Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:13:47 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13626
#KOTW13626
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 2, 2014
இமாம் - பிலால் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 1435: உலக காயலர்களுக்கு தக்வா அமைப்பின் வேண்டுகோள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2664 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம் - பிலால்களுக்கு, தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் ஒருங்கிணைப்பில், உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனி ஆர்வலர்களின் அனுசரணையுடன் - ஆண்டுதோறும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரமழான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்காக உலக காயலர்களிடமிருந்து அனுசரணை எதிர்பார்க்கப்படுவதாகவும் தக்வா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தக்வா செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அன்புள்ளம் கொண்ட காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்...

இறையருளால் இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், இஸ்லாமிய மற்றும் நகர்நலன் குறித்த தூய சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக.

வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையால், அனைத்துலக காயல் நல மன்றங்கள் மற்றும் தங்களைப் போன்ற தனியார்வலர்களின் மகத்தான ஒத்துழைப்புடன் எமது தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில், காயல்பட்டினத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் இமாம் - பிலால்களுக்கு நோன்புப் பெருநாள் ஊக்கத் தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அது செயல் வடிவமும் பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

பள்ளிகளில் பணியாற்றும் இமாம் - பிலால்களைப் பொருத்த வரை, அவர்கள் செய்து வரும் இமாம் - பிலால் பணிகளின் காரணமாக, மற்றவர்களைப் போல நினைத்த நேரத்தில், நினைத்த இடங்களுக்குச் சென்று இதர வணிகங்களைச் செய்வதற்கு சிறிதும் வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர். இதன் காரணமாக, விரல் விட்டு எண்ணும் அளவிலான சிலரைத் தவிர மற்றவர்கள் யாவரும் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற நிலையிலேயே இன்றளவும் இருந்து வருகின்றனர். எனவே, அவர்களை குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையேனும் ஊக்குவிப்பது கடமை என்று உணரப்பட்டதாலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாம் அவர்களுக்கு வழங்கும் தொகை சில ஆயிரங்கள்தான் என்றாலும், அதிக செலவைச் சந்திக்கும் பெருநாள் நேரத்தில் இந்த ஊக்கத்தொகை அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வந்துள்ளது என்பதை அவர்கள் கூற கேள்வியுற்று, மிகவும் திருப்தியடைந்தோம்.

நலிவுற்றுள்ள இமாம் - பிலால்கள் கையேந்தி, கூனிக்குறுகி நிற்பதைத் தவிர்த்து, அவர்களை கண்ணியமிக்கவர்களாக நடைபோடச் செய்ய வேண்டுமெனில் இதுபோன்ற உதவிகள் அத்தியாவசியமாகிறது என்பதைக் கருத்திற்கொண்டு, தங்கள் யாவரின் மேலான ஒத்துழைப்புகளை எதிர்பார்த்தவர்களாக இவ்வாண்டும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

அந்த வகையில், நடப்பாண்டு நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகை வழங்க தங்கள் மன்றத்தின் மேலான ஒத்துழைப்பை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

நகரில் உள்ள 35 பள்ளிகளின் மொத்த இமாம், பிலால்களின் எண்ணிக்கை 70.

இவர்களுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் ஊக்கத் தொகையாக அளித்தால், ஏற்படும் மொத்த செலவினம் ரூ. 3,50,000.

இன்ஷாஅல்லாஹ், 30-05-2014 தேதிக்குள் தங்களின் ஜகாத் அல்லது நன்கொடை பங்குத்தொகையை எங்களுடன் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது

தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் அவர்கள் கைபேசி எண்: +66 8172 07 906 அல்லது +91 99654 24518,

செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யது முஹம்மது கைபேசி எண்: +66 8675 77 296 அல்லது +91 94869 20850

ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டோ தெரிவித்து, இத்திட்டத்தை சிரமங்கள் எதுவும் இன்றி, குறித்த காலத்தில் இறையருளால் வெற்றிகரமாக செய்து முடிக்க உறுதுணை புரியுமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.


எல்லாம்வல்ல அல்லாஹ் நமதூர் நலனுக்காக நாம் யாவரும் இணைந்து செய்யும் இந்த தன்னலமற்ற நற்காரியங்களை கபூல் செய்து, அவற்றுக்கான பலனை இம்மை மறுமையில் நமக்கு நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.

இத்திட்டத்திற்கு அனுசரணை கோரி, உலக காயல் நல மன்றங்களுக்கு முறைப்படி தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் அன்புடன் அறியத் தருகிறோம்.


இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) இமாம் - பிலால் ரமழான் ஊக்கத்தொகை வழங்கப்பட்ட விபரப்பட்டியல்:-



இமாம் - பிலால் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு அனுசரணை கோரி, தக்வா அமைப்பின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) விடுக்கப்பட்ட வேண்டுகோள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

தக்வா அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஊக்கதொகைக்கு ஆதரவு குறைவாகவே உள்ளன
posted by mackie noohuthambi (chennai) [02 May 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34686

தாய்லாந்து காயல்நல மன்றத்தின் கோரிக்கையில் அந்த மன்றம் மட்டுமே 1,45,000 கொடுத்துள்ளது. மற்ற காயல்நல மன்றங்கள் 10 விழுக்காடுகள் அல்லது 6 விழுக்காடுகள் மட்டுமே அளித்துள்ளன என்ற புள்ளி விவரங்கள் ஏமாற்றம் தருகின்றன

அவர்கள் கல்விக்கும் மருத்துவத்துக்கும் அள்ளிக் கொடுக்கும் அட்சய பாத்திரங்கள், ஏன் இந்த கோரிக்கைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை thakwa சற்று சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

நமதூர் பள்ளிவாசல்கள் பல லட்சங்கள் செலவழித்து புதுப்பித்துக் கட்டப் படுகின்றன. வருடம் முழுவதும் விழாக்கள் நடைபெறுகின்றன அதற்கும் பல லட்சங்கள் செலவிடப் படுகின்றன.ஆனால் அங்கே பணியாற்றும் இமாம்களுக்கும் பிலால்களுக்கும் மிக குறைந்த தொகையை வேதனமாக அளிக்கின்றன. அவர்களுக்கு அளிக்கப் படுகின்ற கௌரவமும் திருப்தி அளிப்பதாக இல்லை. ஒரு மாதத்துக்கு சுமார் 150 தடவை பள்ளிக்கு வரவேண்டும் 150 தடவை பள்ளியில் இருந்து வீடு செல்ல வேண்டும். காலை பனி நேரம் - வேகும் வெயில் நேரம் - அந்தி சாயும் நேரம் - நிம்மதி நாடும் இரவு நேரம் - இவை எல்லாம் அவர்களுக்கு வேலை நேரங்கள். இந்த விஷயம் பள்ளிவாசல் முதவல்லிகளுக்கு தெரியாதா. அவர்களுக்கு வருடா வருடம் சம்பளத்தை அதிகரித்துக் கொடுங்கள் என்று குரல் எழுப்ப வேண்டிய காயல் நல மன்றங்கள் இப்படி ஒரு பெருநாளில் மட்டும் 5000 ரூபாய் கொடுத்து தங்கள் கருணையை வெளிக் காட்டுவது ஏற்புடையதாக இல்லை. இது அரசியல் கட்சிகள் மக்களுக்கு வழங்கும் விலையில்லா பொருள்கள் போல் இலவசங்கள் போல் இருக்குமே தவிர, இமாம்களுக்கும் பிலால்களுக்கும் கௌரவமும் மதிப்பும் சேர்ப்பதாக ஆகாது.

எங்கள் நெஞ்சில் நிறைந்து வாழும் எனது தந்தை மக்கி ஆலிம் அவர்கள் எனக்கு ஒரு போதனை செய்தார்கள். நீ வேலை பார்க்கும் கம்பெனியில் எவ்வளவு போனஸ் தருவார்கள் என்று ஆசைப் படாதே. மாறாக எவ்வளவு சம்பள உயர்வு தருவார்கள் என்று ஆசைப் பட்டு உழை.அதுதான் நிரந்தரம். போனஸ் கானல் நீர். சம்பள உயர்வு உனது உழைப்புக்கு அங்கீகாரம் . அதேபோல் ஒரு கட்டடம் வாடகைக்கு விட்டால், அட்வான்ஸ் கூடுதலாக கேக்காதே, வாடகை அதிகமாக கேள். முன்னது திருப்பிக் கொடுக்க வேண்டும். பின்னது நமக்கே உரியது.

இந்த சூட்சுமத்தை இமாம்களும் பிலால்களும் அறிய செய்யுங்கள். பள்ளிவாசல் முதவல்லிகளிடம் போராடி வாதாடி அவர்களுக்கு சிறப்பான சம்பளங்கள் வழங்க ஆவன செய்யுங்கள் என்று பணிவன்புடன் எனது கண்ணியம் மிக்க சம்சுதீன் மாமா அவர்களை வேண்டிக் கொள்கிறேன். உங்கள் கோரிக்கைகளை ஏற்று இமாம்களுக்கும் பிலால்களுக்கும் தாராளமாக அள்ளி வழங்குபவர்களுக்கு அல்லாஹ் அள்ளி வழங்குவானாக. ஆனால் நிதர்சன உண்மைகளை நான் இங்கு பதிவு செய்துள்ளேன்.

உறவுக்கு கை கொடுப்போம்
உரிமைக்கு குரல் கொடுப்போம்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.

இது அண்ணா சொன்னது அல்ல..அவருக்கு முன்னால் 1400 வருடங்களுக்கு முன்னால் நமது அண்ணல் சொன்னது.

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Mohamed Thaha (Saudi Arabia) [02 May 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34690

சகோதரர் மக்கி அவர்களின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். பிலால்கள், இமாம்கள் மற்றும் உலமாக்களின் மாத சம்பளங்கள் உயர்த்தப்படவேண்டும். உலமாக்களை கொண்டு தான் நமக்கு மார்க்க கல்வி கிடைத்தது. நம் சந்ததிகளுக்கும் இன்ஷா அல்லாஹ் கிடைக்க இருக்கிறது. காலம் காலமாக ஏழ்மையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். சரியான சம்பளங்கள் இல்லாமல் ஷ்டப்படுகிறார்கள். அவர்களின் நிலைகளை மேம்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இமாம் பிலால்
posted by LANDMARK RAVANNA ABULHASAN (dubai) [03 May 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34700

மற்ற காயல் நல மன்றங்கள் 10 அல்லது 5 விழுக்காடு மட்டுமே அளித்துள்ளன என்று மக்கி நூஹு தம்பி தெரிவித்துள்ளார் .

எங்களது துபாய் காயல் நல மன்றம் இவ்வாண்டு நம்மூர் அணைத்து பள்ளிவாசல் இமாம் மோதின் உதவிபநியாளர் மற்றும் மதரசா ஆசிரியர்கள் ஆசிரியைகள் அனைவருக்கும் K.M.T. இல் மாஸ்டர் ஹெலத் செக்கப செய்ய ஏற்பாடு செய்துள்ளோமே என்று அறியத்ருஹிறேன் .

லேண்ட்மார்க் ராவன்ன அபுல்ஹசன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நேற்றிரவு இதமழை!  (3/5/2014) [Views - 3482; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved