Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:09:42 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14167
#KOTW14167
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 23, 2014
என்று நோன்பு பெருநாள் (1435)?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3120 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஷவ்வால் (1435) மாத அமாவாசை ஜூலை 26 சனிக்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி இரவு 10:41 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் ஜூலை 27 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:11.

ஜூலை 26 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:40 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:10. சூரியன் மறையும்போது அமாவாசை நிகழ இன்னும் 10 மணி நேரம் இருக்கும். ஜூலை 26 அன்று உலகின் எந்த பகுதியிலும் பிறையை காண இயலாது.





ஜூலை 27 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:40 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:53. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 14.5 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 13 நிமிடம் வரை பிறை இருக்கும். இருப்பினும் சூரியனுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் காரணத்தால் வெறுங்கண்கள் கொண்டு காயல்பட்டினத்தில் அன்று பிறையை காண இயலாது.



தென் பசிபிக் கடல் பகுதியில் எளிதாகவும், தென் அமெரிக்க கண்டத்தின் தென் மற்றும் மத்திய பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தாலும் - ஜூலை 27 அன்று, வெறுங்கண்கள் கொண்டு, பிறையை காணலாம்.

மெக்சிகோ, மத்திய அமெரிக்க கண்டம், தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதி, ஆப்ரிக்கா கண்டத்தின் மத்திய மற்றும் தென் பகுதிகள் ஆகியவற்றில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.



ஜூலை 28 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:39 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:35. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 38.5 மணி நேரம். காயல்பட்டினத்தில் எளிதாக வெறுங்கண்கள் கொண்டு, பிறையை காணலாம்.

ஜூலை 28 அன்று ஐரோப்பா, வட சீனா, ரஷ்யா, ஜப்பான் பகுதிகளில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும், உலகின் இதர பகுதிகளில் எளிதாக - வெறுங்கண்கள் கொண்டு - பிறையை காணலாம்.



பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்களில் - கேரளாவை தலைமையகமாக கொண்டு செயல்புரியும் ஹிஜ்ரி குழுவினை பின்பற்றுவோருக்கு ஜூலை 27 நோன்பு பெருநாளாகும்.

மாதப்பிறப்பினை கணக்கிட வேறு வழி முறைகளை பயன்படுத்தும் Fiqh Council of North America/Islamic Society of North America, Conseil Français du Culte Musulman or French Council of Muslims, European Council for Fatwa and Research, Turkey, Malaysia, Egypt போன்ற அமைப்புகளுக்கும், நாடுகளுக்கும் ஜூலை 28 (ஷவ்வால் 1) நோன்பு பெருநாளாகும்.

உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜூலை 26 (அமாவாசை) அன்று ரமழான் 28 பூர்த்தி ஆகிறது. ஜூலை 27 அன்று - தென் பசிபிக் கடல் பகுதியில் எளிதாகவும், தென் அமெரிக்க கண்டத்தின் தென் மற்றும் மத்திய பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தாலும் வெறுங்கண்கள் கொண்டு, பிறையை காணலாம். மெக்சிகோ, மத்திய அமெரிக்க கண்டம், தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதி, ஆப்ரிக்கா கண்டத்தின் மத்திய மற்றும் தென் பகுதிகள் ஆகியவற்றில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.

அவ்வாறு பிறை காணப்பட்ட தகவல் வந்தால் ஜூலை 27 அன்று ரமழான் 29 பூர்த்தி செய்து, ஜூலை 28 (திங்கட்கிழமை) அன்று அவர்கள் ஷவ்வால் மாதம் துவக்குவர். அவ்வாறு தகவல் கிடைக்கவில்லையெனில் - ஜூலை 28 அன்று ரமழான் 30 பூர்த்தி செய்து, ஜூலை 29 (செவ்வாய்க்கிழமை) அன்று ஷவ்வால் மாதம் துவக்குவர்.

அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு ஜூலை 26 (அமாவாசை) அன்று ரமழான் 27 பூர்த்தி ஆகிறது. எனவே அவர்கள் ஜூலை 28 அன்று ரமழான் 29 பூர்த்தி செய்வர். ஜூலை 28 அன்று காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால் காணலாம். அவ்வாறு கண்டால், அவர்கள் - ஜூலை 28 அன்று ரமழான் 29 பூர்த்தி செய்து, ஜூலை 29 (செவ்வாய்க்கிழமை) அன்று ஷவ்வால் மாதம் துவக்குவர்.

ஜூலை 28 அன்று வானிலை சூழல் காரணமாக பிறை தென்படவில்லையென்றால், அவர்கள் ஜூலை 29 அன்று ரமழான் 30 பூர்த்தி செய்து, ஜூலை 30 (புதன்கிழமை) அன்று ஷவ்வால் மாதம் துவக்குவர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...தலை சுற்றுகிறது .....
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [24 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36091

உலகில் பூமி தன்னை தானே சுற்றுகிறதோ இல்லையோ ....

இந்த பெருநாள் பிறை கணக்கை படிக்கும் எல்லோர்களுடைய தலையும் நிச்சயம் .. சுற்றும் ...

நம்மை விட வல்ல நாயனே இந்த உலகில் வானம் பூமியில் உள்ள அணைத்து ரகசியங்களையும் மிக மிக அறிந்தவன் , தெரிந்தவன் அல்ஹம்து லில்லாஹ் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by kulam.kabeer (kayalpatnam) [24 July 2014]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 36095

அஸ்ஸலாமு அழைக்கும்

இறைவனே போதுமானவன் , மறைகப்பற்ற உண்மைகளை அறிந்தவன் அவன் ஒருவனை அன்றி வேறு எவரும் இலர் .

இன்ஷா அல்லாஹ நபிகள் நாயகம் ரசூலே கரீம் சல்லல்லஹு அலைஹி வசல்லம் அவர்கள் காட்டி தந்த சுன்னத்தான முறையான பிறையை பார்த்து பெருநாளை அடைவோமாக . வல்ல ரஹ்மான் இந்த ரமலானை போன்று எதிர் வரும் ஆண்டுகளில் இந்த புனதமிகு ரமலானை அடையும் பாகியத்தை நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக . ஆமீன் வஸ்ஸலாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பூனைக்கு மணி கட்டுவது யார்?
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா – கத்தார்) [24 July 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36097

அட்மின் அவர்கள், இந்த குப்பை analysis மூலம், இந்த சமூகத்துக்கு ஏதோ சொல்ல நினைக்கிறார் போல...!

மகளிருக்கு மாத விடாய் தப்பினாலும், இந்த செய்தி இவ்விணையத்தில் தப்புவதில்லை!

Cut & right ஆக வெள்ளத் தாமரை போன்று “பெருநாள் இன்று தான்!” என்று சொல்லத் துணிச்சலற்ற கோழைத் தனமான ஊடகவியல்!

நேர விரயம்!

மன்னிக்கவும், விமர்சனத்தை துணிவாக ஏற்றுக் கொள்ளுங்கள்! இயன்றால், அதற்கான சரியான விளக்கத்தைத் தாருங்கள்!

இந்த சடங்கு கியாம நாள் வரை தொடர்ந்து விடாமல் இருக்க பூனைக்கு நாம் தான் மணி கட்டுவோமே...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சர்வேதேச(?) பிறை - ஒரு மாயை
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [24 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36099

கணக்கிடுவதிலும் (ஹிஜ்ரி கமிட்டி) இரண்டு வழிமுறை (methodology) இருக்கிறதா? சந்தோசம். முதலில், இந்த இரு சாராரில், யார் கணிப்பது சரி என்று ஒரு முடிவுக்கு வரட்டும். விஞ்ஞான முறைப்படி கணிப்பதிலே இரு வேறு கருத்துக்கள் இருப்பது விந்தை.

"உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு" (C & P ) இந்தியாவில் குறிப்பாக நமதூரில் அப்படி ஒரு சாரார் இருக்கிறார்களா? இது ஒரு மாயை. உண்மையில் அவர்கள் சஊதியை மட்டுமே பின்பற்றுகின்றனர் என்பது, அவர்களுக்கும் தெரியும்.

ஆனால், இவர்கள் பின்பற்றும் சஊதி (பிறை விஷயத்தில்) மார்க்க அறிஞர்கள் (முப்தி), அந்தந்த பகுதியில் பிறை பார்த்து தான், நோன்பு (அரபா நோன்பு உட்பட) மற்றும் பெருநாள் அனுஷ்டிக்க வேண்டும் என்கின்றனர்.(தம்பி. சாளை ஜியாவுத்தீன், என்ன நான் சொல்வது சரிதானா?)

சகோதரர் கத்தீபு சொன்னது போல், மாதம் எப்போது துவங்குகிறது? என்று இந்த இணையத்தில் வரும் செய்திகள், ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. ஆனாலும் ஒரு விஞ்ஞான பூர்வமான தகவல் கிடைக்கிறது. அதாவது, நம் பகுதியில் பிறை தெரிய வாய்ப்பு உள்ளதா? என்று அறிந்து கொள்ளலாம்.

மொத்தத்தில், நமதூரில் மூன்று பெருநாட்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சில குடும்பங்களில் சந்தோஷமாக கொண்டாட வேண்டிய பெருநாள் தினத்தில், (ஒரே வீட்டில்) பெற்றோர் நோன்பிருக்க பிள்ளைகள் (vice versa) பெருநாள் கொண்டாடி சந்தோஷத்தை தொலைக்கின்றனர். தம்பி சாளை ஜியாவுத்தீனின் "சந்தோஷமாக ஒரு வட்டலாப்பம், சவ்வரிசி திங்க முடியவில்லை" என்ற பழைய பதிவு நினைவுக்கு வருகிறது.

நமக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [24 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36103

இதை படிக்கும் போது அனைவரின் தலைதான் சுற்றுகிறது. இதை வெளியிடாமல் தவிர்ப்பது மிக்க நல்லது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Abdul hadhi (JEDDAH AL RUWAIS) [25 July 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36105

குலப்பா வாதிகள் இருக்கும் வரை ஊர் இப்படிதான் இருக்கும்

அப்துல் ஹாதி ஜெட்டாஹ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [25 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36106

அஸ்ஸலாமு அலைக்கும்

உண்மையில் சொல்ல வேண்டுமானால் இந்த கணக்கு நமக்கு தேவை இல்லாதது தான் என்று கூறலாம்.....

காரணம் .... நமது ஊரில் தான் நாம் 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து குருப் / குருப்பாக '' பெருநாள் '' கொண்டாடி வருகிறோமே ( கொண்டாடுவோமே ) .....அப்படி இருக்க நமக்கு இக்கணக்கு தேவைக்கற்றது தானே ......

உலகம் சுற்றுகிறதோ இல்லையோ ... நம் தலையை சுற்ற இக்கணக்கு மூலமாக நீங்கள் வைக்கிறீர்கள் ..........ஓகே......

வஸ்ஸலாம்.
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. பகலும் இரவைப் போன்றது!?
posted by Javed Nazeem (Chennai) [26 July 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36121

தெளிவான பதிவு. கல்வெட்டில் பதிந்து விட்டு அருகிலேயே நின்று கொள்ளலாம். இந்தப் பதிவைப் புரிந்து கொண்டால் கண் தெரியாத ஒருவருக்கு அமாவசை அன்று கூட பிறை தெரியும். ஒரே ஒரு குறை தான். அண்டார்டிகா, ஆர்டிக் பெருங்கடல், கிரீன் லாண்ட், ஐஸ் லாண்ட் பகுதிகளில் எப்போது பிறை தெரியும் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்கள். Jokes apart - இந்தப் பதிவை படிக்கும் ஒருவர், இஸ்லாத்தில் பல பிரிவுகளுக்கு அனுமதி இருக்கின்றது என்ற முடிவுக்கு வரலாம் அல்லவா? வெள்ளை வெளேர் என்ற பாதையில் சேற்றை அள்ளி வீச உங்களை அறியாமலே துணை நிற்கிறீர்கள்.

Read more at: http://wp.me/p1tjVx-A


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved