Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:32:32 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13560
#KOTW13560
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 22, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: முஸ்லிம்கள் ஓரணியில் திமுகவுக்கு வாக்களிப்பது மட்டுமே மதவாத சக்திகளைத் தடுக்கும்! திமுக வேட்பாளர் ஜெகனுக்கு ஆதரவாக மவ்லவீ ஹாமித் பக்ரீ பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4219 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக, ஐக்கிய சமாதானப் பேரவையின் சார்பில், இம்மாதம் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 19.00 மணியளவில் - காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.



ஐக்கிய சமாதானப் பேரவையின் தலைமை நெறியாளர் மவ்லவீ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ, சொளுக்கு எஸ்.எம்.கபீர், எஸ்.ஏ.பீர் முஹம்மத், எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், என்.எஸ்.நூஹ் ஹமீத், எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இக்கூட்டத்தை, ஐக்கிய சமாதானப் பேரவையின் இளைஞரணி மாநில செயலாளர் கே.முஹம்மத் ஆஷிக் நெறிப்படுத்தினார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - ஐக்கிய சமாதானப் பேரவை தலைமை நெறியாளர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துவக்கவுரையாற்றினார். அமைப்பின் மாநில அமைப்பாளர் எஸ்.முஹம்மத் ஷாஜஹான் நன்றி கூறினார்.



கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, நகரில் வீதி வீதியாக வாகன பரப்புரை செய்துகொண்டிருந்த திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன் மற்றும் அவரது சகோதரியும், தமிழக முன்னாள் அமைச்சருமான பெ.கீதா ஜீவன் ஆகியோர் மேடைக்கு வந்து, ஆதரவு கோரி உரையாற்றினர். ஐக்கிய சமாதானப் பேரவை சார்பில் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.





அவ்வமைப்பின் தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ சிறப்புரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-



தமிழகத்தில் இன்று முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் குழப்பமான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. யார் மதவாத சக்திகளுக்கு எதிராக உள்ளனர் என்பதை வைத்தே இதை நாம் முடிவு செய்ய வேண்டியுள்ளது.

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் - மதவாத சக்திகளுக்கு எதிராகவும், சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்காகவும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. அது மட்டுமின்றி, தமிழகத்தின் மொத்த 40 வேட்பாளர்களுள் 4 பேர் முஸ்லிம்கள் என நியமித்ததன் மூலம் அது தனது பெருந்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. இத்தனை நாட்களாக உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று தனது ஏணி சின்னத்தில் களம் காண்பதற்கும் அது இசைவு தெரிவித்திருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, அதிமுகவோ ஒரேயொரு முஸ்லிமை பெயருக்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பொது சிவில் சட்டத்தை ஆதரித்து அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியபோது, சமுதாயத்தை மறந்து அதை ஆமோதித்து நன்றி விசுவாசத்தைக் காட்டியமைக்காக, அன்வர் ராஜாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



தேர்தலுக்குப் பின் அதிமுக பாஜகவுடன் கைகோர்க்கும் என்பதை கண் முன் நிரூபிக்கும் வகையிலேயே அதன் தேர்தல் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

நமது தூத்துக்குடி தொகுதியில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளராக என்.பி.ஜெகன் களமிறங்கியுள்ளார். அவர் படித்தவர், செயல்திறன் மிக்க இளைஞர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நமது வாக்குகளை மொத்தமாக அளிக்க வேண்டியது அவசியம்.

அதை விட்டுவிட்டு மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிப்பது மதவாத சக்திகளுக்குத் துணையாகவே அமையும். அதிமுகவுக்கு வாக்களித்தால் அது நேரடியாக மதவாத சக்திக்குத் துணை போகும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகியவற்றுக்கு வாக்களிப்பதால் - அவர்கள் வெற்றி பெற வாய்ப்பில்லாத நிலையில், பிரியும் வாக்குகளும் பாஜகவுக்கு சாதகமாகவே அமையும். ஆம் ஆத்மி கார்ப்பரேட் பணமுதலைகளின் ஆதரவு பெற்ற கட்சி என்பதை மனதிற்கொள்ள வேண்டும்.

இத்தேர்தலில் முஸ்லிம் அமைப்புகள் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக ஓரணியில் திரண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில், இனி வருங்காலங்களில் இவ்வமைப்புகள் அனைத்தும் - தமக்கிடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைந்து, மொத்தமாக ஓரணியில் திரண்டு, நம் சமுதாயத்திற்குத் தேவையான மொத்த தொகுதிகள் இத்தனை தர வேண்டும் என கேட்டுப் பெறும் அளவுக்கு வலிமையடைய வேண்டும். அதன் பின், அமைப்புகள் தமக்கிடையில் தொகுதிகளைப் பிரித்துக்கொள்ள வேண்டும். இதனால், நம் சமுதாயப் பிரதிநிதிகள் பலர் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் வலிமையுடன் அங்கம் வகிக்க இயலும்.

இந்தப் பணியை, இத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஐக்கிய சமாதானப் பேரவை முன்னெடுக்கும். அதற்காக தீவிரமாக உழைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு மவ்லவீ ஹாமித் பக்ரீ பேசினார். இக்கூட்டத்தில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் அங்கத்தினர் உட்பட - நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.











நடப்பு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [22 April 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 34535

முக்கியமான தேர்தல் இது. ஒவ்வொருமுறையும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நாம் வாக்களிப்போம். இம்முறை யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக நாம் வாக்களிக்கப்போகிரோம்.

ஆம். மோடி பிரதமராக வரக்கூடாது என்பதற்காக முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் தமக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை புறம்தள்ளிவிட்டு ஓரணியில் நிற்கின்றனர். அவையனைத்தும் திமுக கூட்டணியை ஆதரிக்கின்றன.

எனவே நம் வாக்குகளை சிதரவிடாது, ஓரணியில் நின்று வாக்களித்து திமுக கூட்டணியை 40 தொகுதிகளும் வெற்றியடைய செய்யவேண்டும்.

முஸ்லிம்களின் வாக்குகள் கண்டிப்பாக வீனடிக்கப்படக்கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உண்மையை சொல்லி ஓட்டு கேளுங்கள்.
posted by Abdul Wahid .S (Kayalpatnam) [22 April 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34540

ஆம் அத்மி கட்சி கார்பரேட் பனமுதலாளிகளுக்கு ஆதரவாம்.

என்ன ஒரு பினாத்தல். கார்பரேட் என்ற ஆங்கில வார்த்தைக்கு இந்த ஆலிம் பெருந்தகைக்கு அர்த்தம் தெரியுமா? கருணாநிதியின் குடும்பமே தமிழ் நாட்டில் மிகப் பெரிய கார்பரெட் என்பதை ஆலிமுக்கு யாராவது சொலிக் கொடுத்தால் நல்லது.

ஆலிம் அவர்களின் கவணத்திற்கு: அம்பானி, அதானி போன்ற கார்ப்ரேட் முதலாளிகளின் மீது வழக்கு தைரியத்துடன் வழக்கு தொடர்ந்த ஒரே கட்சி. ஆம் அத்மி கட்சியே!.

ஆலிம் அவர்களே, ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது கட்சிக்கு ஓட்டு கேட்பதற்க்கு உங்களுக்கு உரிமைய் உள்ள்து. அதற்காக அரசியல்வாதிகளைப் போல் புளுகு மூட்டைகளை அவிழ்து விடாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமை.
posted by s.s.md meerasahib (TVM) [22 April 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34541

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு நண்பர்களே...... குழப்பத்தில் இருந்து வெளிவந்து ஏனைய மக்களையும் ஆதரவு கூட்டி மத வாத சக்திகளுக்கு ஒரு பட்டனை அழுத்துவதின் மூலம் சவுக்கடி கொடுப்போம்.

நான் எந்த கட்சியையும் குறை கூற விரும்பவில்லை. அதே..... சமயம் நம் இஸ்லாமியர்களின் வாக்கு விகிதத்தை ஒரே...... கட்சிக்கு செலுத்துவதின் மூலம் நாளை நமக்கு இது பயன்பெறலாம். ஒரு வெள்ளோட்டம் பார்த்து.... நாளை இஸ்லாமியர்கள் ஒரு சக்தியாக, வேறு எவரிடமும் சீட்டுக்கு மடிப்பிச்சை கேக்காமல் அவர்கள் நம்மை நாடி வர ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தவும், நம் மானம்களை நாம் காப்பாற்றிகொள்ளவும், நம் உதவிகளை உரிமையோடு பெறவும் தி.மு.க க்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

பழையவற்றை மறந்து நம் இனத்துக்காக செயல் பட அல்லாஹ் போதுமானவன். அண்ணன் பெரிய சாமி நமக்கு என்ன செய்தார்? என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள். இந்த வலைதளத்தில் சொல்ல முடியாத நம் ஊர் (நம் குடும்ப) மானம்களை காப்பாத்தி இருக்கிறார். இதை விட ஒரு இஸ்லாமியனுக்கு வேற ஒன்றும் செய்ய தேவை இல்லை. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இனியும் தி.மு.க-வுக்கு வாக்களிக்கலாமா?
posted by S.A.Muhammad Ali Velli (Dubai) [23 April 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34548

2004 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கு நாம் மாபெரும் வெற்றியை அளித்தோம்.ஆனால் அந்த செல்வாக்கை தன் குடும்பத்திற்கு மட்டுமே பயன் படுத்தினார். தமிழினப் படுகொலையைக் கண்டு கொள்ளாமல் இருந்ததோடும், அதை நிறுத்தும் ஆற்றல் தன் கையிலிருந்தும் அதைச் செய்யாமல் இருந்ததோடு மட்டுமில்லாமல் அவரது உண்ணாநிலைப் நாடகம் முடித்த பிறகும் போர் தொடர்வது பற்றிக் கேட்டதற்கு “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்று ஏளனம் செய்தார். 2002 குஜராத் கலவரம் உள்மாநில பிரச்சனை என்று பூசி மெழுகினார். இப்படி பட்ட கருணாநிதி நாளை பதவி என்றால் உடனே போவார் மோடி தேடி. கோடியை கண்டால் கொள்கையை புதைப்பார் தோண்டி நாம் கிழித்தெறிய வேண்டும் இவரின் முகமூடி

மதவாதம் மற்றும் ஊழலிற்கு எதிராக போராடும் ஆம் ஆத்மி ஒன்றே இதற்கு மாற்றாக அமையும். முயற்சி செய்து முடியாவிட்டால் வேறு முயற்சியே செய்யாமல் முடங்கி கிடப்பது மூடத்தனம் அல்லவா?

தற்போது உள்ள பலமுனை போட்டி ஆம் ஆத்மி வேட்பாளர் போராளி ம.புஷ்பராயன் அவர்களுக்கு சாதகாமாகவே உள்ளது என்று உளவு துறை அறிக்கை கூறுவதால் தான் அனைத்து திமுக கூட்டணி பேச்சாளர்களும் ஆம் ஆத்மியை முழு மூச்சோடு எதிர்கிறார்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களும் வீண் பழிகளும் சுமத்துகிறார்கள். இதற்கு இந்த ஆலிமும் விதி விலக்கல்ல.

காயலில் உதயசூரியன் உதிர்ந்து போகும் நாள் ஏப்ரல் 24. அந்த கூளங்களை கூட்ட போவது "துடைப்பம்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மக்கள் மத்தியில் மாற்றம் வர வாழ்த்துக்கள்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [23 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34549

அண்ணன் பெரிய சாமி நமக்கு என்ன செய்தார்? என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள். இந்த வலைதளத்தில் சொல்ல முடியாத நம் ஊர் (நம் குடும்ப) மானம்களை காப்பாத்தி இருக்கிறார். இதை விட ஒரு இஸ்லாமியனுக்கு வேற ஒன்றும் செய்ய தேவை இல்லை. CP

அண்ணன் பெரிய சாமி அவர்கள் நகரில் உள்ள சில ஆட்களுக்கு அவர்களின் சொந்த சுய தேவைகளை காப்பாத்தி இருக்கலாம் அதற்காக இஸ்லாமிய மக்கள் அனைவரையும் கோர்க்காதீர்கள்.. சகோதரரே..! இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

கடந்த 2002 ஆம் ஆண்டு பி ஜ பி யுடன் கூட்டணியில் இருக்கும் போது மக்களவையில் பி ஜ பி உறுப்பினர் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு கோரிய போது இந்த தி மு க அதற்க்கு ஆதரவு அளித்ததே அதை மறக்க முயற்சி செய்யாதீர்கள் - இதை விட இஸ்லாமியர்களுக்கு தி மு க விடமிருந்து வேற என்ன துரோகம் வேண்டும்..! தேர்தல் (வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு) முடிவுக்கு பிறகு பி ஜ பி க்கு கருணாநிதி அவர்கள் ஆதரவு வழங்க மாட்டார் என என்ன உத்தரவாதம் உள்ளது உங்களிடம்...!

ஆம் ஆத்மி கட்சி மட்டும் நகரில் உள்ள தி மு காவின் வாக்குகளை பிரிக்கிறதாம்..! சிரிப்பு தான் வருகிறது..! மற்றகட்சிகள் காங்கிரஸ், ம தி மு க, கம்யுனிஸ்ட், அ தி மு க, மற்றும் பிற சுயட்சைகள் அனைத்தும் தி மு காவிற்கு நம் நகரில் வாக்கு சேகரிக்கிறதோ..?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...ஒன்று படுவோம்
posted by A.S.L.சதக்கத்துல்லா (சென்னை -86) [23 April 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 34553

ஜனநாயக திருநாட்டில் அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு பரப்புரை செய்வதற்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமைகள் உண்டு. அதற்கு ஆலிம்களும் விதிவிலக்கு அல்ல.

வாக்குகள் அளிப்பது உங்களது விருப்பம் நமது ஊரின் நலம் நம் மக்களின் நலத்தை மற்றும் கருத்தில் கொண்டு துடைப்பம் சின்னத்திற்க்கு வாக்களியுங்கள்.

DCWதொழிற்ச்சாலையை துடைப்பம் கொண்டு துடைத்து எறிந்து விடலாம் ஒன்றுபடுவோம் வெற்றிபெற


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. கருத்து சொல்வது அவரவர் உரிமை.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (சிங்கப்பூர் ) [23 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34559

திமுகவுக்கு வாக்களித்து நாம் அடைந்தது ஒன்றுமில்லை. பெரியசாமியும் நமதூருக்கு ஆதரவாக எந்த துரும்பையும் எடுத்து போடவில்லை என்பது உண்மை.

ஆனால், 1999 & 2001 தேர்தல்களில் பாஜக உடன் திமுக உறவு வைத்த (சிலர் சொல்லும் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர்) நடந்த 2004 & 2009 நாடாளுமன்றம் மற்றும் 2006 & 2011 சட்டமன்ற தேர்தல்களில், திமுகவை ஆதரித்தவர்கள், அதே காரணத்தை சொல்லி இப்போது எதிர்ப்பது விந்தையாக, கேலியாக இருக்கிறது.

பாஜகஉடன் கூட்டணி கிடையாது என்று ஸ்டாலின் மற்றும் கருணாநிதி ஆகியோர் பல மேடைகளில் சொல்லிவிட்டார்கள். இதற்கு மேல் என்ன உத்தரவாதம் என்றால், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்தான்.

ஆம் ஆத்மி கட்சியினரே! டில்லி சட்டமன்றத்தை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ள வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி என்ன? என்று சொல்லுங்கள்.

தமிழகத்தில் அந்த கட்சிக்கு டெபாசிட் தொகை கிடைக்கும் 2 தொகுதிகள், தூத்துக்குடி & கன்னியாகுமரி. மற்ற மக்கள் ஓட்டு போடுகிறார்களோ இல்லையோ, இந்த இரு வேட்பாளர்களுக்காக மீனவ சமுதாயம் மற்றும் கிருஸ்துவ சமுதாயம் வாக்களிக்கும்.

"தற்போது உள்ள பலமுனை போட்டி ஆம் ஆத்மி வேட்பாளர் போராளி ம.புஷ்பராயன் அவர்களுக்கு சாதகாமாகவே உள்ளது என்று உளவு துறை அறிக்கை கூறுவதால் தான் அனைத்து திமுக கூட்டணி பேச்சாளர்களும் ஆம் ஆத்மியை முழு மூச்சோடு எதிர்கிறார்கள்" சகோதரரே! தேர்தல் சூட்டில் உங்கள் கருத்தை நினைத்து சிரித்து இளைப்பாற நேரம் கிடைத்தது. உங்கள் கருத்தை வேட்பாளரே ஒத்துக்கொள்ள மாட்டார்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. எதை நகரில் விதைக்கிறோமோ அதுவே தேசத்தில் நமக்கு கிடைக்கும்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [23 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34566

பாஜகஉடன் கூட்டணி கிடையாது என்று ஸ்டாலின் மற்றும் கருணாநிதி ஆகியோர் பல மேடைகளில் சொல்லிவிட்டார்கள். இதற்கு மேல் என்ன உத்தரவாதம் என்றால், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்தான். CP

சகோதரரே.. அதாவது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்தான் என்றால் தி மு க வை புறம்தள்ளி விட்டு மதவாதம் ஊழல் நிறைந்த அ தி மு க வை ஆதரிக்க போகிறீர்களா..? அல்லது மதவாதம் ஊழல் நிறைந்த காங்கரஸ்சை ஆதரிக்க போகிறீர்களா..? அல்லது தேசத்தில் மதவாதத்தையும் ஊழலையும் எதிர்க்கும் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க போகிறீர்களா..?

இசுலாமியனின் பாதுகாவலன் தி மு க மட்டுமே என்ற நம்பிக்கையை விட்டு முதலில் வெளியே வாருங்கள்..

குறிப்பு: நம் நகரில் வாழும் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்களுக்கு நாம் அவர்களின் உரிமைகள் - தேவைகள் - எதிர்பார்ப்புகளுக்கு நகரில் பெருமபன்மையாக வாழும் நாம் நம் நகரில் எந்த அளவுக்கு சம உரிமை - அடிப்படை வசதி - நீதியாக நியாயத்தை பேனுகிறோமோ அதன் படி தான் நமது இந்திய தேசத்தில் சிறுபான்மையாக வாழும் நமக்கும் பெருமபான்மை மக்கள் மூலம் அமையும்... இதை மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டும்..

தற்போது நமது நகரில் சிறுபான்மைகளின் உரிமை பரிக்கபடுவதை நகராட்சியில் பெரும்பான்மை பலம் கொண்ட உறுப்பினகள் மூலம் தட்டி பறிக்கபடுகிறது..

நாம் வாழும் நம் நகரில் எதை விதைக்கிறோமோ அதுவே நமக்கு இந்திய தேசத்தில் திரும்ப கிடைக்கும் - அதில் மாற்றமில்லை..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஹஸ்பியல்லாஹ் நியமுல் வக்கீல்! ..
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [23 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34570

ப.ஜ. க மதவாத சக்தி,மசூதியை இடிக்கும் சக்தி,முஸ்லிம்களை ஒடுக்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவரும் கட்சி ஆகவே அதை அணுவளவும் ஆட்சி பீடத்தில் ஏற்ற அனுமதிக்கக்கூடாது என்பதுதான் எங்கள் தலையாய இலட்சியம் என்று தகப்பனும் மகனும் மாறி மாறி வாக்குறுதியை வழங்குவது மட்டுமல்ல, இதேபோல் ஜெயலலிதா உட்பட மற்றைய (ப ஜ க.வுடனுள்ள) அணிகள் வாக்குறுதி தர தைரியமும் திராணியும் இருக்கிறதா? என்று சவால் விடுபவர்களைப்பார்த்து,

தேர்தலுக்குப்பின் ப.ஜ.க வை பற்றிக்கொள்பவர் கருணாநிதி என்று திருவிழாவில் தின்பண்டம் கேட்டு அடம்பிடித்து அழும் குழந்தைப்போல் ஓயாது ஒப்பாரிவைப்பவர்களை எப்படித்தான் நம்ப வைப்பது.

கலைஞரும்,ஸ்டாலினும் நெருப்புக்குண்டத்தில் இறங்கி சத்திய சோதனை செய்து காட்ட வேண்டியதுதான் பாக்கி.

அன்பு இஸ்லாமிய சகோதரர்களே,நம் இனம் காக்கப்பட வேண்டும் என்ற உண்மையான உள்ளச்சம் உள்ளவர்களே, இமையமலை வீரியத்தைப்போல் எழுந்துநின்று நம்மை பயமுறுத்திக்கொண்டிருக்கும் எதிரியை வீழ்த்தவேண்டும் என்ற வைராக்கியத்தில் உள்ளவர்களே,நம் இஸ்லாமிய அனைத்து அமைப்புகளும் ஓரணியில் திரண்டுவிட்டோம் என்ற வல்லமைமீது நம்பிக்கை கொண்டவர்களே,

நீங்கள் எந்தவித் புதுக்கவர்சிக்கும்,பளபளப்பு பசப்பு வார்த்தைக்கும் மயங்கி விடாமல்,அவர்கள் வார்த்தைகள் மேலோட்டமாக உண்மைபோல் தெரிந்தாலும்,அவர்களின் வைப்புத்தொகையைக்கூட காப்பாற்ற முடியாத வாக்குகளைப் பெறக்கூடியவர்களுக்காக வலம் வரும் விட்டில் பூசிகளின் மின்மினிப்பில் மதியிழந்திட வேண்டாம்!

அன்பு இஸ்லாமிய இனிய நெஞ்சங்களே,நம் இனம் காக்கப்பட வேண்டுமென்றால்,நாம் ஒன்றிணைந்த இஸ்லாமிய அமைப்புகள் ஆதரிக்கும் அணியுடைய உதய சூரியன் சின்னத் திற்க்கே உங்கள் வாக்கையளித்து உண்மையான முஸ்லிம் கடமையாற்றிய மன நிம்மதியை அடைவீர்களாக!

மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள், முஸ்லிம்கள் இங்கு எந்த சொத்தும் வாங்கக்கூடாது என்று மதவெறியர்களின் ஆட்டம் இப்பொழுதே ஆரம்பமாகிவிட்டது. அந்த ஓநாய்கள் கூட ஓரணியில் நிற்கிறது,அவர்களிடமிருந்து தப்பிப்பிழைக்க நினைக்கும் நாமனைவர்களும் குறைந்தபட்சம் இந்த அபாய கால கட்டத்திலாவது ஒன்றுபடுவோமாக!

இதற்க்கு மேலும் எப்படிக்கெஞ்சிக் கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை,ஒவ்வொருவரின் பாதங்களைப்பிடித்து,நம் இனத்திற்கு வந்திருக்கும் பேராபத்தைக்காப்பாற்றுங்கள் என்றுகூட கேட்க தயார்தான் ஆனால் நம் மார்க்கத்தில் அதற்க்கு அனுமதி இல்லையே!

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அச்சத்தை நீக்கி,நாம் மகிழும் வெற்றியையும்,பாதுகாப்பையும் தந்தருள்வானாக ஆமீன்!

பின் குறிப்பு: என்னுடைய இந்த உள்ளச்சுத்தியான விளக்கத்திற்கு பிறகும் ,இதற்க்கு உள்நோக்கம் கற்பித்து இதையும் எதிர்த்து விமர்சனம் செய்பவர்களை கிஞ்சித்தும் கண்டுகொள்ளவேண்டாம்.வல்ல அல்லாஹ் உண்மையான வர்களின் உள்ளதை உண்ணிப்பாக கவனிக்க வல்லவன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. உதயசூரியனிர்க்கே நமது ஒட்டு
posted by Salai Sheikh Saleem (Dubai) [23 April 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34572

தமிழகத்தில் இந்த முறை புதிதாக ஓட்டுரிமை பெற்று தங்களின் ஓட்டுக்களை பெருமையுடன் போட போகும் எங்களின் இளைய தளபதிகளே !!!!!!

நாங்கள் இத்துணை காலம் போற்றி பேணி பாதுகாத்து வந்த மத நல்லிணக்கத்தை சமூக மேம்பாட்டை மத வாதம் ஆங்கங்கே தலைகாட்டினாலும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் இல்லாத சமுதாயத்தை நீங்கள் தான் உங்களின் அடுத்த தலை முறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற பொறுப்பு உங்களின் தோள்களில் உள்ளது.

மதத்தின் பேரை வைத்து மலத்தை தின்னும் இந்த பிணம் தின்னும் கழுகுகளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், வேற்றுமையில் ஒற்றுமை என்று எல்லாரும் எல்லாமும் பெற்று வரலாறு படைக்க வேண்டும்.

கிரிராஜ் சிங், தொகாடியா போன்ற ***** சிறுபான்மை இனத்தாரை கருவறுக்கும் வகையில் இன வெறியை தூண்டும் விதம் பேசிக்கொண்டு இன்னும் வெளியில் தான் உலவிக்கொண்டிருக்கிறார்கள். தட்டிக்கேட்க நாதி இல்லை. இன வெறியன் மோடி பதவிக்கு வருவதற்கு முன்னரே அவர் மேடையில் இருக்கும் பொது இப்படி பேசுகிறார்களே. இவர் மட்டும் பதவிக்கு வந்தால் ???

இஸ்லாமிய சகோதரர்களே உங்களின் ஜீவாதார உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு நீங்களும் உங்களின் ஜனசாக்களை இந்தியாவில் எரிக்க வேண்டிய அளவிற்கு தள்ளப்படுவீர்கள். ஜாக்கிரதை

அதனால் தான் சொல்கிறேன், தமிழ் சேனல்களை மட்டும் பார்க்காதீர்கள் ஆங்கிலம் ஹிந்தி சேனல்கள் பாருங்கள் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற என்ன வெல்லாம் தகிடு தத்தம் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று.

இந்த முறை நமது முன்னால் நமது முடிவிற்காக முன்னிறுத் தப்பட்டுள்ள ஒரே விஷயம் "மத வாதம்" மட்டும் தான்

தயவு செய்து உங்களின் பொன்னான ஓட்டுக்களை இந்த இன வெறி பிடித்த ஓநாய்களை புறமுதுகு காட்டி ஓட செய்ய... மதவாதத்திற்கு என்றும் துணை போக மாட்டோம் என்று உறுதி அளித்துள்ள ஒரே இயக்கமான தி மு க விற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து கலைஞரின் கரங்களை வலுப்படுத்துங்கள் >>>> கலைஞரும் தளபதியும் நம்மை நற்றாட்டில் விடவே மாட்டார்.. தேர்தல் வெற்றிக்குப்பிறகு கலைஞர் கை காட்டும் ஒருவரே பிரதமராக வேண்டும். சரித்திரம் திரும்ப வேண்டும். மதவாதிகளே உங்களுக்குத்தான் இங்கே இடம் இல்லை என்னும் அளவிற்கு சாட்டையை சுழற்றுங்கள்..

ஓன்று பட்ட இந்தியாவை வல்லரசாக்க வழியைப்பாருங்கள் !!!! ஜெய் ஹிந்த் !!!!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (23/4/2014) [Views - 2775; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved