Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:38:52 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15522
#KOTW15522
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 5, 2015
ப்ளஸ் 2 தேர்வுகள் இன்று துவக்கம்! தூ-டி மாவட்டத்தில் 19,736 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2747 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பன்னிரண்டாம் வகுப்பிற்கான அரசுப் பொதுத்தேர்வுகள் இன்று துவங்குகின்றன. இதில், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 736 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-

2015ஆம் ஆண்டு மார்ச் மேல்நிலை அரசுப் பொதுத் தேர்வு 05.03.2015 முதல் 31.03.2015 முடிய நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி 1.15 மணிக்கு முடிவடைகிறது. தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 165 பள்ளிகளிலிருந்து 8732 மாணவர்களும், 11004 மாணவிகளும் மொத்தம 19736 பேர் இந்ததேர்வை எழுத உள்ளனர். இதில் 15 மாற்றுத் திறனாளிகள் ஆவர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 10 இடங்களில் 24 மணி நேரமும் ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்புடன் வினாத்தாள் மந்தணக்கட்டுகள் பாதுகாக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனையின் படி தேர்வை சிறப்பாக நடத்தி முடித்திட கோட்டாட்சியர்கள், முதன்மைக்கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோரைக் கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தேர்வில் முறைகேடாக ஈடுபடும் மாணவர்களைக் கண்காணித்திட முதுகலை ஆசிரியர்கள் பறக்கும் படை உறுப்பினர்களாக 156 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுக்குரிய வினாத்தாள் கட்டுகளை மொத்தம் 17 வழித்தட அலுவலர்கள் மூலம் காவல்துறை பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் முதல்முறையாக மொழிப் பாடங்களுக்கு கோடு போட்ட விடைத்தாள்களும் மற்ற பாடங்களுக்கு கோடு போடாத விடைத்தாள்களும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தனித் தேர்வர்கள் 723 (442 ஆண்கள்மற்றும் 251 பெண்கள்) பேர்தேர்வெழுத புனிதசவேரியார் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி மற்றும் புனிததாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி , வ.உ.சிஅரசுமேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி, கம்மவார் மகளிர் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி ஆகிய தேர்வுமையங்களில ;ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.


இவ்வாறு அந்த செய்தியறிக்கை தெரிவிக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வாழ்த்துக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [05 March 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39479

இன்று ப்ளஸ் 2 தேர்வுகள் எழுதும் நமது மாணவ , மாணவி கண்மணிகளுக்கு எனது வாழ்த்துக்கள் .

இன்ஷா அல்லாஹு , நமது ஊரின் மாணவ , மாணவிகளில் ஒருவர் நமது மாநிலத்தின் அல்லது நமது மாவட்டத்தின் முதல் மதிப்பெண் பெற வல்ல நாயன் புரிவானாக .ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வெற்றிவிழா மேடையில் விரைவில்
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [05 March 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39480

அரசு பொது தேர்வு எழுத புறப்பட்ட அன்பு காயல் மாணவ மாணவிகளே,எந்த அச்சமும்,பதட்டமும் இல்லாமல் உங்கள் அனைத்து திறமைகளையும் கொட்டி தீர்த்து விடுங்கள். மேலான மதிப்பெண்களைப்பெற்று மாநிலத்திலேயே முதன்மையானவர்களின் பட்டியலில் உங்கள் அனைவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கிறது என்ற இப்பரணி புகழ் சாதனையை வென்றெடுப்பீர்களாக!

உங்களுடைய அயராத உழைப்பின் பயனுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனின் உதவியும் உறுதுணையும் எப்பொழுதும் உங்களுடன் இருக்கும்.அவன் ஒருவனின் சக்திக்கு ஈடு இணையாக வேறு எந்த சக்தியும் இல்லை என்பதே நம்முயிர் மார்க்க மாண்புமிகு நம்பிக்கையாகும்!

ஆகவே,உங்கள் அறிவார்ந்த திறமையையும் அந்த அல்லாஹ்வின் நம்பிக்கையையும் அகத்தில் நிறுத்தி அச்சமின்றி அனைத்து தேர்வுகளையும் அசால்ட்டாக எழுதி அசத்திடுங்கள் அன்புச்செல்வங்களே!

அரசுதேர்வு களத்தில் குதித்த அத்தனை அன்பு வீரர், வீராங்கணைகளுக்கும் இந்த ஆதம் சுலதானின் அன்பொழுகும் வாழ்த்துக்கள்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

வெற்றிவிழா மேடையில் விரைவில்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ALL THE BEST
posted by Aarif.O.L.M. (Colombo) [05 March 2015]
IP: 82.*.*.* Iceland | Comment Reference Number: 39492

May I take this moment to wish all students sitting for ur DECIDING CHALLENGE +2 examination on 5th March 2015.

May u all pass out with FLYING COLORS.

"All the best"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இந்த நாள் இனிய நாள்
posted by mackie noohuthambi (colombo) [05 March 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39493

தேர்வு நாள் எனபது எப்படி இனிய நாளாக இருக்க முடியும். பயமும் பதட்டமும் உள்ள நாள் என்றுதானே நாம் அறிந்து வைத்திருக்கிறோம் தெரிந்து வைத்திருக்கிறோம். நாம் வேண்டுதல்கள் செய்வோம் தர்மங்கள் செய்வோம். இறைவனிடம் கையேந்தி பிரார்த்திப்போம். ஆனாலும் அது நடக்காமல் எத்தனையோ பேர் தோல்வி அடைந்து விடுகிறார்கள். அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு கடவுளை திட்டுகிறார்கள், வீட்டை விட்டு ஓடுகிறார்கள், தற்கொலைகூட செய்கிறார்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்த தி ஹிந்து தமிழ் நாளிதழ் தேர்வு பற்றி தரும் விளக்கங்களை - தெளிவான விஷயங்களை அருமை மாணவ மாணவிகள் பார்வைக்கு விரிவாகதருகிறேன். படித்து பயனடையுங்கள்.

"ஊரிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று முதலாம் இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் +2, SSLC மாணவ மாணவிகளுக்கு எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் அவர்கள் பெயரால் வருடம் தோறும் வழங்கப்படும் மக்கி ஆலிம் நினைவு பரிசு 2015" உங்களுக்காக காத்திருக்கிறது.

உன்னால் முடியும் தம்பி

தெள்ளிவான திட்டம் - விடா முயற்சி - கடும் உழைப்பு - இறை நம்பிக்கையுடன் இணைந்த தன்னம்பிக்கை இவை நான்கும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம்தான். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved