Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:35:39 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13884
#KOTW13884
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 7, 2014
ஓ... அப்ப இங்கதானோ??? (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7178 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}







காயல்பட்டினம் குறுக்கத் தெருவில் கண்ட காட்சிதான் இது.

“இங்கே குப்பைகளைக் கொட்டாதீர்” என்று எழுதப்பட்ட இடங்களில்தான் குப்பைகள் குவிந்திருக்கும்.

“இங்கே சிறுநீர் கழிக்காதீர்” என்று எழுதப்பட்ட இடங்களில்தான் வாசனை மூக்கைத் துளைக்கும்.

“இங்கே வாகனங்களை நிறுத்தாதீர்”, “இங்கே சுவர் விளம்பரம் செய்யாதீர்” என்றெல்லாம் எங்கு எழுதப்பட்டிருக்குமோ, அவ்விடங்கள்தான் அதைச் செய்வதற்குத் தகுதியான இடம் என்பது பொதுநலன் மறந்த பொதுமக்களின் கருத்தாக இருக்க, காயல்பட்டினத்திலும் அப்படிப்பட்டவர்கள் உள்ளனர் என்பதை உணர முடிகிறது.

நகர சுற்றுச்சூழல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...எதிர்மறை
posted by UMMUHANI KAREEM (kayalpatnam) [08 June 2014]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 35210

சாலிஹ் காக்கா!

எதை செய்யாதீர்கள் என்று சொல்கிறோமோ அதை தான் நமதூர் கண்மணிகள் உடனே செய்வார்கள்.

ஏதாவது ஒன்றை செய் என்று சொல்லுங்கள் செய்யமாட்டார்கள். தீவு தெரு முனையில் ஒரு வாசகம் இருக்கிறதே அந்த வாசகம் நல்ல வேலை செய்கிறது

மான ,ரோசம் இருக்கிறவர்கள் இங்கு குப்பையை தட்டாதீர்கள். எல்லா பிரச்சினைகளும் குப்பை தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack SMA (kayalpatnam) [08 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35213

மக்களின் ஒத்துழைப்பு அறவே இல்லை . இதுதான் முக்கிய காரணம் . ஆனால் இதையே எத்தனை காலத்திற்குத்தான் சொல்லி புலம்பிகொண்டிருப்பது !

இந்த விசயத்தில் நகராட்சி மிகக்கடுமையான சட்டதிட்டங்கள் இயற்றி , அதை செயல்படுத்த வேண்டும் . இல்லையேல் ஊர் இப்படித்தான் நாறும் .

1. குப்பை தொட்டி இருக்கும் இடங்களில் குப்பை தொட்டியில் மட்டும்தான் குப்பையை கொட்ட வேண்டும் . மீறுவோர் கண்டறியப்பட்டால் மிகக்கடுமையான நடவடிக்கைகளை (தண்ணீர் , மின்சாரம் துண்டிப்பு எதிர்கொள்ள நேரிடும் .

2. குப்பை லாரி வரும்போது அவர்களிடம் நேரில் கொடுக்கப்படும் குப்பைகள் மட்டுமே பெற்றுகொள்ளபடும் . தெருவில் கொட்டப்படும் குப்பைகளை அவர்கள் அள்ள மாட்டார்கள் . மேலும் தெருவில் கிடக்கும் குப்பைகள் யாருடையது என்று கண்டறியப்பட்டு , அதிகபட்ச அபராதம் மற்றும் மின்சாரம் , தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும் .

3. வீட்டின் மரங்களை வெட்டி தெருவில் போடுதல் , உடைத்தெடுத்த கட்டிட பொருட்கள் இவைகள் குப்பைகள் அல்ல. இவைகள் தெருவில் கிடந்தாலும் குப்பை லாரியில் வருபவர்கள் இவற்றை அள்ள மாட்டார்கள் . சம்பத்தப்பட்டவர்கள் கூலிக்கு ஆட்களை வைத்து அதை அப்புறப்படுத்த வேண்டும் . மீறுவோர் மீது அபராதத்துடன்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ள படும் .

நகராட்சி இதுபோன்ற சட்டதிட்டங்களை இயற்றி அதை நடைமுறைபடுத்தி பார்க்கலாம் . நிச்சயம் வெற்றி கிடைக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...கருத்து பதிவுகள் கருத்து வேறுபாடுகளாக மாறுகிறதே..
posted by mackie noohuthambi (chennai) [08 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35214

கருத்து பதிவுகள் எனபது, இங்கே வெளியிடப்படும் செய்திகள் பற்றி அவரவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான். அது இணையதள நிர்வாகிகளுக்கு உடன்பாடானதாக இருக்க வேண்டும் அல்லது மற்றவர்கள் கருத்துடன் ஒத்துப் போகவேண்டும் என்ற நியதி இல்லை. உணர்வுகள் காயப்படாமல், தனி மனித விமர்சனங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அதுவும் கூட தன் பாரிய பால்ய நண்பர் என்றால் கொஞ்சம் உரிமை எடுத்து அவரையும் விமர்சிக்கலாம். அதை sports ஆக அவர் எடுத்துக் கொள்வார் என்ற அதீத நம்பிக்கை நமக்கு இருந்தால்....இப்போது விஷயத்துக்கு வருவோம்.

காயல்பட்டினம் சுற்று சூழல் பாதுகாப்பு இயக்கம், காயல்பட்டினம் கடற்கரை பயன்பாட்டு கழகம் என்று பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நமதூரில் இருக்கின்றன. இந்த்த இயக்கங்கள் வெறும் கடற்கரை அல்லது கடலில் கழிவு நீர் கலப்பது மட்டும் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துகிறது என்று எண்ணாமல், படத்தில் காட்டியபடி குப்பைகள் இப்படி சேருவதையும் மக்கள் இந்த நிலைப்பாட்டிலிருந்து விடுபடாமல் இருப்பதையும் தட்டி கேட்க, விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். நகரமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் அரை மணி நேரமாவது நகர் வலம் வந்து இதை கண்காணித்தால் மக்கள் அவர்களுக்கு பயந்து இந்த குப்பைகளை வீட்டிலேயே வைத்திருந்து குப்பை லாரி வரும்போது அதில் கொட்டுவார்கள்.

ஒரு ஆசிரியர். வளர்ந்த மாணவர்களிடம் சொன்னார், நீங்கள் உங்கள் கெட்ட பழக்கங்களை விட்டு விடவேண்டும். "வயதாக ஆக அவற்றை நாங்கள் விட்டு விடுவோம்" என்றார்கள். மாணவர்களை ஒரு தோட்டத்துக்கு அவர்களை அழைத்து சென்றார். அங்கிருக்கும் செடிகளை அகற்ற சொன்னார், உடனே மாணவர்கள் அகற்றினார்கள். களைகளை பிடுங்க சொன்னார், பிடுங்கினார்கள். இப்போது ஒரு மரத்தை காட்டி இதை அப்புறப்படுத்துங்கள் என்று சொன்னார்.மாணவர்கள் விழித்தார்கள். ஆசிரியர் அமைதியாக சொன்னார். இப்படித்தான் கெட்ட பழக்கங்களும். அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். பெரிதாக போய்விட்டால் அதை அகற்றுவது கஷ்டமாகி விடும்.

பள்ளி பருவத்திலேயே இந்த சுற்றுப் புற சூழல் பற்றிய பயிற்சி ஒவ்வொரு வீடுகளிலும் பெற்றோர்கள் தங்கள் மக்களின் பிஞ்சு உள்ளங்களில் உட்புக செய்ய வேண்டும்.

திருடாதே பொய்சொல்லாதே குப்பை கூளத்தை வெளியே கொட்டாதே பொது இடங்களில் சிறுநீர் கழிக்காதே.

தொழுகை நோன்பு ஈமானில் ஒரு பகுதி என்று சொல்கிறோம்...சுத்தம் ஈமானில் பாதி என்று எப்போதாவது நம் பிள்ளைக்கு சொல்லி இருக்கிறோமா...

சுத்தம் சோறுபோடும் எச்சில் இரக்க வைக்கும்... நமது சந்ததிகளுக்கு நாம் வழி காட்டிகளாக இருப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYALPATNAM) [08 June 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 35216

அஸ்ஸலாமு அலைக்கும்

அருமை சகோதரரே .....இந்து போன்ற செயல் பாடுகள் நமது ஊரில் பல இடங்களில் காலம் தொற்று நடந்து வருவதை நாம் கண் கூடாகவே பார்த்து வருகிறோம் .....

நம் ஊர் பொது மக்கள் யாவர்களும் அவர்களாகவே மனம் திருந்தி இது போன்ற மோசமான செயல்களில் இருந்து தானாகவே ( திருந்தி ) முன்வரவேனும் .....அது வரை இது போன்ற தரம் கேற்ற செயல்கள் தொடரத்தான் செய்யும் ..........

நமது நகர் மன்றம் .இந்த மோசமான தரம்கேற்ற செயல் செய்பவர்கள் மீது கடுமையான '' தண்டனை '' வழங்கும் ஒரு கடுமையான '''' திட்டத்தை '' கொண்டு வந்து....அது ( சட்டம் மூலம் ) செயள்லாக்க வேணும் ......

இதற்க்கு நம் ஊர் அனைத்து பொது நல அமைப்பினர்களும் & பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேணும் ....

பொது மக்களாகிய நாமும் ஒற்றுமையுடன் இணைந்து நம் ஊர் நகர் மன்றத்துடன் ஒன்றாக செயல் படுவோமாக .....

நம் ஊரை சுத்தமான & சுகாதாரமான ''' நகரமாக்கி '''' காட்டுவோமாக........

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [09 June 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35223

அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் காயல் மக்கள் பெறும்பாலும் நகரம் தூய்மையாக இருக்க ஒத்துழைப்பு கொடுப்பதால்தான் நம் காயல் நல்ல சுகாதாரமாக இருக்கிறது. சில பகுதிகளில் சில மக்கள் இன்னும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டுகிறார்கள் அவர்களுக்கு அந்த பகுதி மக்களும் நகரமன்றமும் தொடர்ந்து விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் அவர்களும் திருந்தி விடுவார்கள் .

மற்ற ஊர் மக்கள் நம் மக்களிடம்தான் சுத்தத்தை பற்றி படிக்க வேண்டும் அந்த அளவுக்கு நம் மக்கள் சுகாதாரத்தை பேணுபவர்கள் என்பதில் எந்த மாற்று கருதும் கிடையாது ஊரின் தூய்மை இதட்கு முக்கிய சான்று நம் மக்கள்தான் எதற்கு முக்கிய காரணமும் கூட .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்...?
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [10 June 2014]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 35228

எப்பு...மூனு வீடு தள்ளிதான் வார்டு கவுன்சிலர் வீடும் இருக்கு...அவங்க கவனத்துக்கும் கொண்டு போங்க நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. தாயை போல பிள்ளை..... நூலை போல சேலை. பழமொழி.
posted by s.s.md meerasahib (TVM) [10 June 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 35232

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர்களே......

* இங்கே விளம்பரம் செய்யாதீர் என்று போட்ட இடத்தில் பம்பரம் வரையப்படுகின்றன.

* இங்கு சிறுநீர் கழிக்காதீர் என்று போட்ட இடத்தில் பெரும் நீராகவே..... கழிக்கின்றனர்.

* இங்கு குப்பைகளை கொட்டாதீர் என்று இடத்தில் கக்கூஸ் கோப்பைகள் கிடக்கின்றன.

* இங்கு அன்னியர் நுழையாதீர் என்று போட்ட இடத்தில் அன்னியர் நுழைகின்றனர்.

* இது பெண்கள் பகுதி என்று போட்ட இடத்தில் ஆண்கள் நிற்கின்றனர்.

* இது ஆண்கள் பகுதி என்று போட்ட இடத்தில் பெண்கள் நிற்கின்றனர்.

* இது அடல்ஸ்..... க்கு மட்டும் என்று போட்ட இடத்தில் வெறும் வெடல்ஸ்கள் (இளம் வயதினர்) காட்சியளிக்கின்றனர்.

ஓ......... அப்பம் இங்கத்தான் பிரச்சனையோ.......?

நம் ஆதித்தந்தை ஆதமின் வரலாறு ஞாபக்கத்தில் வருகிறது. அல்லாஹ் ஆதம் நபியை சுவர்க்கத்தில் எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் நீங்கள் சாப்பிடலாம். இந்த மரத்தின் கனியை மாத்திரம் சாப்பிடாதீர். என்று சொல்லியும்..... சொன்ன மரத்தின் கனியை சாப்பிட வில்லையா? ஆதம் நபி.

இது சைத்தானின் சதி செயல் என்பதை புரிந்த நம் தந்தை ஆதம். தவ்பா செய்து மீண்டார்கள். ஆனால் ஆதமின் மக்களாகிய நாம் ஏன் இந்த சைத்தானின் செயலுக்கு துணை போகணும்? சுத்தத்தை கடைபிடிப்போம். ஈமானை பலப்படுத்துவோம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. No Chance at All
posted by Aarif O.L.M (colombo) [11 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35235

இந்த நிகழ்வு ஒன்றும் புதியதில்லையே ? காலா காலமாக நமதூர் மக்கள் அனைவரிடம் இருக்கும் ஒரு வகை மன நோய் !!!

வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு ஊருக்கு வந்துவிட்டால் அந்த நோய் தானாகவே வந்து விடுகிறது...... எத்தனை ஜன்மம் வந்தாலும் திருந்தாது. " NO CHANCE AT ALL "

YOU CAN SEE MY PREVIOUS COMMENTS REGARDING THIS ISSUE FEW YEARS BACK


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. குப்பை அகர்டுவதைப்பற்றி
posted by M.A.C. MOHUDOOM MOHAMED (Kayalpatnam) [13 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35247

காயல் நகர வாசிஹளுக்கு (4 வது) வார்டு கவுன்சிலரின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும். குறுக்குத் தெருவில் குப்பை அகற்ற போர்டை அல்லாஹுவின் அருளால் என் சொந்த செலவில் வைத்து அதற்கான முயற்சியும் எடுத்தேன். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல மக்கள் மனம் வைத்தால் மட்டும் தான் நகரை சுத்தமாக வைக்க முடியும்.

K.V.A.T. முத்து ஹாஜரா
4 வது வார்டு கவுன்சிலர்
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது !!!
posted by K.V.A.T. HABEEB (QATAR) [13 June 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35249

கவுன்சிலர் சார்ந்த K.V.A.T.அறக்கட்டளை சார்பாக குப்பை வண்டியும் , குப்பைகளை வீடு வீடாக சேகரிக்க துப்புரவு தொழிலாளியையும் சொந்த அனுசரணையில் ஏற்பாடாகி , ஒவொரு வீட்டிலுள்ளவர்கள் தங்கள் பங்களிப்பையும் அந்த துப்புரவு தொழிலாளிக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வண்டி வரும் போது கொடுக்காதவர்கள் , நகராட்சி வண்டி வரும் போதாவது ஒத்துழைக்க மனம் வராதவர்கள் எப்போது திருந்துவார்கள்???

வேதனையான விஷயம் என்ன வென்றால் , கவுன்சிலர் வீட்டு முடுக்குக்கு உள்ளேயே, அதுவும் வீட்டு வாசலிலேயே , இரவோடு இரவாக அல்லது மதியம் யாரும் அரவமே இல்லாத சமயம் பாத்து குப்பையை கொட்டி விட்டு போகும் நிலையும் நடக்குது . இதுக்கு என்ன சொல்ல வாரிங்க ??!!

வேதனையுடன் ,
கவுன்சிலர் வேண்டுகோளுக்கிணங்க ,
கே.வீ.ஏ.டி.அறக்கட்டளை
குறுக்குத்தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved