Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:15:47 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14797
#KOTW14797
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 27, 2014
இது எப்புடிப்பா உள்ள வந்திச்சி...? (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3837 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக, நகர் முழுவதிலுமிருந்து வழிந்தோடும் நீர், வடமுனையில் கீரிக்குளம் வழியாகவும், தென்முனையில் ஓடக்கரை வழியாகவும் கடலில் கலக்கிறது. இவ்விரண்டிற்கும் இடையில், கொச்சியார் தெரு மற்றும் அதற்குப் பின்புள்ள தெருவில் நடுப்பகுதியில் பெருமளவு நீர் தேங்கி நின்றது.

அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தம் வீடுகளிலிருந்து வெளியேற, இடுப்பளவு மழை நீர்த்தேக்கத்தில் நனைந்தே எங்கும் சென்று வர வேண்டியதிருந்ததால், பல நாட்களாக அவர்கள் வீட்டுக்குள்ளேயே சிறைபட்டிருந்தனர்.

இதனால் பெரும் அவதிக்குள்ளான அவர்கள், தேங்கிய மழை நீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்குமாறு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், நகராட்சி ஆணையர், அப்பகுதியை உள்ளடக்கிய 08ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆகியோரிடம் தொடர்ந்து முறையிட்டதன் பலனாக, பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கு தேங்கியிருந்த நீரை வழிந்தோடச் செய்யும் பணி, இம்மாதம் 24ஆம் நாளன்று துவங்கியது. நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் தலைமையில், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், குடிநீர் குழாய் பொருத்துநர் நிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் அவ்விடத்திற்கு நேரடியாக வந்து பார்வையிட்டு பணிகளைத் துவக்கினர்.

சுமார் 3 அடி அளவில் தேங்கியிருக்கும் மழை நீரை கடலுக்கு அனுப்ப, அப்பகுதியையொட்டிய ஸீ-கஸ்டம்ஸ் சாலையைத் தோண்டினால் மட்டுமே, கீரிக்குளம் வழியாக தேக்க நீர் கடலுக்குள் செல்லும் என்று கருதிய அதிகாரிகள், மறுநாள் (அக்டோபர் 25) சாலையை வெட்டி, மழை நீர் வழிந்தோட பாதையிட்டனர். இந்நடவடிக்கை காரணமாக, சுமார் 2 அடி அளவுக்கு தண்ணீர் வழிந்தோடி, தற்போது 1 அடி அளவில் மட்டுமே தேங்கியுள்ளது.











இது தாழ்வான பகுதியாகையால், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வழிந்தோடும் மழைநீர் இப்பகுதியில் தேங்குவது வழமையாகிவிட்டது. மழைக்காலம் வரும்போதெல்லாம் இப்பிரச்சினை கிளம்புவதைத் தவிர்த்திட, இப்பகுதியில் முறையாக அளவிட்டு, மழைநீர் வழிந்தோடுவதற்கு நிரந்தரமாகக் குழாய் பதிக்க வேண்டுமென்பது அப்பகுதி மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது. மழை நிவாரணப் பணிகளைப் பார்வையிட நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (ஆர்.டி.எம்.ஏ.) வந்திருந்ததாகவும், அவரிடமும் இதுகுறித்து முறையிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



இன்று காலையில் காயல்பட்டினம் நகராட்சி ஆணையரைச் சந்தித்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து முறையிட்டதோடு, இளைஞர் ஐக்கிய முன்னணியின் (YUF) சார்பிலான மனுவையும் அவரிடம் அளித்துள்ளனர்.





ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் - கொச்சியார் கீழத் தெருவையொட்டிய பகுதி தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, பனைமரக் கம்புகளை இணைத்துக் கட்டி, சிறிய பாலத்தை இரண்டு இடங்களில் அமைத்துள்ளனர். அவற்றின் வழியாக பொதுமக்கள் கடற்கரைக்குச் சென்று வருகின்றனர்.









நேற்று ஞாயிற்றுக்கிழமையாதலால் கடற்கரைக்கு வருவோர் எண்ணிக்கை - வார நாட்களை விட அதிகமாக இருந்தது. மழை நீர் வடிகாலுக்காக சாலை உடைக்கப்பட்டிருந்ததால், நாற்சக்கர - இரு சக்கர வாகனங்களில் வந்தோர், அவற்றை சொளுக்கார் தெரு - ஸீ-கஸ்டம்ஸ் சாலை முனையில் துவங்கி, கொச்சியார் தெரு வரை நிறுத்தி வைத்துவிட்டு, கடற்கரைக்குச் சென்று வந்தனர்.









ஒரு சிலர், மரப்பாலம் பலவீனமானது என்பதைக் கூட கருத்திற்கொள்ளாமல் இரு சக்கர வாகனங்களை பாலத்தின் மீது ஓட்டி, மறுபக்கம் சென்றனர்.















இதனால் எந்த நேரத்திலும் மரப்பாலம் உடையலாம் என்ற நிலையிருந்தது. சிறிது நேரத்தில் அவ்விடத்தில் முகாமிட்ட சமூக ஆர்வலர்கள் சிலர், பாலத்தைக் கடக்க முயன்ற இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் வேண்டிக்கொண்டதையடுத்து, அவர்கள் தமது வாகனங்களை பாலத்திற்கு முன்பாகவே நிறுத்திவிட்டு, கடற்கரைக்கு நடந்து சென்றனர்.

அதே நேரத்தில் கடற்கரையிலிருந்து யானை ஒன்று திரும்பி வந்துகொண்டிருந்ததைக் கண்ட அவர்கள், “இது எப்படி இவ்வளவு பெரிய பாலத்தைக் கடந்து வந்தது?” என்று கேட்டவாறு வியப்புடன் பார்த்தனர். சில நிமிடங்களிலேயே அதற்கு விடையும் கிடைத்தது. பாலத்தின் தாழ்வான பகுதி வழியே கால் வைத்து இறங்கிய யானை, மறு ஓரத்தில் ஏறி பக்குவமாகத் திரும்பிச் சென்றது. இக்காட்சியைப் பலர் தம் கைபேசிகளில் படப்பதிவு செய்துகொண்டனர்.











இத்தனை களேபரங்களுக்கும் இடையில் சில சிறுவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் பாலத்தில் வழிந்தோடும் நீரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். பிஞ்சு வயதிலேயே இத்தனை பக்குவமாகக் கவலைப்படுகிறார்களே என்றெண்ணி அவர்கள் அருகில் சென்று அவதானித்தபோதுதான் காதில் விழுந்தது - “மச்சான்! சூப்பரான கெளுத்தி மீன் ஒன்னு இந்தப் பக்கமாத்தாண்டா ஓடிச்சி...”





தேங்கிய மழை நீர் முற்றிலும் வழிந்தோடிய பகுதிகளில், நகராட்சியின் சார்பில் ப்ளீச்சிங் பொடி தூவப்பட்டிருந்தது.





கள உதவி:
ஹாஃபிழ் M.F.ஃபஸல் இஸ்மாஈல்

தகவல் உதவி:
M.A.K.முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ

படங்களுள் உதவி:
ஹாஃபிழ் முஹம்மத் யாஸர்
ஹாஃபிழ் ரியாஸ்


காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Jeddah) [27 October 2014]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37895

செய்தியின் தலைப்பு , " இது எப்படிப்பா உள்ளே வந்தது " . செய்தியை முக்கால் பாகம் வரை படித்தும் கூட தலைப்பிற்கும் செய்திக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது . இறுதியில் யானையார் வந்ததும் தான் தலைப்பிற்கான காரணத்தை அறிய முடிந்தது .

இதைப்படித்ததும் பள்ளி பரீட்சை நினைவுக்கு வந்தது . கேள்வியோ பசு மாட்டைப்பற்றி . பையன் படித்து வந்ததோ தென்னை மரத்தைப்பற்றி . இருந்தாலும் பையன் அசரவில்லை . தென்னை மரத்தைப்பற்றி எழுதிவிட்டு இப்படிப்பட்ட தென்னை மரத்தில்தான் பசு மாட்டை கட்டுவார்கள் என்று எழுதினான் இந்த செய்தியும் அதன் தலைப்பும் அதுபோலத்தான் உள்ளது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பொய்மையழகு .
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [27 October 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37896

சுறாமீன் உயரம்கூட இல்லாத சிறுவர்களுக்கு கெளுத்திமீன் எது கடுவாமீன் எதுஎன்று தெரிந்துவைதிருக்கிரார்களா இக்காலசிறுவர்கள்.கைபேசியயிலும் கம்யூட்டரிலும் காலத்தைகழிப்பவர்களுக்கு கெளுத்திமீனாவது தெரிவதாவது.பையன்கள் புருடாவை அப்படியே போட்டிருப்பது சற்றுஅலங்காரமான வசனமாகத்தான் இருக்கிறது! பொய்மையழகை புன்னகைததும்ப ஏற்றுக்கொள்கிறேன்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [27 October 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 37897

நானும் வாசித்து வாசித்து பார்க்கிறேன். தலைப்புக்கு பொருத்தம் எங்கு வருகிறது?என்று. கடைசியில் தான் விடை கிடைத்தது.

படங்கள் மிகவும் அருமையாக இருந்தது.

கட்டுரைக்கு 'தலைப்பு' போட்டி வைத்தால் பரிசு நிச்சயம்.

அப்படி ஒரு போட்டியே கிடையாது எனபது வேறு விஷயம்.

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பசங்க ரெம்ப உஷார்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்.) [28 October 2014]
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 37898

அன்புக்குரிய ஆதம் காக்காவே, காலா காலமாக வெளிநாட்டிலேயே காலத்தைக் கழித்து வரும் நமக்கு ஊர் நடப்பு ஞானம் கொஞ்சம் கம்மிதான். என்னதான் கையிலெ ஐபேடும் ஆண்டார்ய்டு ஃபோனும் வச்சிருந்தாலும் காயலின் வாண்டுகளுக்கு நம்ம உள்ளூர் குசும்பு உடலோடு ஒட்டிப் பிறந்ததுதான். பசங்க விளையாடும்போது பார்த்தீங்கன்ன தெரியும். கெண்டை மீனும் கெளுத்தி மீனும் தெரியாத மங்குளிகள் அல்ல!

மழைக்காலம் அதுவும் சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு காயலில் பெய்து தீர்த்த மழை, கீறிக்குளம் ஓடக்கரை நிரம்பி வழிய அங்கு மீன் பிடிக்க ஒரு கூட்டமே இருக்கு. நான் ஊரில் இருந்த போது கண்கூடாகப் பார்த்திருக்கின்றேன்.

இதில் செய்திக்கு சுவை சேர்க்க வேண்டும் என்பதற்காக வார்த்தை ஜாலங்கள், சங்ககாலத்து தமிழ் சொற்கள் சேர்த்து கூட்டிக் குழைத்து புருடாவோ பீலாவோ அவிழ்த்துவிட காயல்பட்டணம் டாட்காமிற்கு நேரமில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

நானும் இத்தளத்தின் வாசகன் எனும் வகையில் உரிமையோடு தாங்கள் சொன்னதற்கு நான் உவப்போடு மறுப்பு தெரிவிக்கின்றேன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Reஒரு புலவன் போற்றும் பொய்!...
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [28 October 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37902

மிகுதியான நாளில் நான் மானசீகமாக மதிக்கும் சகோதரர்களில் முஹம்மது ரபீக்கும் ஒருவர் என்பதை உள்ளச்சுத்தியோடு சொல்கிறேன். காயல்பட்டணம்.காம் மைப்பற்றிய உங்களின் கடமையுணர்வை நான் மதிக்கிறேன்! என் கருத்தாழத்தை பல வேளைகளில் புரிந்தவர்களில் தாங்களும் ஒருவர் என்ற நம்பிக்கை எனக்குண்டு!

மடியிலும் மார்பிலும் கிடத்தி கொஞ்சும் மழலையை "அடிக்கள்ளி" என்று இதயம் குளிர எப்படி பொய்யுரையால் புகழ் பாடுகிறோமோ, அதே வகையில்தான் காயல்பட்டணம்.காமை புகழ்ந்துரைத்தேனே அல்லாமல், பொய்யால் புனைந்த செய்தி என்ற இசைவற்ற எண்ணம் இமியளவில் கூட எம்மிதையத்தில் எழவில்லை!

ஒரு புலவன் போற்றும் பொய்க்கு ஒப்பான என் கருத்தால் உங்களுக்கோ, காயல்பட்டணம்.காமிற்கோ ஏதேனும் மனநெருடலெனில் மனம் பொருத்தருள்க!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

என்றும் அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved