Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:22:06 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13590
#KOTW13590
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 24, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு கனிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3428 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடப்பு ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 வியாழக்கிழமையன்று (நாளை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

தேர்தல் பரப்புரைகள் இம்மாதம் 22 அன்று 18.00 மணியுடன் நிறைவடைந்தது.

ஏப்ரல் 24 வியாழக்கிழமை (இன்று) தேர்தல் நாளாகும். வாக்குப்பதிவு இன்று 07.00 மணிக்குத் துவங்கி, 18.00 மணிக்கு முடிவுற்றது.

இன்று மாலையில், வாக்குப்பதிவு நேரம் நிறைவடைவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா வாக்களித்த மற்றும் முதியவர் ஒருவர் உறவினர்கள் துணையுடன் வாக்களிக்கச் சென்ற காட்சிகள்:-



அதன் பின், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.



தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட காலங்களில், காயல்பட்டினம் புறநகரில் அதிமுக கூட்டணிக்கும், அகநகரில் திமுக கூட்டணிக்கும் பெருவாரியான வாக்குகள் பதிவாகும் நிலை இருந்தது.

நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஒன்றையொன்று சாராமல் தனித்தனியாக களமிறங்கியுள்ளதால், காயல்பட்டினத்தில் வாக்குகள் கனிசமாக சிதறியுள்ளதாகத் தெரிகிறது.

திமுகவுக்கு ஆதரவாக வழமையாகப் பதிவாகும் அகநகர் வாக்குகளில் கனிசமானவை, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கும், புறநகர் வாக்குகளில் கனிசமானவை மதிமுக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கும் பிரிந்திருப்பதாக, வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மூலம் அறிய முடிந்தது.

காயல்பட்டினத்தில், வாக்குச் சாவடி (பூத்) வாரியாக பதிவான மொத்த வாக்குகள் விபரம் விரைவில் செய்தியாக வெளியிடப்படும்.

நடப்பு நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கணிப்பு சரியே.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (சிங்கப்பூர் ) [25 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34605

வாக்கு பதிவியின் விபரப்படி, நமதூரில், ஆம் ஆத்மி கட்சிக்கு, அதிக வாக்குகள் கிடைக்கும். காங்கிரசுக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை.

வாக்கு பதிவின் விகிதாசாரத்தை பார்க்கும் போது, ஆம் ஆத்மிக்கு ஒட்டுமொத்தமாக (en mass) விழும் மீனவர் பகுதிகளான, கற்புடையார் வட்டம் மற்றும் கடையக்குடி பகுதிகளில் 78% பதிவாகி உள்ளது.

திமுகவுக்கு சாதகமான பகுதியான உள்ளூரில் (அகநகர்) சராசரியாக (55%) சதவீதமே பதிவாகியுள்ளது. இதிலும் கூட, திமுக வேட்பாளரை பிடிக்காதவர்கள் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு வாக்களித்து இருப்பார்கள். மொத்தத்தில், திமுக - ஆம் ஆத்மிக்கான வாக்கு வித்தியாசம் வெறும் 1000 ஓட்டுக்கள் மட்டுமே இருக்கும்.

இந்த வாக்கு பதிவின் போக்கை (pattern) பார்க்கும்போது, வரும் காலங்களில் நமதூர், நம் கையில் இருக்காது என்பதே கசப்பான உண்மை. அல்லாஹ் காப்பாற்றுவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பலகீன மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டார்கள்...! காயல்பட்டினம் அது என்றுமே காயல்பட்டினமாகவே இருக்க விரும்புகிறார்கள்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [25 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34606

இந்த வாக்கு பதிவின் போக்கை (pattern) பார்க்கும்போது, வரும் காலங்களில் நமதூர், நம் கையில் இருக்காது என்பதே கசப்பான உண்மை. CP

சிலருக்கு கசப்பானவை - சிலருக்கு இனிப்பானவை - இதில் எனக்கு இனிப்பானவையாகவே நான் கருதுகிறேன்..! மேலும் மகிழ்ச்சியும் அடைகிறேன் - அணைத்து சமூக மக்களின் உரிமையும் நகரில் பேண படவேண்டும் என்று விரும்புகிறேன் - அதற்கான எதிர்ப்பார்ப்புக்கு தான் இந்த மாற்றமே..!

நமதூரின் சுயநல வாதிகளான ஆதிக்க சக்திகளின் கைகளிலிருந்து விடுப்பட்டு அணைத்து சகோதர சமூகங்கள் இணைந்து அடங்கிய நம் நகரின் நல்லோர்களின் கைகளில் விரைவில் சென்றடைய வேண்டும் என்று நகர மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டார்கள்...

கடந்த நகர் மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கான முடிவே இதற்க்கு சாட்சி..!

இனி அடுத்த அடுத்து வரும் காலங்களில் இந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் முழுமை பெரும் அதில் சந்தேகமில்லை..! நியாயத்தை - நேர்மையை - சம உரிமையை - நீதியை - சுய மரியாதையை நேசிப்பவர்கள் இதற்காக நகரில் பரப்புரை செய்ய பயணித்து விட்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [25 April 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 34607

====================இந்த வாக்கு பதிவின் போக்கை (pattern) பார்க்கும்போது, வரும் காலங்களில் நமதூர், நம் கையில் இருக்காது என்பதே கசப்பான உண்மை. அல்லாஹ் காப்பாற்றுவானாக. ஆமீன்.=========================

இந்த வாக்கு பதிவு என்ன , இதற்க்கு முன் நடைபெற்ற நகராட்சி தேர்தலின் முடிவே அதைத்தான் பறைசாற்றியது. அதை நீங்கள் கவனிக்கவில்லையா!!

அகநகர் மக்கள் ( பூர்விக காயல்வாசிகள்) மைனாரிட்டி ஆகி , புறநகர் மக்கள் ( புலம்பெயர்ந்து வந்த புதிய காயல்வாசிகள்) மெஜாரிட்டி ஆகிவிட்டனர்.

தடிஎடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் ஆகிவிட்டதால் இனிவரும் காலங்களில்( நம் சமுதாயத்திற்குள்) ஒருமித்த முடிவு என்பது கிடையாது.

போட்டி தான். பெரும்பான்மை முடிவுதான். அதுவும் அரசியல் கட்சிகளின் ஆட்டம்தான். இதுதான் நடக்கும். பாருங்களேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [25 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34611

தமிழக அரசியலில் போட்டி என்றால் அ.தி.மு.க ? தி.மு.க ? இந்த இரண்டு திராவிட கட்சிக்கு மட்டும்தான்.

ஓட்டு வேட்டை. இதில் இந்த தொகுதியை பொருத்தவரை ஆம் ஆத்மி கட்சியை ஒரு அரசியல் கட்சியாக யாரும் கருதவில்லை.



ஆம் ஆத்மி ஒரு சுயட்சை. தி.மு.க நகர பிரமுகர்களின் ஆவன பேச்சு ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது அ.தி.மு.க.விற்கு சாதகம்.



கடந்த தேர்தலைவிட இந்த முறை முடிவு அ.தி.மு.க விற்கு அதிக ஓட்டு காயல் மாநகரில் விழுந்து இருக்கிறது.



வெற்றி வேட்பாளர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தான் இனி நம்ம தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்.



காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை வெண்குதிரை தமிழகத்தில் தனிமையில் சவாரி செய்ய முடியாது. காலி கட்டவண்டி வேணும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மாலையில் ஆம் ஆத்மி மறுநாள் காலையில் ஹம் ஆத்மி......!!!
posted by s.s.md meerasahib (TVM) [25 April 2014]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 34615

அன்பு சகோதரர்களே.......

மாலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒட்டு போட தீர்மானிச்ச புறநகர் மக்கள் இரவு ஒரு பவர் கட்டுக்கு பின்னால் அவர்களை ஹம் ஆத்மியாக்கி விட்டார்கள் நம் அம்மாவின் ஆட்கள்.

ஒரு நாள் முன்புவரை ஆம் ஆத்மிக்கு வாய்கிழிய சொன்ன நம் புறநகர் மக்கள் காலையில் இரட்டை இலையை மறக்க முடியல்லமா என்றார்கலாம். இவர்கள் எப்படி ஹம் ஆத்மி......ஆனார்கள்?!!! ஊரில் நடந்த ஒரு பவர் கட்டில் தான்.

ஓ......... இது பெரிய விஷயமா? ஒரு பவர் கட்டில் பல என்னமோ நடக்கும் போது இது ஒன்னும் விஷயம் இல்லைதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வாக்களிக்க லஞ்சம் அதை பெற்றவர்கள் அங்கு தஞ்சம்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [25 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34616

நேற்று நடந்து முடிந்த வாக்கு பதிவின் போது வாக்களர்களுக்கு வாக்களிக்க லஞ்சம் கொடுத்தவர்களும் அந்த லஞ்சத்தை பெற்று கொண்டு அதற்காகவே வாக்களித்தவர்களும் இந்த நகரில் - குறிப்பாக இந்த தேசத்தில் இருக்கும்வரை இந்த தேசம் வளர்ச்சியை பெறாது..! இந்த தேசத்தில் நீதியையும் நேர்மையையும் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved