Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:35:14 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14909
#KOTW14909
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 24, 2014
காயல்பட்டினம் பகுதியில் எவ்வளவு புறம்போக்கு நிலங்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்: அமைச்சர் உத்தரவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4221 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வடக்கிழக்கு பருவ மழையினால் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பெரிய அளவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று (ஞாயிறு) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார் IAS, மாவட்ட மூத்த அதிகாரிகள், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் உட்பட பிற உள்ளாட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் சண்முகநாதன் - தனியார் ஆக்கிரமிப்புகளால் தான் ஊர்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் துணிந்து அகற்ற வேண்டும் என்றார்.

மேலும் அவர் பேசியதாவது -

திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் திருவைகுண்டம் பகுதியில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. குறிப்பாக காயல்பட்டினம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் பகுதிகளில் ஊருக்குள் மழை நீர் தேங்கி நிற்கிறது.

காயல்பட்டினம் பகுதியில் பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் தண்ணீர் வடிந்து செல்ல வசதி இல்லாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரிகளுக்கு தொந்தரவு தரமாட்டார்கள். அதிகாரிகள் துணிந்து பணியாற்ற வேண்டும்.

காயல்பட்டினம் பகுதியில் எவ்வளவு புறம்போக்கு நிலங்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.


- என அமைச்சர் பேசினார்.



தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [24 November 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38271

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆக்கிரமிப்பை அகற்ற, நீதிமன்றம் கூட தடை விதிக்காது. அதே போல், நமதூர் மட்டுமில்லாமல் மாவட்டத்தில் அனைத்து இடங்களிளும் புறம்போக்கு நிலங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், "காயல்பட்டினம் பகுதியில் பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் தண்ணீர் வடிந்து செல்ல வசதி இல்லாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்". (C&P)

அமைச்சருக்கு யாரோ தவறான தகவல்களை கொடுத்துள்ளனர் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால், நமதூரில் ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் தேங்கி இருக்கவில்லை. முறையான வடிகால் வசதி இல்லாததனாலும், ஏற்கனவே இருந்த குளங்கள் தனியார் நிலத்தில் இருந்தவை, தற்போது அதன் உரிமையாளர்களால், வீடுகளாக ஆகி, நீர் போக வழியில்லாமல் போய் விட்டதே காரணம்.

இனி வரும் காலங்களில் வடிகாலுக்கு என்ன திட்டம் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்று பொறியாளர்கள் ஆய்வு செய்து நடைமுறைபடுத்த வேண்டும். இரண்டாம் பைப் லைன் திட்டம் வரும்போது, புதிய பைப் பதிப்பதற்காக சாலைகளை தோண்டும் போது, வடிகாளுக்கும் ஏற்பாடு பண்ணினால், ஓரளவு சரி செய்யலாம்.

நமதூரை சேர்ந்த நிஜாம் என்ற சகோதரர் ஒரு தளத்தில் பதிந்த கருத்து, "இப்போதைய பிரச்சினை என்னெவென்றால் ஒவ்வொரு தெருவுக்கும் உள்ள N.G.L எனப்படும் Natural Ground level தண்ணீர் ஓடும் விதமாக international Civil Engineering standard படி ஒரு மீட்டருக்கு ஒரு சென்டிமீட்டர் சாய்வு இருக்க வேண்டும். ஆனால் நிஜப்படி ஒரு தெரு மேடாகவும் இன்னொரு தெரு பள்ளமாகவும் உள்ளது. தொலைநோக்கில் நகராட்சி செய்ய வேண்டியது, ஒரு drainage consultancy ஒன்றை தேர்வு செய்து ஊரின் அனைத்து தெருவிலும் N.G.L ஆய்வு செய்து மழைநீர் தேங்காமல் ஓட என்ன என்ன செய்ய வேண்டும்? என்ற அறிக்கையை கொடுப்பார்கள்.அதன் அடிப்படையில் நமது எதிர்கால ரோடு திட்டங்களை அமைக்க வேண்டும்.

இரண்டாவது தற்போதைய மழை நீர் ஓடையின் நீளம் தற்போதைய கனமழையை சமாளிக்க போதாது. தண்ணீர் தேங்கும் இடங்களில் எல்லாம் மழைநீர் ஓடை அமைக்க வேண்டும் இந்த மழை நீர் கழிவு நீர் திட்டங்களில் பணியற்றிவன் என்பதால் நானும் என்னால் முடிந்த ஆலோசனைகளை தெருவிக்க தயாராக இருக்கிறேன்"(C & P ) .

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by nizam (abudhabi) [24 November 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38273

அரசியலுக்கு அப்பாற்பட்டு பாராட்டவேண்டிய அறிவிப்பு. நடைமுறைக்கு வந்தால் இந்த துயரம் மீண்டும் வருவது தடுக்கப்படும்.

மேலும் இப்போதைய பிரச்சினை என்னெவென்றால் ஒவ்வொரு தெருவுக்கும் உள்ள N.G.L எனப்படும் Natural Ground level தண்ணீர் ஓடும் விதமாக international Civil Engineering standard படி ஒரு மீட்டருக்கு ஒரு சென்டிமேடர் சாய்வு இருக்க வேண்டும்.

ஆனால் நிஜப்படி ஒரு தெரு மேடாகவும் இன்னொரு தெருவு பள்ள மாகவும் உள்ளது. தொலைநோக்கில் நகராச்சி செய்ய வேண்டியது ஒரு draninage consultancy (நான் இணையத்தில் தேடி கிடைத்தது Tirpod Consultancy chennai tripodconsultancy.com, contacy Arpudharaaj tel 4422254977 2)elagreenconsultants, ,elagreenconsultants.com tel Phone + 91- 98498 05166) ஒன்றை தேர்வு செய்து ஊரின் அணைத்து தெருவு N.G.L ஆய்வு செய்து மழை நீர் தேங்காமல் ஓட என்ன்ன என்ன செய்ய வேண்டும் என்ற அறிக்கையை கொடுப்பார்கள்.

அதன் அடிப்படையில் நமது எதிர்கால ரோடு திட்டங்களை அமைக்க வேண்டும்.

இரண்டாவது தற்போதைய மழை நீர் ஓடையின் நீளம் தற்போதைய கனமழையை சமாளிக்க போதாது. தண்ணீர் தேங்கும் இடங்களில் எல்லாம் மழைநீர் ஓடை அமைக்க வேண்டும்

இந்த மழை நீர் கழிவு நீர் திட்டங்களில் பணியற்றிவன் என்பதால் நானும் என்னால் முடிந்த ஆலோசனைகளை தெருவிக்க தயாராக இருக்கிறேன். எனது இமெயில் nizam_mohamed@hotmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் எங்கே..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [24 November 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38274

நகரில் சிலரை திருப்தி படுத்துவதற்காக நகர்மன்ற தலைவிக்கு எதிர்ப்பு புராணம் பாடுதல் / தனி நபர் புகழ் பாடுதல் அனைத்தையும் ஓரம் தள்ளி வைத்து விட்டு அமைச்சர் அவர்கள் கூறிய ஆக்கபூர்வமான (ஆக்கிரமிக்கப்பட்ட) புறம்போக்கு நிலங்கள் / நீர் ஓடைகளை மீட்க / நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம், கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த நகரில் எந்த அரசியல் கட்சி / பொதுநல அமைப்பு முன் எடுத்து செல்லும்..?

மேலும் இது விசியத்தில் நகர்மன்ற ஆணையாளர், தலைவர் மற்றும் உறுப்பினர்களை கலந்து ஆலோசனை செய்து ஆக்கிரமிப்பு நிலங்கள் / ஓடைகள் மீட்க ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்து எந்த அரசியல் கட்சியின் மூலம் அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்த முயற்சி நடக்கும்..! இதுவே நகர் மக்களின் எதிர்ப்பார்ப்பு..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved