Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:05:40 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15140
#KOTW15140
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 5, 2015
பயோகேஸ் திட்ட அமைவிடம் தொடர்பாக, ‘மெகா’ பிரசுரம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5680 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



உணவுக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பயோகேஸ் திட்டத்தைக் காயல்பட்டினத்தில் செயல்படுத்திட - தமிழக அரசு அனுமதி வழங்கி, ரூபாய் 90 லட்சம் நிதியொதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

காயல்பட்டினத்தில் இத்திட்டத்தின் அமைவிடம் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து பொதுமக்களுக்கு சரியான தகவல்களை அளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் ‘மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு - MEGA’ சார்பில் பின்வருமாறு இருபக்கப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது:-

[பிரசுரத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]





பயோகேஸ் திட்டம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

‘மெகா’ தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.A.C Salih (Chennai) [05 January 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 38756

சுய லாபத்தை கருத்தில் கொள்ளாமல் ஊர் பொது நலனை கருத்தில் கொள்ளுங்கள். நகராட்சியின் நிலத்தில் இத்திட்டம் வருவதை தடுப்பதில் இருந்தே உள்நோக்கம் புலனாகிறது.

எல்லா விஷயங்களிலும் முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டு ஆபிதா ஊருக்கு ஒன்றும் செய்ய வில்லை என்று பழியை அவர் மேல் போடுவது எந்தவிதத்தில் நியாயம்?

ஊர் மக்களே சிந்திப்பீர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பொய் பிரசாரம்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [06 January 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38759

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என்ற அபார நம்பிக்கை இவர்களுக்கு. இவர்களின் 25.10.2013 பிரசுரத்தை பார்த்தவர்களுக்கு புரியும்.

ஆற்காடு நகராட்சியில் நடைபெற்று வரும் பயோ கேஸ் திட்டம் பற்றிய செய்தி. இதே இணையதளத்தில் ஆற்காடு நகரமன்ற தலைவர் மற்றும் நகராட்சி பொறியாளர் ஆகியோரின் பேட்டி வெளியானது.

அதில் முக்கியமான கருத்துகள், "ஆற்காடு நகராட்சியில், குப்பைகளைக் கொட்டுமிடம் - பயோகேஸ் ப்ளான்ட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது... " (C&P)

"இந்த பயோகேஸ் திட்டத்தைச் செயல்படுத்திட தமிழகத்தில் பல்வேறு நகராட்சிகளுக்கு அரசால் அனுமதியளிக்கப்பட்டுள்ளபோதிலும், ஆற்காடு நகராட்சி மட்டுமே இத்திட்டத்தைத் துவக்கி, வெற்றிகரமாகச் செயல்படுத்தி, முன்னோடியாகத் திகழ்கிறது... " (C&P)

ஆற்காட்டில் குப்பை கொட்டுமிடம் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஆனால், நமதூரில், 5 கி.மீ தாண்டினாலே அடுத்த ஊர். அந்த ஊரில் நமதூர் குப்பையை கொட்ட அனுமதிப்பார்களா?

அடுத்தது, பல நகராட்சிகளில் இந்த திட்டம் அமைக்க அனுமதிக்கப்பட்ட போதும், ஆற்காட்டில் மட்டும் தான் வெற்றிகரமாக செயல்படுத்துப்டுகிறது. ஆக, மற்ற நகராட்சிகளில் இந்த திட்டம் 'தோல்வி திட்டம்' என்பது அவரின் ஒப்புதல் பேட்டி.

அடுத்து, நில விலையேற்றம். இதே தகவல்தான் இவர்களின் முந்தைய பிரசுரத்திலும் இருந்தது. அப்போது, அவர்களிடம் நான், குப்பை கொட்டும் dump yard பக்கத்தின் நிலத்தின் விலை ஏறும் என்ற concept பற்றி கேட்ட கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை. இந்த பிரசுரம் உட்பட.

அடுத்தது, இந்த சாலை அமைப்பு மற்றும் மின் கம்பம் நடுதல். இதிலும் இவர்களின் அப்பட்டமான பொய். அந்த இடத்தை நேரில் சென்று பார்த்து அதன் தூரம் எவ்வளவு என்று ஆராய்ந்தவன் நான். இவர்களின் கூற்றி படி, "கடையக்குடி (கொம்புதுறை) யிலிருந்து பல கி.மீ. தூரத்தில் இருக்கிறதாம். இந்த அமைப்பிலிருந்து யாராவது ஒருவர் இந்த இடத்தை நேரில் பார்த்திருப்பார்களா?

ரூ. 5 லட்சத்தில் இந்த இடத்துக்கு அரை கி.மீ மட்டுமே சாலை அமைக்க (அதுவும் சரல் சாலை) ஆணையர் அனுமதி கோருகிறார். அதற்கான நிதி கூட, நகராட்சி நிதி இல்லை. "திடக்கழிவு மேலாண்மை திட்ட" த்திற்காக தமிழக அரசு ஒதுக்கிய நிதி.

அடுத்து, குப்பை கொட்டும் இடத்தை சுற்றி "Buffer Zone" அமைப்பது. இப்படி "Buffer Zone" அமைத்தால், பக்கத்து நிலத்துக்காரார்கள் எந்த கட்டிடமும் கட்ட தடை செய்தல். அப்படி ஒரு சூழல் வந்தால், பக்கத்து நிலத்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தில், தடை உத்தரவு (stay) வாங்குவார்கள். இந்த திட்டம் முடங்கி போகும் என்ற "ரொம்ப நல்லெண்ணம்". இவர்களின் இந்த சதி திட்டம் அறிந்து தான், அதற்கு நகரமன்ற உறுப்பினர்கள் அனுமதி வழங்கவில்லை.

சரி, இப்போது குப்பை கொட்டும் இடத்தை சுற்றி "Buffer Zone" இருக்கிறதா? என்றால் இல்லை. அப்போ, இந்த இடத்துக்கு மட்டும் "Buffer Zone" எதற்கு?

டிசம்பர் மாத கூட்டம் நடைபெற்ற (31-12-2014) ஆண்டு, L.F.Road பகுதியை சார்ந்த சமூக ஆர்வலரும் ஹாங்காங் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர், ஹாஜி. A.S.ஜமால் மாமா அவர்கள் தலைமையில் சிலர், நகர்மன்றத்துக்கு வந்து ஆணையரிடம், "தற்போது குப்பை கொட்டப்படும் இடத்தில், குப்பையை எரிக்கின்றனர். அதனால், சுவாச பிரச்சனை மற்றும் துர்நாற்றம் ஏற்படுகிறது. அந்த பகுதியில் வசிக்க முடியவில்லை. எனவே, அங்கு குப்பை கொட்ட தடை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால், இந்த அமைப்பினர், ஊரின் நடுவில் (பப்பரபள்ளி) குப்பை கொட்டி அனைவரும் பாதிக்கட்டும். ஆனால், ஊருக்கு ஒதுக்குபுறமான சர்வே எண் 278-ல் வரக்கூடாது. காரணம், அந்த இடத்தை நன்கொடையாக கொடுத்தது, இவர்கள் எதிர்க்கும் முஸ்லிம் ஐக்கிய பேரவை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஹாஜி வாவு SAR அவர்கள்.

மொத்தத்தில், இந்த இரு திட்டங்களும் சர்வே எண் 278-ல் வருவது உறுதி. அப்படி அங்கு வரவில்லையென்றால், அந்த நிதி, அரசுக்கு திரும்ப சென்று விடும். அப்படி அந்த நிதி அரசிடம் திரும்ப சென்றால், அதற்கு முழு காரணம் நகர்மன்ற தலைவியும் அவரை 'ஆட்டிவிகும்' சுயநல, 'பாசிச' கும்பல் மட்டுமே. 'மக்கள்(?) முதல்வர்' அறிவித்த இந்த திட்டம் சர்வே எண் 278-ல் வர, உண்மையான அதிமுக தொண்டர்கள் போராட வேண்டும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Mohideen (Jeddah) [06 January 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38764

////அரசாங்கம் அனுமதி தர மறுத்த இடத்தின் மற்றொரு பகுதியை தான் இப்பொழுதும் நகராட்சிக்கு தானமாக தந்தார்.////

அனுமதி இல்லாத இடத்தை பிறகு எதற்கு தானமாக வாங்கினார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...கறுப்பாடுகள் யார்...?
posted by Mohammed Nooh K A (Sharafiyyah.Jeddah.SKA.) [06 January 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38765

"மெகா" இன்று நேற்றல்ல கடந்த 2 வருடமாகவே இது விசயமாக மக்களின் கவனத்திற்கு வைத்துக் கொண்டே இருக்கிறது.

சில சுயநல மற்றும் வெற்று கவுரவ ஆசாமிகளும் அவர்களின் அடிவருடிகளின் சூழ்ச்சியின் காரணமாக இந்த நல்ல திட்டமும் அதன் பலன்களையும் நாம் அனுபவிக்க முடியாமல் இருக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை பஷீர் (காயல்பட்டினம்) [07 January 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38767

ஆற்காட்டில் மட்டும் இந்த திட்டம் சக்ஸஸ். மற்ற இடங்களில் இது தோல்வி என எதை வைத்து அப்துர்ரஜ்ஜாக் சொல்கின்றார்?

மற்ற நகராட்சிகளில் இந்த திட்டம் தோல்வி என தானே முடிவிற்கு வரும் அப்துர்ரஜ்ஜாக் அவர்கள் தனது கருத்தின் இறுதியில் தோல்வியடைந்த திட்டத்தை நிறைவேற்ற அதிமுக தொண்டர்கள் ஏன் போராட அழைக்கின்றார் என தெரியவில்லை. தோல்வியடைந்த திட்டத்தையா தமிழக அரசு மாநிலம் முழுக்க முன்னெடுக்கின்றது ?

அடுத்த ஊரில் போய் ஏன் குப்பை தட்ட வேண்டும் ? நமதூரில் உள்ள அரசு நிலத்தில் தட்ட வேண்டியதுதானே? (C&P)

திட்ட அமைவிடத்திற்கு சரள் சாலையில் குப்பை ஊர்திகள் வர முடியுமா ? தார் சாலைதான் வேண்டும் என பின்னர் மெல்ல கோரிக்கைவரும். வராது என சொல்ல முடியுமா ?

குப்பை கொட்டும் இடத்திற்கு அருகில் உள்ள நிலங்களின் விலை ஏறாது என்றால் அந்த நிலத்திற்கு மதிப்பு குறைவு என்றுதானே பொருள். அப்படி மதிப்பு குறைந்த இடம் அது என்றால் அந்த இடைத்தடுக்கு நிலத்தின் ( buffer zone ) உரிமையாளர்கள் ஏன் நீதிமன்ற தடையாணை கோர வேண்டும் ? மதிப்பு இல்லாத இடத்தை பொது நோக்கத்திற்கு விட்டுக் கொடுப்பதில் என்ன சிக்கல் ?

ஒரு இடத்தில் இடைத் தடுக்கு மண்டலம் இல்லை என்பதற்காக மற்ற இடத்தில் வரக்கூடாது என்பது சரியான வாதமில்லை. சுற்றாடல் துறை இது போன்ற திட்டங்களுக்கு இடைத்தடுக்கு மண்டலம் ஏற்படுத்தவில்லையென்றால் இசைவு தருமா ?

ஏராளமான அரசு இடங்களும் புறம்போக்கு இடங்களும் இருக்க ஏன் தனியார் ஒருவர் நன்கொடையாக நிலம் வழங்க வேண்டும் ? என்ற தீராத வினாவிற்கு தனியாள் மீதான காழ்ப்புணர்வு என பழி போட்டு திசை திருப்புவது முறையில்லை.

நமதூர் செல்வந்தர் அவர்கள் நன்கொடை கொடுத்த இடத்தின் அருகில்தான் DCW ஆலையின் மாசு கடலில் கலக்கின்றது. இந்த நிலையில் உயிரி வாயு திட்டமும் அங்கு வருவது நலவு பயக்குமா ?

திட்ட அமைவிடத்தை நான் நேரில் சென்று பார்த்திருக்கின்றேன். அந்த இடம் கொம்புதுறை ( கடையக்குடி ) யிலிருந்து கிட்டதட்ட இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் ஒழுங்கான உள்கட்டமைப்பு இல்லாத இடத்திலேயே அமைந்துள்ளது.

உயிரி வாயு மின் திட்டத்திற்கான நன்கொடை இடத்தை பொது மக்கள் போய் பார்ப்பதற்கு மெகா அமைப்பினர் ஊர்தி வசதி ஏற்பாடு செய்தால் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரிய வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. காலுக்கு செருப்பா? செருப்புக்கு காலா??
posted by Hameed Rifai (jeddah ksa) [07 January 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38768

அஸ்ஸலாமு அலைக்கும்,

இப்போது நடக்கும் நாடகத்தின் மூலம், இவர்களின் நோக்கம் - குப்பை கொட்ட இடம் வழங்குவதல்ல; மாறாக, பயோகேஸ் திட்டத்தைக் கடத்திக் கொண்டு போய் அப்பகுதியின் நில விலையை தாறுமாறாக உயர்த்துவதுதான் என்பது - மெகாவின் 2013ஆம் ஆண்டு நோட்டீஸைப் பார்த்தவர்களுக்குப் புரியும். (பார்க்காதவர்கள் செய்தி எண் 12183இல் பார்க்கவும்.)

சாளை அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் காக்கா அவர்கள் கீழ்க்காணுமாறு கருத்து பதிந்துள்ளார்:

//ஆற்காட்டில் குப்பை கொட்டுமிடம் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஆனால், நமதூரில், 5 கி.மீ தாண்டினாலே அடுத்த ஊர். அந்த ஊரில் நமதூர் குப்பையைக் கொட்ட அனுமதிப்பார்களா? C&P //

வேடிக்கை என்னவென்றால், பயோகேஸ் ப்ளாண்ட்டும், குப்பை கொட்டும் இடமும் ஒரே இடத்தில்தான் இருக்க வேண்டும் என இவர் இதுநாள் வரை கூறி வந்தார். அது பொய் என்று ஆற்காடு நகராட்சி தெளிவுபடுத்துகிறது. இந்த உண்மையை மறைக்கவே இந்த பதிவு. நான் சொல்வது சரிதானா காக்கா?

//அவர்களிடம் நான், குப்பை கொட்டும் dump yard பக்கத்தின் நிலத்தின் விலை ஏறும் என்ற concept பற்றி கேட்ட கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை. இந்த பிரசுரம் உட்பட. C&P //

உண்மையில் 278இல் குப்பை கொட்டப்படப் போகிறது என்றால், அதனை ஒட்டியுள்ள இடங்கள் விற்பனையாகாதுதானே? பின்னே ஏன் buffer zoneக்கு இவ்வளவு எதிர்ப்பு? பேசாமல் அதற்கும் இடத்தை விட்டுவிட்டால், பிரச்சினை தீர்ந்ததே...? மக்களே! இப்போது புரிகிறதா இவர்களின் நாடகம்???

//ரூ. 5 லட்சத்தில் இந்த இடத்துக்கு அரை கி.மீ மட்டுமே சாலை அமைக்க (அதுவும் சரல் சாலை) ஆணையர் அனுமதி கோருகிறார் C&P//

இதைக் கூறும் சாளை அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் காக்கா, உண்மையில் அந்த இடத்திற்குச் சென்று பார்த்துவிட்டுதான் சொல்கிறாரா என்ற சந்தேகம் இப்போது எனக்கு எழும்புகிறது.

DCW கழிவுகள் கடலில் சேர்க்கப்படும் இடம் என்பதால் நான் பலமுறை இந்த இடத்திற்குச் சென்றுள்ளேன். வெகு தூரத்தில் தார் சாலை முடிந்து, பல கிலோ மீட்டருக்கு - மண் சாலைதான். நீங்கள் சொல்லும் - சரல் சாலை, முன்னாள் தலைவர் தந்த இடத்தில் இருந்து, மண் சாலையை இணைக்க மட்டும்தான்.

குப்பை கொட்டத் துவங்கினால், தினமும் பல முறை இச்சாலையை குப்பை வாகனங்கள் பயன்படுத்தும். பயோகேஸ் பிளாண்டுக்கு தினமும் தனியாக வண்டிகள் வரும். மண் சாலையில் இந்த வாகனப் போக்குவரத்து சாத்தியமா? பார்த்துக்கொண்டே இருங்கள்! அடுத்ததாக தார் சாலை கோரிக்கை வருகிறதா இல்லையா என்று!

அது மட்டுமல்ல!

“இரவில் மட்டும் இயங்கும் பயோகேஸ் பிளான்ட், காட்டில் தனியாக உள்ளது. ஆபத்து, பாதுகாப்பு இல்லை; பணியாளர்கள் செல்ல பயப்படுகிறார்கள்; கொம்புத்துறையைத் தாண்டி, பயோ காஸ் பிளான்ட் வரை தெரு விளக்குகள் இல்லை” என்றெல்லாம் புதிய கோரிக்கைகள் பிறக்கும். அதன் தொடர்ச்சியாக, புதிதாக - கொம்புத்துறை முடிவில் இருந்து, தற்போது காலியாக உள்ள சாலை வழியாக தெரு விளக்குக் கம்பங்கள் நட்டப்படும். நிலமும் கொள்ளை விலையில் படு ஜோராக நடக்கும். இதுதான் இவர்களின் திட்டம்! மக்கள் வரிப்பணத்தில் நிலச்சுவான்தார்களுக்கு (மட்டும்) லாபம். இதுதான் இவர்களின் நோக்கம்.

ஏமாந்தது போதும் மக்களே. சட்டப் படி குப்பைகள் கொட்ட BUFFER ZONE அவசியமா, இல்லையா? BUFFER ZONE இல்லாமல், குப்பைகள் கொட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்குமா? இந்த கேள்விகளுக்கான பதிலில்தான், இவர்களின் கபட நாடகத்தின் உண்மை மறைந்துள்ளது.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மெகா பருப்பு எங்க கிட்டெ வேகாது....
posted by ஹிஜாஸ் மைந்தன். (சிங்கப்பூர்) [07 January 2015]
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 38770

அப்ப அது பஞ்சாயத்து... புள்ளி மாத்துறதுக்கும், பைப்புக்கு பணம் கட்டுறதுக்கும், கல்யாணம் கந்தூரின்னு வந்தா ரோட்டோரம் சுண்ணாம்பு போடுறதுக்கும் கானுக்கு பூச்சி மருந்தடிக்கிறதுக்கும், வீட்லெ விசேஷம்ன்னு வந்தா குப்பை கூளங்களை அள்ளுறதுக்கும்,தண்ணி (மாட்டு) வண்டிக்கு சொல்லுறதுக்கும், அடிபைப்லெ வழக்கத்துக்கு மாறாக தண்ணி வராட்டாலும் சரி, மலேரியா டையரியான்னு ஏதாச்சும் நோய் நொடி வந்ததுனுன்னாலும் சரி பறை அடிச்சு சொல்லுறதுக்கும் மட்டுந்தான் பஞ்சாயத்து போர்டுன்னு நாம நெனச்சிட்டிருந்த காலம்.

நாம நேரா அங்கே போறதுகூட கிடையாது. அதுக்குன்னு ஊர்லெ சில புரோக்கர்ங்க இருப்பாங்க அவங்க கமிஷன் வாங்கிட்டு நம்ம வேலையெ முடிச்சு தருவாங்க. நல்லவங்க ஊர் பெரியவங்க யாராச்சும் ஒருத்தர் சும்மா பேருக்காக தலைவரா இருப்பாங்க. பஞ்சாயத்து போர்டுலெ யாரு இருக்காங்க என்ன பண்ணுறாங்க அரசு திட்டங்கள் என்ன? சலுகைகள் என்ன? ஒரு ஈரமண்ணும் நமக்குத் தெரியாது. கூட்டம் நடந்திச்சா? தீர்மானம் போட்டாங்களா? ஆதரவு எத்தனை? எதிர்ப்பு எத்தனை? அதுக்கும் நமக்கு சம்பந்தமே இல்லைங்க...

மெம்பரா இருந்தவங்க ஓரளவுக்கு சம்பாதிச்சாங்க அரசியல் பலம் கொண்டவர்கள் துணைத் தலைவரா இருப்பாங்க வார்டு கவுன்சிலருக்கு வருமானமே பைப்லைன் கனெக்ஷன்லெதாங்க. பஞ்சாயத்துக்குப் போனாலெ பணம் கொடுத்தா தான் வேலை நடக்கும்ங்கிறது எழுதப்படாத சட்டம்ங்க. இப்படி பஞ்சாயத்து போர்டை போலீஸ் ஸ்டேஷன் போல நெனச்சு அவ்ளோ சீக்கிறமா யாரும் அங்கே போறதில்லீங்க... எழவு கொடுத்த எலக்ஷன்ன்னு மூனு வருஷத்துக்கு முன்னாடி ஒன்னு வந்திச்சுங்க.. ஊர்லெ இருக்கிற ஒரு அமைப்பு (ஊரையே கட்டிக்காக்குறதா இப்ப வரைக்கும் நாங்க நெனச்சிட்டிருக்கிற அமைப்பு) ஏதோ முச்சரிக்கை, முந்திரி பருப்புன்னு இந்த ஆபிதா அம்மாவை கையெழுத்துப் போடச் சொன்னாங்க அந்த புள்ள படிச்ச புள்ள பாருங்க அப்படியெல்லாம் போட மாட்டேன்னு வெளியெ கிளம்பிட்டாங்க.. வழக்கமா ஒரு டம்மி பீஸை செலக்ட் பண்ணி அவங்களுக்கு ஓட்டுப் போடச் சொன்னாங்க அப்ப வந்துச்சு வினை! மெகா பகான்னு ஏதோ ஒரு படை கிளம்பிச்சு கூட்டம் போட்டாங்க.. பலர் ஆட்டம் கண்டாங்க தலைவருக்கு போட்டி போடுறவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு பப்ளிக்கா வெளக்கம் கேட்டாங்க ஆங்கே ஆபிதா மட்டும் வந்து பேசினாங்க ஊர் மக்களுக்கு புரிய வச்சாங்க ஓஹோன்னு ஜெயிச்சாங்க.

அதுக்கப்புறம் தான் சனி சந்து பொந்துன்னு பார்க்காம வந்து நின்னு சிந்து பாட ஆரம்பிச்சுது... எங்களெ மதிக்காம எங்க ஜமாத்துக்களை எதிர்த்து ஜெயிச்ச தலைவிக்கு கொடச்சல் கொடுக்குறதுக்குன்னே நாங்க தயாராயிட்டோம். அவங்க என்ன சொன்னாலும் அதுக்கு நாங்க எதிர்ப்பு தெரிவிப்போம். மிரட்டுனோம் உருட்டுனோம், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தோம். இப்ப மட்டும் என்னங்க ஏக்கர் கணக்கா அரசாங்கத்துக்கு நிலம் இருந்தாலும் நாங்க அங்கே பயோகேஸை வர விடமாட்டோம். நிலத்துக்கு மதிப்பு ஏறுனாலும் சரி, நீளமா தார் ரோடு போட்டாலும் சரி எங்களுக்கு அதப்பத்திய கவலையே இல்லீங்க. DCW விரிவாக்கத்துக்கு அந்த அம்மா எதிர்ப்பு தெரிவிசாங்கன்னா அதை நாங்க ஆதரிப்போம். மக்களெப்பத்தி ஊரப்பத்தி எல்லாம் நாங்க சிந்திக்க மாட்டோம் எங்க அமைப்பின் மூக்கை உடைச்சு மண்ணு கவ்வ வச்ச அவங்களுக்கு எப்பவுமே நாங்க எதிர்ப்புதான். இப்ப புரிஞ்சுதா நாங்க யாருன்னு...?

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. பப்பரப்பல்லியில் Buffer zone அமைக்காததன் காரணம் என்ன?
posted by Habeeb Mohamed Nasrudeen (Qatar) [07 January 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38778

Buffer zone பற்றி விளக்கும் இந்த மெகா பெரியவர்கள், தற்போது குப்பைகளை கொட்டும் பப்பரப்பல்லியில் Buffer zone அமைக்காததன் காரணத்தையும் சேர்த்து விளக்கி இருந்தால், பப்பரப்பள்ளி பகுதியில் பாதிக்கப்படும் மக்களுக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும். கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற தந்திரம் இந்த பிரசுரத்தின் மூலம் மிக தெளிவாக விளங்குகிறது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. மக்கள் நலன் காக்க BAFFER ZONE அமைக்கப்பட வேண்டும்.. நாளை வேறு ஒரு ஜமால் மாமா இது குறித்து நகராட்சியில் முறையிட கூடாது..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [07 January 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38787

A.S.ஜமால் மாமா அவர்கள் தலைமையில் சிலர், நகர்மன்றத்துக்கு வந்து ஆணையரிடம், "தற்போது குப்பை கொட்டப்படும் இடத்தில், குப்பையை எரிக்கின்றனர். அதனால், சுவாச பிரச்சனை மற்றும் துர்நாற்றம் ஏற்படுகிறது. அந்த பகுதியில் வசிக்க முடியவில்லை. எனவே, அங்கு குப்பை கொட்ட தடை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். CP

சகோதரர் அப்துல் ரஜாக் அவர்களே..! பொதுநல காப்பாளர் A.S.ஜமால் மாமா அவர்கள் ஏன்...? எதற்க்காக...? நகராட்சிக்கு முறையிட போனார்கள்...? குப்பை கொட்டும் குயிருப்பு அருகில் சுவாச பிரச்சனை மற்றும் துர்நாற்றம் நோய் பரவும் அபாயம் இவைகளால் வீட்டில் நிம்மதியாக குழந்தை குட்டிகளுடன் சுகாதாரமாக வாழ / குடியிருக்க முடியவில்லை என்ற நியாயமான கேள்வியும் / நியாயமான காரணமும் தானே..!

இக்கேள்வியும் / காரணமும் சகோதரர் அப்துல் ரஜாக் ஆகிய தாங்களுக்கு உடன்பாடு இருக்குமானால் தற்போது தனவந்தர் ஒருவர் குப்பை கொட்டுவதற்கு நகராட்சிக்கு இலவசமாக அளித்த நிலத்தில் இனி A.S.ஜமால் மாமா அவர்களை போன்று பின்னாளில் அந்நிலம் அருகில் வசிப்பவர்களும் சுவாச பிரச்சனை மற்றும் துர்நாற்றம் நோய் பரவும் அபாயம் இவைகளால் நாளைய குடியேற்ற தலைமுறை அவதிபட கூடாது என்றும் அரசு விதிமுறைப்படியும் BAFFER ZONE அமைவதை நீங்கள் ஆதரித்து தான் ஆகவேண்டும்.. அல்லது சகோதரர் அப்துல் ரஜாக் ஆகிய தாங்களுக்கு A.S.ஜமால் மாமா அவர்கள் நகராட்சிக்கு முறையிட சென்றதற்கு உடன்பாடு இல்லாமல் போய்விடும் அல்லவா..!

தாங்கள் தங்களின் கருத்து பதிவின் மூலம் என்ன சொல்கிறீர்கள் என்று என்னால் என்ன உணரமுடிகின்றது என்றால்..! BAFFER ZONE குறித்த தீர்மானம் நகர்மன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றபடாமலேயே தனவந்தர் அளித்த நிலத்தில் நகரின் அணைத்து குப்பைகளையும் கொட்ட வேண்டும் - அப்பகுதியில் குடியேறும் எளிய நடுத்தர மக்கள் எதிர்காலத்தில் A.S.ஜமால் மாமா அவர்கள் மற்றும் அவர்களை போன்று பலர் எதிர்க்கொள்ளும் அதே சிரமத்தை சந்திக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்..! உங்கள் கருத்தை ஒருமுறை தாங்கள் திருப்பி படியுங்கள்..! அர்த்தம் இதுவே என புலப்படும்..சகோதரரே..! குப்பைகளால் தற்போது சந்திக்கும் நிலைமை நாளை வேறு நில பகுதி மக்கள் எவரும் சந்திக்க கூடாது என்பதால் தான் சர்வே எண் 278 இல் BAFFER ZONE அவசியமாகிறது சகோதரரே..! இதில் என்ன பிறர் மீது காழ்ப்புணர்ச்சி / ஈகோ வரபோகிறது - மெகா சார்பாக நகர்மக்களுக்கு விபரம் / விழிப்புணர்வு அளிப்பதில் என்ன தவறு சகோதரரே..

மக்கள் வரி பணம் மக்களின் உடல் நலம் காக்க BAFFER ZONE அமைப்பதே உகந்தது - நாளை வேறு ஒரு ஜமால் மாமா இது குறித்து நகராட்சியில் முறையிட கூடாது..!

ZONE அமைக்க பெற வேண்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...நல்லடியார்கள் வாழ்ந்த மண்ணில் இப்படி ஒரு சோதனையா ?
posted by Omer Abdul Qadir (Chennai) [08 January 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 38820

ஒன்று மட்டும் புரிகிறது.....நடந்து கொண்டிருப்பவை நல்லதற்கல்ல..மனம் கனக்கிறது ....நல்லடியார்கள் வாழ்ந்த மண்ணில் இப்படி ஒரு சோதனையா ?இவ்வுலகம் நிரந்தரம் இல்லை....மறுமைக்கான சோதனைக்கூடமிது.ஒவ்வொரு செயலும் கண்கானிக்கப்படுகிறது...தவறு செய்வது மனித இயல்பு....அதை தெரிந்தும் செய்வது என்பது ???அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

2:284. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. மறைக்கப்பட்ட உண்மைகள்!
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [09 January 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38832

இந்த அமைப்பினர், சில உண்மைகளை மக்களிடம் மறைக்கின்றனர். இரு வேறு திட்டங்கள் (குப்பை கொட்டுவதற்கு & பயோ கேஸ் திட்டம்) இருக்கும் போது, பயோ கேஸ் திட்டத்தை மட்டும் தூக்கி பிடிக்கும் காரமென்ன?

இவர்களின் நோட்டிஸில் குறிப்பிட்ட படி, பயோ கேஸ் plant வந்தால் விலை அதிகரிக்கும். ஆனால், குப்பை தொட்டும் (dumping yard) வந்தால் விலை ஏறாது. இந்த அமைப்பினர் & தலைவி கொண்டு வர நினைக்கும் plant இடத்தின் அருகில், தலைவி / அவர் குடும்பத்தார் அல்லது இந்த அமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு நிலம் இருக்கிறதா? அதன் விலையை அதிகரிக்கும் முயற்சியா? அவர்கள் குப்பை கொட்டும் இடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இந்த plant-க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் இப்போது புரிகிறதா?

பயோ கேஸ் பற்றி விலாவாரியாக நோட்டிஸ் விடும் இவர்கள், ஊரில் சேரும் குப்பைகள், தற்போது எங்கு கொட்டப்படுகிறது? என்று விளக்கி நோட்டிஸ் விடுவார்களா?

"உயிரி வாயு மின் திட்டத்திற்கான நன்கொடை இடத்தை பொது மக்கள் போய் பார்ப்பதற்கு மெகா அமைப்பினர் ஊர்தி வசதி ஏற்பாடு செய்தால் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரிய வரும்".(C&P) (சாளை பஷீர்)

பாராட்டுக்கள். வரவேற்க வேண்டிய கருத்து. ஆனால், சர்வே எண் 278-ஐ போய் பார்பதற்கு முன், தற்போது கொட்டப்படும் இடத்தையும் பொதுமக்கள் பார்பதற்கு MEGA அமைப்பினர் ஊர்தி வசதி செய்தால் மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியும்.

இந்த நோட்டிசின் முரண்பாடுகள். 2009-ல் இந்த இடத்தை வாவு ஹாஜி SAR அவர்கள் விற்க (இலவசமாக கொடுக்க அல்ல) முடிவு செய்தார். “ஆனால், அந்த இடம் அரசின் CRZ விதிமுறைகளை மீறி அமைந்திருந்ததால், அங்கு குப்பை கொட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தர மறுத்தது”. (C&P)

“வருடம் 2014, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தர மறுத்த அதே இடத்தின் மற்றொரு பகுதியைத்தான் அதே தனவந்தர் நகராட்சிக்கு தற்போதும் தந்துள்ளார்”. (C&P)

முன்பு கொடுக்க முன்வந்த இடம், CRZ பகுதி. ஆனால் இப்போது கொடுத்தது, CRZ பகுதிக்கு வெளியே. மேலும் முன்னர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தர மறுத்தது, அந்த இடம், CRZ பகுதியில் வருகிறது என்ற காரத்தினாலேயே தவிர, BUFFER ZONE அமைக்கவில்லை என்ற காரத்தினால் அல்ல.

இந்த இடத்தை ஏற்கனவே நமது மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தார். இந்த இணையத்தில் வந்த செய்தியை மீண்டும் தருகிறேன்.

"காயல்பட்டினம் தென்பாகம் வருவாய்க் கிராமத்தில், நில அளவை எண் 278இல் உள்ள தனிநபர் பட்டா நிலம் திடக்கழிவு மேலாண்மைக்காக இனாமாகப் பெற வாய்ப்புள்ளதாக நகராட்சி தலைவியால் கூறப்பட்டதால் தலம் பார்வையிடப்பட்டது. >> மேற்படி நிலமானது நகர்ப்புறத்திலிருந்து சுமார் 4.00 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

>> கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

>> மேற்படி நிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவியல் பாதை உள்ளது.

>> மேற்படி நிலத்தில் திட்ட செயல்பாட்டிற்காக 25.00 அளவுள்ள நிலப்பரப்பு குறைந்த அளவு விலை நிர்ணயத்தொகை அடிப்படையில் வழங்க சம்மதிப்பதாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது.

>> மேற்படி 25.00 சென்ட் அளவுள்ள நிலத்தினை தானமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

>> மேற்படி நிலப்பரப்பு கடற்கரை பகுதியினை ஒட்டி அமைந்துள்ளதால் “கடற்கரை மேலாண்மைப் பகுதி” வரையறைக்குள் (CRZ) அமையப்பெறாவண்ணம் திட்ட செயல்பாட்டிற்கான நிலம் தெரிவு செய்யப்படலாம்.

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கருத்தை மக்களுக்கு விளக்குவார்களா? தற்போது, பயோ கேஸ் திட்டத்துக்காக தேவையான 25 சென்ட் அளவுக்கு அதிகமாகவே 50 சென்ட் தானமாக கொடுத்துள்ளார்.

அந்த இடத்தில் பயோ கேஸ் plant அமைக்க, திருநெல்வேலி மண்டல நிர்வாக செயற்பொறியாளர் அனுமதி அளித்து, வேலை தொடங்குவதற்கு ‘பணி ஆணை’ (work order) கொடுக்கப்பட்டு பணிகள் ஆரம்பமாக இருக்கிறது.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved