Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:26:11 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15668
#KOTW15668
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 29, 2015
தென்காசியில் இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய மின்னனு ஊடகப் பயிலரங்கில், காயலருக்கு விருது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3900 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தென்காசியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மின்னணு ஊடக பயிலரங்க விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ‘கவிமகன்’ காதர் ‘சிறந்த மின்னணு ஊடகவியலாளர் விருது’ பெற்றுள்ளார். விபரம் வருமாறு:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மின்னணு ஊடகப் பிரிவின் சார்பில், மின்னணு ஊடகப் பயிலரங்க விழா, நெல்லை மாவட்டம் தென்காசியில் இம்மாதம் 28ஆம் நாள் சனிக்கிழமையன்று 10.00 மணி முதல் 17.30 மணி வரை நடைபெற்றது.



கட்சியின் மாநில - மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்த இவ்விழாவில், மின்னணு ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெ.ஏ.ஜமால் முஹம்மத் இப்றாஹீம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கல்விப் பணி செயலாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் துவக்கவுரையாற்றினார்.

சன் தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளர் நெல்சன் சேவியர், நக்கீரன் வாரமிருமுறை இதழின் தலைமைச் செய்தியாளர் சி.என்.இராமகிருஷ்ணன், கேப்டன் தொலைக்காட்சியின் அரசியல் ஆய்வாளர் இல.வேந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.

சமூக வலைதளங்கள் உள்ளிட்ட நவீன ஊடகங்கள் எவ்வாறெல்லாம் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பன குறித்து அவர்களது உரைகள் அமைந்திருந்தன.

முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான், நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய மாநில செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் கருத்துரையாற்ற, விழாவிற்குத் தலைமை தாங்கிய முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிறைவுப் பேருரையாற்றியதோடு, செய்தியாளர் சந்திப்பிலும் பேட்டியளித்தார்.



அவரது உரை விபரம் வருமாறு:-

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மின்னணு ஊடகவியல் பயிலரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஆண்டு சென்னையில் 2 நாள் மாநாடாக இது நடைபெறவேண்டும். இதில் பிரபல ஊடகவியலாளர்கள் பலரையும் பங்கேற்க செய்வதன் மூலம் ஏராளமான விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும். அதே சமயம் முஸ்லிம் சமுதாய இளைஞர்களின் உணர்வு என்ன என்பதையும் பத்திரிகைத் துறையிலே உள்ளவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.

இந்தப் பயிலரங்கம் ஊடக சம்மந்தமான பயிலரங்கம். ஊடகங்கள் என்றால் இதுவரை இருந்து வரும் அச்சு ஊடகம், காட்சி ஊடகங்கள் இடையே இன்று மின்னணு ஊடகங்களாக சமுக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. .வெப்சைட் என்றால் இணையதளம் ,இமெயில் என்றால் மின்னஞ்சல் ,பேஸ்புக் என்பதற்கு முக நூல் என்றும் டுவிட்டர் என்றால் சுட்டுரை என்றும் பொருள்.

கட்டுரை எழுதுவது ,குட்டுரை எழுதுவது ,சுட்டிச்சொல்வதை போல் கொட்டி சொல்வது அதாவது தலையில் கொட்டி சொல்வதை போல இப்போது செய்ய முடியாது.ஆனால் ஊடகத்தின் மூலமாக குட்டிச்சொல்லாமல் சுட்டிக்காட்டி சொல்லலாம்.

இவை தனியாக இயங்காது. இவற்றை இயக்க வேண்டும். இயக்குபவர் சரியாக இயக்கினால் எல்லாம் சரியாக இருக்கும். எனவே முஸ்லிம் லீகர்களைப் பொருத்த வரை சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது மிகச்சரியாக நம் கொள்கை கோட்பாடுகள், நோக்கங்கள் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். இந்தப் பயிலரங்கிற்கு முஸ்லிம் மாணவர் பேரவை முஸ்லிம் யூத் லீகினர் மட்டுமின்றி முஸ்லிம் லீகின் மூத்தவர்களும் வந்திருக்கின்றனர்.

இன்று இணையதளங்களை எல்லோரும் பயன்படுத்துகின்றனர். இந்த சமூக வலைத்தளங்களை எப்படிப் பயன்படுத்தினால் பண்படுத்தும், எப்படிப் பயன்படுத்தினால் புண்படுத்தும் என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்தப் பயிலரங்கம்.

விமர்சனங்கள் என்ற பெயரால் வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது வெறுப்பை வளர்க்கக் கூடாது. வார்த்தைகளில் விரோதத்தை வளர்க்கக் கூடாது - துரோகத்தைச் செய்யக்கூடாது.

இன்று எத்தனையோ விஷயங்களைச் சொல்லி வருகிறோம். ஊழல் இல்லாத நிர்வாகம் என்கிறோம். சுரண்டல் இல்லாத பொருளாதாரம் என்கிறோம். இந்தக் கருத்துக்களை வலியுறுத்தும்போது கூட நம் கண்ணியம் தவறாத வகையில் அவை அமைய வேண்டும். இஸ்லாம் நமக்கு அப்படித்தான் கற்றுத் தந்திருக்கிறது.

மதங்கள், நம்பிக்கை சார்ந்தவை என்றும் ஊடகங்கள் அறிவியல் சார்ந்தவை என்றும் இங்கே சிறப்பு விருந்தினர்களால் சொல்லப்பட்டது. அறிவுக்கு எட்டாத அல்லது அறிவுக்கு புலப்படாத அல்லது பகுத்தறிவுக்கு எதிரான எதுவும் இஸ்லாமில் இல்லை. அதனால்தான் இஸ்லாமை அறிவுப்பூர்வமான மார்க்கம் என்கிறோம். விஞ்ஞானப் பூர்வமான மதம் இது என அழைக்கப்படுகிறது.

நான் பல்வேறு மதங்களை ஆய்வு செய்திருக்கின்றேன். மத நூல்களைப் படித்தறிந்திருக்கிறேன். திருக்குர்ஆனை ஓதி உணர்ந்திருக்கிறேன். எல்லா விஷயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இஸ்லாமில் அறிவுக்கு விரோதமாக எதுவுமே கிடையாது. இஸ்லாமிய நம்பிக்கைகள் அறிவார்ந்தவை. இந்த நம்பிக்கை என்பது மூட நம்பிக்கையல்ல.

அப்படிப்பட்ட இஸ்லாத்தை மற்றவர்களிடத்தில் எத்தி வைக்கும்போது பண்பட்ட முறையில் இதமாகச் சொல்ல வேண்டும்.

இன்று காலை அமர்வில் பேசிய மூன்று ஊடகவியலாளர்கள் பேசிய பேச்சின் சாராம்சம் என்னவென்றால், “முஸ்லிம்கள் குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுகிறீர்களே ஏன்? உங்களுக்குள்ளேயே விவாதித்துக் கொள்கிறீர்களே, உங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறீர்களே ஏன்? குதிரையை பெரிய மைதானத்தில் ஓட்டுங்கள்” என்பதுதான். எனவே ஊடகப் பயன்பாட்டில் உள்ள நீங்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

இன்று குர்ஆனை விளக்கிச் சொல்கிறோம் என்ற பெயரால் தவறான அர்த்தங்களுடைய வரம்பு மீறிய வார்த்தைப் பிரயோகங்கள் செய்து விடுகின்றனர். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமேயானால் புனித திருக்குர்ஆனின் 6666 வசனங்களில் ஜிஹாத் என்ற வார்த்தை 3 இடங்களில் மட்டுமே வருகிறது. ஜிஹாத் என்ற வார்த்தையோடு சேர்த்த விஷயங்கள் 22 இடங்களில் வருகின்றன. ஜிஹாதுன் கபீர் என்ற வார்த்தை ஒரே ஓர் இடத்தில்தான் வருகிறது. 25ஆம் அத்தியாயத்தின் 52ஆவது வசனமாகிய ஜிஹாதுன் கபீரின் விளக்கம், குர்ஆனைக் கொண்டு அதனை நன்கு விளங்கி அதை எடுத்துச்சொல்வதுதான். மறுமையின் சிந்தனையை எண்ணி ஷைத்தானுக்கு விரோதமாக மனதை அடக்கி ஆளுவதுதான்.

இந்தக் குர்ஆனுக்கு தவறான விளக்கம் சொல்லப்படுகின்ற காரணத்தாலும், வெறுப்பை வளர்க்கும் விளக்கங்கள் தந்த விளைவுகளாலும் இஸ்லாமிய வளர்ச்சி தடைபடுகிறது.

இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கும் எவரும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம் - இஸ்லாமிய மார்க்கம் வாளேந்தி, யுத்தங்களால் வளரவில்லை என்பதை! இஸ்லாம் வளந்தது மக்கள் விரும்பி ஏற்றதால்தான். எனவே புதிய சிந்தனையோடு இஸ்லாமை விளங்க வைப்போம். நல்ல பண்புகளின் மூலம் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்போம். அதற்கு இந்தப் பயிரலங்கம் பயனளிக்கும் என நம்புகிறேன்.


முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான நல்ல தகவல்கள் பரிமாற்றம், விவாதங்கள் - விமர்சனங்களுக்கு அழகிய முறையில் விளக்கமளித்தல் உள்ளிட்ட வகைகளில் பங்காற்றியோர் - நடுவர் குழுவால் பட்டியலிடப்பட்டு, சிறந்த பங்கேற்பாளர்களாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். கத்தர் நாட்டில் பணியாற்றி வரும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த ‘கவிமகன்’ காதர் அவர்களுள் ஒருவராவார்.



இவர்கள் அனைவருக்கும் ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசும், ‘சிறந்த மின்னணு ஊடகவியலாளர்’ விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ‘கவிமகன்’ காதர் சார்பாக, கத்தர் நாட்டிலிருந்து இவ்விழாவில் பங்கேற்க வருகை தந்திருந்த - கத்தர் காயிதேமில்லத் பேரவை தலைவர் கே.வி.ஏ.டீ.ஹபீப் முஹம்மத் விருதைப் பெற்றுக்கொண்டார்.



இவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர இளைஞரணி நிர்வாகிகளான எம்.இசட்.சித்தீக், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் உள்ளிட்ட நிர்வாகிகள், இளைஞரணி - மாணவரணி அங்கத்தினர் என சுமார் 30 பேர் தனி வாகனத்தில் சென்று கலந்துகொண்டனர்.

‘கவிமகன்’ காதர், காயல்பட்டணம்.காம் எழுத்துமேடை ஆசிரியர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் - இ.யூ.முஸ்லிம் லீக்)

தகவல் உதவி:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணையதளம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மின்னணு ஊடகவியல் கவிஞருக்கு வாழ்த்துக்கள் !
posted by vakil.Ahamed (chennai) [30 March 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 39877

மின்னணு ஊடகவியல் கவிஞருக்கு வாழ்த்துக்கள் !

வார்த்தைகள் உயர்த்தி
விடியல் திறக்கும் வலிய பேனாவால்
அற்புத கவி வடிக்கும்
காயலின் கவி மகன்,
எங்கள் பட்டணத்து கவி நிலா

மின்னணு ஊடகவானில் வெளிச்சம் தருவதை போற்றிட
பிறை இயக்கம் விருது வழங்கியதை அறிந்து மகிழ்ச்சி…

'சாமு ஒலி உழியர்' சதக்கத்துல்லா ஆலிம் (கவி மகனின் தந்தையார்) அவர்களின் அருட்பணிகளை நினைவு கூர்ந்து... கவிமகனை பாராட்டி....

அன்புடன், வக்கீல். அஹ்மத்
பணிப்பாளர் - துளிர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [30 March 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 39885

வாழ்த்துக்கள். சதக் ஆலிமின் மைந்தனே. அன்பு மச்சானே மன முவந்து என் சார்பாகவும், நம் குடும்பத்தின் சார்பாகவும்,ரியாத் வாழ் காயல் மக்களின் சார்பாகவும் வாழ்த்துகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...VAALTHUKKAL
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [30 March 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39886

தென்காசியில் இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய மின்னனு ஊடகப் பயிலரங்கில், சிறந்த மின்னணு ஊடகவியலாளர் விருது’ பெற்று உள்ள நமது காயலின் அருமை சகோதரர் ‘கவிமகன்’ காதர் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் & பாராட்டுகள் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வாழ்த்துக்கள் கத்தார் காயல் கவிமகனார்
posted by HUSSAIN HALLAJ (Doha, Qatar) [30 March 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 39888

வாழ்த்துக்கள். பல ஆயிரம்.

கத்தார் காயல் கவிமகனாரெ,

பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்,

ஹுசைன் ஹல்லாஜ்
டோஹா, கத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:..வாழ்த்துக்கள்
posted by Seyed Mustafa (Kayalpatnam) [30 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39890

காயல் கவிமகன் காதர் அவர்களுக்கு முஸ்லிம் லீகின் மின்னணு ஊடகப் பயிலரங்கில் கிடைத்த விருதுக்கு வாழ்த்துக்கள். மேன்மலும் தங்கள் பணி சிறக்க வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [30 March 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39891

வாழ்த்துக்கள் நண்பரே..!!

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [31 March 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39896

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஊரை சேர்ந்த எம் பாசத்துக்குரிய அருமை சகோதரர் ‘கவிமகன்’ காதர் அவர்களுக்கு இந்த விருது கிடைத்து இருப்பது ரொம்பவும் பொருத்தமானதே ......இவ் விருதுக்கும் மிகவும் சரியானவரும் கூட .....

மாஷா அல்லாஹ்....நம் அருமை சகோதரரை கொண்டு இந்த விருது மேலும் சிறப்படைகிறது என்று தான் சொன்ன வேணும் ...

>> எம் மனம் உகந்த நல் '' வாழ்த்துக்கள் " + துவாவும் கூட <<

தாங்கள் இது போன்று & மற்றும் பல விருதுக்களை பெற்றிடவும் ...நமது ஊரின் பல நற் செயலுக்கு உருதுனையாற்றிடவும் ...நம்மை படைத்த '' எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கின்றேன் ......

>> தொடரட்டும் தங்களின் விருதுக்கான பணியுடன் கலந்த நமது ஊருக்கான நற் சேவைகள் << வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...மனமார்ந்த பாராட்டுக்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா.) [31 March 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39914

எமது சன்மார்க்க கல்வியின் ஆசான் மறைந்து வாழும் மாமேதை ஷாம் ஒலி ஊழியர் மரியாதைக்குரிய சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களின் அருந்தவ புதல்வன் அன்பு சகோதரன் கவிமகன் அப்துல் காதர் அவர்களுக்கும், மேலும் விருதினை பெற்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மற்றும் விருதளித்து சிறப்பித்த தாய்சபை நிர்வாகிகள்,முன்னோடிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வாழ்த்துக்கள்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான், (yanbu) [01 April 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39933

கவிமகனின் கைகளில் தவழ்ந்து மிடுக்குடன் மரியாதை பெறுகிறது "விருது".

காயல் கண்டெடுத்த கவிமுத்துக்களின் நல்முத்து நாயகனே,. நீ நெடுநாட்கள் நீடூழி வாழ வல்லோனிடம் வேண்டுபவர்களின் வரிசையில் ஒருவனும், உன் கவிக்கள்ளுண்டு போதையேறிய பித்தனில் ஒருவனாகியே நான் நெஞ்சம்நிறைய வாழ்த்துகிறேன் என்னுள்ளம் ஓயாமல் ஒலிக்கும் ஓர் உன்னத கீதம், இப்புவி முடிவுரலாம் ஆனால் உன் கவிப்புகழ் முடியுராது என்பதே! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

உன்கவி கள்ளுண்ட,
முஹம்மது ஆதம் சுல்தான்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் சிறுமழை!  (29/3/2015) [Views - 2253; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved