Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:57:29 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15013
#KOTW15013
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 12, 2014
வங்கிக்கணக்கில் காஸ் சிலிண்டர் மானியம்: ஒரு பார்வை! (பாகம் 1)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4152 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10

------------------------------------------------------------------------



சமையல் எரிவாயுக்கான (LPG) மானியம் பொது மக்களுக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும் (Direct Benefits Transfer For LPG (DBTL) Consumers Scheme) என்ற முடிவினை அரசு கடந்தாண்டு எடுத்தது. சில மாற்றங்களுடன், 54 மாவட்டங்களில் - இவ்வாண்டு நவம்பர் 15 முதல் அமல் செய்யப்பட்ட இந்த திட்டம், தற்போது - ஜனவரி 1, 2015 முதல் - நாடு முழுவதும் அமல் செய்யப்படவுள்ளது.

ஏன் இந்த திட்டத்தினை அரசு முழு ஆர்வத்துடன் அமல்படுத்துகிறது?

நாட்டில் உள்ள 186 எரிவாயு அடைப்பு தளங்களில் (BOTTLING PLANTS) இருந்து 13,000 விநியோகிஸ்தர்கள் (DISTRIBUTORS) மூலமாக 16 கோடி இல்லங்களுக்கு, தினமும் (14.2 கிலோ எடைக்கொண்ட) 30 லட்சம் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு இல்ல இணைப்பும் தற்போது ஆண்டுக்கு 12 காஸ் சிலிண்டர் வரை - மானிய விலையில் பெறலாம். அதாவது - சந்தை விலை 750 ரூபாய் என்றால், பொது மக்களுக்கு 400 ரூபாய் விலையில் வழங்கி, பாக்கி 350 ரூபாயினை (இது தான் மானியம்) - காஸ் சிலிண்டர் நிறுவனங்களுக்கு அரசு வழங்குகிறது.

அனைத்து எரிவாயு வகைக்கும் சேர்த்து (மண்ணெண்ணை, டீஸல் போன்றவை) [TOTAL FUEL SUBSIDY] - 2013-14இல் 1,39,869 கோடி ரூபாய் மானியமாக அரசு வழங்கியது. LPG வகை மானியம் (46,458 கோடி) அதில் 35 சதவீதம் பங்கு வகிக்கிறது.



நேரடி மானியம் வழங்குதல் திட்டம் மூலம் அரசு என்ன சாதிக்க விரும்புகிறது?

வங்கி கணக்குகள் மூலம் நேரடியாக வழங்கப்படும் மானியம் மூலமாக அரசு தனது மொத்த மானிய பாரத்தை காலப்போக்கில் குறைக்க நாடுகிறது.

இந்த திட்டம் மூலம் -

*** ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புள்ளவர்கள் மானியம் பெறுவதில் இருந்து தவிர்க்கப்படுவார்கள்.

*** மானியம் நேரடியாக வாடிக்கையாளருக்கு வழங்கப்படுவது மூலம், பொது மக்களுக்கு என வழங்கப்படும் மானிய சிலிண்டர், வியாபார நிறுவனங்களுக்கு திருப்பபடுவது தவிர்க்கப்படும்.

மானியங்கள் என்பது பொருளாதார வசதி குறைந்தவர்களுக்கு என்பதால் - மானியம் பெறுவதில் இருந்து விலகிக்கொள்ளவும் இத்திட்டம் மூலம் அரசு வகை செய்துள்ளது.

அதற்கான படிவமான - படிவம் 5 யை நிரப்பி - இதுவரை 10,000 க்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும், மானியம் தேவையில்லை என பதிவு செய்துள்ளனர்.

அவர்களின் பெயர்களை - சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், தங்கள் இணையதளத்தில் - SCROLL OF HONOUR என்ற தலைப்பில் - வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிவம் 5 பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்



[தொடரும்]

------------------------------------------------------------------------

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஊழலுக்கு நானே காரணம்
posted by mackie noohuthambi (kayalpaattinam) [12 December 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38415

காஸ் சிலிண்டர் மட்டுமல்ல. எல்லா மானியங்களும் ஏழைகளை முன்வைத்தே அவர்கள் ஏழ்மை நிலையை நினைத்தே உருவாக்கப்படுகிறது. ஆனால் வசதி படைத்தவர்கள் எல்லோரும் அந்த மானியத்தைப் பெற்றுக் கொள்ள ஆசைப் படுகிறோம்.

உனக்கு என்னப்பா, நல்ல வசதியாக வாழ்கிறாய் என்று ஒரு சராசரி வசதிகளுடன் வாழ்பவன் இடம் சொல்லிப் பாருங்கள். அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்ல மாட்டான்.உடனே அவன் கொதித்து எழுந்து பேசுவான். எனக்கு எத்தனை பெண்பிள்ளைகள் தெரியுமா என் வீட்டை பார் அவன் வீட்டை பார். அவனை பார் இவனை பார் அவர்களெல்லாம் உன் கண்ணுக்கு தெரியவில்லையா என்பான்.

ஒரு நிகழ்ச்சி எனக்கு ஞாபகம் வருகிறது. தமிழ் நாட்டில் வெள்ளம். அன்றைய முதல்வர் ஒரு அறிக்கை விடுகிறார். வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் வாழ்பவர்களுக்கு நிவாரணமாக 1000/- பெற்றுக் கொள்ளலாம். உங்கள் வீட்டு கூப்பனைக் காட்டி தாலுகா அலுவலகத்தில் அந்த ரூபாயை பெற்றுக் கொள்ளுங்கள். இந்த அறிக்கையை பார்த்தவுடன் தாலுகா அலுவலகங்களில் கூட்டம் அலை மோதுகிறது. பண வசதி படைத்தவர்களும் அவர்கள் கூப்பன்களை கொடுத்து அந்த சலுகையை பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு இடத்தில கூட்ட நெரிசலில் ஒருவர் இறந்து விடுகிறார், இன்னும் சிலர் படு காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். இப்போது முதலமைச்சர் அந்த மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்ல போகிறார். இந்த படுகாயமுற்றவர்களை நலம் விசாரிக்கும் முதலமைச்சர் இவர்களிடம் கேட்கிறார், நீங்கள் வசதி இல்லாதவர்களா, நீங்கள் ஏன் அந்த கூட்டத்துக்கு போனீர்கள், அந்த சலுகை உங்களுக்கு உள்ளதில்லையே, வெள்ளத்தில் அகப்பட்டு வேதனைப் படும் ஏழைகளுக்கு தானே நான் அந்த சலுகையை அறிவித்தேன். 1000 ரூபாய்க்கு பதிலாக எத்தனை ஆயிரம் நீங்கள் செலவழிக்க வேண்டி வந்து விட்டது, கடவுள் தந்ததற்கு நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டாமா என்று ஒரு நீண்ட பிரசங்கமே செய்து முடித்து விட்டு வெளியே வந்தார் முதல்வர். முதலமைச்சர் அறிவித்தது கூட அவரது சுயநலம்தான். மக்களிடம் இதை சொல்லி அடுத்த தேர்தலில் ஒட்டு கேட்க முடியும் என்பது வேறு விஷயம். அவரவர்களுக்கு ஒரு மன சாட்சி உண்டு.

நபிகள் நாயகம் மிக சுருக்கமாக தெளிவாக சொன்னார்கள். ஒரு செயலை நான் செய்யும் போது அது தவறா சரியா என்று எப்படி தெரிந்து கொள்வது என்று நபி தோழர் ஒருவர் கேட்டார். நீ ஒரு செயலை செய்யும்போது அதை மற்றவர்கள் பார்த்து விடக் கூடாது என்று ஒளிவு மறைவாக செய்ய நீ நினைத்தால், அந்த செயல் தவறு என்று விளங்கி கொள். ஒரு செயலை செய்ய முற்படும்போது உனது மன சாட்சி நீ செய்வது தவறு என்று உன்னை உறுத்தினால் அது தவறு என்று தெரிந்து அதிலிருந்து விலகி கொள். இது மார்க்க விஷயம் என்பது மட்டுமல்ல, உலகில் அன்றாட நாம் சந்திக்கும் எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.

அரசு மட்டும் நேர்மையாக நடக்கிறதா என்று குறுக்கு கேள்வி கேட்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. நான் செய்யும் தவறுக்கு நான் மட்டுமே பொறுப்பாளி , மற்றவர்களை குறை கூறி நான் அந்த பொறுப்பிலிருந்து நீங்கி விட முடியாது என்ற உண்மையை எல்லோரும் நினைத்து செயல்பட்டால் - மானியம் - சூனியம் எதுவும் நம்மை ஒன்றும் செய்யாது.

இப்படி, நேர்மையாக - பொது வாழ்வில் தூய்மையாக வாழும் வாழ்க்கையை எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் நசீபாக்கி வைப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved