Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:51:00 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15573
#KOTW15573
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 14, 2015
சர்வே எண் 278: மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் நிராகரிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3410 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர்ரஹ்மான், கடந்த அக்டோபர் மாதம் - காயல்பட்டினம் தென் பாக கிராமத்தில் உள்ள தனது சர்வே எண் 278 இடத்தின் 5.5 ஏக்கர் நிலத்தை, காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியிருந்தார். அதில் - 4 ஏக்கர் நிலம் குப்பைகள் கொட்டவும் (கம்போஸ்ட் யார்டு) மற்றும் 1.5 ஏக்கர் நிலம் பொது பாதைக்கு எனவும் வழங்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் - கம்போஸ்ட் யார்டு கொண்டு வரவும், பயோ காஸ் திட்டம் கொண்டு வரவும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே - டிசம்பர் 8 (2014) அன்று காயல்பட்டினம் நகராட்சி, MUNICIPAL SOLID WASTES (MANAGEMENT & HANDLING) RULES 2000 விதிமுறைகள்படி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், சர்வே எண் 278(1) இல் கம்போஸ்ட் யார்டு கொண்டு வர, விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தது.

ஜனவரி 12, 2015 தேதிய கடிதம் மூலம் - அப்பகுதிக்கான புதிய CRZ வரைப்படம்படி, சர்வே எண் 278(1) நீர் தேங்கும் இடம் என்றும், அதனால் - நகராட்சியின் விண்ணப்பம் குறித்து மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க இயலாது என்றும், விண்ணப்பம் (நகராட்சிக்கு) திருப்பி அனுப்பப்படுகிறது என்றும், இதற்கான மாற்று இடத்தை பரிசீலனை செய்யும்படியும் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், தெரிவிக்கப்பட்டது.



மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்ததை தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சி இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய கோரியதாக தெரிகிறது.

மறு பரிசீலனை செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், திருநெல்வேலியில் உள்ள DTCP அரசு அமைப்பின் - துணை இயக்குனரின் அலுவலகத்தின் தகவல்படி, மனுவில் உள்ள இடம் (சர்வே எண் 278[1]) - CRZ வரைமுறைக்குள் வருவதால், விண்ணப்பத்தை நிராகரித்து - பிப்ரவரி 19 அன்று திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்தும், நகராட்சி மீண்டும் விண்ணப்பம் செய்ததாக தெரிகிறது. தேவையான ஆவணங்களை இணைக்காததால், மீண்டும் அந்த விண்ணப்பத்தை - மாசு கட்டுப்பாட்டு வாரியம் - திருப்பி அனுப்பியுள்ளதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ...
posted by Javed Nazeem (Chennai) [14 March 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 39600

இப்போது சகோதரர் சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் அவர்கள் பேசுவார்கள். (உங்கள் கருத்துக்களில் முதலில் மிகவும் மதிப்பு இருந்தது)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Javed Nazeem (Chennai) [14 March 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 39606

என்னுடைய கருத்து தனி நபர் விமர்சனம் அல்ல, மாறாக கருத்தாளரின் முந்தைய கருத்துக்களுக்கான பிரதிபலிப்பு மட்டுமே.

இது பற்றிய செய்தி வெளியான போதெல்லாம் கருத்தாளர் தமது கருத்துக்களை ஒரு சார்பாக பதிந்துள்ளார் (http://goo.gl/4aavhd). சுயநலம் பாராது உழைக்கும் ஒரு அமைப்பை, பொய்யர்கள் எனக் கூறுகிறார் (http://goo.gl/Hgp3WP). ஆனால் பின்னர் வெளியான ஆணித்தரமான செய்திகளுக்கு (http://goo.gl/UR19hf / http://goo.gl/8BK39N) மவுனம் காக்கிறார். இதை வெளிப்படுத்துவது மட்டுமே என் நோக்கம். இந்த விளக்கம் போதும் எனக் கருதுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [15 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39615

இன்னுமா இந்த சர்வே எண் 278 டை பிடிச்சு மீண்டும்... மீண்டும்... அதன் மீது மல்லுகாட்டுகிரார்கள்..! சப் டிவிசனே பண்ணாமல் நகராட்சிக்கு இலவசமாக கிடைக்க பெற்ற சர்வே எண் 278 இன் மீது அப்படி என்ன ஸ்பெஷல் அக்கறை / ஆர்வம் இந்த ஆணையருக்கு / உறுப்பினர்களுக்கு...!

நகராட்சிக்கு சொந்தமான புரோஜனமான நிலத்தை மாசு காட்டுபாடு வாரியத்திற்கு காட்டி அனுமதி பெறலாமே..! ஏன் ஒரு தனியார் வழங்கிய நிலத்திற்கு இப்படி ஆர்வம் / அக்கறை / முயற்சி எடுக்க வேண்டும்..?

அதே தனி நபரிடம் இத்திட்டத்திற்கு புரோஜனமான நிலத்தை தாருங்களேன் என கேட்க வேண்டியது தானே..! இதற்கான மாற்று இடத்தை பரிசீலனை செய்யும்படி - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தெரிவிக்கப்பட்ட பின்னரும் ஏன் அந்த தனி நபர் ஒருவர் அளித்த புரோஜனமில்லாத இந்த நிலத்தை எத்தனை முறை மாசு கட்டுபாட்டு வாரியத்திடம் மீண்டும் மீண்டும் விபரம் அளித்து அளித்து காலத்தை வீண் விரயம் செய்வது ஏன்..?

இத்திட்டம் நிறைவேற நகர்மன்ற தலைவர் தடையாக இருக்கிறார்கள் என்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டு பொய்யானவை என்று இப்போது உறுதியாகிறது.

தன்னிலை அறிக்கைகளை தவிர்த்து விட்டு உருப்படியான அணைத்து மக்களின் எதிர்ப்பார்ப்பான குப்பை கொட்டுவதற்கு மாற்று இடம் குறித்து யோசித்தால்/ பரீசித்தால் மட்டுமே அனைவரின் பாராட்டுகளையும் பெறலாம்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...மல்லுகட்டுகிரார்கள்
posted by Omer Abdul Qadir (Chennai) [15 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39620

சகோ முத்து இஸ்மாயில் சொல்வது சரியே...

Moderator: பிற கருத்தாளரின் கருத்துக்கள் மட்டுமே மீண்டும் copy & paste செய்யப்பட்டுள்ளதால், அவை தவிர்க்கப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வெட்டியாக இருக்கவில்லை.
posted by சாளை அப்துல் ரஸ்ஸாக் லுக்மான், (அபூதாபி) [15 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39623

சகோதரர் ஜாவித் நசீம், நான் எனது குடும்ப பெயருடன் என் வாப்பாவின் பெயரையும் இணைத்து எல்லோருக்கும் தெரியும்படி கருத்து பதிகிறேன். நீங்களும் உங்களை அடையாளப்படுத்துவீர்கள் என்று எதிர்பார்கிறேன்.

உங்களை போன்று, நான் ஒன்றும் வேலை வெட்டி இல்லாமல் ஜால்ரா தட்டிக்கொண்டு இருக்கவில்லை. தலைவிக்கு ஜால்ரா தட்டுவதர்கு என்றே இந்த இணையதளத்தில் ஒரு டீம் இருக்கிறது. எனக்கு நேரம் கிடைக்கும் போது, தகுந்த பதிலை கொடுப்பேன்.

"சுயநலம் பாராது உழைக்கும் ஒரு அமைப்பை, பொய்யர்கள் எனக் கூறுகிறார் (http://goo.gl/Hgp3WP)" (C&P). இப்போதும் சொல்கிறேன், MEGA, தலைவியின் ஜால்ரா அமைப்பே. தலைவியின் முகநூல் செய்தியை அப்படியே போட்டவர்கள், அதன் உண்மை தன்மையை, குற்றசாட்டப்பட்டவர்களின் தரப்பு செய்தியையும் போட்டிருந்தால், அவர்களின் நேர்மை தெரியும்.

அந்த அமைப்பு, இந்த மூன்றரை வருடங்களில் ஊருக்கு நன்மையான (தலைவிக்கு ஆதரவாக நோட்டிஸ் விட்டதை தவிர) காரியங்கள், போராட்டங்கள் செய்துள்ளதா? குறைந்தபட்சம், ஊருக்குள் பஸ் வராமல் இருப்பது பற்றி இப்போது தலைவி எடுத்திருக்கும் முயற்சியையாவது செய்ததா?

இந்த அமைப்பினரின் இந்த நிலம் பற்றிய 2013-ம் வருட நோட்டிசில், "DCW நச்சு ஆலையின் கழிவுகள் இந்த இடத்திற்கு அடுத்தாற்போல்தான் கடலில் கலக்கிறது.. அதனால் அந்த ஆலை, அந்த ஓடை கலக்க தான் (DCW) காரணமில்லை என்று சொல்லுமாம்" (C&P)

இன்னும் முழுவதுமாக ஆய்வு செய்து முடிக்கப் படவில்லையா? சரி, இந்த நிலம் கடலில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் இருக்குமா? ஆனால் DCW நச்சு ஆலை அதன் நச்சு அமிலங்களை எங்கிருந்து (எவ்வளவு தூரத்தில்) கலக்கிறது? அல்லது அந்த நச்சு ஆலை வெளியிடும் அமிலங்கள் எந்த இடத்தில் இருந்து நச்சுத்தன்மையாக மாறுகிறது? என்ற அனைத்து விபரங்கள் KEPA -விடம் ஆதாரத்தோடு இருக்கும்போது, MEGA -வின், அந்த ஆலை, அந்த ஓடை கலக்க தான் (DCW) காரணமில்லை என்று சொல்லுமாம்" என்று வாய் கூசாமல் சொன்னது?

இப்போதாவது அந்த அமைப்பினர், அந்த கருத்துக்கு பதில் சொல்வார்களா?

அடுத்து அந்த அமைப்பினரின் முந்தைய நோட்டிசில், MKT அப்பா அவர்கள் தலைவராக இருந்த போது, 1958 தீர்மானம் பற்றி குறிப்பிட்டிருந்தனர். "தீர்மானம் நிறைவேற்றியது , MKT அப்பா அவர்களின் முதல் ஆட்சி காலத்தில். அதன் பின்னர் MKT அப்பா அவர்கள் மேலும் 7 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்கள். அந்த 7 வருடங்களில் அவர்களே அந்த தீர்மானத்தை செயல்படுத்த முயற்சி எடுத்தது மாதிரி தெரியவில்லை.

இந்த 55 ஆண்டுகளில், அவர்களுக்கு பின்னால் வந்த, பாவலர் அப்பா, LK அப்பா உட்பட எந்த தலைவரும் முயற்சி எடுக்கவில்லை. ஏன் MKT அப்பா அவர்களின் மருமகள் (மகனின் மனைவி) நாச்சி தம்பி ராத்தா அவர்கள் தலைவியாக இருந்தபோது கூட அந்த முயற்சி எடுக்கப்படவில்லை. இதற்கும் இந்த, "சுயநலம் பாராது உழைக்கும்(?)" அமைப்பினர் பதில் சொல்வார்களா?

-அட்மின், இந்த தகவல்களை, "செய்திக்கு தொடர்பில்லாதது" என்று நீக்கி விடாதீர்கள். சகோதரர் நசீம், என்னை பற்றி சொன்னதற்கான பதில்கள்.

நான் பதில் தருவது இருக்கட்டும். இந்த இரு திட்டங்களும் (பயோ கேஸ் & குப்பை கொட்டும் திட்டம்) இந்த நகராட்சியின் எஞ்சிய காலத்தில் நிறைவேறுகிறதா? அல்லது நிதி அரசுக்கே திரும்பி செல்கிறதா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

என்னுடைய வேலைகளை விட்டு நீண்ட பதில் கொடுக்க வைத்த சகோதரருக்கு நன்றி!!!

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வசதியான மறதி!
posted by Hameed Rifai (jeddah ksa) [15 March 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39629

ஜாவித் நஸீம் காக்கா அவர்கள் இதே இணையதளத்தின் துவக்க காலத்தில் ஒரு forumஇல் பார்வையாளர் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தவர். பல்வேறு செய்திகளில் இன்றளவும் கருத்துப் பதிவு செய்து வருபவர். இந்த விபரம் போதுமென்று நினைக்கிறேன்.

அது சரி... லுக்மான் காக்கா! ‘அபூரஹ்மத்’ என்ற பெயரில் கட்டுரையே எழுதினார்கள். ‘மனைவியின் மணாளன்’, ‘பூமிபுத்திரன்’ என்றெல்லாம் பெயர் (?) இட்டு கருத்துக்களெல்லாம் பதிந்தார்களே பலர்? அதன் கீழும், மேலும் பல கருத்துக்களை தாங்களும் பதிந்து வந்துள்ளீர்களே...? அப்போதெல்லாம் விபரம் கேட்கத் தோன்றவில்லையோ? எல்லோருக்கும் தெரிந்த இவரது பெயரில் மட்டும் சந்தேகம் வருவதன் காரணமென்னவோ? இத்தனைக்கும் காயல்பட்டணம்.காம் ஒரு கருத்தாளர் யார் என அறியாமல் கருத்துப்பதிவுக்கு அனுமதிப்பதும் இல்லையே...?

“அதன் உண்மை தன்மையை, குற்றசாட்டப்பட்டவர்களின் தரப்பு செய்தியையும் போட்டிருந்தால், அவர்களின் நேர்மை தெரியும்.” C&P

வேடிக்கையாக இருக்கிறதே தங்களின் எதிர்பார்ப்பு? MEGA நோட்டீஸ் என்ன பத்திரிக்கையா? இரு தரப்பு செய்திகளையும் போட???

“அந்த அமைப்பு, இந்த மூன்றரை வருடங்களில் ஊருக்கு நன்மையான (தலைவிக்கு ஆதரவாக நோட்டிஸ் விட்டதை தவிர) காரியங்கள், போராட்டங்கள் செய்துள்ளதா? குறைந்தபட்சம், ஊருக்குள் பஸ் வராமல் இருப்பது பற்றி இப்போது தலைவி எடுத்திருக்கும் முயற்சியையாவது செய்ததா?” C&P

>>> மக்களுக்கு நகராட்சி குறித்து ஏற்படுத்தும் விழிப்புணர்வு உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?

>>> RTI முயற்சி மூலம் நூற்றுக்கணக்கான பக்கங்களுக்கு ஆவணங்களைத் திரட்டி, அவற்றின் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது தங்களுக்கு தெரியவில்லையா? இப்புடி கண்ணை இறுக்க மூடிக்கிட்டிருந்தா, எங்கங்க தெரியப்போகுது...? “இந்த நிலம் கடலில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் இருக்குமா?” C&P

இந்த அறிவுப்பூர்வமான (???) கேள்விக்கு உங்களுக்கு அப்போதே முகநூலில் பதில் கூறப்பட்டதே? அதற்குள்ளே மறந்துவிட்டீர்களா காக்கா...? இந்த நிலம் கடலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் என நீங்கள்தான் வாய் கூசாமல் பொய் சொல்கிறீர்கள். இந்த நிலத்தை (278) ஒட்டினார்போல் - கிழக்கில் கடல், வடக்கில் ஓடை. அதாவது மீட்டர் கணக்கு, கிலோ மீட்டர் கணக்கு அல்ல, ஒட்டி! ஒட்டி!! ஒட்டினார் போல!!! அதாவது 0 மீட்டர்!!!! இப்போ என் காக்காக்கு புரிஞ்சிருக்கும்.

“ஆனால் DCW நச்சு ஆலை அதன் நச்சு அமிலங்களை எங்கிருந்து (எவ்வளவு தூரத்தில்) கலக்கிறது? அல்லது அந்த நச்சு ஆலை வெளியிடும் அமிலங்கள் எந்த இடத்தில் இருந்து நச்சுத்தன்மையாக மாறுகிறது?” C&P

என்னங்க கேள்வி இது? கழிவு தொழிற்சாலையில் உருவாகிறது. அங்கிருந்து ஓடை வழியாக கடலில் சேர்கிறது. எத்தனை செயற்கைகோள் படம் மூலம் விளக்கினாலும், விளங்காது போல் இருக்கிறது. எங்களுக்கு சந்தேகமில்லை. ஒருவேளை உங்க சந்தேகம் தீரலைன்னா, ஒவ்வொரு இடத்துலயா சாம்பிள் எடுத்து நாக்கில் வைத்து டெஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்களேன்...?

“இந்த 55 ஆண்டுகளில், அவர்களுக்கு பின்னால் வந்த, பாவலர் அப்பா, LK அப்பா உட்பட எந்த தலைவரும் முயற்சி எடுக்கவில்லை. ஏன் MKT அப்பா அவர்களின் மருமகள் (மகனின் மனைவி) நாச்சி தம்பி ராத்தா அவர்கள் தலைவியாக இருந்தபோது கூட அந்த முயற்சி எடுக்கப்படவில்லை. இதற்கும் இந்த, "சுயநலம் பாராது உழைக்கும்(?)" அமைப்பினர் பதில் சொல்வார்களா?” C&P

என்னங்க ஆச்சி உங்களுக்கு...? நல்லா இருக்கீங்கன்னுல்ல நினைச்சிட்டு இருக்கிறேன்...? அவங்க ஏன் முயற்சி எடுக்கலேன்னு அவங்கட்ட அல்லவா நீங்க கேள்வி கேட்கணும்? அத விட்டுட்டு சம்பந்தம் இல்லாம மெகாவிடம் இந்த கேள்விய கேக்குறீங்களே...???

“நான் பதில் தருவது இருக்கட்டும். இந்த இரு திட்டங்களும் (பயோ கேஸ் & குப்பை கொட்டும் திட்டம்) இந்த நகராட்சியின் எஞ்சிய காலத்தில் நிறைவேறுகிறதா? அல்லது நிதி அரசுக்கே திரும்பி செல்கிறதா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.” C&P

அத மட்டும் இல்லீங்க, ஏழை, எளியவர் வரிப்பணத்தில் - சாலை வசதிகள், தெரு விளக்குகள் வசதி பெற்று, நிலங்களை அதிக விலைக்கு விற்று லாபம் அடைய துடிக்கும் தனவந்தர்கள் என்ற பெயரில் அலையும் நிலத் தரகர்கள் கூட்டம் வெற்றி பெறுகிறார்களா என்றும் சேர்த்தே பார்ப்போம் காக்கா!

அது சரி... “CRZ இல்லை, CRZ இல்லை என்று கூவினீர்களே...? இப்போ CRZ என்று முடிவு வந்த பிறகு அமைதியாக இருக்கிறீர்களே...?” என்றுதானே ஜாவித் நஸீம் காக்கா கேட்டிருக்காங்க? அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல், ஒரு முழு நீள கதையையே எழுதி இருக்கீங்களே காக்கா...? உண்மையிலேயே உங்க திறமைக்கு ஒரு சபாஷ் போடலாம் போங்க!!!

கடைசியா ஒன்று! மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு விடக்கூடாதே என்ற கவலையில் ‘மெகா’ இரண்டு ஆண்டுகளுக்கு முன் எதைச் சொன்னதோ, அதே காரணத்தை முன்வைத்துதான் இன்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த சர்வே எண் 278ஐ மீண்டும், மீண்டும் தள்ளுபடி செய்திருக்கிறது.

நானும் ‘மெகா’வின் ஓர் அங்கம் என்ற அடிப்படையிலேயே இத்தனை கருத்துக்களையும் பதிந்துள்ளேன். சந்தேகம் இருந்தா திரும்ப கேளுங்க காக்கா. எனக்குத் தெரிந்த விளக்கத்தைத் தரக் காத்திருக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Javed Nazeem (Chennai) [16 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39635

"இப்போது சகோதரர் சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் அவர்கள் பேசுவார்கள்" என்று தான் சொல்லி இருந்தேன் - ஏசுவார்கள் என்று படித்து விட்டீர்கள் போலிருக்கிறது. அடையாளமே தெரியாத என்னை "வேலை வெட்டி இல்லாதவன்", "ஜால்ரா அடிப்பவன்" என்று ஏக வசனத்தில் வாழ்த்தி இருக்கிறீர்கள். என்னுடைய பாவங்கள் குறைந்தது போல் இலேசாக உணர்கிறேன்.

பல நேரங்களில், இயலாமையின் வெளிப்பாடுதான் கோபம் என நான் எண்ணுவதுண்டு. உங்கள் பதிவில் பல இடங்களில் அது வெளிப்படுகிறது.

பயோ கேஸ் பற்றிய உங்கள் நிலைப்பாட்டுக்கு மாறாக இந்த இணையதளம் இரண்டு ஆக்கங்களை வெளியிட்டு இருக்கிறது.

வாகன கொள்முதல் விஷயத்தில் உங்கள் நிலைப்பாட்டுக்கு மாறாக சகோதரர் ரிபாய் மற்றும் சுல்தான் காக்கா உடைய தெளிவான கேள்விகள் அமைகின்றன.

இவற்றிற்கு விளக்கமளிக்க முடியாத நிலையில் உணர்ச்சி வசப்படுகிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நம்முடைய நிலைப்பாடுகள் சில நேரங்களில் தவறாக அமைய வாய்ப்பிருக்கிறது. இறைவனின் பொருத்தத்தை மட்டுமே நாடி, சுய பரிசோதனை செய்து சரியான பாதையில் செல்வது மறுமையில் நம்மை வேதனையில் இருந்து காக்கும்.

பணி மிகுதியிலும் என்னுடைய கருத்துக்கு மதிப்பளித்து இங்கே கருத்து பதிந்தமைக்கு மிக்க நன்றி Brother Rifai, جزاك اللهُ خيرًا


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இந்த இணையதள நிருபர் ஹாபிழ் SK சாலிஹ் சாட்சி சொல்வார்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [18 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39658

சகோதரர் ஜாவீத் நசீம், நான் உங்கள் நண்பனும் இல்லை. இதற்கு முன்பு உங்களோடு கருத்து பதிந்ததும் இல்லை அல்லது என் கருத்துக்கு பதில் கருத்துக்கு பதியும் போது சொல்லியிருந்தால் கூட பரவாவில்லை. உங்களுக்கு சம்பந்தமே இல்லாத, அடையாளம் தெரியாத என்னை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்?

இதற்கு பதில் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்கப்படும். அதை பற்றிய கவலை உங்களுக்கு தேவையில்லை.

“வாகன கொள்முதல் விஷயத்தில் உங்கள் நிலைப்பாட்டுக்கு மாறாக சகோதரர் ரிபாய் மற்றும் சுல்தான் காக்கா உடைய தெளிவான கேள்விகள் அமைகின்றன.” (C&P)

வாகனம் வாங்கும் தீர்மானம் தோற்கடிக்கப்ட்ட பிறகும், தீர்மானம் நிறைவேறியதாக மினிட் புக்கில் எழுதினார் என்பது தான், அந்த தீர்மானத்தை கொண்டுவந்த, அப்போதைய உறுப்பினர் சகோதரர் லுக்மான் காக்கா, அந்த தீர்மானத்தை ஆதரித்த உறுப்பினர்கள்கள் ஜகாங்கீர் மற்றும் ஜமால் உட்பட அனைத்து உறுப்பினர்களின் (1 உறுப்பினர் தவிர) ஆகியோருடைய குற்றச்சாட்டு.

வாகன கொள்முதல் விஷயத்தில் அந்த இருவரும் ‘லாஜிக்’ காக கேள்வி கேட்டுள்ளார்கள். உண்மை எப்போதும் ‘லாஜிக்’கோடு ஒத்து போகவேண்டும் என்ற அவசியமில்லை.

அந்த தீர்மானம் நிறைவேறியதா? இல்லையா? என்ற உறுதியான தகவல், இந்த இணையதள செய்தியிலும் இல்லை. ஆதம் சுல்தான் காக்கா அவர்களின், “இதையெல்லாம் விட மேலாக முதல் கூட்டம் நடந்த அன்று எடுக்கப்பட்ட வீடியோ பதிவு எங்கே? அதை போட்டுக்காட்டி மக்கள் முன் தலைவியின் முகத்திரையை கிழிக்கலாமே?” (C&P)

காக்கா, அந்த வீடியோ பதிவு இருந்தால் தான் பிரச்சனையே இல்லையே. அந்த காலகட்டத்தில் இந்த இணையதளம் மற்றும் இன்னொரு இணையதள நிருபர் மட்டுமே புகைப்படம்/ வீடியோ மற்றும் குறிப்பெடுத்தனர்.

நான், இந்த தீர்மானத்தை கொண்டு வந்த முன்னாள் உறுப்பினர் லுக்மான் காக்கா மற்றும் ஜகாங்கீர் ஆகியோரிடம் இதை பற்றி பேசிய போது, தீர்மானம் நிறைவேறவில்லை என்கின்றனர். நாம் (நானும் நீங்களும்) அவர்கள் இருவரையும் நம்ப தேவையில்லை. தலைவி அவர்களையும் நம்ப தேவையில்லை.

அந்த கூட்டத்தின் சாட்சியான, செய்தியை சேகரித்த இந்த இணையதளத்தின் நிருபர், இறைமறை குர்ஆனை மனதில் ஏந்தி இருக்கும் தம்பி. ஹாபிழ் SK ஸாலிஹ் இருக்கிறார். அவர் தலைவிக்கு வாகனம் வாங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அல்லாஹ் மீது ஆணையிட்டு சொன்னால், அந்த சாட்சியை ஏற்றுக் கொள்வோம். உறுப்பினர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அவர்களை புறந்தள்ளி விடுவோம். யார் பொய் சொல்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் தகுந்த தண்டனை கொடுப்பான். அத்துடன் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம்.

-சாளை.அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக தலைவி மினிட் புத்தகத்தில் எழுதினார்
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [18 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39659

அட்மின், இந்த தலைப்புக்கு சம்பந்தம் இல்லையென்று இந்த தகவலை தள்ள வேண்டாம்.

ஆதம் சுல்தான் காக்கா லாஜிக் படி, தலைவி தீர்மானத்தை மாற்றி எழுதவே முடியாது. எந்த நகரமன்ற கூட்டத்தில், வாகனம் வாங்குவது சம்பந்தமாக தீர்மான சர்ச்சை நடக்கிறதோ, அதே கூட்டத்தில், தண்ணீர் வண்டி பழுது பார்க்கும் செலவு விஷயமான பொருள் எண்: 13-க்கு விவாதம் நடந்தது.

“பழுதடைந்த அந்த வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் கூட இல்லையென்றும், எனவே இதற்கு இவ்வளவு தொகை செலவழிப்பதை விட, புது வாகனம் வாங்கலாம் என்றும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார். தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், புது வாகனம் வாங்கிட table agenda மூலம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தனர்”. (C&P) இந்த இணையதளத்தின் செய்தி எண்: 8410.

ஆனால், இந்த செய்திக்கு மாற்றமாக, மன்றம் அனுமதிக்கிறது என்று தலைவி மினிட் புத்தகத்தில் எழுதினார் என்பதை இந்த லிங்கில் காணலாம். http://123.63.242.116/Kayalpattinam/theermana%20apr%202012%2027.04.12.pdf

மீண்டும் அதே பொருள் குறித்த விவாதம் 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்றது. அந்த கூட்டம் பற்றி இதே இணையதளத்தில் செய்தி எண்: 9565- ல் பொருள் எண்: 24 க்கு
“பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில் கடந்த கூட்டத்தில் எவ்வாறு தீர்மானம் மாற்றியெழுதப்பட்டது என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேள்வியெழுப்பினார். அதே கேள்வியை 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகுவும் வலியுறுத்தினார். அன்றைய கூட்டத்தில் இதுகுறித்து ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே கருத்து தெரிவித்ததாகவும், கூட்டத்தில் பங்கேற்ற இதர உறுப்பினர்கள் எவரும் இவ்விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். .” (C&P)

ஏப்ரல் மாத கூட்டம் பற்றிய செய்தியில் இந்த இணையதள நிருபர் தெரிவித்த தகவல் சரியா? அல்லது “இதர உறுப்பினர்கள் எவரும் இவ்விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று சொல்லும் நகர்மன்றத் தலைவர் தகவல் சரியா? என்று ஆதம் சுல்தான் காக்கா மற்றும் நடுநிலையானவர்கள் தீர்மானிக்க விட்டு விடுகிறேன்.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [18 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39660

தம்பி, ஹாமீத் ரிபாய், சகோதரர் ஜாவித் நசீம் அவர்களை பற்றி தெரிந்திருந்தால், நான் ஏன் விளக்கம் கேட்க போகிறேன். உங்களை பற்றியோ என் கருத்துக்கு மறுப்பு கொடுக்கும் மற்றவர்கள் பற்றியோ விவரம் கேட்டதில்லை. அது எனக்கு தேவையில்லை. கருத்துக்கு மாற்று கருத்து சொல்பவர் என்று எடுத்துக் கொண்டுள்ளேன். மேலும் இந்த விஷத்தில் சம்பந்தம் இல்லாமல் என் பெயரை இழுத்ததனால், விபரம் கேட்கிறேன். அவர் யார் என்று உங்கள் பதிலிலும் சொல்லவில்லை. மேலும் அவர் வழமையாக கருத்து பதிபவரல்ல என்பது “இவரின் பிற கருத்துக்களை காண இங்கே அழுத்தவும்” என்ற பகுதியில் பார்த்தால், இவர் எப்போது, எந்த தலைப்புகளில் கருத்து பதிந்துள்ளார் என்பது தெரியும்.

“அபூரஹ்மத்’ என்ற பெயரில் கட்டுரையே எழுதினார்கள். ………………..அதன் கீழும், மேலும் பல கருத்துக்களை தாங்களும் பதிந்து வந்துள்ளீர்களே...? அப்போதெல்லாம் விபரம் கேட்கத் தோன்றவில்லையோ?” (C&P)

அவர்கள் எந்த புனைப்பெயரில் கட்டுரை/கருத்து பதிந்தால் எனக்கென்ன? என்னை சீண்டாதவர்களை பற்றி நான் ஏன் விளக்கம் கேட்க வேண்டும். அந்த கட்டுரை/கருத்தில் உடன்பாடு /மாற்று கருத்து இருந்தால் என் கருத்தை தெரிவிப்பேன்.. “இந்த இணையதளம் ஒரு கருத்தாளர் யார் என அறியாமல் கருத்துப்பதிவுக்கு அனுமதிப்பதும் இல்லையே...?” (C&P). அவர் புனைப்பெயரில் எழுதினார் என்று நான் சொல்லவில்லை.

“MEGA நோட்டீஸ் என்ன பத்திரிக்கையா? இரு தரப்பு செய்திகளையும் போட???” (C&P) அது தான் தெரியுமே, “ஜால்ரா அமைப்பு” என்று.

இந்த நிலம் கடலில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் இருக்குமா? ஆனால் DCW நச்சு ஆலை அதன் நச்சு அமிலங்களை எங்கிருந்து (எவ்வளவு தூரத்தில்) கலக்கிறது? அல்லது அந்த நச்சு ஆலை வெளியிடும் அமிலங்கள் எந்த இடத்தில் இருந்து நச்சுத்தன்மையாக மாறுகிறது? என்ற என் கேள்விக்கு பதிலை சொல்லாமல், “இந்த நிலம் கடலில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் இருக்குமா?” C&P என்ற வரியை மட்டுமே எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.

“இந்த அறிவுப்பூர்வமான (???) கேள்விக்கு உங்களுக்கு அப்போதே முகநூலில் பதில் கூறப்பட்டதே? அதற்குள்ளே மறந்துவிட்டீர்களா காக்கா...?” (C&P) “ஒட்டி! ஒட்டி!! ஒட்டினார் போல!!! அதாவது 0 மீட்டர்!!!!” (C&P) தம்பி, “புத்தி’சாலி” தனமாக பதில் கொடுத்துள்ளீர்கள் என்ற நினைப்பா? முகநூலில் என்ன பதில் சொன்னீர்கள்? என்று அடித்தல் திருத்தல் இல்லாமல் முழுமையாக இங்கே பதிந்தால் , முகநூலை பார்க்காத மற்றவர்களுக்கு விபரம் புரியும்.

அப்போ, கடலுக்கும் இந்த நிலத்துக்கும் இடையே ஒரு சென்ட் கூட தூரம் இல்லை. அதாவது தானம் தந்த இடம் (278/1) முழுமையும் CRZ வருகிறது. அப்படி தானே? முழுவதும் CRZ வரும் இடத்தையா இந்த அதிகாரிகள் தானமாக பெற்றார்கள்? மீண்டும் கேட்கிறேன், அந்த ஆலையின் கழிவுகள் எங்கிருந்து நச்சுத்தன்மை ஆகிறது? என்ற விளக்கம் மக்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும்.

“DCW தொழிற்சாலையினால் மாசு ஏற்படுகிறது! ஆய்வறிக்கை, மண் மற்றும் நீர் பரிசோதனை முடிவுகள் ஊர்ஜிதம்” (C&P) (இந்த இணையத்தின் செய்தி: 10907) மண் மற்றும் நீர் பரிசோதனை எங்கிருந்து எடுத்தார்கள்?

உங்களின் முந்தைய நோட்டிஸ் விடுவதற்கு 5 மாதங்களுக்கு முன்பே இந்த ஆய்வறிக்கை இதே இணையத்தால் வெளியடப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில் அந்த நச்சு ஆலையினால் மாசு ஏற்படுகிறது என்று சொல்லப்பட்ட பிறகும், “பிற்காலத்தில், அந்த ஓடை மாசுபட தான் காரணமில்லை என்று சொல்லும்” என்று எப்படி அப்பட்டமாக பொய் சொல்ல முடிந்தது.

“ஒவ்வொரு இடத்துலயா சாம்பிள் எடுத்து நாக்கில் வைத்து டெஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்களேன்...? (C&P) மேலும், “மொட்டைத் தலைக்கு எத்தனை வகையான பூவெல்லாம் சூட??? ஆசைய பாருங்களேன் ஆசைய...? காக்காக்கு” (C&P) )உங்களின் கருத்து எண்:31051) உங்களின் தரமான விமர்சனம் வெளிப்படுகிறது. நன்றி!

-சாளை.அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [18 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39661

1958-ம் ஆண்டு தீர்மானம் போட்ட MKT அப்பா அவர்கள், அந்த தீர்மானத்தை நிறைவேற்றாத போது, அதை ஏன் ஆதாரமாக சொல்கிறீர்கள் என்று கேட்டால், தம்பி ஹாமித் ரிபாய், “புத்தி’சாலி”த்தனமாக பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு, “என்னங்க ஆச்சி உங்களுக்கு...? நல்லா இருக்கீங்கன்னுல்ல நினைச்சிட்டு இருக்கிறேன்...? அவங்க ஏன் முயற்சி எடுக்கலேன்னு அவங்கட்ட அல்லவா நீங்க கேள்வி கேட்கணும்?” (C&P)

“அத மட்டும் இல்லீங்க, ஏழை, எளியவர் வரிப்பணத்தில் - சாலை வசதிகள், தெரு விளக்குகள் வசதி பெற்று, நிலங்களை அதிக விலைக்கு விற்று லாபம் அடைய துடிக்கும் தனவந்தர்கள் என்ற பெயரில் அலையும் நிலத் தரகர்கள் கூட்டம் வெற்றி பெறுகிறார்களா என்றும் சேர்த்தே பார்ப்போம் காக்கா! “ (C&P)

அதே ஏழை, எளியவர் வரிப்பணத்தில் தான், தனக்கு ரூ.8 லட்சம் செலவில் கார் வாங்க துடிக்கிறார். அதை பற்றி பேசுவதற்கு இந்த ஜால்ரா அமைப்புக்கு தைரியம் இல்லை. காரணம், தனது ‘கைப்பாவை’ தலைவியை எதிர்த்து எப்படி அறிக்கை விட முடியும்?

RTI-யில் கேள்வி கேட்டுக் கொண்டே இருங்கள். கேள்வி கேட்பதனாலேயே ஊருக்கு தேவையான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. நடந்ததைச் சொல்வதில் எனக்குத் தயக்கமெதுவுமில்லை!
posted by S,K.Salih (Kayalpatnam) [18 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39664

செய்திக்குத் தொடர்பில்லையெனினும், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதால், சூழல் கருதி அவை வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வெளியான - அப்துர்ரஸ்ஸாக் லுக்மான் காக்கா அவர்களின் கருத்துக்கு (கருத்து எண்: 39658) எனது விளக்கம்:-

(1) நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் வாங்க அப்போதைய 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் அவர்கள் கோரும் அக்கூட்டப் பொருள் ஏப்ரல் (2012) மாத கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அதை ஆதரித்து சிலரும், எதிர்த்து சிலரும் பேசினர் என்பதை செய்தியில் நான் பதிவு செய்துள்ளேன்.

அக்கூட்டத்தில், உறுப்பினர் ஏ.லுக்மான் அவர்கள் உட்பட சிலர் கலந்துகொள்ளவில்லை என்பதே எனக்கு நினைவு.

(2) “பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்த்தும், தலைவி தீர்மானத்தைத் திருத்திவிட்டார்” என்ற உறுப்பினர்களின் தற்போதைய வாதத்தை என்னால் ஏற்க இயலவில்லை.

காரணம், 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தேர்தல் முடிவுற்ற பின் மிக நெருக்கத்தில் நடைபெற்ற கூட்டம் அது. அப்போது தலைவர் - உறுப்பினர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் என குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை.

எனவே, ஒரு கூட்டப் பொருள் வாசிக்கப்படும்போது, அதை ஆதரித்தோ, எதிர்த்தோ உறுப்பினர்களால் பேசப்படும். பெரும்பான்மை உணர்வுகள் மதிக்கப்பட்டு, அதனடிப்படையில் தீர்மானம் இயற்றப்படும். (தனி வாக்கெடுப்பு நடத்தும் முறை அப்போது இல்லை.)

இது நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் வாங்கும் கூட்டப் பொருளுக்கு மட்டுமல்ல! தலைவர் - உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக விவாதத்திற்கு வரும் முன்பு வரை சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துக் கூட்டங்களின் அனைத்து தீர்மானங்களுக்கும் இம்முறையே கடைப்பிடிக்கப்பட்டது.

(3) ஒரு கூட்டப் பொருளை ஆதரித்தோ, எதிர்த்தோ உறுப்பினர்களைக் கையை உயர்த்தச் சொல்லி, இன்னின்னார் ஆதரவு, எதிர்ப்பு என்று மினிட் புத்தகத்தில் பதிவு செய்யும் நடைமுறை - கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து பிற்காலத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் 18ஆவது வார்டு உறுப்பினர் திரு. இ.எம்.சாமி அவர்களால் முன்வைக்கப்பட்டதாகவே எனக்கு நினைவு. அதனடிப்படையிலேயே இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

(4) வீடியோ பதிவு குறித்து குறிப்பிடும் சாளை அப்துர்ரஸ்ஸாக் லுக்மான் காக்கா அவர்கள், அக்காலகட்டத்தில் நானும், இன்னொரு இணையதள நிருபரும் படம் / வீடியோ எடுத்ததாகச் சொல்கிறார். அது உண்மையில்லை.

நானும், நண்பர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீயும் கூட்டங்களைப் படமெடுத்தோம் என்பது மட்டுமே உண்மை. வீடியோ எடுத்ததே - “தலைவி தீர்மானத்தைத் திருத்தி எழுதிவிட்டார்” என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பிறகுதான்.

(அவ்வாறு ஒரு கூட்டத்தில் நான் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது, 12ஆவது வார்டு உறுப்பினர் திரு. சுகு அண்ணன் அவர்கள் எனது கேமராவைப் பறிக்க முனைந்தது வரை வீடியோ காட்சியில் இடம்பெற்றிருக்கும்.

அந்த முயற்சியைத் தொடர்ந்தும் நான் வீடியோ பதிவு செய்ததைக் கண்ட - 18ஆவது வார்டு உறுப்பினர் திரு. இ.எம்.சாமி அவர்கள் எனது கேமராவுக்கு மிகவும் அருகில் முகத்தை வைத்துக்கொண்டு, “வீடியோ வேணாம்!” என பலமுறை சொன்னதும் அந்த வீடியோ பதிவில் அடக்கம்.

அதற்குப் பிறகுதான், காயல்பட்டணம்.காம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் படி இன்றளவும் வீடியோ பதிவு செய்து வருகிறது.)

“இத்தனை சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கிறதே...? இக்கருத்துக்களை முற்கூட்டியே சொல்வதற்கென்ன?” என்று கூட கேள்வியெழுப்பப்படலாம்.

இப்போதும் என் பெயர் இழுக்கப்பட்டிருக்காவிட்டால் நான் இக்கருத்தைப் பதிவு செய்யாமல் தவிர்த்தே இருப்பேன். என் கடமை செய்திகளை உள்ளது - உள்ளபடி வெளியிடுவது மட்டுமே! தேவையான நேரங்களில் கருத்துப்பதிவு செய்வதுமுண்டு. (பெரும்பாலும் இறப்புச் செய்திகளுக்கு இரங்கல் தெரிவிக்கவே நான் அதிகம் கருத்துப்பதிவு செய்திருப்பேன்.)

இவற்றையெல்லாம் ஏற்பதும், நிராகரிப்பதும் அவரவர் உரிமை. யாரையும் திருப்தி படுத்துவதற்காக சத்தியம் செய்யும் அளவுக்குப் போக எனக்கு எந்த அவசியமும் இல்லை.

சிலருக்கு வேண்டுமானால் இது பாரதூரமான விஷயமாக இருக்கலாம். என்னைப் பொருத்த வரை பார்த்துப் பார்த்துச் சலித்துப் போனவைதான் இவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved