| 
  
  
16வது இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் - ஏப்ரல் 7 முதல் மே 12 வரை - 9 கட்டங்களாக -  
நடைபெற்றன. சுமார் 55 கோடி மக்கள் கலந்துக்கொண்ட (வாக்குப்பதிவு சதவீதம்: 66.38) இத்தேர்தலின் 
முடிவுகள் இன்று காலை முதல் வெளிவர துவங்கின. 
  
இத்தேர்தல்களில் பெருவாரியான இடங்களை வென்று பாரதிய ஜனதா கட்சி, ஆட்சி அமைக்கிறது.
  
தமிழகத்தில் உள்ள 39 இடங்களில் - இத்தேர்தலில் தனியாக போட்டியிட்ட அ.தி.மு.க., 37 இடங்களை வென்றுள்ளது.
  
தூத்துக்குடி தொகுதியில் - அ.தி.மு.க. வேட்பாளர் ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி - 1,24,002 வாக்குகள் 
வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். 
  
ஏப்ரல் 24 அன்று நடந்த தேர்தலில் காயல்பட்டினத்தில் மொத்த வாக்காளர்கள் 31,886 பேரில் 19,983 பேர் வாக்களித்தனர். வாக்கு பதிவு சதவீதம்: 62.48.
  
இன்று வெளியான முடிவுகள்படி - காயல்பட்டினம் பகுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:
  
(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 42 
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 1,477 
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 144 
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 10,290 
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 5,234 
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 1,175 
(7) எஸ்.ஜோயல்	(ம.தி.மு.க.) - 1,356 
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 29  
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 5 
(10) சாந்தா தேவி	(சுயேட்சை) - 5  
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 10 
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 7 
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 4 
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 10 
(15) NOTA - 195
  
மொத்தம் - 19,983 
  |