Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:15:03 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15302
#KOTW15302
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 29, 2015
எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தமிழாசிரியர் ஜோஸப் காலமானார்! ஜன. 30 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! (கூடுதல் தகவல்கள், படம் இணைக்கப்பட்டுள்ளது!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3810 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தமிழாசிரியர் ஜோஸப் செல்வராஜ், இன்று (ஜனவரி 29 வியாழக்கிழமை) காலை 08.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68.

அன்னாரின் உடல், ஆறுமுகநேரியிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜனவரி 30) காலை 10.00 மணியளவில், ஆறுமுகநேரி சுப்பிரமணியபுரம் புனித பவுல் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யப்பட்ட பின், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள சி.எஸ்.ஐ. கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

ஆசிரியர் ஆர்.ஜோஸப் செல்வராஜ், 1948ஆம் ஆண்டு பிறந்தார். எம்.ஏ., எம்.எட். பட்டதாரியான இவர், தனது 19ஆம் வயதிலேயே காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் இணைந்தார்.

அப்பள்ளியின் முதுநிலை பட்டதாரி தமிழாசிரியராகப் பணியாற்றிய அவர், 2007ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றார்.

ஆசிரியர் ஜோஸப் செல்வராஜுக்கு எஸ்தர் பர்னாந்து என்ற மனைவியும், சாமுவேல் (தொடர்பு எண்: +91 89737 28758), செல்வின் ஆகிய மகன்களும், ரூபி, ஜாஸ்மின், கெட்டி ஆகிய மகள்களும் உள்ளனர்.



தகவல்:
ஜித்தாவிலிருந்து...
சீனாஷ்


[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 22:42 / 29.01.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தமிழ் மீது ஆசையை ஏற்படுத்திய நல்லாசான்
posted by Hyder (Riyadh) [29 January 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39111

மிக துயரமான செய்தி

தமிழ் மீது ஆசையை ஏற்படுத்திய நல்லாசான்

கனீரென்ற குரலில்

" உறங்குகின்ற கும்பகர்ண உங்கள் மாய வாழ்வெல்லாம்
இறங்குகின்ற தின்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்;
கரங்கு போல விற்பிடித்த காலதூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக் கிடந்துறங்குவாய்"

என்று அவர் சொல்லியது இன்றும் காதில் ரீங்க்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி, திருநெல்வேலி என்று பேச்சுப் போட்டிக்கும், கட்டுரைப் போட்டிகும் ஐயா அவர்களுடன் சென்றது வாழ்க்கையின் முக்கிய தருணங்கள்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையை தருவானாக.

ஹைதர் அலி
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [29 January 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 39113

எனது தமிழ் ஆசான் ஜோசப் சார் அவர்களின் மரணம் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். அவர் பாடம் நடத்தும் பாங்கு மிக இனிமையாக இருக்கும்.

எனக்கு பேச்சுபோட்டியில், கட்டுரை போட்டியில் கலந்துகொள்ள குறிப்பு எடுத்து தருபவராக இருந்தவர்களில் முதன்மையானவர் ஜோசப் சார் என்பதில் இந்நேரம் நன்றியுடன் நினைத்து பார்கிறேன்.

அன்னாரின் குடும்பத்தினர் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Hearty Condolence
posted by A.M.Syed Ahmed (Jeddah - KSA) [29 January 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39114

அருமையான ஆசிரியர் , சிரித்த முகத்துக்கு சொந்தகாரர் ஜோசப் சார் அவர்கள் , அன்னாரின் குடும்பத்திற்கு அவர்களின் மாணவனாக எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்...

ஒரு சிறிய நினைவு.1986..

ஒருநாள் அவர்கள் எங்களுக்கு தமிழ் வகுப்பு எடுத்து கொண்டு இருந்தார்கள் , அப்போது எங்களை எழுத சொன்னார்கள்.... எழுதுவதில் சந்தேகம் வர ஒருமாணவன் எழுந்து சார் - எந்த "லா" போடுவது என்று கேட்டான் - அப்போது ஜோசப் சார் அவர்கள் ஏலே "பழத்துக்கு" வரும் "லா" போடுலே என்றார்...... அப்போது நான் எழுத்து சார் "கோழிகூட்டு " பழத்துக்கு வரும் "லா' வா? இல்லை "நாட்டு பழத்துக்கு வரும் லா வா" ? என்று கிண்டலாக கேட்டேன் - என்னை கிளாசில் இருந்து அடித்து துரத்தி விட்டார்.. பசுமையான நினைவுகள்... மீண்டும் சேர்த்துக்கொண்டார்..

உயர்த்து விட்டோம் நீங்கள் கொடுத்த கல்வியால்... உயிர் உள்ளவரை நினைப்போம் ஆசிரியர்களை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...joseph
posted by hylee (colombo) [29 January 2015]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 39116

அன்புமிக்க ஒரு ஆசான்."ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதளம் வரைக்கும் பாயும் "அவர் சொன்ன இந்த வரிகள் இன்றும் என் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by minhaj (hk) [29 January 2015]
IP: 14.*.*.* Hong Kong | Comment Reference Number: 39117

Very sad to know about Joesph sir's death. I remember him saying that "Do not throw curry leaves out of your food instead eat them as it has got health benefits"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கமுக்கமாய் கலாய்ப்பவர்!
posted by S.K.Salih (Kayalpatnam) [29 January 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39118

நல்லதொரு ஆசானை இழந்துள்ளோம். இவர் போன்றவரையெல்லாம் இக்காலத்தில் தேடித்தான் பெற வேண்டும்.

தமிழ்வழி வகுப்புகள் 3 பிரிவுகள் இருக்கும். ஆங்கில வழி வகுப்பு ஒரு பிரிவு. தமிழ் வழி வகுப்பு ஒவ்வொன்றுக்கும் ஒரு தமிழாசிரியர் இருப்பார். ஆங்கில வழியில் கற்கும் மாணவர்களை - மொத்தம் 30 பேர் எனில், பத்துப்பத்தாகப் பிரித்து, 3 தமிழ் வழி வகுப்புகளுக்கும் அனுப்பி விடுவார்கள், தமிழ் பாடத்தின்போது...

அவ்வாறாக, 06 முதல் 08ஆம் வகுப்பு வரை ஜோஸப் சார், பண்டிட் நாராயணன் சார், நேசமணி சார் ஆகியோரிடம்தான் தமிழ் கற்றேன். முதலிருவரிடமும் கூடுதல் வகுப்புகள் பாடம் பயின்றுள்ளேன். அவர்களுள்ளும் ஜோஸப் சாரிடம் கூடுதலாகப் பயின்றுள்ளேன்.

எனக்குப் பிடித்த (நான் பாஸ் மார்க் எடுத்த) இரண்டே பாடங்கள் ஒன்று தமிழ், மற்றொன்று ஆங்கிலம். தமிழுக்கு ஜோஸப் சார், நாராயணன் சார் என்றால், ஆங்கிலத்திற்கு மறைந்த திருமலை சார்.

பாடங்களைத் தாண்டி, இப்பெருமக்களிடம் நாங்கள் கடமையுணர்ச்சி, நேரந்தவறாமை, வாய்மை என பலவற்றைக் கற்றோம். தமிழாசிரியர்கள் இருவரிடமும் கூடுதலாக கண்ணியமான கேலி - கிண்டல்களையும் நன்கு கற்றோம்.

ஒரு வகுப்பில் ஜோஸப் சார் எங்களுக்கு செய்யுள் பாடம் எடுத்துக்கொண்டிருப்பார் - அவரது பாணியில்... அடுத்த வகுப்பில் பண்டிட் நாராயணன் சார் உரைநடை எடுப்பார்... ஜோஸப் சார் செய்யுள் பாடல் படிப்பதை அவர் அவருக்கேயுரிய தொணியில் நக்கல் செய்வார்... ஜோஸப் சார் இங்கிருந்து அதற்கு விடையளிப்பார்... இருவருமே நேருக்கு நேர் பேசாமல், வகுப்பிலிருக்கும் மாணவர்களிடம் பேசுவது போலவே சிலேடையாகப் பேசிக்கொள்வர்.

அந்த வேடிக்கை நிகழ்ச்சியிலும் கூட நாங்கள் நிறைய கற்றோம். ஆம்! ஒருவரைக் கேலி செய்வதற்குக் கூட என்ன அளவுகோல் என்பதற்கு அந்நிகழ்ச்சி முக்கிய சான்றாகும்.

என் மானசீக மரியாதைக்குரிய ஜோஸப் சார் அவர்களின் இழப்பால் வாடும் குடும்பத்தார் யாவருக்கும் இறைவன் நல்ல பொறுமையை வழங்கியருள்வானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [29 January 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39119

கவலையான செய்தி.

கருத்த மேனி, தடித்த உருவம், கம்பீர தோற்றம், சிம்மக் குரல், இலகிய மனது, சிரித்த முகம், அழகாக ராகத்துடன் படி பாடம் நடத்தும் பாங்கு... இப்படி இவர்களை நினைவு கூர்ந்து கொண்டே செல்லலாம்.

ஆசான் அவர்களின் மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிதுக் கொள்கிறேன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by M.Sulthan (Dubai) [29 January 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39120

எனக்கு பிடித்த ஆசிரியர் ஜோசப் சார்... நாங்கள் படிக்கும் போது எங்களுக்கு நல்ல ஆசானகவும் நல்ல நண்பராகவும் திகழ்ந்தவர் .... கைகளுக்கிடையில் கருப்பு பேக்கை வைத்திருக்கும் நபர்களை பார்க்கும் போதெல்லாம் என் நினைவில் வந்து செல்பவர் ஜோசப் சார் தான்... எல்லோரிடமும் நகைச்சுவையாக பேசக் கூடியவர் ....

அன்னாரின் குடும்பத்தினர் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இழந்துவிட்டோம் சார் உங்களை...!!!
posted by SK Shameemul Islam (Chennai) [30 January 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39121

கேட்கவே மிகவும் துயரமாக உள்ளது.

ஒரு மொழியை கற்பதினூடே ரசிக்கவும் முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை எமது உள்ளத்தில் விதைத்தவர் ஜோசெப் சார் அவர்கள்.

அவரது வகுப்பு நேரம் வந்தாலே வாடிப்போன முகாம்கள் செழிப்புறும்.

அவரும் சிரிப்பார். அனைவரும் சிரிப்பர். வகுப்பின் முடிவில் நல்லதொரு தமிழ் பாடம் நடத்தப்பட்டிருக்கும். என்னே அருமை அது!

இழந்துவிட்டோம் சார் உங்களை. பிரிவால் வாடும் குடும்பத்தவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக்க கவலையுடன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved