Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:32:44 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15875
#KOTW15875
Increase Font Size Decrease Font Size
புதன், மே 6, 2015
சர்வே எண் 278 வழக்கு: மே 13க்கு ஒத்திவைப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2637 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 9)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில் பயோ காஸ் திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சுற்றுச்சூழல் துறைகளின் முறையான அனுமதி பெறாமல் நடைபெறும் இப்பணிகளை எதிர்த்து, சகாயமாதா மீனவர் சங்கம், கொம்புத்துறை ஊர் நல குழு மற்றும் கொம்புத்துறை சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து தொடர்ந்துள்ள இவ்வழக்கு ஏப்ரல் 30 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கினை அனுமதித்து எதிர்தரப்புகளுக்கு நோடீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர், வழக்கினை - கோடைக்கால விடுமுறையில் கூடும் சிறப்பு நீதிமன்ற அமர்வில் விசாரிக்க அனுமதி வழங்கினர்.

சுற்றுச்சூழல் துறை அரசு செயலர், நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) மற்றும் மாவட்ட ஆட்சியர் (மாவட்ட கடலோரம் மேலாண்மை அமைப்பு தலைவர்), தூத்துக்குடி மாசு கட்டுப்பாட்டு வாரியம் - சுற்றுச்சூழல் பொறியாளர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் நகர்மன்ற ஆணையர் மற்றும் இப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி பெற்றுள்ள SK & Co. நிறுவனம் ஆகியோர் இவ்வழக்கில் எதிர் மனுதாரர்கள் ஆவர்.

நீதிபதிகள் பீ.என.பிரகாஷ் மற்றும் புஸ்பா சத்யநாராயணா ஆகியோர் முன்னிலையில் - உயர்நீதிமன்றத்தின் விடுமுறை அமர்வு இன்று முதல் முறையாக கூடியது. அப்போது சர்வே எண் 278 வழக்கு (வழக்கு எண் WP [MD] 7730/2015), 59வது வழக்காக விசாரணைக்கு வந்தது.

எதிர்மனுதாரர்கள் அனைவரின் தரப்பிலும் நோடீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, வழக்கினை - விடுமுறை நீதிமன்றத்தின் அடுத்த வார அமர்வுக்கு (மே 13, 14) - நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மனுதாரர்கள் சார்பாக வழக்கறிஞர்கள் டி.அருள் மற்றும் எம்.பி.செந்தில் ஆகியோர் ஆஜராகின்றனர்.

அரசு துறை தரப்புகள் சார்பாக அரசு வழக்கறிஞர் பாஸ்கர பாண்டியன், மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக வழக்கறிஞர் சி.இளமான், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் சார்பாக அஜ்மல் அஸோசியேட்ஸ், நகர்மன்ற ஆணையர் சார்பாக அரசு வழக்கறிஞர் எம்.ராஜராஜன் ஆகியோர் ஆஜராகின்றனர்.

இன்றைய விசாரணையின் போது - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை, இவ்வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தது என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாசு கட்டு பாட்டு வாரியம்
posted by HASBULLAH MACKIE (dubai) [07 May 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40428

கடந்த முறை மாசு கட்டுபாட்டு வாரியம் தவறான இடத்துல சர்வே எடுத்து சான்றிதல் அனுப்பியதாக செய்திகள் கூறுகின்றனவே??உண்மை நிலவரம் என்ன???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஐக்கிய பேரவைக்கு பொது நலமா..? சுய நலமா..?
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [07 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40450

இரும்பு அடிக்கிற இடதிலே ஈ க்கு என்ன வேலை..!

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை, இவ்வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தது என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது. CP

இவ்வழக்கில் ஐக்கிய பேரவை தன்னையும் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரித்து இருப்பது நகரின் பொது நல காரியதிற்க்காகவா..? அல்லது நகரின் செல்வந்தர்களின் தனிப்பட்ட சுய நலத்தின் காரியதிற்க்காகவா..? என்பதனை நகர் மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்..!

1) நாங்கள் நகரின் அணைத்து ஜமாஅதுக்களின் கூட்டமைப்பு என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் இப்பேரவை, நகரின் ஒரு ஜாமத்தின் மயானத்தில் நகராட்சியால் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடி நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் அங்குள்ள ஜமாத்தார்களுக்கு (பொது மக்களுக்கு) பயனில்லாமல் பாழடைந்து இழி நிலையில் கிடப்பில் கிடக்கும் இந்த விசியத்தில் பொது மக்கள் / ஜமாத்தார்கள் காரியம் என பொது நல சிந்தனையுடன் இப்பேரவை ஈடுபட்டதா..? நகராட்சியை தட்டிகேட்டதா..?

2) நகரின் பேருந்து நிலையத்தில் கஞ்சாவும் / கள்ளசாரயமும் / பல சமூக சீர்கேடுகளும் ஒன்றிணைந்து வியாபாரம் நடந்தேறிய போது இந்த விசியத்தில் பொது மக்கள் /அணைத்து ஜமாத்தார்கள் காரியம் என பொது நல சிந்தனையுடன் இப்பேரவை ஈடுபட்டதா..? மேல்மட்ட காவல் துறை அதிகாரிகளை அணுகியதா..?

3) நாங்கள் நகரின் அணைத்து ஜமாஅதுக்களின் கூட்டமைப்பு என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் இப்பேரவை, நகரின் எளிய மக்கள் சென்று வரும் அரசு மருத்துவமனையின் (நிரந்தர மருத்துவர் இல்லாத) அவலங்களை குறித்து என்றாவது பொது நல சிந்தனையுடன் நடவடிக்கை எடுக்க இப்பேரவை ஈடுபட்டதா..? மேல்மட்ட மருத்துவ துறை அதிகாரிகளை அணுகியதா..?

4) கொடிய இரசாயன கழிவால் நம்மை அச்சுறுத்தும் DCW ஆலையை நகர் பொது மக்கள் ஒன்றிணைந்து போராடிய நேரத்தில் ஐக்கிய பேரவையின் உறுப்பினர்களில் சிலர் நிர்வாகிக்கும் கல்லூரியின் மாணவிகளை (தொழிற்சாலை விசிட்) அழைத்து சென்றபோது அக்கல்லூரிக்கு எதிராக பேரவை கண்டனம் தெரிவிக்க முன் வரவில்லையே ஏன்..? தயக்கமா..? நீங்கள் பொது நல விசியத்தில் அக்கறை கொண்டவர்கள் தானா..?

5) நகருக்குள் வர வேண்டிய பேருந்துகள் மாற்று வழியில் செல்லும் போது அதனால் நகரின் பொது மக்கள் அவதிப்படும் இவ்வேளையில் இந்த அவலங்களை குறித்து என்றாவது பொது நல சிந்தனையுடன் நடவடிக்கை எடுக்க இப்பேரவை ஈடுபட்டதா..? மேல்மட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளை அணுகியதா..?

இன்னும் எத்தனையோ இப்பேரவையை பற்றி சொல்லி கொண்டே போகலாம் ஊரின் பலரும் அதை அறிந்தது தான் - ஆரம்பம் முதல் இன்றைய காலம் வரை காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை பொது நலம் என்ற முகமூடியில் சுயநலம் மட்டுமே மேலோங்கி காண படுகிறது - சந்தேகத்திற்கு இடமில்லை...! கடந்த 2011ஆம் ஆண்டு தான் பூனைக்குட்டி முழுமையாக வெளிவர தொடங்கியது..!

குறிப்பு:- காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் / நகர்மன்ற தலைவர் இருவரும் இத்திட்டதிற்கான சாலை / அரசு துறை அனுமதி / BUFFER ZONE தெளிவை நீதி மன்றத்தில் அளித்து விட்டு நகரின் சிலரால் தனவந்தர் என்று சொல்ல கூடிய நபர் நன்கொடையாக அளித்த இடதில் தாரளமாக இத்திட்டம் நிறைவேறட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...வழக்கு நீதி மன்றத்தில் இருக்கும்போது சில விஷயங்களை வெளிப்படுத்தாமல் பாதுகாக்கப்படுவது நல்லது
posted by Omer Abdul qadir (Chennai) [08 May 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40469

ச்கோ,முத்து இஸ்மாயிலின் ஆதங்கம் நியாயமானதே..ஆனால் வழக்கு நீதி மன்றத்தில் இருக்கும்போது சில விஷயங்களை வெளிப்படுத்தாமல் பாதுகாக்கப்படுவது நல்லது.ஏனென்றால் அது சில சாதக பாதகங்களை ஏற்படுத்தக்கூடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved