Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:56:47 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14115
#KOTW14115
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 17, 2014
நகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை பறிப்பைக் கண்டித்து இந்திய தொழிற்சங்கம் சார்பில் காயல்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம்! நகராட்சி நிர்வாகத்திற்கெதிராக முழக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3040 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

2007 - 2008 காலகட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சியில் - 14 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். தற்காலிக நோக்கில் நியமனம் செய்யப்பட்ட அவர்களின் பணிக்காலம், சர்ச்சைக்குரிய சூழலில் ஏறத்தாழ 7 ஆண்டுகள் நீண்டு, அவர்களில் 13 பேரின் பணி நீட்டிப்பு - இறுதியாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலை பறிக்கப்பட்ட 11 தொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாத்திட தமிழக அரசை வலியுறுத்தி, இந்திய தொழிற்சங்க மையம் காயல்பட்டினம் கிளை சார்பில் இன்று 17.00 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சு.பன்னீர் செல்வம் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-



காயல்பட்டினம் நகராட்சியில் ஒப்பந்தப் பணியாளர்களாகப் பணியாற்றிய 11 பேரை எவ்வித காரணமுமின்றி, எந்த முன்னறிவிப்புமின்றி - பணிக்கு வர வேண்டாம் என நகராட்சி ஆணையர் கூறி அனுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து அவரை நாங்கள் சந்தித்துப் பேசியபோது, அவர்களின் ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்டதாகக் கூறினார். 7 ஆண்டுகள் பணியிலிருந்திருக்கிறார்களே என்று நாங்கள் கேட்டதற்கு, அவர்கள் பணிக்கு வந்த வழி சரியில்லை என்று ஆணையர் கூறினார்.

எத்தனை துறைகளில் முறைப்படி பணியமர்த்தப்படுகின்றனர்? எல்லாத் துறைகளிலும் பல லட்சங்களைக் கொடுத்துதான் பணியில் சேருகின்றனர். இது எங்களுக்குத் தெரியாதா?

தற்போது இவர்களை திடீரென பணியிலிருந்து நீக்கி விட்டீர்களே? இவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் என்ன?

இதே இடத்தில் இந்த ஒப்பந்தப் பணியாளர்களை விமர்சித்தும் நாங்கள் பேசித்தான் இருக்கிறோம். அதை மறுக்கவில்லை. அன்று நகராட்சியில் அதிகாரிகள் இருந்தனர். ஆனால் ஊழியர்கள் நிரந்தரமாக இருக்கவில்லை. அதனால் பணியில் பல குறைபாடுகள் இருந்தன என்ற அடிப்படையில் நாங்கள் விமர்சித்தோம்.

நகரில் 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. 18 வார்டுகளிலும் தண்ணீரைத் திறந்து விடவே 13 பேர் தேவைப்படுகிறது. சுகாதாரப் பணியில் 27 பேர் உள்ளனர். ஓட்டுநர்கள் 5 பேர் தேவை. ஆனால் ஒப்பந்தப் பணியாளர்களை அனுப்பி வைத்துவிட்டு, நகராட்சியில் வேறு பணியிலிருப்போரை டிரைவராக பணியில் வைக்கவில்லையா?

ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் விஷயத்தில் தணிக்கைத் தடை என்றெல்லாம் காரணம் கூறுகிறார்கள். நகராட்சியில் ஊழியர்கள் போதுமான அளவில் இல்லாததால், தெரு விளக்குகளைக் கூட கவுன்சிலர்கள் தூக்கிக் கொண்டு செல்லும் நிலையுள்ளது.

இந்த ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் குறித்து இணையதளத்தில் பல விபரங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அவர்களின் நியமனம் முறையானதா, இல்லையா என்ற விவாதத்திற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஏழு ஆண்டுகள் நகராட்சியில் பணியிலிருந்திருக்கிறார்களே? திடீரென அவர்களை வீட்டிற்கு அனுப்பினால் அவர்களின் குடும்ப நிலை என்ன என்பதுதான் எங்கள் கேள்வியாக உள்ளது.

தணிக்கைத் தடை பற்றிக் கூறுகின்றனரே? அது எப்படிப்பட்டது என எங்களுக்குத் தெரியாதா? திடீரென இவர்களது வேலையைப் பறித்துவிட்டதால், ஒருவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஒருவேளை அவர் இறந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு?

இந்தப் பணியாளர்கள் வேலை பறிக்கப்பட்ட விஷயத்தில் தலைவிக்கு பெரும் பங்கு உண்டு. ஓட்டுப்போட்ட நாங்கள் தலைவியிடம்தான் உரிமையுடன் கேட்க முடியும். ஆணையாளர் இன்றிருப்பார். நாளை சென்று விடுவார். ஆனால் தலைவி 5 வருடங்களுக்கு இருப்பார்.

இந்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி கொடுப்பதற்கு ஆதரவு தெரிவித்து, சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு 16 நகர்மன்ற உறுப்பினர்கள் கூறியும், தலைவி கூட்டத்தைக் கூட்டாமல் தவிர்த்து வருகிறார். உடனடியாக கூட்டத்தைக் கூட்டி அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சி.ஐ.டீ.யு. அதை எந்த முறையில் சந்திக்க வேண்டுமோ அந்த முறையில் சந்திப்போம்.

அதுபோல, வாடகை கார் - வேன் ஓட்டுநர்கள் தம் வாகனத்தை நிறுத்தி வந்த இடத்தை அம்மா உணவகம் கட்டுவதற்காக எடுத்துக்கொண்டனர். இவ்விஷயத்தில் ஆணையாளர் குழப்புகிறாரா, தலைவர் குழப்புகிறாரா என்று தெரியவில்லை. அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு, அவர்களுக்குரிய இடத்தை வழங்க வேண்டும்.


இவ்வாறு சு.பன்னீர் செல்வம் பேசினார்.

சி.ஐ.டீ.யு. மாவட்ட செயலாளர் வை.பாலசுப்பிரமணியம் துவக்கவுரையாற்றினார். சி.ஐ.டீ.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முனியசாமி, ஆ.சந்திரசேகர், சிவதாணுதாஸ், பொன் கல்யாண சுந்தரம், ச.கண்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

திடீரென வேலை பறிக்கப்பட்டதால், இந்த 11 ஊழியர்களின் குடும்பங்களும் வருமானமின்றி நிர்க்கதியான நிலையிலுள்ளதாகவும், அவர்களுக்கு மீண்டும் வேலை அளிக்காவிட்டால் சி.ஐ.டீ.யு. பல வழிகளில் தொடர்ந்து போராடும் என்றும் அவர்கள் பேசினர்.

காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

நிறைவில், ஒப்பந்தப் பணியாளர்களின் வேலையைப் பறித்தமைக்காக காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், நகர்மன்றத் தலைவரைக் கண்டித்தும், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் முழக்கமிட்டனர்.







காயல்பட்டினம் நகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்கள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 21:30/17.07.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [17 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35980

கம்யுனிஸ்ட் கட்சியின் தோழர்கள் அநியாயத்திற்கும் அக்கிரமங்களுக்கும் எதிராக குரல் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கேன்.

அநியாயத்திற்கும் அக்கிரமங்களுக்கும் ஆதராவாக கம்யுனிஸ்ட் கட்சியின் தோழர்கள் களம் இறங்கி வீதியில் கோஷம் போடுவது சாலையில் செல்வோருக்கு வியப்பாக இருந்தன.

நகராட்சிக்கு சொந்தமான கழிப்பிடமோ, கடையோ, ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் முறையான ஆவணங்களுடன் நகராட்சியுடன் 1 ஆண்டோ, 6 மாதமோ, 3 மாதமோ என்ற கணக்கில் ஒப்பந்தம் செய்து அந்த ஒப்பந்தம் முடிவுற்ற பின் மறு ஒப்பந்தம் விடுவது வாடிக்கை நகராட்சியின் நடைமுறை விதி இருக்கும் போது ஆரம்பத்தில் நான் தான் அந்த கழிபிடத்தை, அந்த கடையை முன்பு காலத்தில் ஒப்பந்த அடிபடையில் நகராட்சியிலிருந்து பெற்று இருந்தேன் ஆகையால் எனக்கு தான் திரும்பவும் அந்த கழிபிடத்தை, அந்த கடையை தரவேண்டும் என்று அர்த்தமில்லாமல் அடம்பிடிப்பது சரியாகுமா.! நகராட்சியின் நடைமுறை விதிமுறை சட்டத்திற்கு சரி வருமா..!

அது போன்று தான் ஒப்பந்த பணியாளர்களின் ஒப்பந்த காலமும் முடிவுற்று விட்டன. இனி நகராட்சியின் காலி பணி இடங்களுக்கு படித்த அணைத்து சமுதாய உள்ளூர் பட்டதாரிகளுக்கு வேலை முன்னுரிமை திட்டங்கள் இருக்கலாம் அல்லவா..!

இனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் பல உள்ளூர் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டாமா..!

அன்று ஒப்பந்த பணியில் இருந்து தற்போது அந்த ஒப்பந்தம் முடிந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் நாகர்கோயில் - காயாமொழி - மற்றும் சில வெளியூர் நபர்களே அதிகம்.

உள்ளூரில் தலைமுறை தலைமுறையாக பிறந்து வளர்ந்து கல்லூரியில் படிப்பை முடித்து வரும் அணைத்து சமுதாய மக்களின் வேலை வாய்ப்புக்காக யாரும் குரல் கொடுத்த மாதிரி இதுவரை தெரியவில்லை - எந்த செய்தியுமில்லை.

காயல்ப்பட்டினம் நகராட்சியில் அலுவலக பணியில் (ஊனமுற்றோர் பட்டியல் தவிர்த்து) உள்ளூர் பணியாளர் என்று ஒருவரை கண்பிக்க முடியுமா..? ஏன் இதுமுன் பல நிர்வாகம் (சேர்மன்) கள் ஆகட்டும்..! இப்போதைய நிர்வாகம் சேர்மன் ஆகட்டும்..! யாரவது ஒரு நிர்வாகம் - சேர்மன் நகரின் படித்த பட்டதாரிகளுக்கு நமது நகராட்சியில் அலுவலக வேலைக்காக பணியில் அமர்த்த முயற்சி எடுத்திருப்பீர்களா..?

CITU அமைப்பினரின் இந்த ஆர்ப்பாட்டம் உள்ளூரில் படித்த பட்டதாரிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டமே தவிர வேறில்லை... ஏதோ உள்நோக்கம் கொண்டதாகவே கருத தோன்றிகிறது.

படித்த பட்டதாரிகளுக்கு நகராட்சியில் வேலை வழங்கு என்று என்றாவது கம்யுனிஸ்ட் கட்சி நகராட்சியின் முன்பு பட்டதாரிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் - போராட்டம் நடத்தி இருக்குமா..!

கம்யுனிஸ்ட் கட்சியின் தோழர்களே..! நகரின் நடுநிலைவாதிகளே...! பதில் தாருங்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [18 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35983

தோழர் பன்னீர் அவர்கள் மார்க்ஸிட் கட்சிக்கு அவரது தலைமையில் நகராட்சி 13ஒப்பந்த பணியாளர்களை நீக்கியவர்களையும், நகர வாகன ஓட்டியவரையும், சில கவுன்சிலர்களை கட்சியில் இணைத்தமைக்கு வாழ்த்துக்கள். நகரில் 30 ஓட்டுகள் அடுத்து வரும் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடும்.

துப்பரவு தொழிலாளி என்று இந்த 13 பேர் ஆரம்பகால வேலைக்கு வந்தார்கள், இவர்களில் யாரும்மே நகரை துப்பரவு செய்ய வரவில்லையே.

நகரமன்ற உறுப்பினர்கள் பட்சோந்தி போல சூழ்நிலைக்கு ஏற்ப கட்சி மாறி வருகிறார்களே ஏன்?

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. CITU தோழர்கள் எல்லாம் தெரிந்து இருந்தும் பட்டதாரிகளுக்கு துரோகம் செய்து இருக்கிறார்கள்...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [18 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35990

CITU தோழர்களுக்கும் - நடுநிலையாளர்களுக்கும் சில விளக்கங்கள்..

1) இந்த ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் குறித்து இணையதளத்தில் பல விபரங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அவர்களின் நியமனம் முறையானதா, இல்லையா என்ற விவாதத்திற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. C & P

அவர்களின் நியமனம் முறையானதா...? இல்லையா...? என்ற விவாதத்திற்குள் நீங்கள் சென்றால் தானே இவர்களின் பணி நியமனம் குறித்த உண்மை நிலவரம் விளங்கும். அதை தவிர்த்து விட்டு ஆணையர் மற்றும் தலைவரை சாடுவது நியாயமாகுமா...!

2) இந்தப் பணியாளர்கள் வேலை பறிக்கப்பட்ட விஷயத்தில் தலைவிக்கு பெரும் பங்கு உண்டு. C & P

2006 - 2011 நிர்வாகம் அன்று இதே பணியாளர்கள் தவறான வழியில் வேளையில் அமருவதற்கு உறுப்பினர்களின் பெரும் பங்கு இருந்தது அல்லவா..!

3) ஆணையாளர் இன்றிருப்பார். நாளை சென்று விடுவார். ஆனால் தலைவி 5 வருடங்களுக்கு இருப்பார். C & P

தலைவி இன்றிருப்பார். நாளை சென்று விடுவார். ஆனால் ஆணையரோ அரசு பதவியில் அவரின் ஓய்வு காலம் வரை நிரந்தமாக என்றும் தமிழகத்தில் அரசு பணியில் நிலைத்து இருப்பார்..! தலைவியோ இன்றையிலிருந்து 827 நாட்களுக்கு பிறகு நகராட்சியை விட்டு சென்று விடுவார்..!

4) உடனடியாக கூட்டத்தைக் கூட்டி அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சி.ஐ.டீ.யு. அதை எந்த முறையில் சந்திக்க வேண்டுமோ அந்த முறையில் சந்திப்போம். C & P

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளர்களின் அன்றைய பணி நியமனம் முறையானதாக இருக்குமானால் நீதி மன்றம் மூலம் சந்திப்பதே நியாயமாகும்..!

5) நகரில் 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. C & P

சமீபத்தில் காலி குடங்களுடன் குடிநீர் முறையாக வருவதில்லை என வீதியில் அமர்ந்து தர்ணா செய்த பொதுமக்களுக்காக என்றைக்காவது நீங்கள் நகரின் முக்கிய சந்திப்பில் சிகப்பு வர்ண கொடியுடன் ஆர்ப்பாட்டம் - போராட்டம் நடத்தி நகராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றிப்பீர்களா...? கம்யுனிஸ்ட் தோழர்களே...! பதில் தாருங்கள்..!

6) எத்தனை துறைகளில் முறைப்படி பணியமர்த்தப்படுகின்றனர்? எல்லாத் துறைகளிலும் பல லட்சங்களைக் கொடுத்துதான் பணியில் சேருகின்றனர். இது எங்களுக்குத் தெரியாதா? C & P

அதாவது உங்களுக்கு அணைத்து நடப்புகளும் தெரிந்து தான் இருக்கிறது முறைப்படி - விதிப்படி ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்தப்படவில்லை என்பதை நீங்களே ஒத்து கொள்கிறீர்கள்..! மேலும் பல லட்சங்களைக் கொடுத்துதான் பணியில் சேர்ந்தும் இருக்கிறார்கள் என்பதும் CITU தெரிந்து தான் வைத்துள்ளீர்கள்..!

7) இது எங்களுக்குத் தெரியாதா? C & P - என்று கேள்வி எழுப்பும் CITU தோழர் பன்னீர் அவர்களே..! நீங்கள் பணி நியமன நடப்புகள் எல்லாம் தெரிந்திருந்தும் முறைப்படி பணியமர்த்தப்படாத பட்சத்தில் ஏன் எதிர்க்கவில்லை..! மேலும் படிப்பை முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் உள்ளூர் பட்டதாரிகளுக்காக குரல் கொடுக்காமல் நீங்கள் CITU அப்போது ஏன் மவுனமாக இருந்தீர்கள்.. இது நகரின் பட்டதாரிகளுக்கு CITU நீங்கள் துரோகம் செய்வதாக எடுத்து கொள்ளலாம் அல்லவா..! CITU தோழர்களே...! பதில் தாருங்கள்..

நியாயத்திற்கும் நேர்மைக்கும் போராடினால் மட்டுமே நீங்கள் CITU - கம்யுனிஸ்ட் நகரின் பொது மக்கள் மத்தியில் மதிக்க படுவீர்கள்...!

அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்கும், முறைகேடுகளுக்கும் துணை போவது தொடருமானால் - துணை போவீர்கள் எனில் இந்நகரில் பொது மக்கள் மத்தியில் நீங்கள் புறக்களிக்க படுவீர்கள்... என்பது உண்மை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இந்திய தொழிற்சங்கத்தின் சாயம் வெளுத்து விட்டது.
posted by syed ahamed (kayalpatnam.) [18 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35995

கடந்த நகர்மன்றத்தின் போது பலரின் வயற்றில் அடித்து பணியில் அமர்ந்து இன்று இந்நகர்மன்ற ஆணையாரல் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கும் பணியாளர்களுக்கு பரிந்து பேசும் இந்திய தொழிற்சங்கத்தின் தரம் குறைந்து விட்டது.

இந்திய தொழிற்சங்கத்தின் இந்த ஆர்ப்பாட்டம் பலரின் முகங்களை சுழிக்க வைத்தது. இந்திய தொழிற்சங்கத்தின் இரட்டை முகம் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சாயம் வெளுத்து விட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன், (அல்கோபார் ) [19 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36025

இந்திய தொழிற்சங்க மையம் இவர்களுக்கு ஓட்டு வங்கி இல்லாமல் இருந்தாலும் மக்கள் மத்தியில் நற்பெயர் இருந்தது.

சிகப்பு கொடி பிடித்து ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவைகள் இவர்கள் செய்தாலும், மக்கள் அதை ஒரு சிரமமாக பார்க்க மாட்டார்கள், காரணம் அவர்களின் போராட்டத்தில் ஒரு அர்த்தமும், மக்கள் நலனும் இருக்கும்.

இதற்கு எல்லாம் வேட்டு வைப்பது போல இவர்களின் இந்த போராட்டம் அமைந்துள்ளது. செங்கொடியை முகம் சுளிக்க வைக்கும் கொடியாக மாற்றி விடாதீர்கள் சகோதர தோழர்களே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved