Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:05:25 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15788
#KOTW15788
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 20, 2015
தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுவில் விடைபெறும் தலைவருக்கு பிரியாவிடை! புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5143 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில், விடைபெற்று தாயகம் திரும்பும் மன்றத் தலைவருக்கு பிரியாவிடையளிக்கப்பட்டதுடன், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

எல்லாப் புகழும், புகழ்ச்சியும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.

பொதுக்குழுக் கூட்டம்:

சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றத்தின் 71ஆவது பொதுக்குழுக் கூட்டம், 17ஆம் நாள், வெள்ளிக்கிழமையன்று 18:30 மணியளவில், தம்மாம் ரோஸ் உணவக வளாகத்தில் - விடைபெறும் மன்றத் தலைவருக்கு வழியனுப்பு நிகழ்ச்சியாக நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.

எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். இளவல் யூஸுஃப் இறைமறை குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.

கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த அனைத்து உறுப்பினர்களையும், வெளியூர் சகோதரர்களையும் மன்ற துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் வரவேற்றுப் பேசினார்.

விடைபெறும் தலைவருக்குப் பிரியாவிடை:

ரியாத் காயல் நல மன்றத்தின் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்க் தாவூத் இத்ரீஸ், தம்மாம் காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், நஹ்வீ அபூபக்கர், செய்யித் முஹம்மத் ஷாதுலீ, திருச்சி அப்பாஸ் பாய், திருச்சி பொறியாளர் ஷாஃபீ, கீழக்கரை மவ்லவீ ஜஹாங்கீர், மவ்லவீ நூஹ் மஹ்ழரீ ஆகியோர் இக்கூட்டத்தில் - விடைபெறும் மன்றத் தலைவரது சேவைகளை நினைவுகூர்ந்து உரையாற்றி, அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.



ஏற்புரை:

அவர்களைத் தொடர்ந்து, விடைபெறும் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் ஏற்புரையாற்றினார்.



மன்றம் துவங்கப்பட்ட வரலாறு, கடந்து வந்த பாதைகள், மன்றத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட சகோதரர்களின் உதவிகள் போன்றவற்றை நினைவு கூர்ந்து பேசிய அவர், தான் சஊதியில் செய்த சமூகப் பணிகளை, காயல்பட்டினத்தில் அப்படியே தொடரப் போவதாகக் கூறினார்.

அவருக்கும் மன்றத்திற்கும் கிடைத்த - அனைவரது உதவிகளையும் நன்றியுடன் நினைவு கூர்ந்த அவர், அனைவரது ஆரோக்கியத்திற்கும், நல்ல பல சேவைகளைத் தொடர்ந்து செய்யவும் பிரார்த்தித்து, வாழும் வழிமுறைகளை தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் விவரித்து, தற்காலிகமாக விடைபெற்றார்.

புதிய நிர்வாகிகள் தேர்வு:

புதிய நிர்வாகிகளது பெயர்களை விடைபெறும் தலைவர் முன்மொழிய அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் வழிமொழிந்தனர். புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு:-

தலைவர்:

எஸ்.ஏ.அஹ்மத் ரஃபீக்

துணைத் தலைவர்கள்:

(1) சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன்
(2) பீ.எஸ்.ஷெய்க் நூருத்தீன் (தல்)

பொதுச் செயலாளர்:

எம்.எம்.செய்யித் இஸ்மாஈல்

துணைச் செயலாளர்கள்:

(1) பீ.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ்
(2) ஏ.பஷீர் அஹ்மத்

பொருளாளர்:

முஹம்மத் இப்றாஹீம்


துணைப் பொருளாளர்:

புகாரீ சுலைமான்

செயற்குழு உறுப்பினர்கள்:

(01) எம்.எம்.புகாரீ
(02) யு.எல்.முஹம்மத் அபூபக்கர்
(03) எஸ்.நூருத்தீன்
(04) எஸ்.டி.அபூபக்கர்
(05) ஓ.எஃப்.செய்யித் முஹம்மத் ஷாதுலீ

(06) எஸ்.பி.இம்தியாஸ்
(07) என்.ஏ.முஹம்மத் நூஹ்
(08) எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ்
(09) நவ்ஃபல் இஸ்மாஈல்
(10) அப்துல் காதிர் (ஸாரா)

(11) நஸீர்
(12) தாவூத்
(13) எம்.எம்.அபூபக்கர் (ஜுபைல்)
(14) முத்துவாப்பா புகாரீ
(15) கலீலுர்ரஹ்மான் (ரஹீமா)

Action Committee Members:

(1) எஸ்.பி.இம்தியாஸ் (கன்வீனர்)
(2) பீ.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ்
(3) பஷீர் அஹ்மத்
(4) ஓ.எஃப்.செய்யித் முஹம்மத் ஷாதுலீ
(5) எஸ்.டி.அபூபக்கர்

(6) நவ்ஃபல் இஸ்மாஈல்
(7) என்.ஏ.முஹம்மத் நூஹ்

ஆலோசகர்கள்:

(1) டாக்டர் முஹம்மது இத்ரீஸ்
(2) எம்.ஐ.மெஹர் அலீ

புதிய தலைவர் உரை:

புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து புதிய நிர்வாகிகள் சார்பில் - செயலாளர் எஸ்.ஏ.அஹ்மத் ரஃபீக் உரையாற்றினார்.

மன்றம் துவங்கி 21 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள நகர்நலச் சேவைப் பணிகளை அவர் சுருக்கமாக விவரித்தார்.

சென்ற பொதுக்குழுவிற்கும் - இப்பொதுக்குழுவிற்கும் இடையில் நடைபெற்ற மன்றச் செயல்பாடுகள் குறித்தும், உதவித் திட்டங்கள் குறித்தும் அவர் சற்று விரிவாக விளக்கிப் பேசினார்.

அவர்களின் உரையில் மன்றம் ஆரம்பித்து 21 வருடங்கள் முடிந்த நிலையில், இதுவரை நிகழ்த்திய மக்கள் சேவைகளை சுருக்கமாக விவரித்தார். சென்ற பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கும் இடையில் நடைபெற்ற மன்ற செயல்பாடுகளையும், உதவி திட்டத்தையும் விவரித்து பேசினார்.

மன்றத்திற்காக அயராது பாடுபட்டு சேவையாற்றி, தற்போது விடைபெறும் டாக்டர் இத்ரீஸ் அவர்களின் சேவைகளையும், நற்பண்புகளையும் பட்டியலிட்டுப் பேசிய அவர், அவர்களின் வாழ்வு சிறக்கவும், சமூக நலப் பணிகள் தொடரவும் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தித்து, பிரியாவிடை கொடுத்து உரையை முடித்தார்.

புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:



தம்மாம் நகருக்குப் புதிதாக வந்துள்ள ஹாஃபிழ் எச்.ஏ.செய்யித் இஸ்மாஈல், எஸ்.ஏ.சி.செய்யித் முஹம்மத் புகாரீ ஆகியோர் மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக தம்மை இணைத்துக்கொண்டதுடன், கூட்டத்தில் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

விவாதிக்க வேறு அம்சங்கள் இல்லா நிலையில், மன்றத்தின் துணைச் செயலாளர் ஏ.பஷீர் அஹ்மத் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் உணர்ச்சிப்பூர்வமாக இனிதே நிறைவுற்றது, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!

இக்கூட்டத்தில், மன்றத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மாம் காயல் நல மன்றத்தின் முந்தைய (70ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...பிரியா விடை
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [20 April 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40226

சஊதி அரேபியா தம்மாமில் இருந்து விடை பெற்று நமது தாயகம் திரும்பும் தம்மாம் காயல் நல மன்ற ( முன்னாள் ) தலைவர் மரியாதைக்குரிய டாக்டர் இத்ரீஸ் அவர்களை பற்றி சொல்லுவது என்றால் பல பக்கங்கள் தேவை படும் .

எல்லோர்களிடமும் அன்பாகவும் அதே சமயம் மிகவும் ஜாலியாகவும் பழகும் நல்ல உள்ளம் கொண்டவர் . குறிப்பாக அவர் சொல்ல நினைக்கும் கருத்துகளை பிறர் மனம் நோகாத முறையில் அழகாக அதில் நகைசுவை கலந்து எல்லோரும் புரியும் படி சொல்லும் ஆற்றல் உடையவர் . தனி பட்ட முறையில் என்னுடனும் மிகவும் பாசமாக என்றும் இருப்பவர் .

அவர் சவூதியை விட்டு பிரிந்து நமது தாயகம் சென்றாலும் நமது ஊர் மக்களுக்காக நல்ல சேவைகளை நமது ஊரிலும் அவர் தொடர வேண்டும் என்று எனது சார்பில் கேட்டு கொள்கிறேன் .

வல்ல நாயன் அருளால் , இனி வரும் காலங்களில் உங்களின் எல்லா இலச்சியங்களும் , எண்ணங்களும் அழகிய முறையில் நிறைவேற நானும் வல்ல நாயன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துஆ செய்கிறேன் . ஆமீன் .

புதிதாக தேர்வு செய்யப்பட்ட தம்மாம் காயல் நற்பணி மன்றதின் புதிய தலைவர் சகோதரர் எஸ்.ஏ.அஹ்மத் ரஃபீக் அவர்களுக்கும் மற்றும் அணைத்து புதிய நிர்வாகிகளுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...டாக்டர் இத்ரீஸ்
posted by HYLEE (COLOMBO) [20 April 2015]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 40227

நகைசுவை பாதி மருந்து பாதி என்ற கொள்கை கொண்டவர்,டாக்டரை பார்க்க போனவர்கள் சிரித்து கொண்டுதான் வெளியே வருவார்கள்,அவர் சேவை தொடர வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வரியவர் துயர் துடைக்கும் பணி தொய்வின்றி தொடரட்டும்! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [20 April 2015]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 40231

நேற்றுவரை தமாம் நற்பணி மன்றத்தின் முதல்வராகவும், தலைவராகவும் இருந்த எனதன்பிற்குறிய இனிய சகோதரர் இதிரிஸ் டாக்டர் அவர்கள் அடுத்து வரும் காலங்களில் நம் அன்னை மண்ணில் அனைத்து அன்புள்ளங்களையும் தனதன்பால் ஆழக்கூடிய மக்கள் முதல்வராகவும், மதிப்புமிகு தலைவராகவும் திகளப்போகிறார் இன்ஷா அல்லாஹ்!

புதிதாய் பொறுப்பேற்றிருக்கும் அத்துனை அன்புநிறை நிர்வாகிகளுக்கும் இந்த ஆதம் சுல்தானின் அன்பொழுகும் நல்வாழ்த்துக்கள்!

ஆமாம், புதிதாய் பதவிபிரமாணம் பெற்ற மன்ற முதல்வர் அவர்கள் தான் பதவி ஏற்கும் சமயத்தில் எள்ளளவு விழிநீர் சிந்தலையோ, விசும்பலையோ, தேம்பலையோ பார்க்கமுடியலையே. பரவாயில்லை காண்பவர்களுக்கு தெரியாமல் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாரோ என்னவோ?

எல்லாத் தகுதியுடைய திறமைமிகு மன்றத்தலைவர் வகுத்தமைத்த பாதையில் புதிய நிர்வாகிகள் புண்ணிய பணிகளை சுமந்தவர்களாக உங்கள் பயணத்தை எந்த தொய்வும், துண்டிப்பும் இல்லாமல் தொடர்ந்திட இத்தரணியாலும் தனியோனாம் மேலோன் என்றும் உங்களுக்கு துணை புரிந்தருள்வானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. أهلاً وسهلاً
posted by Javed Nazeem (Chennai) [21 April 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 40234

இத்ரீஸ் அப்பா பற்றி எழுத ஒரு வாய்ப்பை வழங்கிய வல்ல அல்லாஹ்வுக்கே பகழ் அனைத்தும்.

இந்தப் பதிவு சிறிது நீளமாக அமையக் கூடும். சில இடங்களில் சுய புராணம் போலவும் அமையக் கூடும் - அது கொஞ்சம் உண்மைதான் (ஒரு வெளம்பரம்.. ஹி ஹி ..). சுவாரஸ்யமாக இருக்கும் என எண்ணுகிறேன், தொடர்ந்து படியுங்கள் இன் ஷா அல்லாஹ்.

மஞ்சளுக்கும் ஆரஞ்சுக்கும் இடைப்பட்ட நிறம் என நினைக்கிறேன். அந்த நிறத்தில் ஒரு ஸ்கூட்டர். அதில் எங்களை (தம்பி, பாதுல் மற்றும் நான்) பெருநாள் தொழுகைக்கு அழைத்துச் செல்வார்கள். அவர்கள் மணமுடித்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளை அழைத்துக் கொண்டு தீவுத்தெரு ஜமாஅத்தினரோடு தொழுதிருந்தால் அதுவும் சரியான செயல்தான். ஆனால் அவர்களோ தாய் வீட்டுக்கு வந்து எங்களை தாயிம்பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்.

ஒரு முறை பெருநாள் தொழுகைக்குப் பிறகு ஒரு கைப்பையில் வைத்து பெருநாள் துட்டு கொடுத்து வந்தார்கள். "என்ன அப்பா? நீங்களும் (ஒரு அரசியல்வாதியை குறிப்பிட்டு) அவரைப் போல ஒரு பையைத் தூக்கி விட்டீர்கள்" என்று தம்பி துடுக்குத்தனமாக கேட்டான். "அடேய், அவருடைய பையில் பொய் தான்டா இருக்கும்" என்று உடனடியாக ரைமிங்கில் பதில் கொடுத்தார்கள்.

கம்லாவதியில் நான் படித்த காலங்களில் உடல் நலக் குறைவு ஏற்படுவது கண்டு மிகவும் வருந்துவார்கள். உம்மாவும், மற்ற குடும்ப உறுப்பினர்களும் விரும்பியதால் தொடர்ந்து அங்கேயே படிக்க வேண்டியதாயிற்று.

சில சமயம் அவர்கள் தைக்காத் தெருவுக்கு ட்ரீட்மெண்ட் அளிக்கச் செல்வார்கள். அங்கே நடக்கும் ஒரு சம்பவத்தை வைத்து எனது மாதாந்திர பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்வார்கள். அதாவது, அவர்களைப் பார்த்ததும் நண்பன் அப்துல்லாஹ் ஜவ்ஹாரி எட்டுக்கால் பாய்ச்சலில் எஸ்கேப் ஆகி விட்டான் என்றால் அவனை விட நான் அதிக மார்க். நின்று சலாம் சொல்லி நலம் விசாரித்தான் என்றால் அவன் அதிக மார்க் - அப்படியே என்னைப் பற்றி கொஞ்சம் போட்டுக் கொடுத்து விட்டுப் போவான். (பள்ளியில், சிறந்த மாணவர்களுள் அப்துல்லாஹ்வும் ஒருவன். இன்று, இறைவன் அருளால் உயர்ந்த நிலையில் இருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்)

ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் தினம். நாங்களே ஆசிரியர்களாக மாறி பாடம் நடத்த வேண்டும். நான் போக மாட்டேன் என்று அடம் பிடித்தபோது உம்மா, அவர்களிடம் புகார் அளித்து விட்டார்கள். நிறைய நேரம் மிகவும் பொறுமையாக பேசி என் மனதை மாற்றி விட்டார்கள். அடுத்த நாள், ஆசிரியர் தினத்தில் பள்ளியில் பாடம் நடத்தியது இன்றும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக உள்ளது.

என்னுடைய பள்ளி, கல்லூரி மற்றும் திருமண நேரத்தில் அவர்கள் ஊக்கம் அளித்தும் வாழ்த்தியும் எழுதிய கடிதங்கள் இன்னும் உம்மாவிடம் பத்திரமாக உள்ளது என எண்ணுகிறேன்.

தம்பி ஒரு முறை மதிய உணவில் சோற்றைத் தொடாமல் தொட்டுகிடவையே உண்டுகொண்டிருந்தான். "என்னடா விலாசத்தையே படிச்சிட்டு இருக்கா, கடிதத்த உள்ள படி" என்றார்கள்.

அவர்கள் ஒருமுறை கடற்கரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்களையே தலைவராக ஆக்கி விட்டார்கள். "கல்யாணத்திற்கு விருந்துக்கு வந்த என்னை மாப்பிள்ளை ஆக்கி விட்டீர்களே" என்று சொல்லி உரையை துவங்கினார்கள்.

சபரில் ஊர் வரும் நேரங்களில், முதலில் தாய் வீட்டுக்கு வந்து அனைவரிடமும் போதிய நேரம் அளவளாவிய பின்னரே அவர்கள் வீட்டுக்கு செல்வார்கள். உறவுகளின் மெல்லிய உணர்வுகளை உணர்ந்து செயல்படுவதால்தான் இன்றளவும் அனைவராலும் நேசிக்கப் படக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

அன்பு சகோதரர் மக்கி "வயதாகி விட்டது" என்று ஒரு பதிவில் பாசத்துடனும் அக்கறையுடனும் குறிப்பிட்டு இருந்தார்கள். இன்ஷா அல்லாஹ் ஊருக்கு வந்த பின் அவர்களோடு சிறிது நேரம் பேசிப் பாருங்கள். உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள்.

எங்கள் குடும்பத் தலைவர்கள் பற்றி அறிந்தவர்கள், அவர்களுடைய பொதுச்சேவையில் ஆச்சரியம் அடைய மாட்டார்கள் என எண்ணுகிறேன். இருப்பினும், மற்றொரு தேசத்திற்கு சென்ற பின்னும் பொதுச்சேவையில் ஆர்வம் செலுத்தி, உடல் உழைப்பு, நேரம். மற்றும் பொருள் ஆகியவற்றை வழங்குவதும் - அதற்கு ஒரு முன் மாதிரியாக செயல்படுவதும் ஒரு சிறப்பான செயலாகும். இதற்கான கூலியை இறைவன் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அதிகமாக வழங்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் ஊருக்கு வந்த பின் நிச்சயம் அப்பாடா என்று இருக்க மாட்டீர்கள். சேவைக்கான பல்வேறு வாய்ப்புகள் தொடர்ந்து வரும். அவை உங்களுக்கு போதுமான ஊக்கமாக அமையும். அதே வேளையில் உடல் நலத்தில் போதிய அக்கறையும், இடையிடையே தேவையான அளவு ஓய்வையும் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான உடல் நலத்தையும், நிம்மதியையும் சந்தோஷத்தையும், குறைவின்றி வழங்குவானாக!. ஆமீன், ஆமீன், ஆமீன் யாரப்பல் ஆலமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நாடி பார்க்கவாவது ஒருவர் வேண்டும்!
posted by S,K.Salih (Kayalpatnam) [21 April 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40235

தாயகத்தில் ‘அடைகாக்க’ வரும் டாக்டர் அவர்களுக்கு வரவேற்புடன் கூடிய வாழ்த்துக்கள்!

நமதூரில் நிறைய டாக்டர்கள் இருப்பதாக நமக்கு நாமே பெருமை பட்டுக்கொள்கிறோம். வேதனை என்னவெனில், அவசர சிகிச்சைக்காக இதுநாள் வரை வீடுகளுக்குச் சென்று சிகிச்சையளித்த மதிப்பிற்குரிய மருத்துவர்கள் கூட இன்று தனித்தனி க்ளினிக் வைத்து, எவ்வளவு அவசரமாக இருந்தாலும், அங்குதான் வரச் சொல்லும் நிலை. (அதற்கு அவர்கள் தரப்பில் சில காரணங்களும் கூறப்படுகிறது. நான் அதற்குள் நுழைய விரும்பவில்லை.)

தற்காலத்தில் டாக்டர் படித்து முடிப்போர் யா........ரும் எம்.பி.பி.எஸ். படிப்போடு முடித்துக்கொள்வதில்லை. அவ்வாறு முடித்துக்கொண்டால் அவர்களது படிப்புக்கு இக்காலத்தில் மதிப்பே இருக்காது என்பதால் உயர் படிப்பு படிக்க வேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு. உயர் கல்வியும் பயின்ற பின், அவர்களை ஊருக்குள் இருந்து சேவையாற்று என்று சொல்ல யாருக்குத்தான் மனம் வரும்? பல லட்சம் செலவழித்துப் படித்துவிட்டு, ஊரில் சேவையாற்றுவேன் என்று யாராவது கிளம்பினால், அவருக்கு “அஸ்ஃபல்” பட்டம் கொடுக்க பெரும்பாலோர் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

டாக்டர் ஜீ... இதை ஏன் சொல்கிறேன் என்றால், இன்று நமதூரில் ஆபத்தான நிலையில் வீட்டிலிருப்போருக்கு ஒரு முதலுதவிக்குக் கூட நாதியில்லை. “சரி, யாரும் வரவில்லை... நான் கௌம்புறேன்” என்று அவர்கள் மறுவுலகுக்குக் கிளம்பிவிட்டாலும், அவர் “போய் சேர்ந்துவிட்டார்” என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக் கூட எந்த மருத்துவரும் வருவதில்லை. அனுபவப்பட்டவர்கள், ஜனாஸாவின் கையைப் பிடித்து நாடி பார்த்து, கண்ணைத் திறந்து அசைவைப் பார்த்து முடிவைச் சொன்னாலும், மரணத்தை எதிர்பார்க்காத குடும்பத்தினர், “டாக்டர் வந்து சொல்லட்டும்” என்று காத்திருக்கும் நிலை.

“சரி, அதுக்காக...? செத்தவனுக்கு நாடி பாக்கவா நான் இங்கேயிருந்து கௌம்பி வர்றேன்...?”ன்னு உங்கள் மொழியில் கேட்டு விட வேண்டாம். இருக்கும் இக்கட்டான சூழலை மட்டுமே விளக்கியுள்ளேன்.

மொத்தத்தில் இந்த ஊருக்குத் தேவை - க்ளினிக்கிலோ, தேவைப்பட்டால் நோயாளியின் வீட்டுக்குச் சென்றோ இன்முகத்தோடும், கனிவோடும் மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் வழங்க மீண்டும் ஒரு அபுல்ஹஸன் டாக்டர் (தற்போது வயது முதிர்வால் அவருக்கு இயலவில்லை!), டாக்டர் அபூ முஹம்மத் ஷஃபீக் (அல்லாஹ் விரைவாகவே அவரை எடுத்துக்கொண்டான்!) இவர்களுடன், மீண்டும் எங்கள் பழைய (dw) இத்ரீஸ் டாக்டரும் வேண்டும்.

அது என்ன dw??? டாக்டருக்கு வெளிச்சம்!!!

தம்மாம் காயல் நல மன்றத்தின் புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழுவினரது நகர்நலப் பணிகள் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

அல்லாஹ் தங்கள் நற்பணிகளை தனதருளால் ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கான நிறைவான நற்கூலிகளை ஈருலகிலும் தங்கள் யாவருக்கும் வழங்கியருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...மரணம் என்பது மனிதநேயத்துக்கல்ல - மாறாக அது மனிதனுக்கு மட்டும் தான்...!
posted by AnbinalA (Jaipur) [21 April 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 40236

பொது சேவையே...!
உன்னோடு எத்தனை
நாட்கள் வாழ்வேன்
என்று தெரியாது...

எப்போது இறந்தாலும்
உன்னோடு இன்னும்
ஒரு நாள் அதிகமாக
வாழ முடியாதா...?

என்ற ஏக்கத்துடனே
என்னுயிர் பிரியும்
என் ஊர் மக்களுக்காக...!

-டாக்டர் இத்ரீஸ்-

மனிதர்கள் சில நேரம்
நிறம் மாறலாம்
மனங்களும்,குணங்களும்
தடம் மாறலாம்
மாறி...மாறி சொல்,செயல்
பிழையாகலாம்
மக்கள் உதவியின் முடிவு
ஒருவேளை தவறாகலாம்
மன்னிப்போடு ஒன்று கூடுங்கள்
உங்களுக்காக இல்லையென்றாலும்
மண்ணின் நம் மக்களுக்காக....

புதிய நிர்வாகிகள் பழையவர்கள்
என்றாலும் ஏற்றுக் கொண்ட
பொறுப்பு புதியது...

ஆகாயம் உள்ள வரை
அழியாமல் வாழ பிராத்தித்து
வாழ்த்துவோம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. என்றென்றும் இன்புற்றிருக்கவேண்டும் இத்ரிஸ் அவர்கள் இறைவன் துணை யுடன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [21 April 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40237

டாக்டர் நீங்கள் உங்களிடம் வரும் நோயாளிக்கு சிகச்சை அளிக்கின்றீர்களோ இல்லையோ அந்த நோயாளியுடன் நவரசமாக பேசி அவரின் வேதனையை ஒன்றும் இல்லாதமாதிரியாக்கும் "மாயாஜாலம்" மிகுந்த நகைச்சுவையை ரசிக்க ஆவலாக இருக்கிறோம்!

மருமகன் SK சாலிஹே, சிறிதளவுகூட சந்தேகம் வேண்டாம், டாக்டர் ஊரில் இருந்தால், தன்னைத்தேடி வருபவரது நேரமானது வானுறக்கம் கொண்டிருந்தாலும், தானுறக்கத்தை துச்சமென தூக்கியெறிந்து ஓடோடி வந்திடும் உத்தம குணத்திற்கு சொந்தக்காரர். 35 வருடத்திற்கு மேலாக அவரைப்பற்றியும், அவர்ருடைய மேன்மை பொருந்திய குடும்பத்தைப்பற்ற்யும் தெரிந்தவன், அறிந்தவன், உணர்ந்தவன் என்ற உரிமையில் இதை எழுதுகிறேன்! .

நேற்று இரவு கூட அவரின் சௌதி பிரிவு நிகழ்வை பற்றி சற்று சோகம் நிறைந்த சாதாரண சிரிப்பில்லாத விசியமாக பேசிமுடிக்கும் வேலையில் அவருக்கே உண்டான இயல்பான மனோபாவத்தில் ஒருவரின் பெயரைக்கூறி அவர் உங்களை பார்த்துக்கொள்வார் அவர் துணை இருக்க உங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று ஒரு வடிவேல், செந்தில் போன்ற சுபாபமுள்ளவரை மேற்கோள்காட்டி பேச்சை முடித்தாரே பார்க்கலாம்! நானும் என் இல்லாளும் விழுந்து விழுந்து சிரித்தோம்!

1982 அல்லது 83 என்று நினைக்கின்றேன் டாக்டர் முதன் முதலில் என்னுடன்தான் புனித ஹஜ் பயணம் மேற்க்கொண்டார்கள்.தமாமிலிருந்து ரியாதிலுள்ள என்வீட்டிற்கு வந்திறங்கிய டாக்டர் அவர்கள் துணிமணிகளோடு பல பெரிய அட்டைப்பெட்டிகளையும் இறக்கினார்கள்,டாக்டர் நாம் ஊருக்கு பயணம் போகவில்லை ஹஜ்ஜுக்குத்தான் போகிறோம் ஏன் இத்தனை அட்டைப்பெட்டிகள் என்றேன், டாக்டர் சொன்னார், எனக்கும் தெரியும் நாம் பயணம் போகவில்லை ஹஜ்ஜுக்குத்தான் போகிறோம். ஹஜ்ஜுக்கு வருபவர்கள் அவதியுற்று பயணமாகிவிடாம சற்று பிடித்து இழுக்க உதவும் கருவிகள் அனைத்தும் அடங்கிய அட்டைப்பெட்டிதான் இது என்று திறந்து காட்டினார்கள். அத்தனையும் மாத்திரைகளும் மருந்துகளும் நிறைந்திருந்தன. "புனிதமினா" கூடாரத்தில் 24 மணிநேர கிளினிக்கையே நடத்தி முடித்தார்கள்! நல்லிதையத்தை என்றும் சுமந்து வாழும் இதிரிஸ் அவர்கள்!

டாக்டர் அவர்கள் என்றென்றும் எல்லா நலனும், வளமும் பெற்று வனப்புடன் வாழ வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறான்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [22 April 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40243

அஸ்ஸலாமு அலைக்கும்

தமாம் நம் ''காயல் நற்பணி மன்றத்தின் '' புதியதாக தேர்வு செய்யப்பட்டு உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் "" எம் மனமார நல் '' வாழ்த்துக்கள் '' & துவாவும் ......தங்களின் பணிகள் மேலும் சிறந்து ஓங்கி '' நமது ஊர் மக்கள் யாவர்களும் பயன் பெற வேணும் என்பது தான் ....நம் மக்கள் யாவர்களின் எண்ணம் ..... நம் ஊருக்கான பொது சேவைகள் தொய்வின்றி சிறப்புடன் தொடரட்டும் .......அல்லாஹ் தங்கள் நற்பணிகளை மேலும் சிறப்பாக்கி வைப்பனாகவும் ஆமீன்.....

தம்மாமில் '' காயல் நற்பணி மன்றதில் இருந்து விடை பெற்று ...இல்லை நம் ஊர் மக்களுக்கு மிக நெருக்கமாக இருந்து நேரில் ..பணியாற்ற ஆயத்தமாக இருப்பதாக கூறும் எங்கள் மரியாதைக்குரிய அருமை காகா ( தலைவர் ) டாக்டர் . இத்ரீஸ் அவர்களை நினைத்து ரொம்பவும் பெருமையாக உள்ளது .....இப்படி பட்ட ஒரு நல்ல மனிதரை நாம் பார்ப்பது தற்போதைய காலத்தில் கடினமே ......அல்லாஹ் மரியாதைக்குரிய அருமை காகா டாக்டர் . இத்ரீஸ் அவர்களையும் ...அவர்கள் குடும்பத்தார்களையும் எப்போதும் சிறப்பாக்கி வைத்தருல்வானாகவும் ஆமீன்....

நம் கண்ணியத்துக்குரிய அருமை காகா . டாக்டர் . இத்ரீஸ் அவர்களின்..பன்மையும் ....தன்மையான மரியாதைக்குரிய பேச்சையும் & அனைத்து மக்களிடமும் மிகவும் '' ஜாலியாகவும் '' புண் சிரிப்புடனும் ... பழகும் நல்ல உள்ளம் கொண்டவர்கள். .. என்பதை அவர்களுடன் பழகிய நம் மக்கள் யாவர்களுக்கும் நன்கு தெரியும் ....முக்கியமாக அருமை காகா . டாக்டர் . இத்ரீஸ் அவர்கள் சொல்ல வரும் கருத்துகள் மற்றவர்கள் எந்த விதமான மனமும் வருத்த படாத முறையில் புண் சிரிப்புடன் அருமையாகவே ''நகைசுவை '' கலந்து அனைவர்களும் புரியும் விதமாகவே சொல்லுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

நான் கண்ணியத்துக்குரிய அருமை காகா . டாக்டர் . இத்ரீஸ் அவர்களுடன் ஒரு சில வருடங்கள் நான் என் கம்பெனி வேலையாக தமாமில் பணியாற்றும் போது பழகி உள்ளேன் .....நிறைய நல்ல விசயங்களும் நான் அவர்களிடம் தான் கற்று கொண்டேன் .......

ஒருவர் நல்லவரா....அல்லது மரியதையற்றவரா .....என்பது அவர்களின் காலத்துக்கு பின் தான் பலர் பேச நாம் தெரிந்து கொள்வோம் ......

ஆனால் கண்ணியத்துக்குரிய அருமை காகா . டாக்டர் . இத்ரீஸ் அவர்கள் கண்ணியத்தை & அவர்களின் நல்ல செயல்பாட்டை பற்றி ...அவர்களின் காலத்தில் தெரிய வருவதை நாம் நினைக்கும் போது. மாஷா அல்லாஹ்..... நமக்கே எவ்வளவு பெருமையாக உள்ளது .....இந்த சிறப்பு கிடைப்பது லட்சத்தில் ஒருவருக்கே ........

நம் யாவர்களுக்கும் தெரிந்து . உலகத்திலேயே முதலில் '' காயல் நற்பணி மன்றம் என்று ஒன்றை அமைத்து இன்று நாள் வரைக்கும் பல நல்ல காரியங்களை ...நம் ஊருக்கு ....எந்த ஒரு தொய்வும் ''இல்லாமல் நடத்திய பெருமையும் நம் மரியாதைக்குரிய அருமை காகா . டாக்டர் . இத்ரீஸ் அவர்களுக்கு தான் உண்டு .....

காகா தங்களின் நம் ஊருக்கான பல நல்ல காரியங்கள் செம்மனே .... தொடரட்டும் ........ வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved