்தின் பந்திளவல்கள் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா சிறப்புக் கொடியை ஆளுக்கொரு முனையாக விரித்துப் பிடித்தவாறு, அரங்கில் வலம் வர, அவர்களைத் தொடர்ந்து - போட்டி நடுவர்களும், ஈரணி வீரர்களும் அணிவகுத்து, மைதானத்தின் நடுப்பகுதிக்கு வந்து, தத்தம் நிலைப் பகுதிக்குப் பிரிந்து சென்ற காட்சி ரசிகர்களின் கண்களுக்கு சர்வதேச போட்டிகளை நினைவுகூரச் செய்து, விருந்து படைத்தது.







நடைபெற்ற போட்டியில், BDFA பெங்களூரு அணியும், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் அணியும் மோதின.









ஆட்டம் துவங்கியது முதல் ஈரணி வீரர்களும் சிறிதும் சோர்வின்றி இரு முனைகளிலிருந்தும் பந்தைக் கடத்திச் சென்று கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். எனினும், ஆட்ட நிறைவு வரை எந்த அணியும் கோல் எதுவும் அடிக்காததால், போட்டி சமனில் முடிவுற்றது.



















பின்னர் சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில், 4-3 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர். ஐக்கிய விளையாட்டு சங்க வரலாற்றிலேயே மின்னொளி ஏற்பாட்டில் நடத்தப்படும் முதல் போட்டி இது என்பதால், நகர மக்களிடையே இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. இளைஞர்கள் முதல் முதியோர் வரையிலான கால்பந்து ஆர்வலர்கள் அனைவரின் நேற்றைய உரையாடல்களும் இதைப் பற்றியதாகவே இருந்தன.





































உள்ளூரில் மின்னொளிப் போட்டி அளித்த புது அனுபவம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிந்தது. மாலை நேரங்களில் நடக்கும் கால்பந்துப் போட்டிகளில் - கடை வைத்திருப்போர், டியூஷன் உள்ளிட்ட கல்வித் தேவைகளுக்காகச் செல்வோர், வணிகம் புரிவோர் பெருமளவில் கலந்துகொள்வது சாத்தியமற்றதாக இருக்க, இத்தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட இரவு வேளையில் போட்டியை ரசிக்க வாய்ப்பு கிடைத்தது அவர்களிடையே மிகுந்த உற்சாகத்தையளித்துள்ளதை, நேற்றைய போட்டிக்கு வந்த ரசிகர் கூட்டம் நன்கு உணர்த்தியது.

ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே காலரி ‘ஹவுஸ் ஃபுல்’ ஆனது. இதன் காரணமாக, நுழைவுச் சீட்டுகள் வினியோகம் நிறுத்தப்பட்டு, தரைப்பகுதிக்கு அனைவரும் திருப்பி விடப்பட்டனர். சிறுவர் தரைப்பகுதியோ வழமைக்கு மாற்றமாக நிறைந்து காணப்பட்டது.

இப்போட்டியில், சென்னை - தி.நகர் எல்.கே.எஸ்.கோல்டு ஹவுஸ் அதிபர் எஸ்.அக்பர்ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இடைவேளையின்போது அவருக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.





மே 23 சனிக்கிழமை (இன்று) இரவு இச்சுற்றுப் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி, மின்னொளியில் நடைபெறவுள்ளது. பெங்களூரு ASC அணியும், MSU சென்னை அணியும் மோதவுள்ளன.

அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்

Twitter update:
ஹாரூன் மீரான்


நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

கடந்தாண்டு நடைபெற்ற பதினாறாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [23 May 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40691

நம் ஊரில் முதல் மின்னொளியில் நடைபெற்ற போட்டியை, நேரில் பார்த்த உணர்வை உண்டு பண்ணியுள்ளது - மனதுக்கு சந்தோசம்.

ஹவுஸ் புல் ஆக ரசிகர்கள் இருப்பதையும், நம் ஊர் KSC அணி ஆடுவதையும் கண்டு - மனதுக்கு மிகுந்த சந்தோசம்.

நாங்கள் இங்கு இருந்தாலும், நினைவுகள் பூராவும் மைதானத்தை சுற்றி சுற்றி வந்து, நம் KSC அணி வெற்றி பெறனும் என்று துஆ கேட்டுக் கொண்டு இருந்தது . புச்.... ச்ச்ச்ச். தோல்வி அடைந்தது விட்டதே என்று அறிந்து- மனது உடைந்தது.

இருந்தாலும் மூக்கு உடை பெறாமல், சமனுடைப்பு மூலம் தான் வெற்றி வாய்ப்பை இழந்தது என்று அறிந்து - மனதுக்கு சிறிது ஆறுதல். எல்லாம் நன்மைக்கே.

சகோதரர்கள் அனைவர்களுக்கும் பாராட்டுக்கள். வெற்றிபெற்ற அணிக்கு பாராட்டும் வாழ்த்தும்.

பிரபல எழுத்தாளர் சுஐப் மாமா, காமெராவை வைத்துக்கொண்டு மிகுந்த அலப்பரை பண்ணிக்கொண்டு இருக்காங்களே,அவிங்களை அடங்கச் சொல்லுங்க.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. க்ஹைர் அல்ஹம்துலில்லாஹ் விழுப்புண்கண்ட நீ வீறுகொண்டெழுவாய். இன்ஷா அல்லாஹ் ஆமீன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [23 May 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40698

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ்பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

கே எஸ் சி உன்ஆட்டத்தால் பொன்விழாவில் புன்னகைத்த நீ இனிவரும் விழாக்களில் மலர்ந்து சிரிப்பாய் அரைசதஆண்டின் அரையிறுதிவரைவந்து தரைவழியாகவும் சின்னத்திரை வழியாகவும் வரையறையற்றமகிழ்ச்சிதந்தாய் இன்ஷா அல்லாஹ் இனிவரும் ஆண்டுகளில் நெகிழ்ந்துபோகுமளவிற்கு வளர்ச்சிபெற்று கரைகாணாமகிழ்ச்சிதருவாய் ஆமீன்.

மாஷா அல்லாஹ் ஐக்கியவிளையாட்டுச்சங்கம் தனதுபொன்விழாஆண்டில் புதுப்பொலிவுடன் ஒளிவெள்ளத்தில் மகிழ்ச்சிவெள்ளத்தை வலைத்தளம்வாயில் உலகவலம்வந்து காணொளிதந்துகொண்டிருக்கும்நீ இன்ஷா அல்லாஹ் இனிவரும் ஆண்டுகளில் இன்னும்முன்னோக்கோடுசென்று இன்பவெள்ளத்திலாழ்த்து அதற்கானமுன்வாழ்த்துக்களும் இதுவாகட்டும் ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ரசிகபெருமக்களை கொள்ளை கொண்ட ஆட்டம்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [23 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40702

மிக மிக அருமையான ஆட்டம்..!

வெற்றிக்கு முயன்ற KSC வீரர்களுக்கும் அவர்களின் பயற்சியாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்.

KSC வீரர்களின் விளையாட்டு மிக அருமையாக அமைந்திருந்தன - ரசிகர்களின் பாராட்டுகளையும் / வாழ்த்துக்களையும் பெற்றது மட்டுமில்லாமல் KSC வீரர்கள் மேலும் சாதனை படைக்க அனைவர்களின் நல் பிராத்தனைகளையும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது - மாஷா அல்லாஹ்...!

இறுதி போட்டியில் எப்படியும் பங்கு பெறுவீர்கள் என நான் நினைத்த ஆசை / எதிர்பார்ப்பு எனக்குள் ஏமாற்றம் அடைந்தது எனக்கு மனதில் வேதனையை அளித்தது..!

இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டு சந்திப்போம்..! வெற்றிவாகை சூடுவோம்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அபாரம்...ஆச்சர்யம்...அசத்தலான ஆட்டம்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) [23 May 2015]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 40703

வியக்கத் தக்க விளையாட்டு அருமையான முயற்சி பயிற்சியாளர்க்கும்,KSC வீரர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். காயலுக்குப் பெருமை சேர்த்த கடுமையான போட்டி! சபாஷ்! இன்னும் அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும். என்பது எனது ஆவல்!

USC விளையாட்டுச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மின்னொளி கால்பந்து போட்டி உலகத் தரம் வாய்ந்ததாக இருந்தது. இத்துனை சிறப்பான ஏற்பாட்டினை சுலபமாகச் செய்துவிட இயலாது. பல்வேறு சிரமங்களை மேற்கொண்டு படாத பாடுபட்டு சிறப்பான காட்சியைத் தந்த அனைத்து அங்கங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...! -ஹிஜாஸ் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. usc.என்றும் வாழ்க!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [23 May 2015]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 40704

KSC காளயர்களே கலங்கிட வேண்டாம்,வெற்றிக்கனி சற்று விலகி இருக்கிறது அவ்வளவுதான்,அதை கொய்திடும் காலம் கன தூரமில்லை.வருங்காலத்தில் வைராக்கியத்துடனும், வீராவேசத்துடனும் உயரியப்யிற்சியைப்பெறு வெற்றித்தேவதை உன் கதவுகளைத் தட்டிகொண்டே இருப்பாள்.கலக்கத்தையும் தயக்கத்தையும் தூக்கியெறி வீரனே!

இரவு மின்னொளி மைதானம் கேட்க,பார்க்க பொறாமை கலந்த பேரானந்தமாக இருக்கிறது.ஊரின் பழம்பெரும், புகழ்பெற்ற ஒரு விளையாட்டு மைதானம் சுற்றியுள்ள ஊர்களெல்லாம் போற்றும் புகழின் உச்சாணியில் வலம்வரும் வரலாறு போற்றும் ஒரு விளையாட்டுத்திடல் USC என்றால் அதுமிகையல்ல!

ஊரில் 144 தடையுத்தரவு அமுலானதுபோல்,அனைத்து மக்களும் பயந்து ஓரிடத்தில் ஒட்டுமொத்தமாக் USC யில் ஒருமித்ததுபோல் மக்கள் வெள்ளம் பீரிட்டு படர்ந்திருந்த அவர்களின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி.எத்தனை பூரிப்பு. பார்க்கும் நமக்கும் ஆனந்தம் அத்துமீறுகிறது, அடக்க முடியா ஆனந்தகண்ணீர் வெளிவந்து வாழ்த்தளிக்கிறது!

பல ஆண்டுகளுக்கு முன்னால் அந்த மைதானத்தில் விளையாடியவன்தான் நான்.அந்த மைதானம் இன்று மின்னொளியில் மட்டும் மின்னவில்லை,அனைவர்களின் மனங்களிலும் மகிழ்வுடனும் மின்னுகிறது.அடுத்த வருடத்திலிருந்து விளையாட்டு கிடையாதாம்.இந்த வருடம் ஏகப்பட்ட நஷ்டமாம் அதனால் நிறுத்துகிறார்களாம் என்ற சோக சொற்கள் பலவருடங்கள் "பைனல்"அன்று கேட்கப்பட்டாலும் அடுத்தவருடம் அன்று பூப்பெய்த பாவையைப்போல் மலர்ந் தெழுந்து அனைவர்களின் மனம்குளிர ஆரம்பமாகும் அருமைமிகு விளையாட்டுப்போட்டி!

பல கண்ணியர்களாலும்,புண்ணியர்களாலும்,உண்மையான உள்ளத்தின் உதவியாளர்களாலும் நடத்தப்படும் இந்த USC ன் விளையாட்டு நிகழ்வை இத்தரணியின் இறுதிநாள் வரை இறைவன் உதவியால் நம் காயல் கண்மணிகள் கண்டு களிக்கத்தான் போகிறார்கள்.USC யும் அதன் அப்மைப்பளர்களும் அதற்காக உழைக்கும் அத்தனை உள்ளங்களும் நீடுழி நெடுநாள் வரை இவ்வையகம் போற்ற வாழ்க, வளர்க! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கண்ணீர் சிந்துகிறது உணர்ச்சி வசத்தில்
posted by salih.sma (sakaka) [23 May 2015]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40705

கண்ணீர் சிந்துகிறது உணர்ச்சி வசத்தில் .. ஆனந்த கண்ணீரும் சேர்ந்து சிந்துகிறது ..

வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு ..

KSC ஒரு சிறந்த அணி என்று நிரூபித்து இருக்கிறது இந்த களத்தில் ..!!

யு எஸ் சி-கு மனமார வாழ்த்துக்கள் இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் வெற்றி கரமாக நடத்தி கொண்டு இருப்பதற்கு..!!!

I_AM_KSCian....!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Muthu Ibrahim (Hong Kong) [23 May 2015]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 40706

மிகவும் பலம் பொருந்திய பெங்களூர் அணியினரிடம் போராடி வெற்றி வாய்ப்பை இழந்த KSC வருங்காலங்களில் மிகச்சிறந்த அணியாக உருவாக வாழ்த்துக்கள்!

நேற்றைய ஆட்டம் மிகவும் பரப்பரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்தது. பெங்களூர் அணியினர் பெரும்பாலும் தொழில் முறை ஆட்டகாரர்கள் ஆவார்கள். தங்கள் மாநில அணிக்கும், I -League கில் பங்கு கொள்ளும் அணிகளுக்கும் மற்றம் பெங்களூரில் உள்ள ஏனைய அணிகளுக்கும் விளையாடும் வீரர்களை கொண்ட அணியாகும். அந்த அணியினரின் ஆட்டம் மிகவும் வேகமாக இருந்தது. அதை நம் KSC யின் இளம் வீரர்கள் மிகவும் திறம்பட சாமாளித்து ஆடியது பாராட்டதக்கது.

குறிப்பாக KSC யின் தடுப்பாட்டக்காரர்கள் அரண் போல் நின்று எதிர் அணியினரின் ஊடுருவளை தடுத்தமை மிகவும் அருமை. கடந்த ஒரு மாதத்திற்க்கும் மேலாக இப்போட்டியல் பங்கேற்ற வீரர்களுக்கு மிக நல்ல முறையில் பயிற்ச்சி அளித்த அருமை சகோதரர் செய்யது முஹியத்தீன் மற்றும் வீரர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த KSC யின் நிர்வாகிகளுக்கும் மணமார்ந்த நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...மின்னொளியில் ஆட்டம் மயிரிழையில் ஓட்டம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [23 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40710

முதல் முறையாக மின்னொளியில் கால்பந்தாட்டம் பார்த்த அனுபவம். பொன் விழா ஆண்டில் புதியதொரு சாதனை வாழ்த்துக்கள்.

KSC போராடித் தோற்றார்கள் என்ற வாசகத்தை ஜீரணிக்க முடியவில்லை. வெற்றியின் விளிம்பில் நின்றவர்களை - இன்னொரு நாள் விளையாட வைத்து தோல்வி அடைந்து இருந்தாலும் மனம் ஆறி இருக்கும் .

திடகாத்திரமாக இருந்த ஒருவனை திடீரென்று இருதய துடிப்பு நிறுத்த நோய்(HEART ATTACK ) தாக்கி ஆளை அவுட் ஆக்கியது போல் உணர்ந்தேன். சமன் செய்யும் TIE BREAKER SYSTEM சரியான ஒரு தீர்வு என்று தெரியவில்லை ஒரு மணி நேரம் போராடி வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மின்னொளியில் இவர்கள் ஆட்டம் கண்ணொளியில் நிலைத்து நிற்கிறது..

மயிரிழையில் இந்த ஆட்டத்தின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட முறை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியதுதான் என்ற நெறிமுறை கால்பந்தாட்ட கழகத்தால் அங்கீகரிக்கப் பட்டது என்பதால் அதை விமரிசித்து பேசுவதில் அர்த்தமில்லை.

இன்று தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் நீதிபதி குமாரசாமி தீர்ப்பை எப்படி விமர்சனம் செய்தாலும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிதர்சன உண்மை இந்த விளையாட்டிலும் பொருந்தி போகிறது. மற்றப் படி, KSC வீரர்களின் ஒவ்வொரு அசைவும் பாராட்டுக்குரியதே . இதை தோல்வி என்று சொல்ல முடியாது. கை நழுவிப் போன வாய்ப்பு என்றுதான் சொல்ல முடியும்.

மீண்டும் களம் காண்பார்கள் வெற்றி வாகை சூடுவார்கள்.

OUR GLORY IS NOT IN NEVER FALLING , BUT IN RISING EVERY TIME WE FALL .

KEEP IT UP . GOOD LUCK .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved