Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:06:09 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15159
#KOTW15159
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 9, 2015
மறைந்த ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் உடல், சென்னை கிரஸண்ட் பள்ளி வளாகத்தில் நல்லடக்கம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4544 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

புகழ்பெற்ற தொழிலதிபரும், பல்வேறு கல்வி நிறுவனங்களையும் - பொதுநல அமைப்புகளையும் உருவாக்கியவரும், சேனா ஆனா (செ.அ.) என பரவலாக அழைக்கப்பட்டவரும், இ.டீ.ஏ. குழும நிறுவனங்களின் துணைத்தலைவரும் - கீழக்கரையைச் சேர்ந்தவருமான ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் என்ற புகாரீ செய்யித் அப்துர் ரஹ்மான் இம்மாதம் 07ஆம் நாள் புதன்கிழமையன்று 17.30 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

அன்னாரின் ஜனாஸா, நேற்று (ஜனவரி 08) வியாழக்கிழமை 11.30 மணியளவில், சென்னையிலுள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, 13.15 மணியளவில், சென்னை - வண்டலூர் கிரஸண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்திலுள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு, பள்ளியின் முன்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.



























இந்நல்லடக்க நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் உட்பட – பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில், 1927ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் நாளன்று - மர்ஹூம் செய்யித் முஹம்மத் புகாரீ - மர்ஹூமா யூஸுஃப் சுலைஹா தம்பதியின் மகனாகப் பிறந்தார்.

பல்வேறு கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வரும் சீதக்காதி அறக்கட்டளை, All India Islamic Foundation (அனைத்திந்திய இஸ்லாமிய நிறுவனம்), பி.எஸ்.அப்துர்ரஹ்மான் பல்கலைக் கழகம் உட்பட பல நிறுவனங்களை இவர் நிறுவி, நிர்வகித்து வந்துள்ளார்.

இ.டி.ஏ. குழும நிறுவனங்களை நிறுவிய முதன்மையானவர்களுள் ஒருவராகத் திகழ்ந்ததன் மூலம், உலகின் பல்வேறு நாடுகளில் தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்க முக்கிய காரணமாக விளங்கினார்.

இந்தியப் பிரதமர், தமிழகத்தில் அவர் காலத்தில் ஆட்சி செய்த அனைத்து முதலமைச்சர்களோடும் தொடர்பு வைத்திருந்தார்.

அவரது வாழ்வின் சரித்திரங்களை விளக்கும் அரிய படத்தொகுப்புகள் வருமாறு:-









குடும்பத்தினருடன்...



இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன்...



தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடன்...



தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன்...



தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுடன்...



தகவல் & படங்கள்:

சென்னையிலிருந்து...
S.K.ஷமீமுல் இஸ்லாம்
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்

பெங்களூருவிலிருந்து...
முஹம்மத் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நன்றியும் கண்ணீரும்
posted by பாளையம் சதக்கத்துல்லா (தமாம், சவுதி அரேபியா) [09 January 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38831

அல்லாஹ் இவருடைய நல்ல பணிகளை ஏற்று அவருடைய கப்ர் வாழ்கையை விசாலமாக்கி வைப்பானாக! சொர்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக!.

இவருடைய உதவி ஏதாவது ஒரு வகையில் தமிழக முஸ்லிம்களுக்கு சென்றடைந்து இருக்கும். அதுவும் நம்மூர் மக்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

1983ஆம் ஆண்டு, நானும் என் நண்பன் கலீல் ரஹ்மானும் (தேங்காய்பட்டினம்) பத்தாம் வகுப்பு முடித்து விட்டு கீழக்கரையில் உள்ள சதக் பாலிடெக்னிகில் படிக்க முயற்சி செய்து கொண்டு இருந்த நேரம். பெரியவர் BSA அவர்கள் என் சாச்சப்பா (துணி உமர்) அவர்கள் வீட்டிற்கு வந்த நேரத்தில் எங்கள் வீட்டிற்கும் வந்திருந்தார்கள். (LMS ஸாமு அப்பாவும் உடன் வந்திருந்தார்கள்). அச்சமயம் என் தாயார் சதக் பாலிடெக்னிகில் எனக்கு சீட்டு கிடைக்க BSA அவர்களிடம் உதவி கேட்டார்கள். அதற்கு அவர்கள் சதக் பாலிடெக்னிக் தனது கல்வி நிறுவனம் அல்ல என்றும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாக வாக்களித்து விட்டு சென்றார்கள்.

சிறிது நாட்களுக்கு பின்பு பாளையம்கோட்டையில் இருக்கும் முஹம்மது இஸ்மாயில் ITI யிலிருந்து எனக்கு அப்ளிகேஸன் ஃபாம் வந்தது. நான் அந்த ITI க்கு அப்ளை செய்யவுமில்லை, ஃபாமுக்கு பணம் கட்டவுமில்லை. பிறகு விசாரித்ததில், BSA அப்பாவின் உதவியாளர் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டேன்.

நான் அந்த கல்வி நிறுவனத்திலோ அல்லது BSA அவர்களின் கல்வி நிறுவனத்திலோ படிக்கவில்லை. இன்னும் அரபு நாட்டில் வேலை செய்தாலும், அவர்களின் தொழில் நிறுவனத்தில் வேலை செய்யவில்லை. ஆனாலும் ஏதாவது ஒரு வகையில் அவர்களின் உதவியை என் வாழ்வில் பெற்றுள்ளேன்.

இது போல மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு எல்லா தரப்பு மக்களுக்கும் உதவி செய்துள்ளார்கள்.

அவர்களுக்கு அனைத்து மக்களின் துஆ நிச்சயமாக கிடைக்கும். வல்ல அல்லாஹ் அவர்களின் குடும்பத்தாருக்கு மன அமைதியை அளிப்பானாக! BSA அப்பாவை கப்ரில் புது மாப்பிள்ளை போல் தூங்க வைப்பானாக! மறுமையில் ஜன்னத்துல் பிர்தெவ்ஸ் எனும் மேலான சுவர்கத்தை வழங்குவானாக!

கண்ணீருடன்
பாளையம் சதக்கத்துல்லா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. துஆ செய்கிறோம்
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [10 January 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38834

இன்ன லில்லஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.மனித நேயருடைய இழப்பு இந்த சமுதாயம் மட்டும் அன்றி அனைத்து சமுதாய மக்களுக்கும் உள்ள இழப்பாகும்.இந்த மனித நேயர் ,எல்லா மக்களும் கல்வி மற்றும் வேலையுலும் உயர்வு பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு,கல்வி நிறுவனங்களையும்,வேலை வாய்ப்புகளையும் கொடுத்த மாமனிதருடைய இழப்பு அனைத்து மக்களும் வருந்தகூடியதாக நிச்சயம் இருக்கும். எல்லாம் வல்ல அல்லாஹ் இப்படிப்பட்ட மனித நேயருடைய எல்லா பாவங்களும் மன்னிகபட்டு ஜென்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவன மாளிகைஇல் சேர்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [17 January 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38942

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் <<<

மர்ஹும் அவர்களின் அனைத்து பாவங்களையும் பொருத்து வல்ல இறைவன் .. அவனின் மிக சிறப்பான சுவன பதவியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.....

இறப்பின் பிரிவாழ் வாடும் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் வல்ல இறைவன் ''சபுரை என்னும் பொறுமையை அளிப்பானாகயும் ஆமீன்.

இந்த மிகவும் சிறப்பான ஒரு நல்ல மனிதரால் இன்று நம் நாட்டில் எவ்வளவோ குடும்பங்கள் சிறப்பு பெற்று வாழ்கிறது என்றால் அது அந்த மாமனிதருக்கே சேரும்....

நம் சிறப்பு மிக்க மர்ஹும் '' மாமனிதரால் எவ்வளவு பேர்கள் ஹஜ் / உமரா செய்து உள்ளார்கள் &..சிறப்பு மிக்க நம் நாயகம் சல்லலாஹு அவர்களின் ஜியாரத்து + ஹரம் ஷரிபை கண்னால் பார்க்கும் பாக்கியம் பெற்று உள்ளார்கள் ....எல்லோர்களின் எல்லா துவாவும் மர்ஹும் அவர்களுக்கே .....

கடல் கடந்து நம் மக்கள் நிறைய பேர்கள் நன்றாக செழிப்போடு இருக்கிறார்கள் என்றால் அதுவும் மர்ஹும் அவர்களின் நல்ல எண்ணத்தால் தான் ....

நிறைய பேர்களின் மனம் உகந்த துவா எப்போது இந்த மாமனிதருக்கும் & அவர்களின் மக்களுக்கும் உண்டு ..........

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved