Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:16:10 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15391
#KOTW15391
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 9, 2015
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் ஜன்சேவா விளக்கக் கூட்டம்! நகர மகளிர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3014 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“இந்தியாவில் வட்டியில்லா வங்கி அமைவதை நோக்கி..” என்ற இலக்குடன் பயணித்து வரும் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் காயல்பட்டினம் கிளை அமைப்பின் சார்பில், மகளிருக்கான ஜன்சேவா விளக்கக் கூட்டம், இம்மாதம் 07ஆம் நாள் சனிக்கிழமையன்று 19.00 மணி முதல், 21.30 மணி வரை, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஹாஃபிழ் ஸதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஜன்சேவா காயல்பட்டினம் கிளை தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் வரவேற்புரையாற்றினார்.

காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா - துவக்கவுரையாற்றினார். ஜன்சேவா செயல்திட்டங்கள் குறித்து, அதன் காயல்பட்டினம் கிளை பொருளாளர் ‘மாஷாஅல்லாஹ்’ தாவூத் விளக்கிப் பேசினார்.

‘ஜன்சேவா கடந்து வந்த பாதை’ எனுமு் தலைப்பில், சென்னை மற்றும் காயல்பட்டினம் ஜன்சேவா கிளைகளின் நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.இப்னு ஸஊத் உரையாற்றினார்.



தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில், கூட்டத்தில் பங்கேற்றோர் எழுப்பிய சந்தேகங்களுக்கு ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தின் தொழிலூக்க திட்ட ஆலோசகர் அப்துர்ரஹீம் விளக்கமளித்துப் பேசினார்.



நிகழ்ச்சியின் நிறைவில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல - பங்கேற்றோரில் பரிசுக்குரியோர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டனர்.



ஜன்சேவா காயல்பட்டினம் கிளை துணைத்தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜன்சேவா காயல்பட்டினம் கிளை அங்கத்தினருள் ஒருவரான எல்.டீ.ஸித்தீக் நெறிப்படுத்தினார். நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான மகளிர் பங்கேற்றனர்.

ஜன்சேவா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...எங்கே வட்டிக்கு எதிராக பேசும் உலமாக்கள்?
posted by mackie noohuthambi (colombo) [10 February 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39177

வட்டியின் கொடுமையில் இருந்து விடுபட குறைந்த பட்ச திட்டத்தில் ஜனசேவா என்ற வட்டியில்லாக் கடன் வங்கி நாடு முழுவதும் ஆரம்பிக்கப் பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

நமதூரில் இயங்கும் இந்த சேவையை நமதூர் மக்களே முழுமையாக புரிந்து கொண்டிருப்பதாக தெரியவில்லை. மார்க்க மேதைகள் இந்த விஷயத்தில் பட்டும் படாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

பத்வாக்கள் கொடுக்கும் விஷயத்தில் காயல்பட்டினத்தையே வெளியூர் உலமாக்கள் பொது மக்கள் பெரிதும் நம்பியிருந்த காலங்கள் உண்டு. இப்போது உண்மைகளை விளங்க வைக்க, சரி தப்பு பற்றி பேசி இந்த மாதிரி வட்டிக் கொடுமைகளில் இருந்து மக்களை பாது காக்க இது வரை ஜனசேவா பற்றிய பத்வா நம்மூர் மஹ்லரா, ஜாவியா ஆய்ஷா சித்தீக்கா,அரூசுள் ஜன்னாஹ், முஅஸ்கரூர் ராஹ்மான் உலமாக்கள் கொடுத்ததாகவோ அல்லது உலமாக்கள் இந்த வங்கியின் அவசியத்தை பற்றி பேசுபவர்களுடன் சேர்ந்து பொது மேடைகளில் பேசுவதாகவோ தெரிய வில்லை.

விவாதம் நடத்தி விழிப்புணர்வு நடத்த வேண்டிய இந்த முக்கியமான மார்க்க விஷயம் உலமாக்களால் கண்டுகொள்ளப் படாமல் போனால், பினான்ஸ் கம்பெனிகள், கந்து வட்டிக் கூடாங்களின் கொட்டத்தை அடக்க முடியாது.

ஜனசேவா சகோதரர்கள் ஒரு புள்ளி விவரத்தை நமதூர் வங்கிகளிலிருந்து பெறவேண்டும். எவ்வளவு நமதூர் மக்களின் நகைகள் வீடுகள் வங்கிகளில் அடமானத்தில் உள்ளது என்ற புள்ளி விவரத்தை அறிந்து மக்களுக்கு அறிவித்தால் ஜன்சேவாவின் அவசியம் பற்றி மக்கள் புரிந்துகொள்வார்கள்.

FIGURES SPEAK MORE THAN WORDS

பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட காவியங்கள் ஒவ்வொரு வரியாக தான் எழுதப்படுகின்றன. எனவே ஜனசேவா நிறுவனர்கள் சோர்வடைய தேவை இல்லை. காலப் போக்கில் இதன் தேவையை மக்கள் உணர்வார்கள்.

ஊர் முழுவதும் பரவலாக கூட்டம் ஏற்பாடு செய்யும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது அதன் வெற்றிக் கனிகளை உங்கள் கரங்களில் அல்லாஹ் தருவான். ஏனெனில் அல்லாஹ்வே சொல்கிறான்

YAMHAKULLAAHUR RIBAA . VAYURBISSADHAQAATH ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Fareed (Dubai) [10 February 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39181

I am supporting Mr.mackie noohuthambi kaka comments.Our Aalims should come forward and tell the truth and other reports about Janseva to public's through jumma prayers and other available medias


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [10 February 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39186

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்...இந்த அமைப்பு நமது ஊரை பொறுத்த வரைக்கும் ....அவசியம் தேவையானதே ...குறிப்பாகவே நம் ஊர் பெண்மணிகள் இந்த நல்லதோர் அமைப்பை பற்றி நன்கு தெரிந்து இருக்க வேண்டியது அவசியம் ......

ஆதலால் இது சம்பதமான ''விழிப்புணர்வு ''' நம் பெண்மணிகளுக்கு தேவையே....... ரொம்பவும் விரிவாக நம் பெண்மணிகள் இடம் போய் சேரும் விதமாக விழிப்புணர்வு செய்வது அவசியமே .....

இந்த அமைப்பின் நல்ல திட்டத்தை நாம் நல்ல முறையில் ஆதரித்து ...பயன் பெறுவது சிறப்பு .....

நம் சகோதரர் அவர்கள் குறிப்பிட்டது போன்று பேங்கில் '' உள்ள நகைகளை ...நம் மக்கள் பாதுகாத்து .....இது போன்ற அமைப்புகளில் பாதுகாப்பாக வைக்க உதவலாமே ........

வஸ்ஸலாம்

K.D.N.MPHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved