Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:00:06 AM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14747
#KOTW14747
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 21, 2014
மழையினால் ஏற்படும் பாதிப்புகளை கவனிக்க உள்ளாட்சி அமைப்புகளில் அலுவலர்கள் குழு அமைக்க வேண்டும்; முக்கிய அலுவலர்களின் தொலைபேசி எண்கள், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெரியப்படுத்த வேண்டும்: அரசு உத்தரவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2642 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் தற்போது வடக் கிழக்கு பருவ மழையினால் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சீர்படுத்த, உள்ளாட்சி மன்றங்களில் அலுவலர்கள் குழு அமைத்து செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

மழைநீர் பாதிப்பு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள அவசர கால தொலைபேசி எண்கள் மற்றும் முக்கிய அலுவலர்களின் தொலைபேசி எண்கள், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:

மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணி அவர்கள் அக்டோபர் 20 அன்று வடகிழக்குப் பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச்செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில், தமிழகத்தில் பெய்த மழையின் அளவு குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.

மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் உள்ள நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கைகள் எடுக்கவும், பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கவும், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை உடனடியாக அகற்றவும், சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்தைச் சீர் செய்யவும் உள்ளாட்சி அமைப்புகளில் அலுவலர்கள் குழுவை அமைத்து போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.

மழையின் காரணமாக காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருக்க கொசு மருந்துகள் தெளித்தல் போன்ற நடவடிக்கைகயை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும், மழைநீர் பாதிப்பு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள அவசர கால தொலைபேசி எண்கள் மற்றும் முக்கிய அலுவலர்களின் தொலைபேசி எண்கள், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள்.

மழையின் காரணமாக குளங்கள், ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்கள்.

இக்கூட்டத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு. க.பணீந்திர ரெட்டி,இ.ஆ.ப., சென்னை மாநகராட்சி ஆணையர் திரு விக்ரம் கபூர்,இ,ஆ.ப., நகராட்சி நிருவாக ஆணையர் திரு. சந்திரகாந்த் பி.காம்ப்ளே,இ.ஆ.ப., பேரூராட்சிகள் துறை இயக்குநர் திரு. ராஜேந்திர ரத்னு,இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.சா.விஜயராஜ்குமார்,இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.சந்திரமோகன்,இ.ஆ.ப., மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [22 October 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37859

அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொது மக்களால் வெகுவாகவே வரவேற்க்கதக்க ஒரு செயல் என்றே கூறலாம்..... வசலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved