Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:45:39 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15283
#KOTW15283
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 27, 2015
காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு, தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் திடீர் வருகை! கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக நகர்மன்றத் தலைவரிடம் உறுதி!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3100 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அலுவல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள - தமிழக அரசு சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வலியுறுத்தலின் பேரில், காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு இன்று காலை 08.00 மணியளவில் திடீரென வருகை தந்தார். அவருடன், தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் திவாகரன், அதன் துணை இயக்குநர் டாக்டர் உமா, தமிழக சுகாதார திட்டப் பணிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிங்ஸ்டன் ஆகியோர் வந்திருந்தனர்.

அவர்களை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஜெஃப்ரீ ஆகியோர் வரவேற்றனர்.



மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, பிரசவ அறை உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., அவற்றின் செயல்பாடுகள் குறித்து தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.











மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகள் குறித்து, சிகிச்சைக்கு வந்திருந்த புறநோயாளிகளிடமும் அவர் விசாரித்தறிந்தார்.

மருத்துவமனைக்கு நிரந்தர பொது மருத்துவர் - மகப்பேறு மருத்துவர் நியமனம், ஆளில்லாப் பணியிடங்களுக்கு புதிய பணியாளர்கள் நியமனம்,

மருத்துவமனை வளாகத்தில் வெவ்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவப் பிரிவுகள் அனைத்தையும் இணைக்கும் வகையிலான மேற்கூரை அமைத்தல்,

தமிழக அரசின் மூலம் காயல்பட்டினத்தில் புற்றுநோய் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு,

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு, அரசு மருத்துவமனையிலேயே கீமோதெரபி சேவை,

கோமான் ஜமாஅத் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள இடத்தில், காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்டல்

உள்ளிட்ட கோரிக்கைகளை நகர்மன்றத் தலைவர், சுகாதாரத் துறை செயலரிடம் வழங்கினார்.







ஏற்கனவே, இவை குறித்து பல்வேறு தருணங்களில் தான் கோரிக்கை வைத்துள்ளதாகவும், விரைந்து பரிசீலித்து ஆவன செய்யுமாறும் அவரிடம் நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

அரசு மருத்துவமனையின் அனைத்து வளாகங்களையும் இணைக்கும் வகையில் மேற்கூரையமைத்தல் தொடர்பான நகர்மன்றத் தலைவரின் கோரிக்கை அடிப்படையில், அதற்கான திட்ட செலவு மதிப்பீட்டை மாவட்ட சுகாதாரத் துறை ஆயத்தம் செய்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேர நெருக்கடியுடன் கூடிய பல்வேறு அலுவல்களுக்கிடையிலும், நகர்மன்றத் தலைவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளதாகவும், பெற்றுக்கொண்ட அனைத்துக் கோரிக்கைகள் மீதான நடவடிக்கைக்கு, தான் அலுவலகம் சென்றதும் விரைந்து ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.

காயல்பட்டினம் மக்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “உணர்ச்சிப்பூர்வமானவர்கள்; மிகுந்த பாசமும், நெருக்கமும் காண்பிப்பவர்கள்” என்றார்.

நகர்மன்றத் தலைவரின் தந்தை பாளையம் இப்றாஹீம் குறித்துப் பேசிய அவர், “அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு பொதுநலப் பணிகளை முன்னின்று செய்த அவர், எளிதில் மறக்க முடியாதவர்” என்றார்.

இந்நிகழ்வின்போது, அரசு மருத்துவமனை மருத்துவர் ஹேமலதா, ஆரம்ப சுகாதார நிலைய துணை ஆய்வாளர் சோமசுந்தரம், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், அரசு மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

தமிழக சுகாதாரத் துறையின் செயலாளரான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., அரசுரத் துறையில் இணைந்த புதிதில் - 1990களில் ஆத்தூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காலகட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டதிலிருந்து தனது அரசுப் பணியைத் துவக்கியவர். ஆத்தூரில் வெள்ள நிவாரணப் பணிகளை அரசு சார்பில் முனைப்புடன் செய்தவர்.

அக்காலகட்டத்தில், வினாயக சதுர்த்தி ஊர்வலம் காரணமாக காயல்பட்டினத்தில் பதட்டம் நீடித்தபோது, எந்தப் பிரச்சினையும் ஏற்படாவண்ணம் அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு, இரு தரப்பினரும் அமைதியுடன் இயங்கிடச் செய்தவர்.

காயல்பட்டினத்தில் விபத்தில் இறந்த ஒருவரின் பிரேத பரிசோதனையின்போது ஏற்பட்ட பதட்டச் சூழலை சாமர்த்தியமாகக் கையாண்டு சுமூகமாக முடித்து வைத்தவர். இந்நிகழ்வு குறித்து, நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் அவரிடம் கூறியபோது, அந்நேரத்தில் நடந்த நிகழ்வுகளை முழுமையாக நினைவுகூர்ந்து, தனது நினைவாற்றலை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழத்தினார்.





கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, அங்கு மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய இவர், இறந்த பள்ளிக் குழந்தைகளின் தாய்மார்களுள் கருத்தடை செய்திருந்தோருக்கு மீண்டும் குழந்தை பெற தேவையான சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்தவர்.

காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [28 January 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39103

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்களின் கோரிக்கையை ஏற்று நம் ஊர் மருத்துவ மனைக்கு வந்து .....பார்வையிட்ட நம் அதிகாரியை பாரட்டுகிறோம் .......

இன்ஷா அல்லாஹ்....நம் ஊர் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி தர வேணும் என்பது தான் நம் யாவர்களின் எண்ணம் .....

நம் மரியாதைக்குரிய தலைவி அவர்கள் பல தடவைகள் நம் தமிழக அதிகரிகளிடம் மனு கொடுத்தும் ஏன் இன்னும் நம் ஊர் மருத்துவ மனைக்கு சரியாகவே ஒன்றும் நடக்காதது தான் மன வருத்தமே .....நிரதரமான ஒரு MD மருத்துவர் அவசியம் தேவையே ......

பொது மக்களின் உயிர் சம்பந்த பட்டது அல்லவா ......நாம் பொருத்து விட்டோம் இன்னும் கொஞ்சம் பொறுப்போம் ......மரியாதைக்குரிய இந்த தமிழக சுகாதாரத் துறை செயலர் அவர்களின் சொல்லை பார்ப்போம் ......நல்லது நடக்கும் ....என்கிற முழு நம்பிக்கை நமக்கு உண்டு ......

நம் ஊருக்கு அம்மா மருந்தகமும் தேவையே ...... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நல்லது நடக்கும் என்று நம்புவோமாக!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [29 January 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39112

நகராட்சி தலைவி அவர்களின் தொடர் முயற்சிக்கு கிடைத்த ஒரு ஆரம்ப நடவடிக்கை அறிகுறி. தலைவி அவர்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்து தேவைகளையும் அத்தருணத்திலேயே நிறைவேற்ற முடியாவிட்டாலும் மிக மிக அவசர அவசிய தேவைகளையாவது சுகாதார அதிகாரி உடனடியாக செய்யவேண்டும். செய்வார் என்று எதிர்பார்ப்போமாக.

ஏனெனில் அவர் நமதூரைப்பற்றி கூறிய வார்த்தைகள் அவரின் மனசாட்சிபடி உண்மை என்று நம்பினால்,

நமதூர் அரசு மருத்துவமனை விஷியமாக பலரும்,பல அமைப்புகளும் முயற்சித்துக்கொண்டிருக்கும் வேலையில், நம் நகரமன்ற தலைவி அவர்களின் தொடர் முயற்சின் தூண்டுதலின் காரணமாகவே சுகாதார அதிகாரி இங்கு வந்துள்ளதை நினைத்து தலைவி அவர்களுக்கு உள்ளப்பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் பல பாராட்டுக்குறிய நற்பணிகளின் இதுவும் ஒரு மேன்மைக்குறிய படிக்கட்டு!

தலைவி அவர்கள் முகியத்தேவைகளுக்குறிய முயற்சியை முனைப்படுத்தி வைத்து விட்டார்கள்,முடிவு யார் கையில் இருக்கிறது,ஆட்சியாளர்கள் கையிலா?அல்லது அன்று வந்த அதிகாரியின் கையிலா?ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். விடிவு வந்திடும் என்று நாமும் நம்புவோமாக!

அதுசரி, இந்த சாமு ஹாஜியார் அவரின் உருவத்திற்கேற்றவாறு உருண்டுகொண்டே ஊரை வலம் வருகிறாரே, ஊரின் வெள்ளப் பாதிப்பாக இருக்கட்டும் ,விபத்து பாதிப்பாக இருக்கட்டும், அன்றாடும் தேவை தேடும் ஒரு தனிமனிதனுடைய பாதிப்பாக இருக்கட்டும்,கந்தூரி கண்கவர் நிகழ்ச்சியாக இருக்கட்டும், கணக்கின்றிய காயல்நல சமூகபணி களமாக இருக்கட்டும் எந்த இடத்திலும் இலவம் பஞ்சுபோல் பறந்து வந்து ஒட்டிக்கொண்டு அவரது உன்னத சேவையைச் செய்யும் அந்த புண்ணியருக்கு நிகர் அப்புண்ணியரே, என்பதை எதையும் நன்றியுடனும் நடுநிலையுடனும் நோக்கும் நல் இதயத்தார்கள் ஏற்றுக்கொள்வார்கள்!

அவரது புண்ணியபணி மென்மேலும் தொடர்ந்து,அவரது சொந்த வாழ்விலும் பல வெற்றிகளை ஈன்று,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் என்றும் இன்புற்று வாழ்ந்துயர்வாராக ஆமீன்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved