Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:57:11 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14768
#KOTW14768
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 23, 2014
விடுதியில் தங்க வரும் ஏழை மாணவர்களின் கட்டணத்தை மன்றம் ஏற்கும்! பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழுவில் அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3067 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வேலை தேடி வரும் மாணவர்களுக்காக பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள விடுதியில் தங்க வரும் ஏழை மாணவர்களின் கட்டணத்தை மன்றம் ஏற்கும் என கர்நாடக மாநிலம் - பெங்களூரு கா.ந.மன்றப் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

பொதுக்குழுக் கூட்டம்:

எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் 13ஆவது பொதுக்குழுக் கூட்டம், 19.10.2014 ஞாயிற்றுக்கிழமையன்று, பெங்களூரு எம்.ஜி. சாலையிலுள்ள மர்ஹூம் ஆடிட்டர் பி.எஸ்.எம்.புகாரீ ஹாஜி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஹாஜி ஜபரூத் மவ்லானா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் வி.டி.என்.மஹ்மூத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

ஹாஃபிழ் மன்னர் பி.ஏ.செய்யித் அப்துர் ரஹ்மான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, கூட்ட அறிமுகவுரையாற்ற, ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்

கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான மன்ற நடவடிக்கைகள் குறித்து மன்றச் செயலாளர் இப்றாஹீம் நவ்ஷாத் விளக்கிப் பேசினார்.

தலைமையுரை:

மன்றத் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் தலைமையுரையாற்றினார்.



கடந்த ஆண்டை போன்று இவ்வாண்டும் செயற்குழு உறுப்பினர்கள் மிகசிறப்பாக செயலாற்றிடவும், கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள சந்தா தொகைகளை உறுப்பினர்களிடமிருந்து வசூலித்து மன்றத்தின் நகர்நலப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மன்றத்தால் நடத்தப்படும் கூட்டங்கள் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.

புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பழைப்பாளர்களும், காயல்பட்டினத்திலிருந்து பெங்களூருக்கு புதிதாக வந்துள்ள மன்றத்தின் புதிய உறுப்பினர்களும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.



மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Mentor and Mentee Programme குறித்து, மன்ற துணைத்தலைவர் ஜபரூத் மவ்லானா விளக்கிப் பேசினார்.

கருத்துப் பரிமாற்றம்:

உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டது. மன்றம் மற்றும் நகர்நலன் குறித்த பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

தீர்மானங்கள்:

கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1: அடுத்த கூட்டம் குடும்ப ஒன்றுகூடல்:

மன்றத்தின் அடுத்த - 14ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்வரும் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தேவனஹல்லியிலுள்ள மர்ஹூம் ஆடிட்டர் பி.எஸ்.எம்.புகாரீ ஹாஜி ஃபர்ம் ஹவுஸில் இன்ஷாஅல்லாஹ் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகள் யாவற்றையும் ஒருங்கிணைக்க,
ஹாஃபிழ் கே.எஸ்.எம்.எல்.முஹம்மத் உமர் (Majestic),
ஹாஃபிழ் வி.டி.என்.மஹ்மூத் (BTM Layout),
குலாம் (Hulsoor)
ஷேக் சுலைமான் (KR Puram)
ஆகியோரிடம் பொறுப்பளித்தும், அவர்களுக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் மன்ற நிர்வாகக் குழு முறைப்படி செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2: ஏழை மாணவர்களின் விடுதிக் கட்டணத்தை மன்றம் ஏற்கும்:

மன்றத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் மாணவர் தங்கும் விடுதியில் தங்க வரும் ஏழை மாணவர்களுக்கு, அவர்களின் கட்டணத்தை தொகை ரூபாய் 500ஐ மன்றம் பொறுப்பெடுத்துக்கொள்ள இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3 - மண வாழ்த்து:

அண்மையில் மணவாழ்வு கண்டுள்ள மன்ற உறுப்பினர் ஷெய்க் அப்துல் காதிர், ஹாஃபிழ் அப்துல் கரீம் ஃபாயிஸ் ஆகியோரின் அவர்களின் புதுமணவாழ்வு சிறக்க இக்கூட்டம் மனதார வாழ்த்துகிறது.

தீர்மானம் 4 - பாராட்டுத் தீர்மானங்கள்:

1) ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன், மைக்ரோகாயல், அபூதபீ காயல் நல மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து இம்மாதம் 17, 18, 19 (வெள்ளி, சனி, ஞாயிறு) நாட்களில் மகளிருக்கான இரத்த சோகை தடுப்பு முகாம்
2) சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றம் - காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து, காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பள்ளி மாணவ-மாணவியருக்கிடையிலான 3ஆவது அறிவியல் கண்காட்சிப் போட்டி மற்றும் விஞ்ஞான விந்தைகள் நிகழ்ச்சி
3) கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்
ஆகிய நிகழ்ச்சிகளை - நகர்நலன் கருதி நடத்தியமைக்கும்,

4) கடந்த ரமழான் மாதத்தில் இந்திய சமூக - கலாச்சார மையம் மற்றும் அபூதபீ அவ்காஃப் இணைந்து நடத்திய - உலகளாவிய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்ற - அபூதபீ காயல் நல மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ அவர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.

தீர்மானம் 5 - மறைந்தோருக்கு இரங்கல்:

காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் துணைத்தலைவர் எச்.என்.ஸதக்கத்தல்லாஹ்வின் தந்தை - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எம்.எஸ்.ஹஸன் நெய்னா.

நுஸ்கியார் அறக்கட்டளையின் நிறுவனர் மர்ஹூம் நுஸ்கீ ஹாஜியாரின் மகள் டாக்டர் மும்தாஜ் உடைய கணவர் - காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த முஹம்மத் இக்பால்,

கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ‘பொக்கு’ ஹுஸைன் ஹல்லாஜ் உடைய மாமியார், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஏ.எச்.முஹம்மத் ஆயிஷா உம்மாள்,

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் இணைச் செயலர் ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் உடைய சகோதரர் - ஸீ-கஸ்டம்ஸ் சாலையைச் சேர்ந்த ஹாஜி உ.ம. எஸ்.முஹம்மத் அலீ தம்பி

ஆகியோர் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவர்களின் மறுமை நல்வாழ்விற்காக மனதார பிரார்த்திக்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, இக்கூட்டம் சிறப்புற நடந்தேற அருள் செய்த அல்லாஹ்வுக்கும், மன்றத்தின் அனைத்துறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள், சிறப்பழைப்பாளர்கள், இடவசதி செய்து தந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றி தெரிவிக்கப்பட்டது.

துஆ - ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்.

இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர், சமோஸா சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது. நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.








இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
முஹம்மத் இப்றாஹீம் நவ்ஷாத்
ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான்


படங்கள்:
மூஸா நெய்னா
ஹாஃபிழ் V.D.N.மஹ்மூத்


பெங்களூரு காயல் நல மன்றத்தின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

பெங்களூரு காயல் நல மன்றம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மிகவும் சுறுசுறுப்பான ஊர்
posted by mackie noohuthambi (chennai) [23 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37871

IT நிறுவனங்கள் நிறைந்த ஊர் என்று கேள்விப் பட்டு நான் அங்கு கடந்த வாரம் சென்றிருந்தேன். மிகவும் சுறுசுறுப்பான ஊர். குளிரூட்டப்பட்ட நகர்.

மர்ஹூம் ஆடிட்டர் புஹாரி ஹாஜி அவர்கள் நமதூர் மக்களுக்காக இரண்டு மாடி கட்டிடத்தை கொடுத்திருப்பதை பார்த்தும் கேட்டும் அவர்கள் பெயரால் இயங்கி வரும் புகாரி மத்ரசாவையும் பார்வை இட்டு அந்த மத்ரசாவுடன் இணைந்துள்ள பள்ளிவாசலில் தொழுதும் அங்கு பொறுப்பில் உள்ள அபூபக்கர் ஆலிம் அவர்களுடனும் மர்ஹூம் புகாரி ஹாஜி அவர்களின் துணைவியாருடன் கொஞ்ச நேரம் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. அல்ஹம்து லில்லாஹ்.

சதகதுன் ஜாரியா எனபது எவ்வளவு பெரிய காரியம். தற்போது நாட்டில் விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறி, பணம் பணம் என்று ஏகமாய் மக்கள் அலையும் காலத்தில், நமதூர் மக்களின் படிப்புக்காக, வேலை வாய்ப்புக்காக வருபவர்களுக்கு இப்படி ஒரு இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அல்லாஹ்விடம் எவ்வளவு நன்மைகளை அவர்கள் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டேன்.

பணம் இருக்கிறவர்களா கொடுக்கிறார்கள் - இல்லை மனம் இருப்பவர்களே கொடுக்கிறார்கள்.

மர்ஹூம் அவர்களின் மக்களும் இந்த கைங்கரியத்தை தொடர்ந்து செய்து வருவது மன நிறைவை தருகிறது . நீல சந்த்ரா என்ற அந்த இடம் தான் முகம் சுளிக்க வைக்கிறது. நமதூர் மக்கள் டில்லியில் வசித்தாலும், கல்கத்தாவில் வசித்தாலும்.மும்பை சென்னை ஜெய்பூர் எங்கு வசித்தாலும் இப்படி ஜன நெருக்கமான இடங்களில்தான் இருக்கிறார்கள். என்றாலும்

"முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை - சிப்பிக்குள்ளே இருப்பதனாலே முத்துக்கு என்ன சிறுமை" என்பது போல் எங்கிருந்தாலும் நல்ல இஸ்ஸத்தோடு வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கும் உள்ளம் உள்ளவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை அந்த குறைகளை மறக்க செய்கிறது. அங்கு தங்கி இருக்கும் மாணவர்கள் அந்த அறைகளை தங்கள் வீடுகள்போல் சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை என்ற மன நெருடலும் எனக்கு ஏற்பட்டது.

காயல் நல மன்ற நண்பர்களை சந்திக்க முடியவில்லை. அவர்கள் வேலை நேரங்களும் வேலை பளுவும் அவர்கள் இருக்கும் தூரங்களும் அதிகம். மெட்ரோ ரயில் பயணம். MG ரோடு, சேனல் 5 மாடியில் தொழுகை நகர் வலம் எல்லாம் 2 நாட்களுக்குள் முடித்துக் கொண்டு திரும்ப வேண்டிய கட்டாயம். சகோதரர் அப்துல்லாஹ், ஷைகனா மஹ்லரி ஆகியவர்கள் மட்டும் இரவில் எங்களை தேடி வந்து பார்த்து விட்டு சென்றார்கள்.

காயல் நல மன்றம் இப்போது விடுதிக் கட்டணத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பது எனக்கென்னவோ உடன்பாடு இல்லை. இலவசங்கள், விலையில்லா பொருட்கள் வழங்கியே இந்த நாட்டு மக்கள் வாழ்வின் பெறுமதி தெரியாமல் காலத்தை கடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த விடுதியில் தங்கி படிப்பவர்கள், வேலை தேடுபவர்களின் அன்றாட நடவடிக்கை பற்றிய அறிக்கை தினசரி இந்த மன்ற உறுப்பினர் யாருக்காவது ஒருவருக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்ற ஒரு விதிமுறையையும் ஏற்படுத்தினால் நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து.

சாப்ட்வேர் ஜாம்பவான் பில் கேட்ஸ் ஒரு நாளில் பலகோடி சம்பாதிக்கிறார். அவர் சொல்கிறார் என் மக்களுக்கு எந்த சொத்தும் நான் எழுதி வைக்கவில்லை. ஆனால் அவர்கள் எவ்வளவு படிக்க வேண்டுமோ அவ்வளவும் படிக்கட்டும் அதற்காக நான் செலவு செய்கிறேன். அவர்கள் தனியாக முயற்சித்து வேலை தேடி சம்பாத்தியம் பண்ணட்டும். அப்பாவுக்குதான் சொத்து சுகம் இருக்கிறதே என்று அவர்கள் சொகுசாய் வாழ நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்கிறார். இதையும் மன்றத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் எல்லோராது உயர்ந்த எண்ணங்களுக்கும் சேவைக்கும் நல்ல கூலியை தருவானாக ஆமீன்.

நாம் பாடுபட்டு சேர்த்த பொருளைக் கொடுக்கும்போதும் இன்பம்.

வாடும் ஏழை மலர்ந்த முகத்தை காணும்போதும் இன்பம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நேற்றிரவு இதமழை!  (24/10/2014) [Views - 2469; Comments - 0]
மீண்டும் மழை எச்சரிக்கை!   (23/10/2014) [Views - 2745; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved