Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:03:06 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14970
#KOTW14970
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 3, 2014
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் யான்பு கூட்ட நிகழ்வுகள்!
செய்திஒய்.எம்.சாலிஹ் (மக்கா)
இந்த பக்கம் 3646 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா-ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக யான்பு வாழ் காயல் சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்காக சென்ற 28.11.2014 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் ஜித்தாவிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள யான்பு நகருக்கு மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் ஆறு வாகனங்களில் பயணமாயினர். வழியில் ரத்வா கம்பெனி பள்ளிவாசல் அருகில் காலை சிற்றுண்டிக்காக ஒதுங்கி, சகோ.A.M.செய்யிது அஹ்மது ஏற்பாட்டில் கொண்டு வந்திருந்த தேநீர் மற்றும் வடைகள் பரிமாறப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 12:00 மணியளவில் யான்பு வந்தடைந்தோம்.













ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக யான்பு நகர் வாழ் மன்ற உறுப்பினர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு ஜும்ஆ தொழுகைக்குப்பின் காயல் ஹவுசில் வைத்து வெகு சிறப்பாக ஆரம்பமானது. இனிய இந்நிகழ்விற்கு சகோ.முஹம்மது ஆதம் சுல்தான் தலைமை தாங்கினார். சகோ.அல்ஹாஃபிழ் ஸல்மான் ஃபாரிஸ் இறைமறை ஓதினார். சகோ.Z.A.சுல்தான் லெப்பை அனைவரையும் அகமகிழ வரவேற்றார். மன்றச்செயலர் சகோ.சட்னி S.A.K.செய்யிது மீரான் நிகழ்ச்சியை நெறிபடுத்தினார்.



தலைமையுரை:

"தொலை தூரத்திலிருந்து யான்பு வந்து நம் காயல் சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடுவது மிகுந்த சந்தோசமளிக்கிறதென்றும், இம்மன்றம் நமதூர் மக்களுக்கு செய்யும் பணிகளில் யான்பு காயலர்களின் பங்கு அளப்பரியதாக இருக்குமென்றும், நம் புண்ணிய நோக்கம் நிறைவேற நாம் ஒன்றிணைந்து பணிகளாற்ற வேண்டுமென்றும், நாம் என்ன செய்தோம், என்ன செய்கிறோம், என்ன செய்வோம் என ஆழ சிந்தித்து நம் பணிகளை முன்னெடுக்கவேண்டுமென்றும், மன்றத்தின் பணிகளுக்கு யான்பு காயலர்கள் என்றும் துணை நிற்பார்கள் நற்பணிகளை தொடர்ந்து செய்து அல்லாஹ்வின் அருளை பெறுவோம்" என்று தனது தலைமை உரையில் கூறி அமர்ந்தார் சகோ.முஹம்மது ஆதம் சுல்தான்.



அறிமுகவுரை:

தொடர்ந்து பேசிய மன்றத்தலைவர் சகோ.குளம் M.A.அஹ்மது முஹ்யித்தீன் மன்றத்தின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள், உதவிகள் குறித்த குறிப்பை நினைவூட்டிய அவர்; "நாம் அனைவரும் சேர்ந்து ஆரம்பித்த இம்மன்றம் கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் அறுபத்தைந்து இலட்சம் வரை உதவிகள் செய்து பயனாளிகளின் பிரார்த்தனைகளை பெற்றுள்ளதென்றும், இப்பாரிய உதவி நம் கைகோர்த்தலின் கூட்டு முயற்சியாலேயே சாத்தியமானதென்றும் 'இக்ரஃ' மற்றும் 'ஷிஃபா' அமைப்புகளின் தோற்றம் அதன் தேவை அவ்வமைப்புகளுக்கு நம்மன்றம் செய்து வரும் பங்களிப்புகள் குறித்தும் விபரமாக தெரிவித்த அவர்; இதுபோன்று ஒன்றுபட்டு செயல்பட்டால் மேலும் பல நல்ல பணிகளை நமதூருக்கு வழங்கலாமென்றும்" கூறினார்.





கருத்துரைகள்:

"கல்வி மற்றும் மருத்துவ தேவைகளின் அவசியத்தை வலியுறுத்தியும், மன்றம் செய்து வரும் சீரிய சேவைகளை நினைவூட்டியும், நம் மன்றப்பணிகளில் யான்பு காயலர்களின் பங்களிப்பு மிக அவசியமென்றும், நம் நகர் நலப்பணிகளுக்காக யான்பு சகோதரர்களை சந்திக்கும் எனது இந்த முதல் யான்பு பயணம் சிறப்பாக அமைந்துள்ளதென்றும்" கூறி அமர்ந்தார் மன்றத் துணைத்தலைவர் சகோ மருத்துவர் M.A.முஹம்மது ஜியாது.





"கனவிலும், நினைவிலும் நாம் நினைத்திராத அறப்பணிகளை ஆச்சர்யமூட்டும் வகையில் நம் மன்றம் செய்து வருகிறதென்றால் அது நாம் அளிக்கும் சந்தா என்ற சிறு தொகை மூலமும், நல்லுள்ளங்கள் அளிக்கும் நன்கொடைகள் மூலமும்தான். இவ்வாறான அறப்பணிகளை செய்வது நம் மன்றத்திற்கு கிடைத்த மகத்தான நற்பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.





மறுமை வெற்றியே நம் மன்றத்தின் குறிக்கோள். நம் மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கஷ்டத்தில் பங்கு பெற்று அதை நிவர்த்தி செய்வதின் மூலமும் அந்த வெற்றியை அடையலாம். நம் நகர் மக்களுக்கு நன்மைகள் செய்வதில் உலக காயல் நல மன்றங்களிடையே போட்டி நிலவுவது மகிழ்வளிக்கிறது. அவ்வாறு நன்மைகளுக்காக போட்டியிடுவதின் மூலம் அல்லாஹ்வின் உதவியால் ஆரோக்கியமான காயலை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் நம்மால் உணர முடிகிறது. உங்களின் மேலான ஆலோசனைகளையும், உங்களின் அன்பான ஆதரவினையும், உங்களின் தாரளமான உதவிகளையும் உரிமையோடு தருவீர்கள் என்ற ஆவலில் இங்கு வந்துள்ளோம். மன்றத்திற்கு ஊக்கமளிக்குமாறும், மன்றப் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற பிரார்த்திக்குமாறும் வேண்டி அமர்ந்தார்" சகோ.S.H.ஹுமாயூன் கபீர்.





"நம் மன்றம் கடந்து வந்த பாதை, அதன் பயணம், அதன் இலக்கு பற்றிய செய்திகளை தந்தவர்; ஒரு சிறு தென்னை தும்பால் எதுவும் சாதிக்க முடியாது. அது திரிக்கப்பட்டு கயிறானால் பெரிய கப்பலையே இழுக்கலாம். அதுபோல் எம்மோடு தோள் நின்று களப்பணிகளில் ஒன்று சேர்ந்தால் இன்னும் பல அறப்பணிகளை நாம் ஆர்வமோடு செய்யலாம். ஆகவே நன்கொடைகள், தர்மங்கள் இவைகளை மன்றப்பணிகளுக்காக தந்துதவுமாறு யான்பு சகோதரர்களை கேட்டுக்கொண்டார்" சகோ.S.S.ஜாஃபர் சாதிக். "நாமே அதிசயக்கும் வகையில் நம் மன்றம் மகத்தான பணிகளை செய்தது நம் ஒற்றுமையின் ஊடேதான். அறப்பணிகள் வெற்றியடைய ஒற்றுமை மிக முக்கியம். அந்த ஒற்றுமையின் மூலம் இன்னும் நாம் நிறையவே சாதிக்கலாம். சகோதரர்கள் தமது யோசனைகளை மன்றத்திற்கு வழங்குமாறு கேட்டு அமர்ந்தார்." சகோ.A.M.செய்யிது அஹ்மது.





"இக்ரஃ மற்றும் ஷிபா வின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார் சகோ.M.W.ஹாமீது ரிஃபாய். இக்ரஃ மூலம் உதவி பெற்று மேற்படிப்பில் வெற்றி பெற்ற ஒரு மாணவன் மன்றத்திற்கு நன்றிக்கடன்பட்டிருப்பதாக கூறிய செய்தியை நினைவுபடுத்தினார். பயனாளிகளின் பிரார்த்தனைகள் நம் மன்றத்திற்கு தெம்பாக உள்ளதென்றும், நாம் அளிக்கும் தர்மங்கள் நமக்கு மிகப்பயனளிக்குமென்றும், நாம் வழங்குவது சொற்பமாக இருந்தாலும் அதிலும் அல்லாஹ்வின் அருள் நிறைந்துள்ளதென்றும், ஆகவே நம்மால் இயன்ற அளவு நம் நகர் மக்களின் துயர் துடைக்க பாடுபடுவோம்" என்றும் கேட்டுக்கொண்டார்.





மனுக்கள் வாசிப்பு :

மருத்துவம் மற்றும் கல்வி உதவி வேண்டி வந்த சில மனுக்கள் வாசிக்கப்பட்டு பயனாளிகளுக்கு செயற்குழுவில் உதவிகள் வழங்கிடும் முறை குறித்தும், அது நிமித்தம் நடந்தேறும் கருத்து பகிர்வுகள் மற்றும் ஆலோசனைகள் பற்றியும் எடுத்துச்சொல்லப்பட்டது.





மன்ற செயல்பாடுகள் :

மருத்துவம் மற்றும் உயர் கல்விக்கான உதவிகள் வழங்கி வருவதோடு; நகரின் அவசியம் அறிந்து உதவுவதும், தாய்லாந்து காயல் நற்பணி மன்றத்துடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நமதூர் இறைஇல்ல இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கும் ரமலான் மாத சிறப்பு நிதியுதவி அளிப்பில் நம்மன்றம் பங்களிப்பு செய்ததும், KEPA சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நல அமைப்புகளுக்கு உதவி வருவதும், மேலும் இதுபோன்ற பல நகர் நலப்பணிகளில் நம் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.





மன்றபணிகளில் யான்பு காயலர்கள் இணைந்து சேவையாற்றுவதுபோல் ஜித்தாவிலிருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மலைப்பிரதேசமான அப்ஹா நகரில் வசிக்கும் 10 காயலர்கள் நம் மன்றத்தில் உறுப்பினர்களாகி மன்றத்தின் நலப்பணிகளுக்கு உதவியாக இருந்து வரும் செய்திகளை விபரமாக எடுத்துச்சொன்னார் மன்றச்செயலர் சகோ.சட்னி S.A.K.செய்யிது மீரான் கடந்த 10 ஆண்டுகளில் இம்மன்றம் வழங்கிய உதவிகள் குறித்த நிதிநிலை விளக்கத்தின் முழு விபரப்பட்டியலின் நகல் அனைவருக்கும் அளிக்கப்பட்டது.





கலந்துரையாடல்:

யான்பு மற்றும் ஜித்தா சகோதரர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றது. கேட்கப்பட்ட ஐயங்களுக்கு முறையே தெளிவுகள் தரப்பட்டது. தரமான அழகான ஆரோக்கியமான கருத்துக்களை பரிமாறி கொண்டார்கள். யான்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் காயல் சகோதரர்கள் திரளாக கூட்டத்தில் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.





நன்றியுரை:

சகோ.கலவா M.A.செய்யிது இப்ராஹிம் வந்திருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை கூறினார். சகோ.S.S.ஜாஃபர் ஸாதிக் துஆ , கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். பிறகு காயலின் பாரம்பரிய களரி சாப்பாடு மதிய உணவாக அனைவருக்கும் பரிமாறப்பட்டது.





நல்லதோர் உணவிற்குப்பின் செவிக்கு விருந்தாக அழகிய இஸ்லாமிய கீதங்கள் சகோ.M.O.முஹம்மது நூஹுவினால் இசைக்கப்பட்டது. தொடர்ந்து காயலின் சுவைமிகு இஞ்சி,ஏலம் தேநீர் விநியோகிக்கப்பட்டது. அன்போடு வரவேற்று கனிவாக உபசரித்த யான்பு வாழ் காயலர்களுக்கு மனமார்ந்த நன்றி கூறி காயல் ஹவுசிலிருந்து மாலை 5-00 மணியளவில் பிரியா விடைபெற்று, வழியில் YANBU ROYAL COMMISSION ல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள CHINA PARK ல் சிறிது அமர்ந்து ஒய்வு எடுத்து விட்டு ஜித்தா நோக்கி புறப்பட்டனர். வழியில் மக்ரிப், இஷா தொழுகைகளை நிறைவேற்றி இரவு 10-30 மணியளவில் இறையருளால் ஜித்தா வந்தடைந்தனர்.





கலந்தாலோசனை கூட்ட நிகழ்வுக்கு இட வசதியும் மதிய உணவு அனுசரணையையும் சகோ.M A.கலவா இப்ராஹீம் மிக சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்விற்கான எல்லாவித ஏற்பாடுகளையும் காயல் ஹவுஸ் சகோதரர்கள் நலமே செய்திருந்தனர். இப்பயணமும், இந்நிகழ்வும் சிறப்பாக நடந்தேற உதவி புரிந்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.





தகவல்:
அரபி M.I.முஹம்மது ஷுஅய்ப்

நிலைப்படங்கள்:
M.N.முஹம்மது ஷமீம்
சட்னி S.A.K.முஹம்மது உமர் ஒலி
சொளுக்கு S.M.அஹமது லெப்பை
காயல் நற்பணி மன்றம் - ஜித்தா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:... அல்ஹம்துலில்லாஹ்
posted by HUSSAIN HALLAJ (YANBU - KSA) [04 December 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38351

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ். மிக அழகான பதிவு. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.

ஹுசைன் ஹல்லாஜ்
யான்பு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Reபோற்றுதலுக்குறிய புண்ணிய பயணம்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [05 December 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38355

ஒரு விளையாட்டு பிள்ளைகளைப்போல் 400 கி.மீட்டர் தூரத்தை பயணித்து விடுமுறை நாளையும் துறந்து,யான்போ மக்களை பார்க்கவேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுக்காக மட்டுமா வந்தார்கள் ?.இல்லை இல்லவே இல்லை ,நமதூர் ஏழை எளிய,மக்களுக்காகவும் ஏழை நோயாளி,எளிய மாணவ மணிகளுக்காவும் அவர்களின் வறுமை வாழ்க்கைக்கு நாமுமொரு ஆல விழுதுபோல் உதவ வேண்டும், அவ்உதவியைப்பெரும் அவர்களின் இன்னல்கள் இலேசாகியது என்ற அந்த ஏற்றமிகு வார்த்தை வெளிச்சத்திற்கு வித்தூண்டும் முகமாக,

நம் காயல் நெஞ்சங்கள் எங்கிருந்தாலும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களை சந்திந்து நம் புண்ணிய பணியின் முக்கியத்துவத்தைக்கூறி அவர்களிடமிருந்து பெரும் உதவித்தொகையே மிகப்பெரிய பேரின்பம் என்ற எண்ணங்களை அன்று வந்திருந்த அனைவர்களின் அகத்திலும் முகத்திலும் பார்க்க முடிந்தது .அல்ஹம்திலில்லாஹ்!

உங்களின் போற்றுதலுக்குறிய இப் புண்ணியபணியின் பொருட்டால் எல்லாம்வல்ல அல்லாஹ் உங்களுக்கும் உங்களை உபசரித்து நீங்கள் வந்த நோக்கத்தை நிறைவு செய்த அத்தனை சகோதரர்களுக்கும் நீண்ட நெடிய வாழ்வையும் வளத்தையும் நலத்தையும் கொடுத்தருள வேண்டுமாய் என்னிதையம் கனிய வேண்டிக் கொள்கிறேன்.வல்ல அல்லாஹ் என் துவாவை கபூலாக்கித்தருவானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இறந்த நிலையில் கடல் பசு!  (3/12/2014) [Views - 4581; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved