Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:20:44 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14557
#KOTW14557
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 22, 2014
01ஆவது வார்டு இடைத்தேர்தலில் கோமான் ஜமாஅத் வேட்பாளர் எஸ்.ஐ.அஷ்ரஃப் வெற்றி! விரிவான விபரங்கள்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 8564 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (40) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கோமான் மேலத்தெரு, நடுத்தெரு, கீழத்தெரு, அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய - காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிடம் உட்பட - தூத்துககுடி மாவட்டத்தில் வெற்றிடமாக உள்ள அனைத்து உள்ளாட்சிப் பொறுப்பிடங்களுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இம்மாதம் 18ஆம் நாள் வியாழக்கிழமையன்று 07.00 மணி முதல் 17.00 மணி வரை நடைபெற்றது.

01ஆவது வார்டு இடைத்தேர்தல்:

காயல்பட்டினம் 01ஆவது வார்டுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, அருணாச்சலபுரம் தேசிய துவக்கப்பள்ளியில் இரண்டு வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

வாக்குப்பதிவு நிறைவுற்றதும், வாக்குப்பதிவு கருவிகள் முத்திரையிடப்பட்டு, வேட்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கைச்சான்றுகள் பெறப்பட்டு, காயல்பட்டினம் நகராட்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, நகராட்சி அலுவலக பதிவறையில் வாக்குப்பதிவு கருவிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறையும் பூட்டி முத்திரையிடப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை:









வாக்கு எண்ணிக்கை இன்று (செப்டம்பர் 22) காலையில் சரியாக 08.00 மணிக்குத் துவங்கியது. துவக்கமாக, தபால் ஓட்டுகள் எண்ணுவதற்காக பெட்டி திறக்கப்பட்டது. தபால் ஓட்டுக்கள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை.







அடுத்து, பெண்கள் வாக்களித்த கருவியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில்,
பதிவான மொத்த வாக்குகள் 856
எஸ்.ஐ.அஷ்ரஃப் (சுயேட்சை) 614 வாக்குகளும்,
ம.அமலக்கனி (அதிமுக) 242 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

அடுத்து, ஆண்கள் வாக்களித்த கருவியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில்,
பதிவான மொத்த வாக்குகள் 634
எஸ்.ஐ.அஷ்ரஃப் (சுயேட்சை) 410 வாக்குகளும்,
ம.அமலக்கனி (அதிமுக) 224 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

ஆக, மொத்தம் பதிவான 1490 வாக்குகளில்,
எஸ்.ஐ.அஷ்ரஃப் (சுயேட்சை) 1024 வாக்குகளும்,
ம.அமலக்கனி (அதிமுக) 466 வாக்குகளும் பெற்றனர்.



எஸ்.ஐ.அஷ்ரஃப் (சுயேட்சை) வெற்றி:

இதன்மூலம், 558 வாக்குகள் வேறுபாட்டில், சுயேட்சை வேட்பாளர் எஸ்.ஐ.அஷ்ரஃப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.



அவருக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் தொடர்பு அதிகாரி சண்முகவள்ளி முன்னிலையில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், வெற்றிபெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.



வெற்றியாளருக்கு வாழ்த்து:

சான்றிதழைப் பெற்ற பின்னர், நகராட்சி அலுவலக வளாகத்தை விட்டும் வெளியே வந்த அவருக்கு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, கோமான் ஜமாஅத் தலைவர் ஜரூக், காயல்பட்டினம் நகராட்சியின் 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முகம்மது முகைதீன், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்தினர். பின்னர் அவரை, கோமான் ஜமாஅத்தினர் நகர்வலமாக அழைத்துச் சென்றனர்.













[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 10:30 / 18.09.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [22 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37387

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by ahamed shahul hameed(abu sabu) (kayalpatnam) [22 September 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37388

அஸ்ஸலாமு அலைக்கும் ஊர் ஒற்றுமைக்கோர் எடுத்துக்காட்டு.அஷ்ரப் காக்கா உடைய பணிகள் சிறக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்த்துக்கள்
posted by M.A. SEYED AHAMED (VILAK) (Hong Kong ) [22 September 2014]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 37390

என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்...

ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி...

M.A. செய்யது அஹமது (விளக்கு)
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...MARHABAN AHLAN VA SAHLAN
posted by mackie noohuthambi (Chennai) [22 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37391

வாழ்த்துக்கள்.

ஊர் நலனில் அக்கறை உள்ளவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இன்னும் இருக்கும் இரண்டு ஆண்டுகளில் இந்த ஊருக்கு என்னென்ன நன்மைகள் செய்யலாம் என்று சிந்தித்து செயல்படுங்கள். தேர்தல் என்பது ஒரு போட்டிதானே தவிர அது எதிராளிகளை உருவாக்குவதற்காக நடத்தப் படுவதல்ல என்பதை உணர்ந்து தேர்தல் கால கசப்புக்களை மறந்து, நாம் எல்லோரும் சகோதர சகோதரிகள் என்று பணியை தொடங்குங்கள்.

ஊர் வாழ்ந்தால் நாம் வாழ்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Alhamdulillah
posted by Shaik Sadakathullah (Hong Kong) [22 September 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 37392

அல்லாஹு அக்பர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by ismail (Hong Kong) [22 September 2014]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 37393

Alhamthu illah, pls accept the defeat and work for the welfare of the public


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Abdul hadhi (JEDDAH AL RUWAIS) [22 September 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37394

வாழ்த்துக்கள்...

ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி...

அப்துல் ஹாதி. ஜெட்டாஹ் KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by VILAK ABDUL LATHEEF (KAYALPATNAM) [22 September 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 37395

வாழ்த்துக்கள். நம் வடபகுதி மக்கள் மத பாகுபாடு இல்லாத மக்கள் என்பது நமக்கு மிகுந்த சந்தோஷம்....... அதே போல் நாமும் அவர்களுடன் ஒற்றுமையாக இருந்து ஊரில் சிறுபான்மையினரான இந்து கிறித்துவ மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.......... பெரும்பான்மையினர் ஆள வேண்டும்... சிறுபானமையினரும் வாழ வேண்டும் இதுதான் நம் ஜனநாயகத்தின் தாரக மந்திரம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இந்த வெற்றி கோமான் ஜமாத்தின் கட்டுகோப்புக்கும் அவர்களின் ஜமாத் மீதான பற்றுக்கும் கிடைத்த வெற்றி..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [22 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37396

ஐக்கிய பேரவை அறிவித்த ஆதரவாலோ / அப்பேரவையின் ஜால்ராக்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தின் ஆதரவாலோ / பிற அரசியல் கட்சிகள் மேற்கொண்ட பிரச்சாரத்தின் ஆதரவாலோ அசரபுக்கு கிடைத்த வெற்றி அல்ல...!

இந்த வெற்றி கோமான் ஜமாத்தின் கட்டுகோப்புக்கும் அவர்களின் ஜமாத் மீதான பற்றுக்கும் கிடைத்த வெற்றி..!

ஆக மொத்தத்தில் ஜமாத்தின் சுயேச்சை வேட்பாளருக்கு மத்தியில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் இங்கு வேலையில்லை என்பதை அந்த வார்டு மக்கள் சாமர்தியாமாக நிரூப்பித்துள்ளார்கள்.. ஜமாத்தின் கட்டுகோப்பை மிக வலுவாக பறைசாற்றி இருக்கிறார்கள்...

ஆளும் அ தி மு க கட்சியில் இணைந்த நகர்மன்ற தலைவி பிரச்சாரம் செய்தாலும் சரி...! ஆளும்கட்சியின் முன்னால் / இந்நாள் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தாலும் சரி...! ஆளும் கட்சியின் கொள்கை பரப்பு செய்ளாலாரே பிரச்சாரம் செய்தாலும் சரி நிலைமை இது தான்.. முடிவும் இது தான்.. (ஜமாத் கட்டுகோப்புதான்) பிரதிபலிக்க போகிறது...

வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் - அவரின் வெற்றிக்கு வாக்களித்த கோமான் ஜமாத் பெருமக்களுக்கும் வாழ்த்துக்குள் - பாராட்டுகள்... இந்த ஒற்றுமை தொடரட்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by s.s.md meerasahib (TVM) [22 September 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 37397

அஸ்ஸலாமு அலைக்கும். எஸ்.ஐ.அஸ்ரஃப் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தலில் இனத்தோடு இனமாக கிடந்த கருப்பாடுகளை இனமும்,குணமும் பிரித்தரியப்பட்டன. கோமான் ஜமாத்தார்களுக்கு நன்றிகள் பல. ஊர் ஐக்கிய பேரவையுடன் கைகோர்த்து ஒற்றுமையை நிலை நாற்றுவோம். வஸ்ஸலாம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இந்த இணையதளத்தின் கனவு பலிக்கவில்லை.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [22 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37398

வெற்றி வேட்பாளர் சகோதரர் அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்த இணையதளத்தின், 1வது வார்டு இடைத் தேர்தல்: யார் கனவு பலிக்கும்? என்ற தேர்தல் அலசலில், அஷ்ரப் அவர்களுக்கு எதிரான கருத்துக்களே அதிகம் இருந்தது.

அவருக்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்த அந்த பகுதி வாக்களர்களுக்கு நன்றி! இது மத அடிப்படையில் கிடைத்த வெற்றி அல்ல.

இந்த தேர்தல் முடிவை பார்க்கும்போது, திருமதி.அமலக்கனியின் பகுதியான கடையக்குடி பகுதியில் பதிவான வாக்குகள், 397. அவர் சார்ந்த பகுதி வாக்குகள் மொத்தமாக அவருக்கு கிடைத்ததென்று வைத்தாலும், அருணாசலபுரம் & கோமான் தெருக்களில் பதிவான 1091 வாக்குகளில் வெறும் 69 வாக்குகளே கிடைத்தது. கோமான் தெரு மற்றும் அருணாசலபுர மக்கள் சகோதரர் அஷ்ரப் அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர்.

சாதாரண வார்டு தேர்தலில், ஒரு சுயேட்சை வேட்பாளருக்கும், அதிமுக கட்சி வேட்பாளருக்கும் நடக்க இருந்த போட்டியை, தன் நடவடிக்கைகள் மூலம் தனக்கு எதிரான போட்டியாக, நகரமன்ற தலைவி அவர்கள் ஆக்கிக்கொண்டார்.

சென்ற நகரமன்ற தேர்தலில், திருமதி.ஆபிதா அவர்கள், இந்த வார்டில் பதிவான 1298 வாக்குகளில், 882 வாக்குகள் (68%) பெற்றார். (ஆதாரம்: இந்த இணையத்தின் செய்தி # 7409) ஆனால் இந்த தேர்தலில், பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்தும், 31 சதவீத வாக்குகளே பெற்றுத் தர முடிந்தது. இதனால், அந்த பகுதி மக்களின் ஆதரவை இழந்துள்ளார் என்பது தெளிவு.

தேர்தலும் முடிந்து விட்டது. நூஹு தம்பி காக்காவின் கருத்து போல், இனி எஞ்சி இருக்கும் 2 ஆண்டுகளில், இந்த தேர்தல் கசப்புகளை ஒரு கேட்ட கனவாக எண்ணி, தலைவி மற்றும் உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு, நகருக்கான நலத்திட்டங்களில் அக்கறை செலுத்துங்கள்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...ஜமாஅத்வேட்பாளர் வெற்றி!
posted by Vilack Noor Mohamed (bangkok.Thaiand) [22 September 2014]
IP: 1.*.*.* Thailand | Comment Reference Number: 37399

அல்ஹம்துலில்லாஹ்! சந்தோஷ மாக உள்ளது. ஒற்றுமை ஒன்றுதான் வெற்றியை தரும்.அருனச்லபுரமக்களும் நம்மோடு இணைந்து செயல்பட்டு உள்ளார்கள் என்பதை பார்க்கும்போது இன்னும் சந்தோஷமாக உள்ளது.இந்த ஒற்றுமை தொடரட்டும்.இன்ஷா அல்லாஹ்.

விளக்கு நூர்முஹம்மது .
பாங்காக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by mohamed salih (chennai) [22 September 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 37400

அல்லாஹு அக்பர்.

வாழ்த்துக்கள் ..

என்றும் அன்புடன் ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
சென்னை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [22 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37401

மிக மகத்தான வெற்றியை பெற்ற கோமான் ஜமாத்தின் பொது வேட்பாளர் , ஜனாப் S.I.அசரபு அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகளையும் & பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி .

ஆளும் கட்சியின் பெரும் புயலில் கூட அனையானால் ஹரிக்கனின் ஒளி சுடர் விட்டு கொண்டு உள்ளது. வாழ்த்துக்கள்

நாம் நினைப்பது எல்லாம் நடபதில்லை , அதை வல்ல நாயனும் நமக்கு தர நாடும் வரை.... அவன் நமக்கு தர நாடியதை யாரும் தடுக்க முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. வாழ்த்தக்கள்
posted by B.M.லுுக்்மாான் மௌலானா (JAIPUR) [22 September 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37402

அஸ்ஸலாமு அழைக்கும்.

வெற்றி பெற்ற அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கோமான் ஜமாதிடமிருந்து காயல்பட்டினம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. வெற்றி! வெற்றி!! மத நல்லிணக்கத்துக்கு வெற்றி!!!
posted by S S Abdullah (Dubai) [22 September 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37403

நமதூர் ஒட்டுமொத்த சமுதாய மக்களின் ஒற்றுமை உணர்வுக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள். அரசியலுக்கு இங்கு வேலையே இல்லை. குறிப்பாக சகோதரர் அஷ்ரப் அவர்களுக்கு வாக்களித்த மாற்று மத அன்பு சகோதரர் அனைவருக்கும் மிக்க நன்றி. வளர்ப்போம் ஒன்றுபட்ட சகோதரத்துவத்தை! பாதுகாப்போம் ஊரின் நலனை!! பேணுவோம் கட்டுப்பாட்டை!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [22 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37404

அல்ஹம்து லில்லாஹ்.

எல்லாப்புகழும் வல்ல அல்லாஹ்விற்கே.

வெற்றிபெற்ற சகோதரர் அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை காட்டிலும், கோமான் ஜமாத்தின் கட்டுக்கோப்பும், கண்ணியமும் வெற்றி பெறனும் என்று தான் அனைவர்களும் விருப்பமும். நிறைவேறி விட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

அட்மின், " அடுத்து, ஆண்கள் வாக்களித்த கருவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது " - என்று உள்ளது. கருவியில் என்று மாத்தவும். ஒரு எழுத்தால் எவ்வளவு பிரச்சனை என்று அறிவீர்கள் தானே.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்

Moderator: திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...வாழ்த்துக்கள்!!!
posted by Kaleel (Chennai) [22 September 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 37405

இந்த வெற்றி கோமான் ஜமாத்தின் கட்டுகோப்புக்கும் அவர்களின் ஒற்றுமைக்கும் ஜமாத் மீதான பற்றுக்கும் கிடைத்த வெற்றி.

தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு, தாங்கள் பகுதி வாக்காளர்க்கு பாரபட்சமின்றி சேவை செய்ய வாழ்த்துக்கள்..!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by A.Lukman (chennai) [22 September 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 37406

அஸ்ஸலாமு அழைக்கும். அல்ஹம்து லில்லாஹ், இன்ஷால்லாஹ் நமதூரின் வருங்கால ஒற்றுமைக்கு கட்டியங்குரூம் வெற்றி இது..

எங்கள் கோமான் ஜமாத்தின் வெற்றிக்காக பாடுபட்ட அனைவர்களுக்கும் குறிப்பாக நம் சகோதர சமுதாயத்தை சார்ந்த அருணாச்சலபுரம் பகுதி நண்பர்களுக்கும் எங்கள் கோமான் ஜாமத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

லுக்மான்
கோமான் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [22 September 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37408

ஒரு இணையதளம் 1வது வார்டு இடைத் தேர்தல்: யார் கனவு பலிக்கும்? என்ற தேர்தல் அலசலில், அஷ்ரப் அவர்களுக்கு எதிரான கருத்துக்களே அதிகம் இருந்தது. இருந்த போதிலும் கோமான் ஜமாஅத் வேட்பாளர் அஷ்ரப் வெற்றிபெற்றுள்ளார்அல்ஹம்துலில்லாஹ்.

DCW நிறுவனத்தின் கைப்பாவை நமது நகரா சபையின் தலைவிஇன் ஆதரவுபெற்ற வேட்பாளர் தோல்வியை தழுவிஉள்ளார்.குறிப்பாக அருணாசலபுரம் மக்கள் நமக்கே வாக்கு அளித்து இருக்கிறர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மற்றுமல்ல கோமான் ஜமாத்தின் ஒற்றுமையை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை இதன் மூலம் அறிகிறோம்.

இது போன்று தான் நமதூர் மற்ற எல்லா ஜமாஅத் ஒற்றுமை மேலோங்க வேண்டும். ஆயிரம் கொள்கை இருந்தாலும் ஜமாஅத் ஒற்றுமை அவசியம் .இதனை பதவி வெறிகொண்டு அலையும்( 2016 ஆண்டு ) புதிய அரசியல் வாதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.நாளை நமதே இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by P.N.N. Zainul abdeen (Dubai) [22 September 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37409

உள்ளாட்சி இடைத் தேர்தலில் எங்கு பார்த்தாலும் அதிமுக வெற்றி என்று செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனம் நகராட்சியின் முதல் வார்டில் நடந்த தேர்தலில் அதிமுக தோல்வியுற்றுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அந்தோணி கிரேசி, 1,16,693 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். 84885 வாக்கு வித்தியாசத்தில் அந்தோணி கிரேஸி வெற்றி பெற்றார். இதேபோல பிற பகுதிகளிலும் கூட பெரும்பாலும் அதிமுகதான் முன்னணியில் உள்ளது. இதனால் அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டனத்தில் நடந்த நகராட்சி 1வது வார்டு தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடைந்துள்ளது. இந்த வார்டில் மொத்தம் ஆயிரத்து 490 ஓட்டுக்கள் பதிவானது. இதில் சுயேச்சை வேட்பாளர் அஷ்ரத் என்பவர் ஆயிரத்து 24 ஓட்டுக்கள் பெற்றார். அ.தி.மு.க,. வேட்பாளர் அமலக்கனி வெறும் 466 ஓட்டுக்களேப் பெற்றார். 554 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோற்றதால் அதிமுக புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Ahamed Sulaiman (Dubai) [22 September 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37410

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த வெற்றி அந்த வார்டு வாக்காளர்களுக்கு கிடைத்த வெற்றி ஜனாப் அஷ்ரப் அவர்கள் அந்த வார்டுக்கு தனால் ஆனால் சேவைகளை நன்றியுடன் செய்ய கடமைபட்டுளார் . இந்த வெற்றி நம் மக்களாட்சிக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு காயல் உள்ளாட்சி தேர்தலில் இனி எந்த கட்சிகளும் நிற்க கூடாது என்பதை கூறிய தேர்தலாக நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

அதையும் தாண்டி கட்சிகள் நின்றால் மொத்த ஊர் மக்களும் கட்சி சார்ந்த வேட்பாளரை புறகணிக்க வேண்டும் இந்த வாய்ப்பை நம் அணைத்து மக்களும் வரும் உள்ளைட்சி தேர்தகளிலும் பயன்படுத்த வேண்டும் .

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [22 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37411

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் அருமை சகோதரர் . அஷரப் அவர்களுக்கு எம் >>> மனமாற நல '' வாழ்த்துக்கள் ''' <<<

தங்களின் நற் பணிகள் நம் ஊருக்காகவும் & தங்களை முழுமையாகவே நம்பி உள்ள தங்கள் தொகுதி வாழ் மக்களுக்கும் .....பல நற் காரியங்கள் செய்திட வேணும் என்பது தான் யாவர்களின் என்னும் ..+..முழு நம்பிக்கையும் ....வல்ல இறைவன் தங்களின் நற்பல பொது மக்களின் முயற்ச்சிக்கு துணை நிற்பனகவும் ஆமீன்.....

நியாயம் வென்றது என்று சொல்வதைவிட .....நமது கோமான் தெரு மக்கள் & கோமான் ஜமாத்தின் '' ஒற்றுமையும் .....நிர்மையும் வென்றது என்றே நாம் கருதலாம் ( நினைக்கலாம் ) ......

இந்த ஒற்றுமை எப்போதும் நிலைக்கட்டும் ..............

இன்ஷா அல்லாஹ் .... கோமான் தெரு ஜாமத்தின் ஒற்றுமையை.... போன்ற நமது ஊரின் அனைத்து ஜமாத்தின் & அந்த பகுதி மக்களின் ஒற்றுமையாக நாம் யாவர்களும் இருந்து ....அந்த காலம் போல ஊரின் நலம் காட்போமாக ..... மேலும் நம் யாவர்களையும் வல்ல இறைவன் ஒற்றுமையாக்கி அருள்வானாகவும் ஆமீன் .........

நம் அனைத்து மக்களின் எண்ணம் நிறைவேறியது ....அல்ஹ்ஹம்துல்லிலாஹ் ...........

இன்ஷா அல்லாஹ் தொடரட்டும் தங்களின் பொது நல சேவைகள் ............மீண்டும் துவாவுடன் வாழ்த்துக்கள் .......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by Mauroof (Dubai) [22 September 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37412

வாழ்த்துக்கள்.

தலைவி உட்பட நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் விருப்பு வெறுப்புகளை மறந்து ஊரின் நலனிற்காக, மேம்பாட்டிற்காக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் ஏகோபித்த விருப்பமாகும். அதை நிறைவேற்ற வேண்டிய கடமை உங்களனைவருக்கும் உண்டு.

தூய்மை நகரமாக, மாசில்லா பசுமை நகரமாக நம் நகரை மாற்றுங்கள். இவை செயல்வடிவம் பெரும் பொருட்டு நகரின் அனைத்து ஊடகங்களும் பத்திரிக்கை தர்மம் காத்து செயல்பட வேண்டும்.

தேர்தல் என்பது ஒரு போட்டிதானே தவிர அது எதிராளிகளை உருவாக்குவதற்காக நடத்தப்படுவதல்ல என்பதை உணர்ந்து தேர்தல் கால கசப்புக்களை மறந்து, நாம் எல்லோரும் சகோதர சகோதரிகள் என்று பணியை தொடங்குங்கள். ஊர் வாழ்ந்தால் நாம் வாழ்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by M.N.Sulaiman (Qatar) [22 September 2014]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 37413

அல்ஹம்து லில்லாஹ்...!!!

இங்கு பதிவு செய்த அனைவரும் ஊர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என பதிவு செய்துள்ளனர். அதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை. நமது வெற்றி குறித்து "தட்ஸ்தமிழ்" இணைய தளத்தில் இன்று வெளியான செய்தி...

http://tamil.oneindia.in/news/tamilnadu/admk-loses-kayalpattinam-ward-election-211398.html

மரியாதைக்குரிய அஷ்ரப் காக்கா அவர்களுக்கு,

இன்று தங்களின் வெற்றியை பற்றி தமிழகமே வியந்து இருக்கின்றது என்றால் அது மிகையாகாது. ஆம், உள்ளாட்சி இடைத் தேர்தலில் எங்கு பார்த்தாலும் அதிமுக வெற்றி என்று செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், நமதூரில் மட்டும் தான் சுயேட்சை வேட்பாளராகிய நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். தாங்கள் வேட்புமனு தாக்கல் சமயத்தில் சந்தித்த பிரச்சனைகளை அனைவரும் அறிவர்....அது எல்லாம் இவ்வெற்றிகாக தான்.

தங்களின் மீது நம்பிக்கை கொண்டு ஜமாஅத் வேட்பாளராக தேர்வு செய்து ,தங்களின் வெற்றிக்காக உழைத்த கோமான் ஜமாத்தார்கள் மற்றும் அருணாச்சலபுரம் சகோதர சமூகத்தாருக்கும் தாங்கள் அரும்பணி ஆற்ற வேண்டும்.

உங்களது பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [22 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37414

வெற்றி பெற்ற சகோதரர் அஸ்ரப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

தங்களை எல்லா சகோதர்களும் ஆதரித்தது போல் தாங்களும் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் தாங்களே நகர் மன்ற பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைவருக்கும் பாகுபாடின்றி சேவை செய்யவேண்டுகிறோம். மேலும் அனுபவமுள்ள தங்கள் வார்டின் முன்னாள் உறுப்பினர் லுக்மான் காகாவின் ஆலோசனை தங்களுக்கு எப்போதும் உண்டு என்பது தங்களுக்கு மிகப்பெரிய பலம்.

காயல் நகர கண்மணிகளே! இந்த ஒற்றுமையை நாம் கடந்த நகராட்சி தேர்தலில் இழந்ததாலேயே நமதூருக்கு நடக்க வேண்டிய அனைத்து நல்ல காரியமும் கைகூடாமல் போய் இருக்கிறது. இதை முன்னாள் மாவட்ட ஆட்சியர் மேடையிலேயே சூசகமாக உணர்த்தியதை இந்த நேரத்தில் நினைவு கூறவேண்டும்.

இனிவரும் காலங்களில் வேற்றுமைகளை மறந்து நம் முன்னோர்கள் காட்டித்தந்த நெறியை பின்பற்றி நகரின் சேவைக்கும் முன்னேற்றத்திற்கும் தோளோடு தோல் நின்று செயலாற்ற அனைவரும் சபதமெடுப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...வாழ்த்துக்கள்
posted by ahmed meera thamby (makkah) [22 September 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37415

அண்ணன் அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!!

எந்த ஒரு அரசியல்வாதிகளாலும்&எந்த ஊர் அமைப்புகளாலும் அஷ்ரப் வெற்றி பெறவில்லை அவர்களின் ஜமாஅத்,தெரு மக்களின் ஒற்றுமை வெளிபாடே இந்த வெற்றி,காயல் மக்கள் அவர்களின் ஊர் ஒற்றுமையில் தான் வாழ்கிறார்கள் எந்த அரசியல்வாதியையும் சார்ந்து வாழவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூர் மக்கள் எல்லா வகையிலும் ஒற்றுமையுடன் வாழ அருள் புரிவான் ஆமீன்

வஸ்ஸலாம்
அன்பின் அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. மக்களின் தீர்ப்பு வரவேற்கத் தக்கதே!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [22 September 2014]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 37416

1-வது வார்டுக்கான தேர்தலில் மக்களின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது! அரசியல் பலம், ஆளுங்கட்சி அதிகாரம் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு தங்கள் ஜமாஅத் யாரைச் சுட்டிக்காட்டுகிறதோ அவருக்கே எங்கள் வாக்கு என கோமான் ஜமாஅத்தினர் முழுமையாக ஒத்துழைத்து இந்த வெற்றிக்கனியை சகோதரர் அஷ்ரஃபிற்கு பரிசாக அளித்துள்ளனர். அருணாச்சலபுரத்தின் அமோக ஆதரவும் இதில் அடங்கும்.

இதிலிருந்து நமக்கு கிடைத்த பாடம் என்னவெனில் ஒன்றுபட்டால் எதையும் சாதிக்க இயலும் என்பதுவே! அரசியலுக்கு முக்கியத்தும் அளிக்காமல் ஆளுங்கட்சி என்றுகூட பாராமல் சுயேட்சைக்கு வாக்களித்து தமது கட்டுக்கோப்பினை வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர்.

உள்ளூர் அமைப்புகளும், பேரவையும், தாய்ச்சபையும், ஆதரவு தருவதாக களத்தில் இறங்கினாலும் வெற்றி தோல்வி என்பதை அந்த வார்டு மக்களே நிர்ணயிப்பார்கள்.

மக்களின் தீர்ப்பு மகத்தான தீர்ப்பு! இனி வருங்காலங்களில் ஒவ்வொரு ஜமாஅத்திலும் ஒரு வேட்பாளரை தேர்வு செய்து போட்டியின்றி மற்றவர்கள் வழிவிட்டு வெற்றி பெறச் செய்ய முன் வர வேண்டும்.

மக்கள் தந்த இந்த மகத்தான வெற்றியை மக்கள் பணிக்கே அர்ப்பணித்து வார்டு நன்மைக்காக பாடுபட வேண்டும். எடுப்பார் கைப்பிள்ளையாக இல்லாமல், தன்னை வெற்றி பெறச் செய்த மக்களின் மனநிலை அறிந்து சூழ்ச்சி, கவிழ்ப்பு சதி, லஞ்ச லாவண்யங்களுக்கு விலை போகாமல் நீதிக்கு கட்டுப்பட்டு நியாயமாக நடக்க வேண்டும்.

தலைவி தனது கட்சிக்காக ஆதரவு திரட்டியதில் தவறில்லை. அப்படி பார்த்தால் எந்த அரசியல் அமைப்பும் யாருக்கும் ஆதரவு தர இயலாது. நமக்கு எதிரணியில் வாக்கு சேகரித்தவர்தானே என எண்ணாமல் மன்றத்தின் தலைவர் என்கிற முறையில் அவருடன் நல்லிணக்கத்தை வளர்த்து கன்னியம் பேண வேண்டும்.

அஷ்ரஃப் அவர்களே! மக்கள் பணியின் முதல் படி இதுவே! அந்த பொறுப்பை வழங்கிய மக்களுக்கு உண்மையாக உழைக்க தயாராகிக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்…!
-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. V1
posted by JAHIR HUSSAIN VENA (BAHRAIN) [22 September 2014]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 37418

வெற்றி பெற்ற சகோதரர் அஸ்ரப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

தாங்கள் வேட்புமனு தாக்கல் சமயத்தில் சந்தித்த பிரச்சனைகளை அனைவரும் அறிவர்....அது எல்லாம் இவ்வெற்றிகாகதான். கோமான் ஜமாத்தின் ஒற்றுமையை இதன் மூலம் அறிகிறோம்

தலைவி உட்பட நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் விருப்பு வெறுப்புகளை மறந்து ஊரின் நலனிற்காக, மேம்பாட்டிற்காக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் ஏகோபித்த விருப்பமாகும். அதை நிறைவேற்ற வேண்டிய கடமை உங்களனைவருக்கும் உண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. வாழ்த்துக்கள்...
posted by M.Z.SIDDIQ. (kayalpatnam) [22 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37420

எனது அன்பு காக்கா s .I அஷ்ரப் அவர்களின் தெளிவான வெற்றியை மனதார வாழ்த்துகிறேன். மேலும் இந்த வெற்றி கோமான் ஜமாஅத் ஒற்றுமைக்கும், மற்றும் மத நல்லினகதுகும் விடப்பட்ட சவாலுக்கு கிடைத்த வெற்றி. மேலும் வாக்களித்த,வாகளிகாத மக்கள் என வேறுபாடு இல்லாமல் அனைத்து பகுதிகளுக்கும் உங்கள் பணி{கடமை}செய்ய வேண்டும். இதுதான் நம் ஊரின் பண்பாடு.முன்னோர்கள் காண்பித்த வழி.உங்கள் பணி சிறக்க வாழ்த்தி துவா செய்கிறேன்.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by P.N.N. Zainul abdeen (Dubai) [22 September 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37422

வெற்றி பெற்ற அஷ்ரப் காகா அவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக நின்ற கோமான் ஜமாஅத் மற்றும் அருணாசலபுரம் & கடையக்குடி மக்களுக்கும் வாழ்த்துக்களை சமர்பிக்கின்றேன்

அதே நேரத்தில் வெற்றி வாய்பை தவற விட்ட அமலகனி அம்மா அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆபிதா அம்மா அவர்கள் அமலகனிக்கு ஆதரவு திரட்டாமல் இருந்தால் இவர்கள் இப்போதைக்கு பெற்ற வாக்குகளை விட அதிகம் பெற்று இருப்பார்கள் என்று நினைக்க தோணுகின்றது.

இனியாவது இந்த தலைவி பிறரிடமும் , ஊர் பெரியார்களையும், சமுதாயத்தின் பெரியவர்களையும், மதித்து கலந்து பேசி எந்த முடிவையும் ஊருக்கும், சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும் வண்ணம் எடுக்க வேண்டி கொள்கிறேன்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...வல்லோனின் தீர்ப்புதனை யாரால் மாற்ற இயலும்?
posted by omer anas (DOHA QATAR.) [22 September 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37423

ஒன்றுபட்ட,ஜமாத்தின்,ஐக்கியத்தில்,பச்சிலையும்,கனி,,,களும்,கோமான் எனும் புயலில் வேரோடு சாய்ந்து விட்ட போதிலும், கோமான் கொடிமரம் மட்டும் பட்டொளி வீசிஇன்று கோலாகலமாக பறப்பது யாராலே!..? ஐக்கிய(முடன்,)ஜமாஅத் ஒற்றுமையுடன் செயல்பட்டதாலே....!!! நல்லோர்களுக்கு,வல்லோன் எழுதிய தீர்ப்பு.அவனின் தீர்ப்பை யாரால் மாற்றிட முடியும்,,,? வாழ்த்துக்கள் கோமான் ஜமாத்தார்களுக்கு.தம்பி அஸ்ரப்,உனது ஒன்றாம் வார்டு,மக்கள் உன் மேல் வைத்துள்ள நம்பிக்கையினை,நன்றி மறவாமல்,காரியத்தில் காட்டி நர்ப்பெயர் எடுத்து கொடுத்து,ஜமாஅத்துக்கள் தான் ஊர் வெற்றிக்கு அவசியம் என்பதை ஊராருக்கும்,கட்சி கபடா என்று திரிவோருக்கும் ஒரு பாடமாக்கி காட்டு.!வெற்றிக்கு வாழ்த்துகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [22 September 2014]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 37425

அல்ஹம்துலில்லாஹ்.

உப்புசப்பில்லாத வெறும் வார்டு இடைத்தேர்தல்தான் என்றாலும்கூட இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி. ஏனெனில் ஜமாஅத் ஒற்றுமையை பறைசாற்றிய வெற்றி. ஒற்றுமைக்கு எதிரான குள்ளனரிக்கூட்டங்களை குழிதோண்டி புதைத்த வெற்றி. அகம்பாவத்திர்க்கும் அகங்காரத்திர்க்கும் அதற்கு வால் பிடித்த வலைதளத்திற்கும் கிடைத்த சம்மட்டி அடி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...
posted by A.Lukman (Thiruvallore) [22 September 2014]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 37429

அஸ்ஸலாமு அழைக்கும். இந்த இமாலய வெற்றியை தந்த அல்லாஹ்விற்கே எல்லா புகழும். இந்த வெற்றிக்காக அரும் அடுபட்ட கோமான் ஜமாதார்கள், அருணாச்சலபுரம் சகோதரர்கள், மற்றும் தேர்தல் களத்தில் எங்களுடன் சேர்ந்து பணியாற்றிய மற்ற ஜமாத்துக்களின் சகோதரர்கள் ,கவுன்சிலர்கள் , எங்கள் ஜமாஅத் வேட்பாளரின் வெற்றிக்காக துஆ செய்த உள்ளூர் வெளியூர் வசிக்கும் நமதூர் சகோதர சகோதரிகள் அனைவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். மேலும் இ நாங்கள் கடுமையாக கலப்பநியட்ட்ற காரணம், நம்மவர்களில் சிலர் சகோதரி அமலக்கனிக்கு ஆதரவாக பணியாற்றியதும் அவரது வெற்றிக்காக மக்களை துவா செய்யும்படி சொன்னதும் தான். அவர்களுக்கும் இந்த நேரத்தில் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. அல்ஹம்திலில்லஹ்!...
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [22 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37436

அல்ஹம்திலில்லஹ்! ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி, ஒருங்கிணைந்த ஒரு கட்டுக்கோப்பான ஜாமத்துக்கு கிடைத்த வெற்றி,ஒற்றுமை ஜமாத் வெற்றிப்பெற்றே ஆகவேண்டும் என்ற உயரிய உன்னத உணர்வோடு ஆதரவு கொடுத்த அதிகப்படியான ஊர் ஜமாத்துக்கள், பொது நல அமைப்புகள்,அரசியல் கட்சிகள் ஆகியோர்களின் அபிலாசைக்கு கிடைத்த வெற்றி.ஒருஜாமத்தின் ஒருங்கிணைந்த ஒற்றுமைக்கு வலிவு சேர்க்கவேண்டும் என்ற தூய எண்ணத்தில் இனம்,மதம்,அரசியல் ஆகிய உணர்வுகளை ஒதிக்கி வைத்துவிட்டு உடன்பிறவா சகோதரகளாய் தங்கள் அருகிலிருக்கும் ஜாமாத் மக்களின் உணர்வுகளை மதித்து அந்த ஜமாத் வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்த அப்பகுதி மேண்மைமிகு மதநல்லிணக்க மாந்தர்களுக்கு கிடைத்த வெற்றி.

உண்மையும்,நியாயமும்,நடுநிலைமையயும் ,ஒற்றுமையும் ஒருங்கிணைந்தே சேர்ந்து உள்ளம் மகிழும் வெற்றியை கொடுத்த வல்ல இறைவனுக்கே எல்லாப்புகழும் என்று கூறி சகோதரர் அஷ்ரப் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!

அன்புத் தம்பியே வெற்றி தோல்வி வருவதும் போவதும் எதார்த்தம் தற்போது உனக்கு முன்னால் உள்ள பொறுப்புக்களை கடமையாற்ற கையாளும் தருணத்தில் காய்தல்,உவத்தலின்றி உன்னுள்ளத்தை ஒரே நடுநிலை நேர்க்கொட்டில் நகர்த்தி உன் சக உறுப்பினர்களோடும், தலைவி அவர்களோடும் ஒருங்கிணைந்து செயலாற்றி உன் வார்டுக்கும் ,நம் ஊருக்கும்,நம் புனித மார்க்கத்திற்கும் மிகுதியான, நன்மையான ,புண்ணியமான பணிகளை செய்ய இத்தருணத்திலிருந்தே தயாராகி விடுவாயாக! உன்பணி சிறந்தோங்க படைதோனும் நல்லருள்புரிவானாக் ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. இனியும் குரோதம் வேண்டாம்!
posted by காரைக்கால் M.H.கரீம் (Kayalpatnam) [22 September 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37438

நம் நகரின் அனைத்து இணையதளங்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நமதூர் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுநலவாதிகள், நகர்மன்றத் தலைவி அவர்கள், அனைத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் காரைக்கால் M.H.கரீம் உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 1வது வார்டுக்கு கடந்த 18ஆம் தேதி இடைத்தேர்தல் இறையருளால் அமைதியாக நடைபெற்று முடிந்து, இன்று வாக்குகளும் எண்ணப்பட்டு, ஜமாஅத் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றியும் பெற்றாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடுத்து வாக்குகள் எண்ணப்படும் வரை பல விமர்சனங்கள், பல அறிக்கைகள், பல பதில் அறிக்கைகள், பல கமெண்ட்டுகள் என அனைத்தும் இணையதளங்கள் மூலம் நடைபெற்றன. இந்நிலையில் இப்போது முடிவும் தெரிந்தாகிவிட்டது. இந்த வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கு எல்லோரும் நன்றி செலுத்துவோம். நமக்கிடையே ஒற்றுமை மேம்பட துஆ செய்வோம்.

இனிமேல் இது தொடர்பாக யாரையும் விமர்சிப்பதோ, கண்டிப்பதோ, நோட்டீஸ் மூலம் - நெட் மூலம் செய்ய வேண்டாம். நமது கண்ணியத்தை நாமே குறைத்துக்கொள்ளாமல் நமதூர் ஒட்டுமொத்த உயர்வுக்கும் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். நமக்கு நாமே எதிரிகள் போல செயல்பட வேண்டாம். மத நல்லிணக்கம், மனிதநேயம் காப்போம். அல்லாஹ், ரஸூல் வழி நடப்போம். நன்றி.

அன்புடன்,
காரைக்கால் M.H.கரீம்
(கோமான் தெரு)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...
posted by முஹியத்தீன்அப்துல்காதர்.PMA. (kayalpatnam) [22 September 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 37443

ஊர் ஒற்றுமையை சீரழிக்க நினைத்தவர்களுக்கு அஷ்ரபின் வெற்றி மரண அடி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:...வெற்றி
posted by NIZAR (kayalpatnam) [23 September 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 37444

அல்ஹம்துலில்லாஹ்,அஸ்ரபு அவர்களின் இந்த வெற்றி எல்லாநேரமும் ஒரு நிலைப்பாடு இருக்காது என்பதை பறைசாற்றி உள்ளது.இது சாதாரன ஒரு வார்டுக்கு நடக்கிற தேர்தல் என்றாலும் நம்ம ஊரு இணையதளங்கள் இங்கயே பற்றயை போட்டு செய்திகள் சேகரித்து சுடச்சுட செய்திகள் வெளியிட்டன.இந்த ரிசல்ட் என்னவாகும் பழைய மாதிரி மவுன புரட்சியா?என்ற திகில் ஒரு பக்கம் இல்லாமல் இல்லை.ஆனால் இதன் முடிவு அருகில் இருக்கும் அன்பு சகோதரர்களின் கைகளில் இருந்தது.தேர்தலுக்காக இல்லாமல் பொதுவாக அஸ்ரபு அவர்கள் மதங்களை கடந்து,ஒரு குடும்ப நண்பராக அந்த பகுதியில் பழகியது நம்பிக்கையை வரவழைத்தது.

இருந்தாலும் கட்சி,கடைசி நேர கவனிப்பு இதில் மூழ்கிவிடுமோ என்ற பயமும் தொட்டு சென்றது.ஆனால் அத்தனையும் கடந்து அஸ்ரபின் மதநல்லிணக்கம் அவருக்கு இந்த வெற்றியை கொடுத்து உள்ளது என்றால் அது மிகையில்லை எனலாம்.அதைப்போல அச்சுபிசகாத கோமான் ஜமாத்தின் உறுதியும் உயிர் கொடுத்துள்ளது எனலாம்.எப்பொழுதுமே ஒரு ஜமாஅத்,ஊரின் பொது அமைப்புகள் என்பது நமது கண்ணியம்,நமது பலம், நமது கவ்ரவம்,நமது மரியாதையை,என்பதை உணரவேண்டும்.தேர்தல் வந்துவிட்டால் மோதல்கள் வருவது இயல்பானது.குறை இல்லாத ஜமாத்தும்,அமைப்புகளும் இருக்க முடியாது.அதற்காக கோஷ்டியாக பிரிந்து அனைத்தையும் பலவீனமாக்குவது வேதனையான செயலாகும்.அரசு வட்டாரங்கள் ஜமாஅத் மற்றும் ஊரின் பொதுஅமைப்புகள் சக்தி இல்லாவிட்டாலும் சக்தி இருப்பதாக நம்புவது இயல்பான ஒன்றாகும்.அதை நாமே உறுதிபடுத்துவது எத்தனை ஆபத்தானது.எனவே இனிவரும் காலங்களில் மனமாச்சரியங்களை கடந்து ஒருமித்த ஒரு வேட்பாளரை ஜமாஅத் நிறுத்தினால் அதற்கு கோமான் ஜமாஅத் போல முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.அஸ்ரபு அவர்கள் தங்கள் வார்டுக்கு தன்னிகரற்ற சேவை ஆற்றிட வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:...
posted by Solukku.ME.Syed Md Sahib.(செய்து மூசா) (QATAR) [23 September 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 37465

அஸ்ஸலாமுஅலைக்கும்.நமதூரின் கட்டுப்பாடான ஜமாத்துகளில் கோமான் ஜமாத்தும் ஒன்று.இந்த தேர்தல் மீண்டும் உறுதி படுத்தி உள்ளது.வெற்றி பெற்றவருக்கு என் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. குட் லக் !!
posted by Salai.Mohamed Mohideen (USA) [23 September 2014]
IP: 50.*.*.* United States | Comment Reference Number: 37467

ஆரம்ப முதல் நாம் அனைவரும் எதிர்பார்த்த வெற்றி நனவாகி விட்டது. எல்லாபுகழும் இறைவனுக்கே !!

கட்டுக்கோப்பான நீதமான முறையில் செயல்படும் ஜமாஅத் - களின் ஒற்றுமைக்கு இவ்வெற்றி மிக சிறந்த எடுத்து காட்டு. வாழ்த்துக்கள் கோமான் ஜமாஅத் & வெற்றி வேட்பாளர்.

நகரமன்ற செயல்பாடுகளில் சுய / அரசியல் (குறிப்பாக தேர்தலுக்கு முன் நிகழ்வுகள்) காழ்ப்புனர்சிகளுக்கு இடம் தராது... மீதமிருக்கும் இரண்டு ஆண்டுகளில் உங்க வார்டுக்கு என்னென்ன நன்மைகள் செய்யலாம் என்று சிந்தித்து செயல்பட்டு உங்கள் ஜமாஅத்க்கு பெருமை பெற்று தர இறைவன் அருள் புரிவானாக !!

Let the victory not go to your head... let it stay in your heart !! Wishful thinking is not sufficient, it must be constructive !!

நமக்குள் ஏற்படும் சற்று நேர கசப்பு உணர்வுகளை துறந்து ஊர் நலன் பேணி சகோதரத்துவத்தை மேம்படுத்துவோம் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved