Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:50:04 PM
செவ்வாய் | 7 மே 2024 | துல்ஹஜ் 1741, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்05:02
மறைவு18:28மறைவு17:47
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1519:41
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15741
#KOTW15741
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 11, 2015
“தொழிற்சாலையை எதிர்ப்போர் தேச துரோகிகள்!” - இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் பேச்சு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3052 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“ஆறுமுகநேரி தனியார் தொழிற்சாலையை மூடுவதற்காக சில தேச விரோத அமைப்பினர் திட்டம் தீட்டுகின்றனர்; அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் இராம கோபாலன் பேசியுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை வாலைகுருசாமி கோவில் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் கடந்த 28ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 03 வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. இப்பயிற்சி முகாமை இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் நேற்று காலையில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:



கடந்த 2 ஆண்டுகளாக இந்து முன்னணி நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில், போலீசார் குற்றவாளிகளை கைது செய்யாமல், வழக்கை திசை திருப்ப முயலுகின்றனர். கோவையில் வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி இந்து முன்னணியின் 7-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதை சீர்குலைப்பதற்காகவே அங்குள்ள இந்து முன்னணி நிர்வாகிகள் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். போலீசாரின் செயல்பாட்டைக் கண்டித்தும், வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும், இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

சாத்தான்குளம் தாலுகா புத்தன்தருவை பகுதியை வளப்படுத்தக்கூடிய கன்னடியன் கால்வாய் திட்டத்தை விவசாயிகளின் நலன் கருதி, தமிழக அரசு கூடுதல் நிதி பெற்று விரைந்து நிறைவேற்ற வேண்டும். தூத்துக்குடி மாசுக்கள் நிறைந்த நகரமாக உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் நவீன இயந்திரங்களை பொருத்தி, மாசுக்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆறுமுகநேரி தனியார் தொழிற்சாலையை மூடுவதற்காக சில தேச விரோத அமைப்பினர் திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபநாசம் கோவில், மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை வனத்துறையினர் இடையூறு செய்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் எத்தனை கோவில்கள் உள்ளன? அதன் சொத்துகள் எவ்வளவு? என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மகராஷ்டிரா மாநிலத்தில் பசு வதை தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது வரவேற்கத்தக்கது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தரிசன கட்டணம் மற்றும் பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.


இவ்வாறு இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் பேசினார். மாநில தலைவர் டாக்டர் அரசுராஜா, துணை தலைவர் வி.பி.ஜெயகுமார், நிர்வாகக்குழு உறுப்பினர் மாயக்கூத்தன், மாவட்ட தலைவர் முருகேசன், பொதுச்செயலாளர் சக்திவேலன், செய்தி தொடர்பாளர் சுந்தரவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தகவல் மூலம் & படம்:
தூத்துக்குடி ஆன்லைன்

இந்து முன்னணி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நம்முடைய முகத்தை எங்கே கொண்டுபோய் முட்டிக்கொள்ள, மோதிக்கொள்ள!..
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [11 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40104

DCW ஆலையை எதிர்ப்பதில் 90% சதவீத மக்கள் காயல் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவர்களும் முஸ்லிம்கள். ஆகவே முஸ்லிம்களுக்கு எந்த பாதகம் வந்தாலும் அது சரியே, இமியளவும் அவர்களை எந்த சாதகமும் சென்றடையக்கூடாது என்ற சீரிய குணமுள்ள கோபாலன் கூறுவது ஒன்றும் புதிதல்ல! அவர் உயரத்திலுல்ல எதையோ பார்த்து ஓலமிடுகிறார் என்று ஒதுக்கித்தள்ளிவிட வேண்டியதுதான்!

அதே நேரத்தில் அவர் பேச்சை எதிர்க்கும் நம்மை மாத்திப்பிடுத்து இதே கோபாலன் கேட்டால், நம்மால் பதில் சொல்ல முடியுமா ? அது எதுவென்றால்,

நான் பேசியதை கண்டிக்க முன் வரும் காயல் மக்களுக்கு அந்த நகராட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்களே அதுதெரியாதா?

இன்றுவரை அந்த ஆலைக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்து ஒன்றென கலந்திருக்கிறார்களே அப்படிப்பட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு தெரியாதா இந்த ஆலையின் கெடுதல் பற்றி! அவர்களின் கண்களும் கருத்துக்களும் குருடாகவா போய்விட்டது, அவர்கள் தானே இந்த ஊரை காப்பாற்றும் உத்தமர்கள்!

அவர்களைக்கூட, இந்த ஆலையின்மூலம் பல அனுசரணைகளை பெருவதால்தான் அந்த ஆலை நிர்வாகத்திற்கு அனுகூலமாக இருக்கிறார்கள் என்று அந்த அருமையான அருந்தவப் புதல்வர்களை, ஒரு சிறு ஆதாயமும் அறியாத புண்ணியம் பொங்கும் பத்திரமாற்று தங்கங்களைப்பற்றி தாறுமாறாகவும், தரக்குறைவாகவும் பேசுபவர்கள் பொறாமை குணமுள்ளவர்கள் என்பதுதான் உண்மை என்று இன்னொரு பேட்டியில் இதே கோபாலன் கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்,

நம் ஒட்டுமொத்த ஊரார்களும்,அண்மைபகுதி மக்களும் இந்த நச்சு ஆலைக்கெதிராக போராடி வருகிறோமே நாம் அனைவர்களும் நம்முடைய முகத்தை எங்கே கொண்டுபோய் முட்டிக்கொள்ள, மோதிக்கொள்ள!. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ராமகோபாலன் ராமர் கோயில் பற்றி மட்டும் பேசவும்
posted by mackie noohuthambi (kayalpatnam) [12 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40106

அரசியல் தலைவர்கள் அரசியல் பற்றி பேசுங்கள். ஆன்மீக தலைவர்கள் ஆன்மிகம் பேசுங்கள் சிண்டு முடிந்து விடுபவர்கள் அந்த வேலையை மட்டுமே செய்யுங்கள். இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்துப் பார்த்து இந்த நாட்டில் துவேஷத்தை வளர்க்கவே சில தலைவர்கள் தங்கள் வாழ்நாளை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். ராமகோபாலன் இந்த வேலையே செய்து கொண்டிருந்தாலே அவர் சிவலோக பதவி அடையலாம். அவர் தொழில்சாலை பற்றி பேசி ஏதாவது வில்லங்கத்தில் மாட்டிக் கொள்ளவேண்டாம் நமக்கு தெரியாததை பேசாமல் இருப்பதும் அது பற்றி விமர்சிக்காமல் இருப்பதும் நல்லது என்று ராமகோபாலனுக்கு சொல்லி வைக்கிறோம்.

இருக்கவே இருக்கிறது ராமர் கோவில் பார்பர் மசூதி செய்தி அது ஒன்றே போதும் உங்கள் வாழ்நாள் சாதனையாக பேசிக் கொண்டிருப்பதற்கு.

ரகுபதி ராகவ ராஜாராம் பதீதபா வன சீதாராம் என்று பாடியவர்கள் கூட ஈஸ்வர அல்லா தேரே நாம் சப்கோ சம்மதி தி பகவான் என்று மத நல்லிணக்கம் ஓங்க பாடினார்கள். விவஸ்தை கெட்ட இந்த ஜென்மங்களுக்கு இது எங்கே புரியபோகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சட்டப்படி செயல்படுவது தேச விரோதமா?
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [12 April 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40107

//ஆறுமுகநேரி தனியார் தொழிற்சாலையை மூடுவதற்காக சில தேச விரோத அமைப்பினர் திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்//.

அவர் இப்படி தான். அவர் சார்ந்த சமுதாய சகோதரர்களே அவரை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. மேலும் இயக்கத்துக்கு நன்கொடை வாங்கிய நன்றிக் கடனுக்காக ஏதாவது பேசி தானே ஆக வேண்டும். அதற்காக, எங்களின் உயிரோடு விளையாடும் நச்சு ஆலைக்கு எதிராக 'நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதும்' தேச துரோகமா?

KEPA நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு கூட, நச்சு ஆலையை மூட சொல்லியல்ல. அந்த ஆலை வெளியிடும் கழிவுகள், நச்சுத்தன்மை ஏற்படாமல் சுத்திகரிக்க வேண்டும். அதுவும் அரசின் மாசு கட்டுப்ப்டாடு வாரியத்தின் விதிகளுக்கு உட்பட்டு என்று தான்.

அவருக்கு யாரவது எடுத்து சொன்னால், கலங்கிய மூளை கொஞ்சம் வேலை செய்யும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved