Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:00:10 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14878
#KOTW14878
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 15, 2014
காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் வேண்டுகோள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3488 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் பருவ மழைக்காலத்தில் மேற்கொள்ளவேண்டும் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:

அன்பான காயல் நகர பொதுமக்களுக்கு வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்வதென்னவெனில்...

நம்நகர் பகுதியில் மிகஅதிகபட்சமாக மழை பெய்து வருவதால், ஆங்காங்கே மழைநீர் தேங்கிய வண்ணம் உள்ளது. அவைகளை அப்புறப்படுத்த நகராட்சி துரித நடவடிக்கை எடுத்துவரும் நேரத்திலும், சில இடங்களில் மழைநீர் தேங்கிநிற்கும் நிலையே உள்ளது.

இத்தருணத்தில் சுகாதாரத்தை பேணும் பொருட்டு, வீட்டில் சேரும் குப்பைகளை, தங்களது பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியின் உள்ளே போடும்மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

குப்பைத் தொட்டி இல்லாத பகுதிகளில் உள்ளவர்கள், மழைநீர் தேங்கியுள்ள நீர்நிலைகளில் குப்பைகளை போடாமல், தங்களது பகுதிக்கு குப்பை வண்டிகள் வரும் சமயம் கொடுத்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வீடுகளில் மழைநீர் தேங்கும் வகையில் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள்,தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், பயண்படுத்தப்படாமல் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஆட்டுரல் ஆகியவைகளை மழைநீர் தேங்காதவண்ணம் அப்புறப்படுத்தி, டெங்கு கொசு உருவாகுவதை தடுத்திட உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் வீட்டு கிணறு மற்றும் தொட்டிகளில் உண்டாகும் கொசுபுழுவை தடுக்கும் பொருட்டு, நகராட்சியால் மருந்து தௌிக்க அனுப்பப்படும் பணியாளர்களுக்கு முழுஒத்துளைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மழைகாலமாக உள்ளதால் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.

திறந்த நிலையில் விற்கப்படும் உணவு பண்டங்களை திண்பதனை தவிர்த்திடுமாறும், ஹோட்டல்களில் உணவு உண்பவர்களுக்கு காய்ச்சிய குடிநீரை வழங்குமாறு ஹோட்டல் உரிமையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

குழந்தைகள் தேங்கிய மழைநீரில் விளையாடுவதை தவிர்த்திட பெற்றோர்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...காயல்பட்டினம் நகராட்சி
posted by ISMAIL SUFI (Kayalpattinam) [15 November 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38164

அஸ்ஸலாமு அலைக்கும்.

காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் அவர்கள் மழைக்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்நெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். பொது நலன் கருதி வெளியிட்டுள்ள அறிக்கையை நாம் யாவரும் கவனித்து செயல்படவேண்டும்.

அதே நேரத்தில் மிகவும் பொறுப்புள்ளவர்கள் கவனிக்க வேண்டிய சில விசயங்களையும் அவர்கள் (சுகாதார ஆய்வாளர் மற்றும் கமிஷனர்) கவனத்தில் கொள்ளவேண்டும். நமதூர் நகராட்சிக்கு மிக அருகில் நகராட்சிக்கு எதிரில் மழை நீரும் குப்பைகளும் தேங்கி இருப்பதை நாம் காண முடிகிறது. மேலும் தண்ணீர் திறப்பதற்குரிய சேனல்கள் இருக்கும் தொட்டிகள் பல வருடங்கள் திறந்தே உள்ளது. அதுவும் நகராட்சிக்கு மிக அருகில். இந்த தொட்டிகளில் எல்லாம் மழை நீர் தேங்கி கிடக்கிறது. மேலும் ஆடு, மாடு, குழந்தைகள் தவறி விழ வாய்ப்பு இருக்கிறது. யாருமே இதை கண்டு கொள்வதில்லை.

மேலும் ஹோட்டல்களில் உணவுப் பண்டங்கள் எப்போதும் திறந்தே கிடக்கிறது. சம்சுதீன் ஹோட்டல் உள்பட எல்லா ஹோட்டல்களிலும் ஈ, கொசு தாரளமாக காணக்கிடைகிறது. சுகாதார ஆய்வாளர் ஒருநாள் கூட ஆய்வு செய்த மாதிரி கேள்விப்படவே இல்லை.

அவருடைய பணி Sanitary Inspector ஊரில் உள்ள தெருக்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்யும் இடங்களில் இன்ச்பெக்ஸன் செய்து சுகாதாரமாக உள்ளதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் ஊர் எப்போதும் சுகாதாரமாக இருக்கும். இனிமேலாவது நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை வைப்போம்.

பொதுமக்கள் நலன் கருதி எழுதியவர்
இஸ்மாயில் சூபி
காயல்பட்னம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நமது ஆரோக்கியத்திற்குத்தான்...
posted by N.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்) [15 November 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38165

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பான மக்களே!

நமது நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் அவர்கள் விடுத்திருக்கும் வேண்டுகோள்! கனிவானது, பனிவானது. அந்த வேண்டுகோளின்படி நடந்து, நாம் அவர்களுக்கு ஒத்துழைப்புக்கொடுத்தால் அது நம் மக்களுக்கும், நம் நகருக்கும்தான் நன்மை என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

--------------------------------

இப்பொழுது வருகின்ற மழை மிக வேகமாகவும் , யாரும் எதிர்பாராத அளவிலும் கணிக்கமுடியாத நேரத்திலும் வருகிறதால் – நகராட்சி நிர்வாகத்தையோ அதன் ஊழியர்களையோ குறைகூற முடியாது.

அவர்களால் முடிந்தவரை அவர்கள் கடமையை செய்கிறார்கள் இதில் சில குறைபாடுகள் இருக்கலாம், அதை பொருட்படுத்தாது நாம் அந்த ஊழியர்களுடன் ஒத்துழைத்தால் அது நமக்கு நல்லதாகவே அமையும்.

எந்நேரமும் எல்லாவற்றையும் குறை சொல்லிக்கொண்டே இருந்தால் எதிலும் நிறையை காண இயலாது – ஆகவே கால நேரங்களை அனுசரித்து அதற்கு தகுந்தபடி மக்கள் நடந்து கொண்டால் – உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் பாதுகாத்து கொள்ளமுடியும்.

-----------------------------------

சுகாதாரத்தை பேணும் பொருட்டு விடுக்கப்பட்டிருக்கும் வேண்டுகோளை! பொது மக்களாகிய நாம் அவசியம் கடை பிடிக்க வேண்டும் – இது நம் மக்களின் நன்மைக்கே! என்பதை மறந்து விடக்கூடாது.

இந்த வேண்டுகோளில் எதையும் நாம் உதாசீனப்படுத்தினால் அது நமது ஆரோக்கியத்திற்குத்தான் வேட்டு வைப்பதாக அமையும் என்பதை நினைவில் நிறுத்துமாறு வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [16 November 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38168

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஊர் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் மரியாதைக்குரிய பொன்வேல்ராஜ் அவர்களின் இந்த வேண்டுகோள் ரொம்பவும் சரியானதே .....தற்போதைய இந்த சூழ் நிலைமைக்கு நம் மக்கள் யாவர்களும் தவறாது இதை கடைபிடித்தால் நன்றே ........

எல்லாம் வல்ல இறைவன் நம் ஊருக்கு தந்து உள்ள மழையை ...நம் மக்களின் நற் பயன்பாட்டுக்கு உதவியாருல்வானாகவும் ஆமீன்......

மேலும் இந்த மலையின் ....நீர் தேக்கத்தால் ....கொசுவின்னால் ஏற் பட கூடிய எந்த ஒரு நோய்களையும் நம் மக்களுக்கு ஏற்படாது வல்ல இறைவன் காத்தருள்வானாகவும் ஆமீன் ........

நாங்கள் ஊருக்கு தொலைப்பேசி மூலம் தகவல் அறிந்ததில் ...நமது ஊரில் நல்லதோர் மழை என்றும்....ஆனால் நம் நகராச்சி தான் ஊரில் மழையால் தேங்கி உள்ள நீரை அகற்றவும் ......அந்த நீரினால் ( கொசு தொல்லை ) ஏற்பட கூடிய ''கொசு கடியால் பல நோய்கள் வர கூடிய சான்சு இருப்பதாகவும் & தேங்கி உள்ள அசுத்தமான நீரினால் கொசு உருவாகி மக்கள் படும் அவஸ்தை ''''[ சொல்ல முடியாது ....என்றும் ஆதங்கபட்டார்கள் ......

இது மாதிரி ஒரு சூழ் நிலைமையில் நம் நகராச்சி மிகவும் துரிதமாக நடவடிக்கை எடுத்தால் நல்லது .....பொது மக்களின் நலனில் நம் நகராச்சி அக்கறை கொள்வது அவசியமே ......... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [20 November 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38200

அலியார் தெருவில் வெள்ளக்காடாக தீவு போல் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கி பரிதவித்துக்கொண்டிருக்கிரோம்

I C U வில் இருக்கும் நோயாளிக்கு ட்ரீட்மென்ட் கொடுக்காமல் அட்வைஸ் பண்ணுவது போல தண்ணீர் வழிந்தோட வாட்டமில்லாமல் தரமில்லாத சாலைகள் போடும்போது அதிகாரிகளான நீங்களெல்லாம் எங்கே இருந்தீர்கள்?

கஷ்டத்தில் இருக்கும் எங்களுக்கு தேவை நிவாரணம் தானே தவிர அட்வைஸ் அல்ல

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நவ.11 நள்ளிரவில் கனமழை!  (13/11/2014) [Views - 2874; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved