Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:47:03 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14574
#KOTW14574
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 25, 2014
01ஆவது வார்டு உறுப்பினராக எஸ்.ஐ.அஷ்ரஃப் பொறுப்பேற்றார்! ஆணையர் பதவிப்பிரமாணம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3882 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டு இடைத்தேர்தலில், கோமான் ஜமாஅத் சார்பில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் எஸ்.ஐ.அஷ்ரஃப் வெற்றிபெற்றார்.

இன்று காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் வரவேற்றுப் பேசினார்.



புதிய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எஸ்.ஐ.அஷ்ரஃபுக்கு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், பதவியேற்பு உறுதிமொழியின் கீழ் புதிய உறுப்பினர் கைச்சான்றிட்டதோடு, நகராட்சி ஆணையருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.









இவ்விழாவில், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், ஏ.டீ.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரங்கநாதன் என்ற சுகு, ஏ.பாக்கியஷீலா, கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி,

கோமான் ஜமாஅத் தலைவர் ஜரூக் மற்றும் அதன் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர நிர்வாகிகளான பெத்தப்பா சுல்தான், எம்.இசட்.சித்தீக்,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் ‘முர்ஷித்’, காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் ஐதுரூஸ் மற்றும்

01ஆவது வார்டுக்குட்பட்ட கோமான் தெருக்கள், அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை) பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



நிறைவில், நகர்மன்ற உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கோமான் ஜமாஅத், 01ஆவது வாடுக்குட்பட்ட பகுதிகளின் சார்பில், புதிய உறுப்பினருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், அவருடன் இணைந்து அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.













கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவதுவிலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல்…
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [25 September 2014]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 37491

புதிய உறுப்பினராக பதிவியேற்ற சகோதரர் அஷ்ரஃப் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…! மக்கள் பணி செய்ய மக்களால் கிடைக்கப்பெற்ற அரசு எந்திரத்தின் ஆரம்ப படித்தரம் இது!

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச்
சிறந்த கொள்கை அறங்கூறு அவையம்

பொருள்: (சங்க காலத்தில்) ஆட்சி, அதிகாரம், பொறுப்பில் உள்ளவர்கள் அச்சமில்லாதவர்களாகவும், மற்றவர்களுக்கு அச்சத்தைத் தராதவர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் அவலம் மற்றவர்க்கு ஏற்பட்டிருப்பின் அதனை அவலத்துடன் நோக்காது சம நிலையில் நோக்கும் குணம் அவர்களிடத்தில் இருந்துள்ளது. சினம், உவகை காட்டாது அவர்கள் நீதி வழங்கினர். குறிப்பாக அவர்கள் பற்றுள்ளம் இன்றி இருந்துள்ளனர். தனக்கு நீதி சொல்வதால் ஏதேனும் வருமானம் வருமா என்று எதிர்பார்க்காது அவர்கள் அறம் காட்டியுள்ளனர். துலாக்கோல் போல் அவர்கள் அறத்தை நிலை நிறுத்தியுள்ளனர். – இது சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றான மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சி.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

இது, பொய்யாமொழிப்புலவன் வள்ளுவனின் கூற்று. பொருள்: அறம் என்பது செயலா, சொல்லா, எண்ணமா எனப் பார்த்தால். செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணம். எண்ணம் தூய்மையாக இருந்தால் சொல்லும் செயலும் தூய்மையாக அமையும். எண்ணம் எழுவதற்கு இருப்பிடமாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருத்தல் வேண்டும். மனத்தின் மாசினைப் போக்குவதற்கு முயலுவதே அறமாகும். மன மாசு என்பது பொறாமை, பேராசை, வெகுளி, கடுஞ்சொல் ஆகியவைகளாகும். அவை இல்லாமல் இருப்பதே அறம் என வள்ளுவன் வாய் மொழிந்துள்ளான்.

ஆக, மக்கள் மனமுவந்து அளித்த பொறுப்பினை காய்த்தல் உவத்தல் இன்றி சீர்தூக்கிப் பார்த்து நன்மை தீமைகளை ஆராய்ந்து பணியாற்ற வேண்டும். நெறி வழுவா நீதியின்பால் நிலைத்திருப்பின் நிலைத்திருப்போம் நெடுங்காலம் மக்கள் மனதில்…!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மனிதாபிமானம் அனைவரின் உள்ளத்தின் பள்ளத்தில் பதுங்கி இருக்கிறது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [25 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37493

இதுவரையுள்ள வேதனையான நிகழ்வு எண்ணங்களை விடாப்பிடியாக உள்ளத்தில் வேரூன்ற செய்து அதை வளர்ப்பதை விட்டு விட்டு, "விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை" என்ற உயரிய பெருந்தன்மையை ,கீழ் பதவியுள்ளாவர்கள் முதல் மேல் பதவியாளர்வரை கடைபிடிப்பார்களேயானால் காயலில் கண்ணியம் கரைபுரோண்டோடும். புண்ணிய நம்காயல் புனர் வாழ்வுக்கோர் புதிய பயணத்தை தொடங்கும்.

இப்புண்ணிய பயணம் தொடர்வதும் துண்டிக்கப்படுவதும் தலைவர் முதல் ஒவ்வொரு உறுப்பினர்களின் மனசாட்சியுடைய மனிதநேயத்தைப் பொறுத்தது, அப்படிப்பட்ட மனிதாபிமானம் அவர்கள் அனைவரின் உள்ளத்தின் பள்ளத்தில்தான் பதுங்கி இருக்கிறது!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [25 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37495

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"

இது, பொய்யாமொழிப்புலவன் வள்ளுவனின் கூற்று.

பொருள்: அறம் என்பது செயலா, சொல்லா, எண்ணமா எனப் பார்த்தால். செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணம். எண்ணம் தூய்மையாக இருந்தால் சொல்லும் செயலும் தூய்மையாக அமையும். எண்ணம் எழுவதற்கு இருப்பிடமாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருத்தல் வேண்டும். மனத்தின் மாசினைப் போக்குவதற்கு முயலுவதே அறமாகும். மன மாசு என்பது பொறாமை, பேராசை, வெகுளி, கடுஞ்சொல் ஆகியவைகளாகும். அவை இல்லாமல் இருப்பதே அறம் என வள்ளுவன் வாய் மொழிந்துள்ளான்.

ஆக, மக்கள் மனமுவந்து அளித்த பொறுப்பினை காய்த்தல் உவத்தல் இன்றி சீர்தூக்கிப் பார்த்து நன்மை தீமைகளை ஆராய்ந்து பணியாற்ற வேண்டும். நெறி வழுவா நீதியின்பால் நிலைத்திருப்பின் நிலைத்திருப்போம் நெடுங்காலம் மக்கள் மனதில்…!

மேலே குறிப்பிட்ட திருக்குறளின் பொருள் படியும் அவர் கீழே குறிப்பிட்டுள்ள உபதேசத்தின் படியும் நகராட்சி மன்ற தலைவி இப்பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து தேர்ந்தெடுக்க பட்ட உறுப்பினரை காய்த்தல் உவத்தல் இன்றி வாழ்த்தியிருந்தால் நன்றாக இருக்குமே!

ம்ம்ம்ம் ....அதை எதிர்பார்ப்பது தவறோ!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [26 September 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37498

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் அருமை சகோதரர் .அஷரப் அவர்களுக்கு என்னுடைய .....வாழ்த்துக்கள் .......

தாங்கள் இனிதான் ..... நம் மக்களுக்கு தேவையான பல நல்ல காரியங்களை செம்பட செயலாற்றிட வேணும் .....தங்களுக்கு வல்ல இறைவன் துணை புரிவானாகவும் ஆமீன்......

தாங்கள் வெற்றி பெறுவதற்கு முன் நடந்த ஒரு சில கசப்பான சம்பவங்களை மறந்து மற்ற உறுப்பினர்களுடனும் & நமது நகர் மன்ற தலைவி அம்மா அவர்களுடனும் ஒற்று இணைத்து செயலாற்றி ....தங்கள் தொகுதி மக்களுக்கு தேவையான நற்பல திட்டங்களை பெற்று .....மக்கள் பலன் பெற வேணும் என்பது தான் எங்கள் யாவர்களின் எண்ணம் ......

கசப்பு என்பது அனைவர்களின் உள் மனதில் நிலையாகவே இருப்பது தான் ....நாம் அதை தூக்கி எறிந்து .....மனதில் நல்ல எண்ணத்தை கொண்டு ...மிகவும் நிதானமாக செயலாற்றினால் அது தான் நமக்கு நிம்மதியையும் ...நல்லதையும் தரும் ....நமக்கு வெறியும் கிடைக்கும் .....

தங்கள் முகத்தில் ஒரு ( புன்முறுவலான ) கனிவான ஒரு சிரிப்பு தெரிகிறது அது தான் எங்களுக்கு முழு நம்பிக்கையை தருகிறது ...... மக்களுக்கு நல்லது நடக்கும் என்று .......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by ASHIK RAHMAN.M.H (Mikhwa via Al baha K.S.A) [26 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37499

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் அருமை சகோதரர் .அஷரப் அவர்களுக்கு என்னுடைய .....வாழ்த்துக்கள் .......

தாங்கள் இனிதான் ..... நம் மக்களுக்கு தேவையான பல நல்ல காரியங்களை செம்பட செயலாற்றிட வேணும் .....தங்களுக்கு வல்ல இறைவன் துணை புரிவானாகவும் ஆமீன்......

தாங்கள் வெற்றி பெறுவதற்கு முன் நடந்த ஒரு சில கசப்பான சம்பவங்களை மறந்து மற்ற உறுப்பினர்களுடனும் & நமது நகர் மன்ற தலைவி சகோதரி அவர்களுடனும் ஒற்று இணைத்து செயலாற்றி ....தங்கள் தொகுதி மக்களுக்கு தேவையான நற்பல திட்டங்களை பெற்று .....மக்கள் பலன் பெற வேணும் என்பது தான் எங்கள் யாவர்களின் எண்ணம் .....வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
என்று ஹஜ் பெருநாள் (1435)?  (24/9/2014) [Views - 3018; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved