Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:08:24 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14593
#KOTW14593
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 27, 2014
ஜெயலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை என தீர்ப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4285 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று (செப்டம்பர் 27) தீர்ப்பு வழங்கப்பட்டது.

பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவித்தது.

விவாதங்களை தொடர்ந்து, நீதிபதி குன்ஹா - ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். மேலும் - சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று..
posted by mackie noohuthambi (chennai) [27 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37516

சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து – சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ – தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ – தெரிந்தும் தெரியாமல் நடந்திருந்தால் அது திரும்பவும் வராமல் பாத்துக்கோ என்று தனது அரசியல் ஆசான் புரட்சி தலைவர் அவர்கள் பாடிய பாடலை அம்மா அவர்கள் மறந்ததால் ஏற்பட்ட பின் விளைவு இது.

அல்லாஹாபாத் நீதி மன்றம் இப்படித்தான் இந்திரா காந்தி அவர்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கியது..ஆனால் அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்ததால் உடனே நெருக்கடி நிலை அறிவித்து தன்னை நாட்டின் தலைவியாக – நீதி மன்றத்தை விட உயர்ந்தவராக – தன்னை முன்னிலை படுத்திக்கொண்டார். அப்போது ஜெயப்ரகாஷ் நாராயன் அவர்கள் சொன்ன வார்த்தை, “VINAASA KAALE VIPAREETHA BUDDHI”

இருந்தாலும், OUR GLORY IS NOT IN NEVER FALLING – BUT IN RISING EVERY TIME WE FALL – நான் விழவே மாட்டேன் என்று சொல்வது நமக்கு பெருமையல்ல, விழுந்தாலும் மீண்டும் எழுந்து நடப்பேன் என்பது தான் நமக்கு பெருமை. மீண்டும் அம்மா அவர்கள் இந்த அரசியல் களத்துக்கு வர வேண்டும். அன்புடனும் அடக்கத்துடனும் எதிர் அணியினரையும் அணைத்து செல்லும் அரசியல் நாகரிகத்துடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்வோம்.

மற்றவர்களுக்கு இது ஒரு படிப்பினையாக முன்மாதிரியாக அமையட்டும்.இது கருணாநிதிக்கோ சுப்பிரமணியன் சாமி என்ற தனி நபருக்கோ கிடைத்த வெற்றி அல்ல.. கறைபடாத கரத்துக்கு யார் சொந்தக்காரர்களாக இருந்தாலும் அவர்களை இந்த வெற்றி தேடி வரும். அவர்களே கறை படிந்தவர்கள் என்று நிரூபிக்கப் பட்டால் அவர்களையும் இந்த நீதி மன்றம் இப்படித்தான் தண்டிக்கும்.. .

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. திகார் ஜெயில்ல புக் எழுதி / புழல் ஜெயில்ல இருந்து ரிலீஸ் பண்ணுனவிங்க...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [27 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37518

அம்மா..! நீங்களெல்லாம் இப்பத்தான் பெங்களூரு ஜெயிலையே புதுசா பாக்குரீங்க..!

தி மு க காரங்க திகார் ஜெயில்ல புக் எழுதி / புழல் ஜெயில்ல இருந்து ரிலீஸ் பண்ணுனவிங்க...

கனிமொழி ஜி.. ஆ.ராசா ஜி.. அதாங்க... 2ஜி...

அரசியலில் இதெல்லாம் சகஜம் சுவாமி ஜி..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [28 September 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37526

ஒரு பழைய கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு மன்னனுக்கு தான் சாப்பிடாத பழங்களை சாப்பிட ஆசை. அப்படி கொண்டு வருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்க, மக்கள் ஆப்பிள், வாழை, கொய்யா என்று தினமும் கொண்டு வர, மன்னர் கடுப்பாகி, இது மாதிரி சாதாரண பழங்களை கொண்டு வந்தால், அதால் அவர்களின் வாயில் திணித்து விடுவதாக அறிவித்தார்.

அன்று ஒரு நாள் நீண்ட வரிசை.பலரும் பல பழங்களை கொண்டு வர, ஒருவன் வாய் கிழிந்து, இரத்தம் சொட்ட சொட்ட சிரித்துக்கொண்டே அரண்மனையை விட்டு வெளியில் வந்தான்.

அவனிடம் விசாரித்தார்கள். நான் அன்னாசிப்பழம் மன்னரிடம் கொடுத்தேன், ஏன்யா... நான் என்ன அன்னாசிப்பழத்தை பார்க்கவே இல்லையா என்று மன்னர் கடுப்பாகி என் வாயில் திணி... திணி... என்று திணித்து விட்டார்.

சரி, அதற்கு ஏன் சிரிக்கின்றாய்..?

இல்லை.இல்லை.. . வரிசையில் ஒருத்தன் பலாப்பழத்தை தலையில் சுமந்து கொண்டு நிற்கின்றான்..அதான்.

ஆக,66 கோடி சொத்து குவிப்புக்கே இப்படி என்றால், 3G / 4G / 5G /LKG க்கு எல்லாம் எப்படியோ..!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Ahamed Sulaiman (Dubai) [28 September 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37527

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த தீர்ப்பு சரியான ஒன்று இதன் மூலம் இந்தியாவில் உள்ள அணைத்து ஊழல் சார்ந்த அரசியல் மற்றும் அதிகாரிகள் பலரை உள்ளுக்கு தள்ள வாய்பாக அமையும் அணைத்து நீதிபதிகளுக்கும் இது நல்ல துணிச்சலை கொடுக்கும் .

நாட்டு மக்களிடம் நீதி துறைமீது நம்பிக்கையையும் , மரியாதையையும் கொண்டுவரும் இங்கு நீதி இன்னும் சாகவில்லை என்பதை நிருபிக்கும் நல்ல தீர்ப்பு .

கருணாநிதியும் பாரதிய ஜனதாவும் இணைந்து கூட்டணி அமைதால் வரும் 2016 சட்ட சபை தேர்தலில் ஆ . தி . மு . க ஆட்சி அமைக்கும் . இதுதான் அமாவுக்கு திருப்புமுனையாக அமையும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. காலம் பதில் சொல்லும்...! என்பது இதுவே..!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (சிங்கப்பூர்.) [28 September 2014]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 37529

ஒன்றும் சொல்வதற்கில்லை...! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. எரிப்பா அல்லது வெற்றிச்சிரிப்பா?
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [28 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37534

தற்போது சுப்ரமணிசாமி, கலைஞர் அன்பழகன்,ஸ்டான்லின் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிப்பு பட்டியல் நீழுகிறது,கோதரர் ஜியாயுதீன் அவர்கள் கோணத்தில் நான் சிந்திக்கிறேன். அவர்கள் சொல்வதுபோல் ஒருவேளை அந்த "G "க்கள் உண்மையென்று தீர்ப்பு வருமேயானால் அந்நேரத்தில்,

அத்தீர்புக்குறிய கூட்டமாகிய அவர்கள் முந்திய மத்திய அரசு மந்திரிகள் முதல் மாநில மந்திரிகள் வரை எத்தனை,எத்தனை பொம்மைகளை எரிப்பார்களோ? பொறுத்திருந்து பார்ப்போம் அவர்கள் எரிப்பா அல்லது இமாலய வெற்றிச்சிரிப்பா என்று. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [28 September 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37536

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் நாட்டின் அரசியலில் இது வெல்லாம் சகஜம் அப்பா ......நாட்டில் நடக்காததையா எங்கள் தலைவி அம்மா அவர்கள் செய்து விட்டார்கள் .....பொதுவாகவே அரசியலில் இது வெல்லாம் ஒன்றுமே இல்லை நம் நாட்டில் .....

நாட்டின் தீர்ப்புக்கு எங்கள் தலைவி அம்மா அவர்கள் தலை வணங்கி இருப்பதில் இருந்து ...எவ்வளவு பெருந்தன்மை என்பதை நாடும் சரி .... மக்களுக்ம் சரி உணர்ந்து இருப்பார்கள் .... எங்கள் தலைவி அம்மா அவர்களின் மதிப்பு பொது மக்கள் மத்தியில் இன்னும் உயர்ந்து விட்டது ....இது தான் உண்மையே .....

தீர்ப்பு என்பது யாவர்களும் மதிப்பு அளிக்க பட வேண்டிய ஒரு மரியாதைக்குரிய செயல் ....

நாளை இன்னும் மற்ற தீர்ப்பு மற்ற கட்சிகளில் இருப்பதை யாவர்களும் அறிவர்கள் '' ஜி...... யை பார்ப்போம் ......

அதிக விரைவில் மரியாதைக்குரிய தலைவி அம்மா அவர்களின் நேரடி கண் பார்வையில் நல்லதோர் தலைமை அமைந்து தமிழக மக்களுக்கு பல .... நல ,, நல்ல ,, திட்டங்கள் வந்து .... தமிழக பொது மக்கள் பலன் பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை .... இது நடக்கும் ...... இதுவும் யாவர்களும் அறிவர் ............பொருத்து இருந்து பார்க்கலாம் ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. அய்யா புத்திசாலி
posted by samu.A.B (dubai) [29 September 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37544

அம்மா மாட்கிகிட்டார். மற்றவர்கள் இன்னும் மாட்டவில்லை. அம்மா மாட்டியதற்கு அர்த்தம் அய்யா நல்லவர் என்பதில்லை, அய்யா புத்திசாலி தவறை செய்ய மட்டுமல்ல தவறை மறைய்கும் தெரிந்த புத்திசாலி. அதுதான் உண்மை.

நீதியரசர் சர்காரியா சொல்லுவது போல "விஞ்ஜான பூர்வமாக ஊழல் செய்பவர்". அய்யா வின் சொந்த வாக்குமூலம் " தேன் எடுக்கும் போது புறங் கையை தானே நக்கினேன், தேன் கூட்டையா திருடினேன்?" வெட்ககேடு!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
“பாட்டல்ல கிடையாது!” (?!)  (28/9/2014) [Views - 3673; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved