Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:12:22 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15727
#KOTW15727
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 8, 2015
அறியாமையா? அசட்டுத் துணிச்சலா?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5022 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

THE ENVIRONMENT (PROTECTION) ACT, 1986 சட்டம் தனக்கு வழங்கிய அதிகாரத்தின் படி - மத்திய அரசு - CRZ விதிமுறைகளை (CRZ NOTIFICATION 1991) - 1991ஆம் ஆண்டு - அறிவிப்புச் செய்தது. கடலோர நகராட்சியாக காயல்பட்டினம் இருந்தாலும், இந்தச் சட்டம் - பரவலாக நகரில் அறியப்பட்டது 2010ஆம் ஆண்டு இறுதியிலிருந்துதான். (இந்தச் சட்டம் - 2011ஆம் ஆண்டு, சில திருத்தங்களுடன், மீண்டும் (CRZ NOTIFICATION 2011) அறிவிக்கப்பட்டது).

சிங்கித்துறையில் (கற்புடையார் பள்ளி வட்டம்) - சுமார் 5.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மீனவர்களுக்கு என - சுனாமி தொடர்பான திட்டமாக, 169 தொகுப்பு வீடுகள் கட்ட - தமிழக அரசு முடிவு செய்தது. காயல்பட்டினம் நகராட்சியும் இதன் பயனாளிகள் பட்டியலுக்கு ஒப்புதலையும் - ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் - வழங்கியது.

இந்த ஒப்புதல் வழங்கப்பட்ட சில மாதங்கள் கழித்து - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, இந்தத் திட்டம் குறித்து எதிர்ப்புக் குரல் கொடுக்கத் துவங்கியது. இத்திட்டத்தை எதிர்க்க பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இந்தத் திட்டத்திற்கு என அரசு கையகப்படுத்திய நிலம் - CRZ வரைமுறைக்குள் வருகிறது என்பதுதான் வெளிப்படையாகக் கூறப்பட்ட காரணம்.



இக்காரணத்தின் அடிப்படையில்தான் - சில மாதங்களுக்கு முன்னரே இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றிய நகர்மன்றம், CRZ விதிமுறைகளை மேற்கோள்காட்டி, இந்தத் திட்டத்தை எதிர்த்து - மீண்டும் தீர்மானம் நிறைவேற்றியது.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் அறிவுரைப் படி, அப்போதைய நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர் ரஹ்மான், இத்திட்டத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றமும் தடை வழங்கியது. இன்று வரை - 169 மீனவர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்படவில்லை.



ஏறத்தாழ இதே நிலையில் தற்போது உள்ளதுதான் - 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான, தமிழக அரசின் பயோ காஸ் திட்டம்.

காயல்பட்டினம் நகராட்சியில் பயோ காஸ் திட்டம் அமைத்திட, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் பரிந்துரை பெயரில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர் ரஹ்மான் - தனது சர்வே எண் 278 இடத்தில், 2 பத்திரங்கள் மூலமாக - 5.5 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளார். இதில் 1.5 ஏக்கர் நிலம் - சாலைக்கு என வழங்கப்பட்ட இடம் ஆகும்.

சாலைக்கு என வழங்கப்பட்ட இடத்தை, திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இதன் பெரும்பகுதி CRZ-1 வரைமுறைக்குள் வருகிறது என்றும் காயல்பட்டணம்.காம் செய்திகள் வெளியிட்டுள்ளது.

இந்த இடம் CRZ விதிமுறைக்குள் வருவதாக கூறி - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் - இரு முறை - இந்த இடத்தினை நிராகரித்து உள்ளது என்றும் காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே - மார்ச் 25 புதனன்று, அறிவிப்பு ஏதும் இல்லாமல், நகர்மன்ற ஆணையர் காந்திராஜ் தலைமையில், பயோ காஸ் திட்டத்திற்கு பூமி பூஜை நடத்தப்பட்ட செய்தியையும் காயல்பட்டணம்.காம் வெளியிட்டது. தற்போது - அங்கு கட்டுமானப் பணிகளைத் துவக்க, ஆயத்த வேலைகளும் துவங்கியுள்ளன.

இந்த இடத்தில் - இத்திட்டத்தைத் துவங்கிட, மாசு கட்டுப்பாட்டு வாரியம் - அனுமதி வழங்கிவிட்டதா என காயல்பட்டணம்.காம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் - தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் துணைப் பொறியாளர் குணசேகரிடம் வினவியது.

காயல்பட்டினம் நகராட்சியிடம் இருந்து இத்திட்டத்திற்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பம் வந்துள்ளதாகவும், ஆனால் இது குறித்து இது வரை உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் தெரிவித்தார்.

நகராட்சியின் விண்ணப்பத்தில் - CRZ-1 வரைமுறைக்குள் வரும் சாலை குறித்த விபரம் இணைக்கப்பட்டுள்ளதா என்று காயல்பட்டணம்.காம் வினவியது. சாலை குறித்த விபரம் இணைக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



சர்வே எண் 278 இடம் - கிழக்கில், கடலினாலும் (500 மீட்டர் தூரம் வரை), வடக்கில், ஓடையினாலும் (சுமார் 100 மீட்டர் வரை) - CRZ வரைமுறைக்குள் வருகிறது. சர்வே எண் 278 இடத்தில் - CRZ விதிமுறைகளின் தாக்கம் இல்லை என்ற சிலரின் வாதம், CRZ விதிமுறைகள் - ஓடை, ஆறு போன்ற நீராதாரங்களில் இருந்து - அலைகளின் தாக்கம் அடிப்படையிலான தூரத்தையும் - கணக்கில் எடுக்கச் சொல்கிறது என்பதை அறியாமல் எடுத்து வைக்கப்படும் வாதமாகவே தெரிகிறது.



அந்த அடிப்படையில் - சாலைக்கு என வழங்கப்பட்டுள்ள 1.5 ஏக்கர் நிலம் உட்பட, சர்வே எண் 278இன் பெரும்பகுதி - CRZ - 1 (ECOLOGICALLY SENSITIVE AREA) பிரிவின் கீழ் வருகிறது. CRZ-1 பகுதியில் புதிய சாலைகளுக்கு அனுமதி இல்லை என தெளிவாக CRZ NOTIFICATION 2011 கூறுகிறது. பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் - இதனை காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம், சமீபத்தில் ஊர்ஜிதம் செய்தார்.

சட்டம் இவ்வளவு தெளிவாக இருக்க, அரசு அதிகாரிகள், இந்த இடத்தில் - எந்த தைரியத்தில் பணிகளை துவக்கியுள்ளனர் என்ற கேள்வி எழும்புகிறது.

சட்ட விதிமுறைகள் குறித்த அறியாமை என்பது துவக்கத்தில் காரணங்களாக இருந்திருக்கலாம் என்றாலும், அந்த இடத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் - பல வழிகளில், பல முறை தெரிவிக்கப்பட்ட பிறகும், அதே இடத்தில் பணிகளை செய்ய அரசு அதிகாரிகள் துணிவது - இந்தத் திட்டம் அரசு திட்டம் என்பதும், இதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் - துவக்கத்தில் தயங்கினாலும், பின்னர் - அரசியல்வாதிகள் நிர்பந்தம் காரணமாக ஒப்புதல் வழங்கிவிடுவார்கள் என்ற தைரியமே என்பதும் தெரிகிறது.

மேலும் - பல்வேறு காரணங்களுக்காக, பயோ காஸ் திட்டம் இந்த இடத்தில் அமைய துவக்கம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வரும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், தற்போது ஆளும் அ.தி.மு.க.வில் உள்ளார் என்பதும், அவரின் எதிர்ப்பை - ஆளும் கட்சி நபர்கள் மூலம் சரிகட்டி விடலாம் என்ற நம்பிக்கையிலும், இந்த இடத்தில் பணிகள் துவங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

CRZ விதிமுறை மீறல்கள் குறித்து நீதிமன்றங்கள் - கடுமையான நடவடிக்கைகளை சமீப காலங்களாக எடுத்து வருகின்றன. அப்படியிருந்தும் - தொடர்ந்து இந்த இடத்தில், இத்திட்டத்தைக் கொண்டு வர அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் எடுக்கும் முயற்சிகளுக்கு - நீதிமன்றத்தின் பார்வைக்கு இந்த திட்டம் செல்ல வாய்ப்புகள் குறைவு என்ற அசட்டு துணிச்சலே முக்கியக் காரணமாகத் தெரிகிறது.

[Administrator: படம் இணைக்கப்பட்டது @ 1:40pm / 11.4.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack sma (jeddah) [08 April 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40051

அவர் செய்தால் இவர் எதிர்கிறார் . ஆஹ்ஹ் ... இவரா செய்கிறார் . விட மாட்டேன் என்கிறார் அவர் .

இந்த வேலை நடைபெற்றால் அருகில் இருக்கும் நிலங்களுக்கு அதிக ஆதாயம் வந்து விடுமே என்று எதிர் கோஷ்டி நினைக்கிறதாம் . அவர்கள் சொல்லும் இடத்தில் இந்த திட்டம் நடந்தால் அவர்களுக்கு ஆதாயம் கிடைத்துவிடுமே என்று இவர்கள் நினைக்கிறார்களாம் . அவர்களும் இவர்களும் மோதிக்கொள்வதால் நடுவில் ஊர் மக்கள் " நைந்து பிய்ந்து " சாகிறார்கள் .

ஆக , இந்த வேலை நடைபெறாமல் பாதியிலேயே நிற்கும் .

இறுதியில் நட்டம் யாருக்கு என்றால் ஊர் மக்களுக்குத்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சுனாமி குடியிருப்புக்கு நீதிமன்ற வழக்கு (தடை) வாபஸ் ஆனால் நீதிமன்றத்தின் பார்வைக்கு இந்த திட்டம் செல்ல வாய்ப்புகள் குறைவு..
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [09 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40057

அன்று எதிர்த்தவர்கள் இன்று ஏன் எதிர்க்க முன்வரவில்லை..! ஏன் இந்த பாரபட்சம்..! குறிப்பாக மீனவ மக்களின் கேள்வியாக இவை அமைகின்றன..!

நகரில் வாழும் அணைத்து சமுதாய சகோதரர்களையும் ஒரே பார்வையில் பார்க்கும் நல்லெண்ணம் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு வர வேண்டும்..!

இன்று - காயல்பட்டினம் நகராட்சியில் பயோ காஸ் திட்டம் அமைத்திட, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையில் அங்கம்வகிக்கும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் நகராட்சிக்கு வழங்கிய நிலம் CRZ வரைமுறைக்குள் வருகிறது என இத்திட்டத்திற்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை எதிர்ப்புக் குரல் கொடுக்க / திட்டத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஆர்வம் காட்டாது / சுயநலம் காப்பது / மவுனம் சாதிப்பது ஏன்...?

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையே..! அப்பேரவையின் ஆதரவாளர்களே..! நமது கடலோர பகுதியில் காயல்பட்டினம் நகராட்சியால் கட்டப்படவிருக்கும் பயோ காஸ் திட்டபணிகள் (சர்வே எண் 278 - CRZ நிலம்) குறித்து உங்கள் நிலையை நகர்மகளுக்கு வெளிபடையாக வெளிபடுத்த முன் வர தயாரா..? தாங்களின் மவுனத்தை கலைத்து விட்டு சர்வே எண் 278 - CRZ நிலமென கூறி இத்திட்டத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தயாரா..?

தனக்கு வந்தால் (CRZ) ரத்தம்..! அதே அடுத்தவனுக்கு வந்தால் CRZ தக்காளி சட்னியா..!

இறைவன் ஒருவனே நமது செயல் / எண்ணம் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான்..

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. CRZ அது இது என்ற பம்மாத்து காரணம் இனியும் எடுபடாது
posted by Habeeb Mohamed Nasrudeen (Qatar) [09 April 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40062

மக்கள் குடியிருப்புக்கும், பயோ காஸ் கட்டிடத்திற்கும் முடுச்சு போடுவது, மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு போடுவதற்கு சமம். CRZ அது இது என்ற பம்மாத்து காரணம் எல்லாம் இனியும் எடுபடபோவது இல்லை. திட்டம் இதே இடத்தில் நிறைவேறுவது உறுதி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...அசட்டு துணிச்சலே
posted by Shaik Abdul Cader (Kayalpatnam) [09 April 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40067

CRZ விதிமுறை மீறல்கள் குறித்து நீதிமன்றங்கள் - கடுமையான நடவடிக்கைகளை சமீப காலங்களாக எடுத்து வருகின்றன.

அப்படியிருந்தும் - தொடர்ந்து இந்த இடத்தில், இத்திட்டத்தைக் கொண்டு வர அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் எடுக்கும் முயற்சிகளுக்கு - நீதிமன்றத்தின் பார்வைக்கு இந்த திட்டம் செல்ல வாய்ப்புகள் குறைவு என்ற அசட்டு துணிச்சலே முக்கியக் காரணமாகத் தெரிகிறது.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சுனாமியே வராத ஊருக்கு, சுனாமி குடியிருப்புக்கள்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [09 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40080

அறியாமையாக இருந்தாலும் சரி, அசட்டு துணிச்சலாக இருந்தாலும் சரி, சட்டத்துக்கு புறம்பாக திட்டம் நிறைவேற்ற முயற்சி செய்தால், சுனாமி தொகுப்பு வீடுகளுக்கு எப்படி தடை வாங்கப்பட்டதோ, அதே போல், இந்த திட்டமும் அந்த இடத்தில் நடைபெறாமல் இருக்க சட்டப்படி எடுங்கள்.

சுனாமியே வராத நமதூருக்கு, சுனாமி குடியிருப்பு வீடுகள் எதற்கு?

காயல்பட்டணம் ஐக்கிய பேரவை, சுனாமி குடியிருப்பை எதிர்ததற்கு முக்கிய காரணம்,இந்த இணையத்தின் செய்தி 5377 dt 31-12-2010 "அனுமதியின்றி அசுர வேகத்தில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள்! பொதுமக்கள் அதிர்ச்சி!! நகரில் பரபரப்பு!!!"

//உள்ளூர் மக்களுக்கே இடம் இல்லாத நிலையில், வெளியூர்களிலிருந்து அளவுக்கதிகமான மக்களை குடியமர்த்தும் வகையில் இக்குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும், நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த குடியிருப்பு கட்டிடப் பணிகளை உடனடியாக நிறுத்தி, புதிய குடியிருப்புகளைத் தவிர்க்குமாறும் கோரி, நகர மக்களைத் திரட்டி, வரும் 04.01.2011 அன்று மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை காயல்பட்டினம் பிரதான வீதியில் முழு அடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப் போவதாக காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் பொதுமக்களுக்கு பிரசுரங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இன்று நகரின் இரண்டு ஜும்ஆ பள்ளிகளிலும் இதுகுறித்து அறிவிப்பு செய்யப்பட்டது.// (C&P)

சுனாமி குடியிருப்பு தொகுப்பு வீடுகள் கட்டுவதை தடுக்கும் தீர்மானத்தை, நமது நகர்மன்றத்தில் இரண்டு முறை நிறைவேற்றி உள்ளனர். அது பற்றிய இந்த இணையதளத்தின் செய்தி, News ID # 5407; dt 06-01-2011 "சுனாமி குடியிருப்புகள் குறித்து நகராட்சியின் 2008, 2009 தீர்மானங்கள்!"

//புது சுனாமி குடியிருப்புகள் நகரில் அவசியம் இல்லை என காயல்பட்டின நகராட்சி ஜூன் 11, 2008 அன்று ஒரு தீர்மானமும், பிப்ரவரி 26, 2009 அன்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றி உள்ளன.// (C&P)

சுனாமி தொகுப்பு வீடுகளை கட்டுவதற்கு சட்டப்படி முயற்சி எடுத்து தடுத்து நிறுத்தினர். அதே போல், இந்த சர்வே எண்ணிலும், சட்டத்துக்கு புறம்பாக, இந்த திட்டத்தை நிறைவேற்ற அதிகாரிகள் முயற்சி செய்தால், அதை தடுத்து நிறுத்த தாராளமாக சட்டப்படி முயற்சி எடுக்கலாம்.

ஒரு சாரார், அந்த திட்டம் அங்கு வருவதற்கு ஆதரவாகவும் இன்னொரு சாரார். அங்கே வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை போர்கள் கட்டுரைகள் எழுதுவதை விட்டு விட்டு நடக்கக் கூடிய காரியங்களை பார்க்கட்டும். ஊரில் இந்த திட்டத்தை விட்டால், மக்களுக்கு தேவையான நிறைய பணிகள் நடைபெறாமல் தேங்கி இருக்கிறது.

சாலைகள் குண்டும் குழியுமாக, பயணிகள் வாகனங்களில் பிரயாணம் செய்வதற்கே லாயக்கற்றவைகளாக இருக்கிறது. அந்த சாலைகளை போடுவதற்கு நகராட்சி முயற்சி செய்யட்டும்.

போஸ்ட் ஆபிஸ் அருகிலுள்ள பழைய "பயனியர் ஒதுங்குமிடம்" பழுதடைந்து அசிங்கங்கள் நிகழ்வதை இதே இணையத்தில் செய்திகளாக வந்துள்ளது. அதை அகற்ற நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேறி மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டது. அந்த இடத்தை அகற்றிய வழியை காணோம். அசிங்கங்கள் தொடர்கிறது. அதற்காக அனைவரும் குரல் கொடுப்போம்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved